இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


விபூதி யோகம்

Go down

விபூதி யோகம் Empty விபூதி யோகம்

Post by eegaraiviswa Mon Apr 04, 2011 8:50 pm

விபூதி யோகம்

பக்தியுடன் தியானம் செய்வதற்காகக் கடவுளின் பெருமை இதில் விரித்துக் கூறப்படுகின்றது. கடவுளே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவரிடமிருந்தே எல்லாம் வெளிவரும். அவரே அழியா வீடு. அவரே அமரர்க்கும் முன்னோர். அவரே பிறப்பிலர். அவரே இறைவன்.



அவரே உயிர்களனைத்தின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆத்மா. அவரே வேதங்களுள் சிறந்த சாம வேதம். தேவரில் இந்திரன், ருத்திரர்களில் சங்கரன். மலைகளில் மேருமலை, சப்தங்களுள் பிரணவம். ஸ்தாவரங்களுள் இமயமலை. மரங்களுள் அரச மரம். மனிதர்களுள் அரசன்.

பசுக்களில் காமதேனு. அசுரருள் பிரகலாதன். பறவைகளுள் கருடன். வீரர்களுள் ராமன். எழுத்துகளுள் ‘அ’ என்னும் முதலெழுத்து, மாதங்களுள் மார்கழி. மேற்கூறியவையெல்லாம் உதாரணமாக ஒவ்வொன்றிலும் சிறந்தவையாக எடுத்துக் கூறப் பட்டிருக்கின்றன. அவரின் பெருமையைத் தனித்தனியே முற்றிலும் கூறுவது இயலாத காரியம். எந்த அசைபொருளும் அசையாப் பொருளும் அவரை விட்டுத் தனித்து நிற்க முடியாது.

श्रीभगवानुवाच
भूय एव महाबाहो शृणु मे परमं वचः ।
यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया ॥१०- १॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
பூ⁴ய ஏவ மஹாபா³ஹோ ஸ்²ருணு மே பரமம் வச: |
யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா || 10- 1||

ஸ்ரீப⁴க³வாநுவாச = பகவான் சொல்லுகிறான்
மஹாபா³ஹோ = பெருந்தோளுடையாய்
ப்ரீயமாணாய = மிகவும் அன்பு கொண்டவனான
தே அஹம் = உனக்கு நான்
ஹிதகாம்யயா = உன் நலம் கருதி
யத் பூ⁴ய ஏவ வக்ஷ்யாமி = எதை மீண்டும் கூறுவேனோ
மே = என்னுடைய
பரமம் வச: = மிகவும் உயரிய அந்த வாசகத்தை
ஸ்²ருணு = கேள்

பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்; நீ எனக்கு உகந்தவன்; ஆதலால், நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே.

न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः ।
अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः ॥१०- २॥

ந மே விது³: ஸுரக³ணா: ப்ரப⁴வம் ந மஹர்ஷய: |
அஹமாதி³ர்ஹி தே³வாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஸ²: || 10- 2||

ஸுரக³ணா: மே ப்ரப⁴வம் ந விது³: = வானவர் கணங்கள் என் மகிமையை உணரார்
மஹர்ஷய: ந = பெருந்தகை முனிவருமுணரார்
ஹி அஹம் ஸர்வஸ²: = ஏனெனில் நான் எல்லாவிதங்களிலும்
தே³வாநாம் மஹர்ஷீணாம் ச ஆதி³ = வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே

வானவர் கணங்கள் என் மகிமையை உணரார்; பெருந்தகை முனிவருமுணரார்; யாங்கணும், வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே.

यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् ।
असंमूढः स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते ॥१०- ३॥

யோ மாமஜமநாதி³ம் ச வேத்தி லோகமஹேஸ்²வரம் |
அஸம்மூட⁴: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே || 10- 3||

அஜம் அநாதி³ம் லோகமஹேஸ்²வரம் ச = பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்குத் தலைவன் என்று
ய: வேத்தி = எவர் அறிகிறாரோ
மர்த்யேஷு அஸம்மூட⁴: ஸ = மானிடருக்குள்ளே மயக்கம் தீர்ந்த – தெளிந்த அறிவுடைய அவர்
ஸர்வபாபை: ப்ரமுச்யதே = பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்

பிறப்பதில்லான், தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனையுணர்வோன், மானிடருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான், பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்.

बुद्धिर्ज्ञानमसंमोहः क्षमा सत्यं दमः शमः ।
सुखं दुःखं भवोऽभावो भयं चाभयमेव च ॥१०- ४॥

பு³த்³தி⁴ர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் த³ம: ஸ²ம: |
ஸுக²ம் து³:க²ம் ப⁴வோऽபா⁴வோ ப⁴யம் சாப⁴யமேவ ச || 10- 4||

பு³த்³தி⁴: ஜ்ஞாநம் அஸம்மோஹ: = மதியும், ஞானமும், மயக்கமின்மையும்
க்ஷமா ஸத்யம் த³ம: ஸ²ம: = பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும்
ஸுக²ம் து³:க²ம் ப⁴வ: அபா⁴வ: = இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும்
ப⁴யம் ச அப⁴யம் ஏவ ச = அச்சமும், அஞ்சாமையும்

மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும்,

अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयशः ।
भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः ॥१०- ५॥

அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தா³நம் யஸோ²ऽயஸ²: |
ப⁴வந்தி பா⁴வா பூ⁴தாநாம் மத்த ஏவ ப்ருத²க்³விதா⁴: || 10- 5||

அஹிம்ஸா ஸமதா துஷ்டி = துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும்
தபோ தா³நம் யஸ²: அயஸ²: = தவமும், ஈகையும், புகழும், இகழும்
பூ⁴தாநாம் ப்ருத²க்³விதா⁴: பா⁴வா = உயிரினங்களுடைய வெவ்வேறான மனப்பாங்குகள் இயல்புகள்
மத்த: ஏவ ப⁴வந்தி = என்னிடமிருந்தே உண்டாகின்றன

துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், இங்ஙனம் பலமிடுமியல்புகளெல்லாம் என்னிடம் பெறுவன உயிர்கள்.

महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा ।
मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः ॥१०- ६॥

மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா² |
மத்³பா⁴வா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: || 10- 6||

லோகே இமா: ப்ரஜா: = உலகில் இந்த பிரஜைகள் அனைவரும்
யேஷாம் ஜாதா = எவரிடம் இருந்து உண்டானார்களோ அந்த
ஸப்த மஹர்ஷய: பூர்வே = சப்த ரிஷிகளுக்கும் முந்தையவர்களான
சத்வார: ததா² = சனகர் முதலான நான்கு முனிவர்களுக்கும் அவ்வாறே
மநவ: மாநஸா: மத்³பா⁴வா ஜாதா: = மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர்

முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம்மக்களெல்லாரும்.

एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः ।
सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः ॥१०- ७॥

ஏதாம் விபூ⁴திம் யோக³ம் ச மம யோ வேத்தி தத்த்வத: |
ஸோऽவிகம்பேந யோகே³ந யுஜ்யதே நாத்ர ஸம்ஸ²ய: || 10- 7||

ய: மம = எவன் என்னுடைய
ஏதாம் விபூ⁴திம் யோக³ம் ச = இத்தகைய எனது பெருமையும் யோகந்தனையும்
தத்த்வத: வேத்தி = உள்ளவாறு உணர்வோன்
ஸ: அவிகம்பேந யோகே³ந யுஜ்யதே = அவன் அசைவில்லாது யோகத்தில் அமர்கிறான்
அத்ர ஸம்ஸ²ய: ந = இவ்விஷயத்தில் ஐயமில்லை

இத்தகைத்தாகும் எனது பெருமையும் யோகந்தனையும் உள்ளவாறுணர்வோன் அசைவிலா யோகத்தமர்வான்; இதிலோர் ஐயமில்லை.

अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते ।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः ॥१०- ८॥

அஹம் ஸர்வஸ்ய ப்ரப⁴வோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே |
இதி மத்வா ப⁴ஜந்தே மாம் பு³தா⁴ பா⁴வஸமந்விதா: || 10- 8||

அஹம் ஸர்வஸ்ய ப்ரப⁴வ: = நான் அனைத்திற்கும் தொடக்கம்
மத்த: ஸர்வம் ப்ரவர்ததே = என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது
இதி மத்வா = என்று புரிந்து கொண்டு
பா⁴வஸமந்விதா: பு³தா⁴:= நம்பிக்கையும் பக்தியும் கொண்ட அறிஞர்கள்
மாம் ப⁴ஜந்தே = என்னை தொழுவார்

நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ஙன முணர்ந்த புலவர் என்னை அன்புடன் தொழுவார்.

मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम् ।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ॥१०- ९॥

மச்சித்தா மத்³க³தப்ராணா போ³த⁴யந்த: பரஸ்பரம் |
கத²யந்தஸ்²ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச || 10- 9||

மத்சித்தா = அகத்தினை என்பால் வைத்து
மத்³க³தப்ராணா = உயிரை என்னுள்ளே புகுத்தி
பரஸ்பரம் = தங்களுக்குள்ளே
போ³த⁴யந்த: ச = விளக்கிக் கொண்டும்
கத²யந்த: ச = (என்னுடைய புகழைப் பற்றி) பேசிக் கொண்டும்
நித்யம் துஷ்யந்தி ச மாம் ரமந்தி = எப்போதும் மகிழ்கிறார்கள்; என்னிடமே இன்புறுகிறார்கள்

அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி, ஒருவரை யருவர் உணர்விப்பாராய், எக்காலுந் தம்முள் என்னைக் குறித்தியம்புவார்; அன்னோர் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார்.

तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् ।
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते ॥१०- १०॥

தேஷாம் ஸததயுக்தாநாம் ப⁴ஜதாம் ப்ரீதிபூர்வகம் |
த³தா³மி பு³த்³தி⁴யோக³ம் தம் யேந மாமுபயாந்தி தே || 10- 10||

ஸததயுக்தாநாம் = எப்போதும் யோகத்தில் இருப்பாராகில்
ப்ரீதிபூர்வகம் ப⁴ஜதாம் = அன்புடன் என்னை வழிபடும்
தேஷாம் = அவர்களுக்கு
யேந = எந்த உபாயத்தின் மூலம்
மாம் உபயாந்தி = என்னை அடைவார்களோ
தம் பு³த்³தி⁴யோக³ம் த³தா³மி = அந்த ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கிறேன்

எப்போதும் யோகத் திருப்பாராகில் அன்புடன் என்னை வழிபடும் அன்னோர்க்கு யான் புத்தியோகம் அளிப்பேன். இதனால் என்னை யவர் எய்துவார்.

तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तमः ।
नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता ॥१०- ११॥

தேஷாமேவாநுகம்பார்த²மஹமஜ்ஞாநஜம் தம: |
நாஸ²யாம்யாத்மபா⁴வஸ்தோ² ஜ்ஞாநதீ³பேந பா⁴ஸ்வதா || 10- 11||

தேஷாம் அநுகம்பார்த²ம் = அவர்களுக்கு இரங்கி நான்
ஆத்மபா⁴வஸ்த²: = அவர்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று
அஹம் ஏவ = நானே
அஜ்ஞாநஜம் தம: = அறியாமையால் உண்டான இருளை
பா⁴ஸ்வதா = ஒளிமயமான
ஜ்ஞாநதீ³பேந = ஞான வடிவான விளக்கினால்
நாஸ²யாமி = அழிக்கிறேன்

அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.

अर्जुन उवाच
परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् ।
पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम् ॥१०- १२॥

அர்ஜுந உவாச
பரம் ப்³ரஹ்ம பரம் தா⁴ம பவித்ரம் பரமம் ப⁴வாந் |
புருஷம் ஸா²ஸ்²வதம் தி³வ்யமாதி³தே³வமஜம் விபு⁴ம் || 10- 12||

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
ப⁴வாந் = நீங்கள்
பரம் ப்³ரஹ்ம பரம்தா⁴ம = பரப்பிரம்மம்; பரம பதம் (வீடு பேறு)
பரமம் பவித்ரம் = தூய்மை அனைத்திலும் சிறப்புடைய தூய்மை
ஸா²ஸ்²வதம் தி³வ்யம் புருஷம் = என்றும் உள்ளவர் – என்றும், தெய்வீகமான புருஷன் என்றும்
ஆதி³தே³வம் அஜம் விபு⁴ம் = ஆதி தேவன் என்றும்; பிறப்பற்றவன் என்றும்; எங்கும் நிறைந்தவர் என்றும்

அர்ஜுனன் சொல்லுகிறான்: நீயே பரப்பிரம்மம், நீயே பரவீடு, தூய்மை யனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை நீ. நின்னையே ‘நித்திய புருஷ’னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், இறைமைக் கடவுளென்றும்,

आहुस्त्वामृषयः सर्वे देवर्षिर्नारदस्तथा ।
असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे ॥१०- १३॥

ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தே³வர்ஷிர்நாரத³ஸ்ததா² |
அஸிதோ தே³வலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்³ரவீஷி மே || 10- 13||

ஸர்வே ருஷய: த்வாம் ஆஹு = முனிவரெல்லாரும் உன்னைப் பற்றி கூறுகிறார்.
ததா² தே³வர்ஷி: நாரத³ = அவ்வாறே தேவரிஷி நாரதரும்
அஸிதோ தே³வலோ வ்யாஸ: ச = அசிதரும் தேவலரும் வியாசரும் (கூறுகிறார்கள்)
ஸ்வயம் ஏவ மே ப்³ரவீஷி = நீயும் அதையே என்னிடம் கூறுகிறாய்

முனிவரெல்லாரும் மொழிகிறார்; தேவரிஷி நாரதருமங்ஙனே நவில்கிறார். அசிதரும் தேவலரும் வியாசரும் அங்ஙனமே செப்புகிறார். இங்கு நீ நேரே எனக்கு அதை உரைக்கின்றாய்.

सर्वमेतदृतं मन्ये यन्मां वदसि केशव ।
न हि ते भगवन्व्यक्तिं विदुर्देवा न दानवाः ॥१०- १४॥

ஸர்வமேதத்³ருதம் மந்யே யந்மாம் வத³ஸி கேஸ²வ |
ந ஹி தே ப⁴க³வந்வ்யக்திம் விது³ர்தே³வா ந தா³நவா: || 10- 14||

கேஸ²வ = கேசவா!
யத் மாம் வத³ஸி = எதை என்னிடம் கூறுகிறாயோ
ஏதத் ஸர்வம் ருதம் மந்யே = இந்த அனைத்தும் உண்மையே என்று எண்ணுகிறேன்
ப⁴க³வந் தே வ்யக்திம் = பகவானே! உங்களுடைய ஸ்வரூபத்தை
தா³நவா: ந விது³: = அசுரர்கள் அறிந்து கொள்ளவில்லை
தே³வா ஹி ந = தேவர்கள் கூட அறிந்து கொள்ள வில்லை.

கேசவா, நினது கிளவி யனைத்தையும் மெய் யெனக் கொண்டேன். பகவனே, விண்ணவரும் அசுரரும் நின் விளக்கத்தை யறிவரோ?

स्वयमेवात्मनात्मानं वेत्थ त्वं पुरुषोत्तम ।
भूतभावन भूतेश देवदेव जगत्पते ॥१०- १५॥

ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த² த்வம் புருஷோத்தம |
பூ⁴தபா⁴வந பூ⁴தேஸ² தே³வதே³வ ஜக³த்பதே || 10- 15||

புருஷோத்தம! த்வம் = புருஷோத்தமா நீ
ஆத்மநா ஆத்மாநம் = தன்னால் தன்னை
ஸ்வயம் ஏவ வேத்த² = தானே அறிய வல்லவன்
பூ⁴தபா⁴வந = பூதங்களானாய்
பூ⁴தேஸ² = பூதத் தலைவனே
தே³வதே³வ = தேவ தேவ
ஜக³த்பதே = வையத்து இறைவா!

புருஷோத்தமா, உன்னை நீயே அறிவாய். பூதங்களானாய்! பூதத் தலைவனே! தேவ தேவ! வையத் திறைவா!

वक्तुमर्हस्यशेषेण दिव्या ह्यात्मविभूतयः ।
याभिर्विभूतिभिर्लोकानिमांस्त्वं व्याप्य तिष्ठसि ॥१०- १६॥

வக்துமர்ஹஸ்யஸே²ஷேண தி³வ்யா ஹ்யாத்மவிபூ⁴தய: |
யாபி⁴ர்விபூ⁴திபி⁴ர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்ட²ஸி || 10- 16||

யாபி⁴: விபூ⁴திபி⁴: = எந்த மகிமைகளால்
இமாந் லோகாந் வ்யாப்ய திஷ்ட²ஸி = நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ
தி³வ்யா: ஆத்மவிபூ⁴தய:= தெய்வீக சிறப்புடைய பெருமைகளை
த்வம் ஹி = நீயேதான்
அஸே²ஷேண வக்தும் அர்ஹஸி = முழுமையாக கூறுவதற்கு திறமை உள்ளவன்

எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த நின் மகிமைகள் தேவத்தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன்.

कथं विद्यामहं योगिंस्त्वां सदा परिचिन्तयन् ।
केषु केषु च भावेषु चिन्त्योऽसि भगवन्मया ॥१०- १७॥

கத²ம் வித்³யாமஹம் யோகி³ம்ஸ்த்வாம் ஸதா³ பரிசிந்தயந் |
கேஷு கேஷு ச பா⁴வேஷு சிந்த்யோऽஸி ப⁴க³வந்மயா || 10- 17||

யோகி³ந் = யோகியே!
கத²ம் ஸதா³ பரிசிந்தயந் = எவ்வாறு எப்போதும் தியானித்து
அஹம் த்வாம் வித்³யாம் = நான் உன்னை உணருவேன்?
ப⁴க³வந்! = பகவனே!
கேஷு கேஷு பா⁴வேஷு ச = எந்தெந்த ஸ்வரூபங்களில்
மயா சிந்த்ய: அஸி = என்னால் தியானிக்குமாறு இருக்கிறாய்

யோகி! எப்போதும் உன்னையே சிந்தித்து நின்னை யுணருமாறெங்ஙனே? பகவனே! எவ்வெப் படிகளில் நின்னை யான் கருதல் வேண்டும்?

विस्तरेणात्मनो योगं विभूतिं च जनार्दन ।
भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मेऽमृतम् ॥१०- १८॥

விஸ்தரேணாத்மநோ யோக³ம் விபூ⁴திம் ச ஜநார்த³ந |
பூ⁴ய: கத²ய த்ருப்திர்ஹி ஸ்²ருண்வதோ நாஸ்தி மேऽம்ருதம் || 10- 18||

ஜநார்த³ந = ஜனார்த்தனா
ஆத்மந: யோக³ம் விபூ⁴திம் ச = உன்னுடைய யோகத்தையும் பெருமையையும்
விஸ்தரேண = விரிவாக
பூ⁴ய: கத²ய = மற்றொரு முறை சொல்க
ஹி அம்ருதம் ஸ்²ருண்வத: = ஏனெனில் அமுதம் போன்ற சொற்கள்
மே த்ருப்தி நாஸ்தி = எனக்கு திருப்தி ஏற்படவில்லை (மேலும் கேட்க வேண்டும் போல இருக்கிறது)

ஜனார்த்தனா, நின் யோகத்தையும் பெருமையையும் விரித்து மற்றொரு முறை சொல்க. அமிர்தம் போன்ற நின் சொற்கள் எனக்குத் தெவிட்டவில்லை.

श्रीभगवानुवाच
हन्त ते कथयिष्यामि दिव्या ह्यात्मविभूतयः ।
प्राधान्यतः कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे ॥१०- १९॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
ஹந்த தே கத²யிஷ்யாமி தி³வ்யா ஹ்யாத்மவிபூ⁴தய: |
ப்ராதா⁴ந்யத: குருஸ்²ரேஷ்ட² நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே || 10- 19||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
குருஸ்²ரேஷ்ட² = குரு குலத்தில் சிறந்தவனே!
ஆத்மவிபூ⁴தய: தி³வ்யா: = என் பெருமைகள் தெய்வீகமானவை
ஹந்த = இப்பொழுது
தே = உனக்கு
ப்ராதா⁴ந்யத: = பிரதானமானவற்றை
கத²யிஷ்யாமி = சொல்லுகிறேன்
ஹி மே = ஏனெனில் என்னுடைய
விஸ்தரஸ்ய = விரிவுக்கு
அந்த: நாஸ்தி = முடிவு இல்லை

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அச்ச! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே. அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை.

अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः ।
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ॥१०- २०॥

அஹமாத்மா கு³டா³கேஸ² ஸர்வபூ⁴தாஸ²யஸ்தி²த: |
அஹமாதி³ஸ்²ச மத்⁴யம் ச பூ⁴தாநாமந்த ஏவ ச || 10- 20||

கு³டா³கேஸ² = அர்ஜுனா
ஸர்வபூ⁴த ஆஸ²யஸ்தி²த: ஆத்மா அஹம் = உயிர்கள் அனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான்
பூ⁴தாநாம் ஆதி³ ச = அவ்வுயிர்களின் ஆதி
மத்⁴யம் ச = இடையும்
அந்த: ச அஹம் ஏவ = அவற்றின் இறுதியும் நானே தான்

அர்ஜுனா, உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான். இடையும் அவற்றின் இறுதியும் யானே.

आदित्यानामहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान् ।
मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी ॥१०- २१॥

ஆதி³த்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸு²மாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸ²ஸீ² || 10- 21||

ஆதி³த்யாநாம் விஷ்ணு = ஆதித்யர்களில் நான் விஷ்ணு
ஜ்யோதிஷாம் அம்ஸு²மாந் ரவி: = ஒளிகளில் நான் கதிர்களுடன் கூடிய சூரியன்
மருதாம் மரீசி: = வாயு தேவர்களில் நான் மரீசி
நக்ஷத்ராணாம் அஹம் ஸ²ஸீ² அஹம் அஸ்மி = நட்சத்திரங்களுள் சந்திரனாக நான் இருக்கிறேன்

ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.

वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः ।
इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना ॥१०- २२॥

வேதா³நாம் ஸாமவேதோ³ऽஸ்மி தே³வாநாமஸ்மி வாஸவ: |
இந்த்³ரியாணாம் மநஸ்²சாஸ்மி பூ⁴தாநாமஸ்மி சேதநா || 10- 22||

வேதா³நாம் ஸாமவேத³: அஸ்மி = வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன்
தே³வாநாம் வாஸவ: அஸ்மி = தேவரில் இந்திரனாக இருக்கிறேன்
இந்த்³ரியாணாம் மந அஸ்மி = புலன்களில் மனமாக இருக்கிறேன்
ச பூ⁴தாநாம் சேதநா அஸ்மி = மேலும் உயிர்களிடத்தே உணர்வாக இருக்கிறேன்

வேதங்களில் யான் சாமவேதம்; தேவரில் இந்திரன்; புலன்களில் மனம் யான்; உயிர்களிடத்தே உணர்வு நான்.

रुद्राणां शंकरश्चास्मि वित्तेशो यक्षरक्षसाम् ।
वसूनां पावकश्चास्मि मेरुः शिखरिणामहम् ॥१०- २३॥

ருத்³ராணாம் ஸ²ங்கரஸ்²சாஸ்மி வித்தேஸோ² யக்ஷரக்ஷஸாம் |
வஸூநாம் பாவகஸ்²சாஸ்மி மேரு: ஸி²க²ரிணாமஹம் || 10- 23||

ருத்³ராணாம் ஸ²ங்கர: = ருத்திரர்களில் நான் சங்கரன்
யக்ஷரக்ஷஸாம் வித்தேஸ²: = இயக்கர் அரக்கருள் குபேரன்
வஸூநாம் பாவக: = வசுக்களில் நான் தீ
ச ஸி²க²ரிணாம் அஹம் மேரு: அஸ்மி = மலைகளில் மேருவாக இருக்கிறேன்

ருத்திரர்களில் நான் சங்கரன்; இயக்கர் அரக்கருள் யான் குபேரன். வசுக்களில் நான் தீ; மலைகளில் மேரு.

पुरोधसां च मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिम् ।
सेनानीनामहं स्कन्दः सरसामस्मि सागरः ॥१०- २४॥

புரோத⁴ஸாம் ச முக்²யம் மாம் வித்³தி⁴ பார்த² ப்³ருஹஸ்பதிம் |
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த³: ஸரஸாமஸ்மி ஸாக³ர: || 10- 24||

புரோத⁴ஸாம் ப்³ருஹஸ்பதிம் = புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி
மாம் வித்³தி⁴ பார்த² = என்று என்னை அறிந்து கொள் பார்த்தா!
ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த³: = படைத்தலைவரில் நான் கந்தன்
ஸரஸாம் ஸாக³ர: அஸ்மி = நீர் நிலைகளில் நான் கடலாக இருக்கிறேன்

பார்த்தா, புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி நான் என்றுணர். படைத்தலைவரில் நான் கந்தன். நீர் நிலைகளில் நான் கடல்.

महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरम् ।
यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः ॥१०- २५॥

மஹர்ஷீணாம் ப்⁴ருகு³ரஹம் கி³ராமஸ்ம்யேகமக்ஷரம் |
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோऽஸ்மி ஸ்தா²வராணாம் ஹிமாலய: || 10- 25||

மஹர்ஷீணாம் ப்⁴ருகு³ அஹம் = மகரிஷிகளில் நான் பிருகு
கி³ராம் ஏகம் அக்ஷரம் அஸ்மி = வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்தாக இருக்கிறேன்
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி = யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்
ஸ்தா²வராணாம் ஹிமாலய: = மலைகளில் நான் இமாலயம்.

மகரிஷிகளில் நான் பிருகு; வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் இமாலயம்.

अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः ।
गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः ॥१०- २६॥

அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் தே³வர்ஷீணாம் ச நாரத³: |
க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: || 10- 26||

ஸர்வவ்ருக்ஷாணாம் அஸ்²வத்த²: = மரங்களனைத்திலும் நான் அரசமரம்
ச தே³வர்ஷீணாம் நாரத³: = தேவரிஷிகளில் நான் நாரதன்
க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: = கந்தர்வருள்ளே நான் சித்ரரதன்
ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: =சித்தர்களில் கபில முனி.

மரங்களனைத்திலும் நான் அரசமரம். தேவரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வருள்ளே நான் சித்ரரதன்; சித்தர்களில் கபில முனி.

उच्चैःश्रवसमश्वानां विद्धि माममृतोद्भवम् ।
ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम् ॥१०- २७॥

உச்சை:ஸ்²ரவஸமஸ்²வாநாம் வித்³தி⁴ மாமம்ருதோத்³ப⁴வம் |
ஐராவதம் க³ஜேந்த்³ராணாம் நராணாம் ச நராதி⁴பம் || 10- 27||

அஸ்²வாநாம் அம்ருத உத்³ப⁴வம் = குதிரைகளிடையே நான் அமிர்தத்தில் பிறந்த
உச்சை:ஸ்²ரவஸம் = உச்சை சிரவம் என்றுணர்
க³ஜேந்த்³ராணாம் ஐராவதம் ச = யானைகளில் என்னை ஐராவதமென்றும்
நராணாம் நராதி⁴பம் மாம் வித்³தி⁴ = மனிதரில் அரசனென்றும் என்னை தெரிந்து கொள்

குதிரைகளிடையே நான் அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவமென்றுணர். யானைகளில் என்னை ஐராவதமென்றும், மனிதரில் அரசனென்றும் அறி. 27

आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुक् ।
प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः ॥१०- २८॥

ஆயுதா⁴நாமஹம் வஜ்ரம் தே⁴நூநாமஸ்மி காமது⁴க் |
ப்ரஜநஸ்²சாஸ்மி கந்த³ர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி: || 10- 28||

ஆயுதா⁴நாம் அஹம் வஜ்ரம் = ஆயுதங்களில் நான் வஜ்ரம்
தே⁴நூநாம் காமது⁴க் அஸ்மி = பசுக்களில் நான் காமதேனுவாக இருக்கிறேன்
ப்ரஜந: கந்த³ர்ப: அஸ்மி = பிறப்பிப்போரில் நான் மன்மதன்
ச ஸர்பாணாம் வாஸுகி: அஸ்மி = மேலும் பாம்புகளில் வாசுகியாக இருக்கிறேன்

ஆயுதங்களில் நான் வஜ்ரம்; பசுக்களில் நான் காமதேனு; பிறப்பிப்போரில் நான் மன்மதன்; பாம்புகளில் வாசுகி.

अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।
पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥१०- २९॥

அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் வருணோ யாத³ஸாமஹம் |
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் || 10- 29||

அஹம் நாகா³நாம் அநந்த: = நான் நாகர்களினிடையே அநந்தன்
யாத³ஸாம் வருண: ச அஸ்மி = நீர் வாழ்வோரில் வருணனாக இருக்கிறேன்
பித்ரூணாம் அர்யமா ச அஸ்மி = பிதிர்க்களில் நான் அரியமான்
ஸம்யமதா: அஹம் யம: = அடக்கி ஆள்பவர்களில் நான் யமன்.

நாகர்களினிடை நான் அநந்தன்; நீர் வாழ்வோரில் வருணன்; பிதிர்க்களில் நான் அரியமான்; தம்மைக் கட்டினவர்களில் நான் யமன்.

प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥१०- ३०॥

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் கால: கலயதாமஹம் |
ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ரோऽஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் || 10- 30||

தை³த்யாநாம் ச ப்ரஹ்லாத³: அஸ்மி = அசுரரில் பிரகலாதனாக இருக்கிறேன்
கலயதாம் அஹம் கால: = இயங்குனவற்றில் நான் காலம்
அஹம் ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ர: = நான் விலங்குகளில் சிங்கம்
பக்ஷிணாம் வைநதேய: ச = பறவைகளில் கருடன்

அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்.

पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहम् ।
झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी ॥१०- ३१॥

பவந: பவதாமஸ்மி ராம: ஸ²ஸ்த்ரப்⁴ருதாமஹம் |
ஜ²ஷாணாம் மகரஸ்²சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ || 10- 31||

பவதாம் பவந: அஸ்மி = தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்
ஸ²ஸ்த்ரப்⁴ருதாம் அஹம் ராம: = ஆயுதம் தாங்கியவர்களில் நான் ராமன்
ஜ²ஷாணாம் மகர: ச அஸ்மி = மீன்களில் நான் சுறா
ஸ்ரோதஸாம் ஜாஹ்நவீ அஸ்மி = ஆறுகளில் கங்கையாக இருக்கிறேன்

தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்; படைதரித்தோரில் நான் ராமன்; மீன்களில் நான் சுறா; ஆறுகளில் கங்கை.

सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन ।
अध्यात्मविद्या विद्यानां वादः प्रवदतामहम् ॥१०- ३२॥

ஸர்கா³ணாமாதி³ரந்தஸ்²ச மத்⁴யம் சைவாஹமர்ஜுந |
அத்⁴யாத்மவித்³யா வித்³யாநாம் வாத³: ப்ரவத³தாமஹம் || 10- 32||

ஸர்கா³ணாம் ஆதி³ அந்த: மத்⁴யம் ச அஹம் ஏவ = படைப்புகளின் ஆதியும் அந்தமும் நடுவும் நானேதான்
அர்ஜுந = அர்ஜுனா!
வித்³யாநாம் அத்⁴யாத்மவித்³யா = வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை
ப்ரவத³தாம் அஹம் வாத³: = பேசுவோரிடையே நான் பேச்சு

படைப்புகளின் ஆதியும் அந்தமும் நான். அர்ஜுனா, வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை; பேசுவோரிடையே நான் பேச்சு.

अक्षराणामकारोऽस्मि द्वन्द्वः सामासिकस्य च ।
अहमेवाक्षयः कालो धाताहं विश्वतोमुखः ॥१०- ३३॥

அக்ஷராணாமகாரோऽஸ்மி த்³வந்த்³வ: ஸாமாஸிகஸ்ய ச |
அஹமேவாக்ஷய: காலோ தா⁴தாஹம் விஸ்²வதோமுக²: || 10- 33||

அக்ஷராணாம் அகார: அஸ்மி = எழுத்துகளில் நான் அகரம்
ஸாமாஸிகஸ்ய த்³வந்த்³வ: ச = புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு
அக்ஷய: கால: அஹம் ஏவ = அழிவற்ற காலம் நானே
விஸ்²வதோமுக²: தா⁴தா அஹம் = எல்லா பக்கங்களிலும் முகம் கொண்ட விராட் ஸ்வரூபனும், எல்லாவற்றையும் சுமப்பவனும் நான்

எழுத்துகளில் நான் அகரம்; புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு; நான் அழிவற்ற காலம்; எப்பாரிசத்தும் சுமப்போன் யானே.

मृत्युः सर्वहरश्चाहमुद्भवश्च भविष्यताम् ।
कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृतिः क्षमा ॥१०- ३४॥

ம்ருத்யு: ஸர்வஹரஸ்²சாஹமுத்³ப⁴வஸ்²ச ப⁴விஷ்யதாம் |
கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா⁴ த்⁴ருதி: க்ஷமா || 10- 34||

அஹம் ஸர்வஹர: ம்ருத்யு: ச = எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான்
ப⁴விஷ்யதாம் உத்³ப⁴வ: ச = எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான்
நாரீணாம் = பெண்களிடத்து நான்
கீர்தி: ஸ்ரீ: வாக் ஸ்ம்ருதி: = கீர்த்தி, வாக்கு, நினைவு
மேதா⁴ த்⁴ருதி: க்ஷமா = மேதை, ஸ்திதி, பொறுமை

எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான். எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான். பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை ஸ்திதி, பொறை

बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥१०- ३५॥

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

ததா² ஸாம்நாம் ப்³ருஹத்ஸாம: = சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமம்
ச²ந்த³ஸாம் கா³யத்ரீ அஹம் = சந்தஸ்களில் நான் காயத்ரி
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி
ருதூநாம் அஹம் குஸுமாகர: = பருவங்களில் நான் மலர் சான்ற இளவேனில்

அங்ஙனமே, சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமம்; சந்தஸ்களில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் மலர் சான்ற இளவேனில்.

द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहम् ।
जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहम् ॥१०- ३६॥

த்³யூதம் ச²லயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் |
ஜயோऽஸ்மி வ்யவஸாயோऽஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் || 10- 36||

ச²லயதாம் த்³யூதம் அஸ்மி = வஞ்சகரின் சூது நான்
தேஜஸ்விநாம் தேஜஸ் அஹம = ஒளியுடையோரின் ஒளி நான்
ஜய: அஸ்மி = நான் வெற்றி
வ்யவஸாய: = நான் நிச்சயம்
ஸத்த்வவதாம் ஸத்த்வம் அஹம் அஸ்மி = உண்மையுடையோரின் உண்மை நான் இருக்கிறேன்

வஞ்சகரின் சூது நான். ஒளியுடையோரின் ஒளி நான். நான் வெற்றி; நான் நிச்சயம். உண்மையுடையோரின் உண்மை நான்.

वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनंजयः ।
मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः ॥१०- ३७॥

வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸ²நா கவி: || 10- 37||

வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வ: அஸ்மி = விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன்
பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: = பாண்டவர்களில் தனஞ்ஜயன்
அபி முநீநாம் அஹம் வ்யாஸ: = முனிகளில் வியாசன்
கவீநாம் உஸ²நா கவி: = கவிகளில் சுக்கிர கவி.

விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் தனஞ்ஜயன்; முனிகளில் வியாசன்; கவிகளில் சுக்கிர கவி.

दण्डो दमयतामस्मि नीतिरस्मि जिगीषताम् ।
मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम् ॥१०- ३८॥

த³ண்டோ³ த³மயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீ³ஷதாம் |
மௌநம் சைவாஸ்மி கு³ஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் || 10- 38||

த³மயதாம் த³ண்ட³: அஸ்மி = ஆள்வோரிடத்தே கோல் (அடக்கும் சக்தி) நான்
ஜிகீ³ஷதாம் நீதி: அஸ்மி = வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி (நியாய உணர்வு) நான்
கு³ஹ்யாநாம் மௌநம் ச = ரகசியங்களில் நான் மௌனம்!
ஜ்ஞாநவதாம் ஜ்ஞாநம் அஹம் ஏவ அஸ்மி = ஞானமுடையோரிடத்தே ஞானம் நானே

ஆள்வோரிடத்தே கோல் நான்; வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி நான். ரகசியங்களில் நான் மௌனம்! ஞானமுடையோரிடத்தே நான் ஞானம்.

यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन ।
न तदस्ति विना यत्स्यान्मया भूतं चराचरम् ॥१०- ३९॥

யச்சாபி ஸர்வபூ⁴தாநாம் பீ³ஜம் தத³ஹமர்ஜுந |
ந தத³ஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூ⁴தம் சராசரம் || 10- 39||

ச அர்ஜுந = மேலும் அர்ஜுனா!
ஸர்வபூ⁴தாநாம் = எல்லா உயிர்களிலும்
யத் பீ³ஜம் தத் அபி அஹம் = விதை எதுவோ அது நானே
மயா விநா = நான் இன்றி
யத் ஸ்யாத் = எது இருக்கக் கூடுமோ
தத் சராசரம் பூ⁴தம் ந அஸ்தி = அத்தகைய அசையும், அசையாததுமான பொருட்கள் எதுவும் இல்லை

எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா, சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றுமில்லை.

नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप ।
एष तूद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया ॥१०- ४०॥

நாந்தோऽஸ்தி மம தி³வ்யாநாம் விபூ⁴தீநாம் பரந்தப |
ஏஷ தூத்³தே³ஸ²த: ப்ரோக்தோ விபூ⁴தேர்விஸ்தரோ மயா || 10- 40||

பரந்தப = எதிரிகளை சுடுபவனே!
மம தி³வ்யாநாம் விபூ⁴தீநாம் = என் திவ்ய மகிமைகளுக்கு
ந அந்த: அஸ்தி = முடிவில்லை
விபூ⁴தே: = பெருமைகளில்
ஏஷ: விஸ்தர: து = இந்த விரிவும் கூட
உத்³தே³ஸ²த: மயா ப்ரோக்த: = ஓரளவுதான் என்னால் கூறப்பட்டது

பார்த்தா, என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.

यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा ।
तत्तदेवावगच्छ त्वं मम तेजोंऽशसंभवम् ॥१०- ४१॥

யத்³யத்³விபூ⁴திமத்ஸத்த்வம் ஸ்ரீமதூ³ர்ஜிதமேவ வா |
தத்ததே³வாவக³ச்ச² த்வம் மம தேஜோம்ऽஸ²ஸம்ப⁴வம் || 10- 41||

யத் யத் விபூ⁴திமத் = எதெது பெருமையுடையது
ஸத்த்வம் = உண்மையுடையது
ஸ்ரீமத் = அழகுடையது
ஊர்ஜிதம் வா = வலிமையுடையது
தத் தத் = அது எல்லாம்
மம தேஜோம்ऽஸ² ஸம்ப⁴வம் ஏவ = எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது
த்வம் அவக³ச்ச² = நீ புரிந்து கொள்

எதெது பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்.

अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन ।
विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत् ॥१०- ४२॥

அத²வா ப³ஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந |
விஷ்டப்⁴யாஹமித³ம் க்ருத்ஸ்நமேகாம்ஸே²ந ஸ்தி²தோ ஜக³த் || 10- 42||

அத²வா = அன்றி
அர்ஜுன = அர்ஜுனா
ஏதேந ப³ஹுநா ஜ்ஞாதேந தவ கிம் = இதைப் பலவாறாகத் தெரிந்து கொள்வதில் உனக்குப் பயன் யாது?
அஹம் இத³ம் க்ருத்ஸ்நம் ஜகத் = நான் இந்த உலகனைத்தும்
ஏகாம்ஸே²ந = எனது சக்தியின் ஓர் அம்சத்தால்
விஷ்டப்⁴ய ஸ்தி²த: = தாங்கிக் கொண்டு இருக்கிறேன்

அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்குப் பயன் யாது? எனது கலையன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.

eegaraiviswa

Posts : 26
Join date : 04/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum