இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தமிழும் ஆரியமும் வேறே - சில உண்மைகள்

2 posters

Go down

தமிழும் ஆரியமும் வேறே - சில உண்மைகள்  Empty தமிழும் ஆரியமும் வேறே - சில உண்மைகள்

Post by சாமி Wed May 23, 2012 11:45 am

தமிழும் ஆரியமும் ஒன்றே என்று சுய நலம் காரணமாக சிலர் செப்படி வித்தைக் காட்டுவார்கள். ஆரிய நூல்களைப் படித்தாலே நமக்கும் ஆரியத்திற்கும் உள்ள வேற்றுமை எளிதில் புரியும். தமிழும் ஆரியமும் இரண்டு கண்கள் எங்களுக்கு என்று வெளியில் சொல்லும் இவர்கள் ......தமிழ்க் கண்ணில் மட்டும் சுண்ணாம்பு இடுவார்கள். இவர்களையும் பரம்பொருள் மேலேற்றிவிட வேண்டும் என்று வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை நமக்கு. உண்மைப் பரம்பொருளை மறைத்தாலும் மறுத்தாலும் இவர்களும் அவரால் படைக்கப்பட்டவர்கள்தானே.

தமிழ் அறநூல்களின்படி விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் தமிழர் அறமாகும். திருக்குறள் தமிழர் அறங்கூறு நூல். மனு ஆரியர் அறங்கூறு நூல். இவ்விரண்டிற்கும் உள்ள வேற்றுமையை பார்ப்போம்.

1.பிறப்பு
தமிழ் அறம்: திருக்குறள்
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் ; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் (குறள் எண் – 972)
எல்லா மக்களும் ஒரே பிறப்பினர்; பிறப்பில் ஏற்றத் தாழ்வு இல்லை. அவரவர் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. சிறப்பொவ்வாமை – ஒருவன் செய்யும் நல்ல தொழிலினால் பெருமையும், கெட்ட தொழிலினால் சிறுமையும் அடைதல்.

ஆரிய அறம்: மனு சாத்திரம்
“பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரமாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 100)

“சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்” (மனு, அதிகாரம் - 8, சுலோகம் - 270)

“பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்” (மனு, அதிகாரம் - 2, சுலோகம் - 31)

2 . கல்வி
தமிழ் அறம்: திருக்குறள்
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றா ரனைத்திலர் பாடு (குறள் எண் – 409)
கல்லாதவர் உயர்குடியில் பிறந்தாராயினும், தாழ் குடியில் பிறந்தும் கற்றாரைப் போல பெருமையில்லாதவராவார். (உயர்குடி – வழிவழியாக நல்லொழுக்கமுள்ள குடி, தாழ் குடி – நல்லொழுக்கமில்லாத). எல்லோரும் கற்க வேண்டும்.

ஆரிய அறம்: மனு சாத்திரம்
“ பார்ப்பனர் இந்த மனு நூலைப் படிக்கலாம்; மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது.” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 103)

“சூத்திரன் பக்கத்தில் இருக்கும் போது வேதம் ஓதக் கூடாது” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 99)

“வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கி விட வேண்டும். வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும்; பொருளையுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்” (மனு, சாத்திரம்)

3 . ஈகை
தமிழ் அறம்: திருக்குறள்
இறத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் (குறள் எண் – 229)
தேடிய பொருளைப் பிறர்க்கு கொடாமல் தாமே தனியாக உண்ணுதல் இரத்தலைக் காட்டிலும், கொடியது.

ஆரிய அறம்: மனு சாத்திரம்
“சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும், ஓமம் பண்ணிய மிச்சத்தையும் கொடுக்கலாகாது.” (மனு, அதிகாரம் - 4, சுலோகம் - 80)

4 . இரத்தல்
தமிழ் அறம்: திருக்குறள்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான் (குறள் எண் – 1062)
இவ்வுலகத்தை உண்டாக்கியவன், மக்கள் முயற்சியால் ஏதாவது தொழில் செய்து உயிர்வாழ்தலை விரும்பாது, பிறரிடம் சென்று இரந்தும் உயிர்வாழ்தலை விரும்புவானானால், அக்கொடியோன் இரப்பாரைப் போல எங்குந் திரிந்து கெடக்கடவன்.

ஆரிய அறம்: மனு சாத்திரம்
“நாள்தோறும் பிச்சைக்காக ஊர்க்குள் புகவேண்டும்” (மனு, அதிகாரம் - 6, சுலோகம் - 43)

(புலவர் குழந்தை எழுதிய திருக்குறளும் பரிமேலழகரும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது) (தொடரும்)


சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழும் ஆரியமும் வேறே - சில உண்மைகள்  Empty Re: தமிழும் ஆரியமும் வேறே - சில உண்மைகள்

Post by சேயோன் Fri Jun 08, 2012 7:43 pm

........தமிழும் ஆரியமும் ஒன்றே என்று சுய நலம் காரணமாக சிலர் செப்படி வித்தைக் காட்டுவார்கள். ஆரிய நூல்களைப் படித்தாலே நமக்கும் ஆரியத்திற்கும் உள்ள வேற்றுமை எளிதில் புரியும்......

மிக நல்ல பதிவு சாமி!

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum