இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இமயமலையில் நடந்த சிவன் பார்வதி ’திருமணம்’

3 posters

Go down

இமயமலையில் நடந்த சிவன் பார்வதி ’திருமணம்’ Empty இமயமலையில் நடந்த சிவன் பார்வதி ’திருமணம்’

Post by சாமி Mon Apr 09, 2012 12:07 am

சிவபெருமான் உமையம்மை திருமணத்தின் பொழுது உலகமே இமயமலையில் குழுமியது. எனவே வடக்கே இமயமலை தாழ்ந்தது. சிவபெருமானின் ஆணையை ஏற்ற அகத்தியர் தெற்கே, பொதிய மலையை ஏறி மிதித்து நின்றார். எனவே, தெற்கு தாழ்ந்ததால் வடக்கு தாழ்ந்த நிலை மாறி சமமானது. இவ்வாறு அகத்தியர் பொதிய மலையின் செருக்கை அடக்கினார் என்கின்றன வடமொழிப் புராணங்கள்.

உண்மை நிகழ்வு:
வடக்கே இருந்து தெற்கு நோக்கி ஆரியர்கள் பரவினர். இடையில் குறுக்கிட்ட பொதியமலை ஆரியரின் பரவலுக்குத் தடையாக இருந்து வந்தது. பொதியமலை ஏறிக் கடப்பதற்கு அரிது என்ற எண்ணம் நிலவியது. முதன் முதலில் முழு முயற்சியுடன் ஏறி பொதியமலையைக் கடந்து இப்பால் உள்ள தமிழகத்தில் அகத்தியர் நுழைந்தார். பொதிய மலையைக் கடந்து தமிழகத்திற்குள் ஆரியர் நுழைந்தனர். தமிழகத்தில் இயற்கை, வளமை இருந்தது; தமிழ் மொழிச் செழுமை இருந்தது. தமிழுக்கு என்று முறையான எழுத்து வடிவங்கள், எழுத்து வரையறைகள் இருந்தன. தமிழுக்கு என்று பண்பட்ட நாகரிகம் இருந்தது. இவை அனைத்தையும் அகத்தியர் உள்ளிட்ட ஆரியர் கண்டனர். பழந்தமிழின் எழுத்து வடிவங்களையும் வரையறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆரியர் ‘சமற்கிருதம்’ என்னும் மொழியைத் தமக்கென வடிவமைத்துக் கொண்டனர். தமக்கென நிலையான வரிவடிவம், வரையறை முதலானவை இன்றி ஆரியர் நிலை தாழ்ந்திருந்தது. இந்த இழிநிலை அகத்தியரால் ஆரியருக்கு நீங்கியது.

நிகழ்ந்த அகத்தியப் புனைவுகளும்: உண்மை நிகழ்வுகளும்
 
1 பொதிய மலையின் செருக்கு - பொதிய மலையின் கம்பீரம்
2 அகத்தியர், பொதிய மலையின் செருக்கை அடக்குதல் - அகத்தியர், பொதிய மலையைக் கடந்து செல்லுதல்
3 இமயமலையில் சிவன் உமை திருமணம் - புகுத்த நினைக்கும் கருத்தியலுக்கு வலுவேற்ற கடவுளின் பெயரால் ‘சமயச் சாயம் பூசுதல்’
4 இமயமலையில் முனிவர்கள் நிரம்பி இருத்தல்- வடக்கே ஆரியர் (வடவர்) நிரம்பியிருத்தல்
5 வடக்கு தாழல் - தமக்கென உரிய மொழிச் செப்பமின்றி இருந்த வடவரின் மொழி வறுமை
6 வடக்கு தாழ்ந்ததால் முனிவர்கள் துன்புறல் - செப்பமற்ற மொழி வறுமையில் வடவரான ஆரியர் இடர்படல்.
7 தெற்கு உயர்ந்திருத்தல் - மொழி வளமையும், வரையறை மிக்க நாகரிகப் பண்பாடுகளையும் கொண்ட திராவிடரின் மேன்மை.
8 சிவன், தெற்கு திசைக்கு அகத்தியரை அனுப்புதல் - கருத்தியலுக்கு ஏற்றப்பட்ட சமயச் சாயம்
9 உயர்ந்திருந்த பொதிய மலையை அகத்தியர் ஏறி மிதித்தல் - மொழி வளமையிலும் பண்பாட்டு உயர்விலும் சிறந்த திராவிடரை ஆரியர் ஒடுக்க அகத்தியர் முதற்காரணராக இருத்தல்.
10 தாழ்ந்திருந்த வடக்கு திசை உயர்ந்து சமமாதல் - தமது மொழிக்கான அடிப்படைகளைத் திராவிட மொழியில் இருந்து எடுத்து சமற்கிருத மொழியை உருவாக்கம் செய்து அதனைத் ‘தெவ மொழி’ என உயர்த்திக் கொள்ளல்.
11அகத்தியர் தெற்கினைத் தாழ்த்திச் சமப்படுத்தல் - மொழிக்கான அடிப்படை வடிவங்களை எடுத்துச் சமற்கிருத மொழியினை உருவாக்கிக் கொண்ட பின் தமிழை ‘நீசமொழி’ என நகையாடல்.
12 வடக்கே முனிவர்கள் நிம்மதி - வடக்கே ஆரியரின் நிம்மதி
13 சிவன் தமிழை அகத்தியருக்குத் தந்தது - தமிழ் மொழியிலிருந்து சமற்கிருதத்தை மொழி வடிவமைப்புச் செய்து கொண்டது வெளிப்படாமல் இருக்க ஏற்றப்பட்ட சமயச் சாயம்.
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இமயமலையில் நடந்த சிவன் பார்வதி ’திருமணம்’ Empty Re: இமயமலையில் நடந்த சிவன் பார்வதி ’திருமணம்’

Post by சேயோன் Mon Apr 09, 2012 8:17 am

நல்ல விளக்கம் சாமி.

குடை சாயறதுக்கு பூமி என்ன கட்டை வண்டியா?.
எல்லாவற்றையும் ரீல் கதைகளாக மாற்றி உண்மையை மறைக்கிறதுல கில்லாடிகளாச்சே நம்ம வடமொழியாளர்கள்.

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

இமயமலையில் நடந்த சிவன் பார்வதி ’திருமணம்’ Empty Re: இமயமலையில் நடந்த சிவன் பார்வதி ’திருமணம்’

Post by கணேஷ் Mon Apr 09, 2012 10:46 pm

வணக்கம் சாமி அவர்களே,

அந்தக்காலத்திலே நடந்ததை எல்லாம் ஞானக்கண்ணால் பார்த்து நடந்ததை நடந்தவாறுகாட்டும் மாயக்கண்ணாடிபோலக் காட்டிவிட்டீர்கள் அற்புதம் அற்புதம்,

சாமி அவர்களே, கைலாயத்திலே நடக்காவிட்டாலும் வேறெங்காவது சிவனுக்கும், பார்வதிக்கும் கல்யாணம் நடந்துச்சா, உண்மையிலேயே அவங்க ரெண்டுபேரும் இருக்கறாங்களா? இல்லை டுபாக்கூரான்னும் அப்படியே பாத்து சொல்லிடுங்க புண்ணியமாப் போகும்

கணேஷ்

Posts : 22
Join date : 13/03/2012
Age : 50
Location : Koimbatore

Back to top Go down

இமயமலையில் நடந்த சிவன் பார்வதி ’திருமணம்’ Empty Re: இமயமலையில் நடந்த சிவன் பார்வதி ’திருமணம்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum