இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீமத் பகவத்கீதை-விஷ்வரூபதர்ஷந யோகம்

Go down

ஸ்ரீமத் பகவத்கீதை-விஷ்வரூபதர்ஷந யோகம்  Empty ஸ்ரீமத் பகவத்கீதை-விஷ்வரூபதர்ஷந யோகம்

Post by ஆனந்தபைரவர் Thu Aug 05, 2010 10:53 pm

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத காதஷோ அத்யாய:।

விஷ்வரூபதர்ஷந யோகம்



அர்ஜுந உவாச।
மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம்।
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோ அயம் விகதோ மம॥ 11.1 ॥



பவாப்யயௌ ஹி பூதாநாம் ஷ்ருதௌ விஸ்தரஷோ மயா।
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம்॥ 11.2 ॥



ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஷ்வர।
த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஷ்வரம் புருஷோத்தம॥ 11.3 ॥



மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ।
யோகேஷ்வர ததோ மே த்வம் தர்ஷயாத்மாநமவ்யயம்॥ 11.4 ॥



ஸ்ரீபகவாநுவாச।
பஷ்ய மே பார்த ரூபாணி ஷதஷோ அத ஸஹஸ்ரஷ:।
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச॥ 11.5 ॥



பஷ்யாதித்யாந்வஸூந்ருத்ராநஷ்விநௌ மருதஸ்ததா।
பஹூந்யத்ருஷ்டபூர்வாணி பஷ்யாஷ்சர்யாணி பாரத॥ 11.6 ॥



இஹைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் பஷ்யாத்ய ஸசராசரம்।
மம தேஹே குடாகேஷ யச்சாந்யத் த்ரஷ்டுமிச்சஸி॥ 11.7 ॥



ந து மாம் ஷக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா।
திவ்யம் ததாமி தே சக்ஷு: பஷ்ய மே யோகமைஷ்வரம்॥ 11.8 ॥



ஸம்ஜய உவாச।
ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகேஷ்வரோ ஹரி:।
தர்ஷயாமாஸ பார்தாய பரமம் ரூபமைஷ்வரம்॥ 11.9 ॥



அநேகவக்த்ரநயநமநேகாத்புததர்ஷநம்।
அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம்॥ 11.10 ॥



திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம்।
ஸர்வாஷ்சர்யமயம் தேவமநந்தம் விஷ்வதோமுகம்॥ 11.11 ॥



திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா।
யதி பா: ஸத்ருஷீ ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந:॥ 11.12 ॥



தத்ரைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா।
அபஷ்யத்தேவதேவஸ்ய ஷரீரே பாண்டவஸ்ததா॥ 11.13 ॥



தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா தநம்ஜய:।
ப்ரணம்ய ஷிரஸா தேவம் க்ருதாஞ்ஜலிரபாஷத॥ 11.14 ॥



அர்ஜுந உவாச।
பஷ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிஷேஷஸங்காந்।
ப்ரஹ்மாணமீஷம் கமலாஸநஸ்தம் க்ருஷீம்ஷ்ச ஸர்வாநுரகாம்ஷ்ச திவ்யாந்॥ 11.15 ॥



அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம் பஷ்யாமி த்வாம் ஸர்வதோ அநந்தரூபம்।
நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம் பஷ்யாமி விஷ்வேஷ்வர விஷ்வரூப॥ 11.16 ॥



கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச தேஜோராஷிம் ஸர்வதோ தீப்திமந்தம்।
பஷ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத் தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம்॥ 11.17 ॥



த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம் த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்।
த்வமவ்யய: ஷாஷ்வததர்மகோப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே॥ 11.18 ॥



அநாதிமத்யாந்தமநந்தவீர்யம் அநந்தபாஹும் ஷஷிஸூர்யநேத்ரம்।
பஷ்யாமி த்வாம் தீப்தஹுதாஷவக்த்ரம் ஸ்வதேஜஸா விஷ்வமிதம் தபந்தம்॥ 11.19 ॥



த்யாவாப்ருதிவ்யோரிதமந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந திஷஷ்ச ஸர்வா:।
த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந்॥ 11.20 ॥



அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஷந்தி கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி।
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்கா: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி:॥ 11.21 ॥



ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா விஷ்வேஷ்விநௌ மருதஷ்சோஷ்மபாஷ்ச।
கந்தர்வயக்ஷாஸுரஸித்தஸங்கா வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஷ்சைவ ஸர்வே॥ 11.22 ॥



ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம் மஹாபாஹோ பஹுபாஹூருபாதம்।
பஹூதரம் பஹுதம்ஷ்ட்ராகராலம் த்ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஸ்ததாஹம்॥ 11.23 ॥



நப:ஸ்ப்ருஷம் தீப்தமநேகவர்ணம் வ்யாத்தாநநம் தீப்தவிஷாலநேத்ரம்।
த்ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா த்ருதிம் ந விந்தாமி ஷமம் ச விஷ்ணோ॥ 11.24 ॥



தம்ஷ்ட்ராகராலாநி ச தே முகாநி த்ருஷ்ட்வைவ காலாநலஸந்நிபாநி।
திஷோ ந ஜாநே ந லபே ச ஷர்ம ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ॥ 11.25 ॥



அமீ ச த்வாம் த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை:।
பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸௌ ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை:॥ 11.26 ॥



வக்த்ராணி தே த்வரமாணா விஷந்தி தம்ஷ்ட்ராகராலாநி பயாநகாநி।
கேசித்விலக்நா தஷநாந்தரேஷு ஸம்த்ருஷ்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை:॥ 11.27 ॥



யதா நதீநாம் பஹவோ அம்புவேகா: ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி।
ததா தவாமீ நரலோகவீரா விஷந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி॥ 11.28 ॥



யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா விஷந்தி நாஷாய ஸம்ருத்தவேகா:।
ததைவ நாஷாய விஷந்தி லோகா: தவாபி வக்த்ராணி ஸம்ருத்தவேகா:॥ 11.29 ॥



லேலிஹ்யஸே க்ரஸமாந: ஸமந்தாத் லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி:।
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ॥ 11.30 ॥



ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ நமோ அஸ்து தே தேவவர ப்ரஸீத।
விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம் ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம்॥ 11.31 ॥



ஸ்ரீபகவாநுவாச।
காலோ அஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்தோ லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த:।
க்ருதே அபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே யே அவஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா:॥ 11.32 ॥



தஸ்மாத்த்வமுத்திஷ்ட யஷோ லபஸ்வ ஜித்வா ஷத்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம்।
மயைவைதே நிஹதா: பூர்வமேவ நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந்॥ 11.33 ॥



த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச கர்ணம் ததாந்யாநபி யோதவீராந்।
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மாவ்யதிஷ்டா யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந்॥ 11.34 ॥



ஸம்ஜய உவாச।
ஏதச்ச்ருத்வா வசநம் கேஷவஸ்ய க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ।
நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம் ஸகத்கதம் பீதபீத: ப்ரணம்ய॥ 11.35 ॥



அர்ஜுந உவாச।
ஸ்தாநே ஹ்ருஷீகேஷ தவ ப்ரகீர்த்யா ஜகத்ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்யதே ச।
ரக்ஷாம்ஸி பீதாநி திஷோ த்ரவந்தி ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா:॥ 11.36 ॥



கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந் கரீயஸே ப்ரஹ்மணோ அப்யாதிகர்த்ரே।
அநந்த தேவேஷ ஜகந்நிவாஸ த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத்॥ 11.37॥



த்வமாதிதேவ: புருஷ: புராண: த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்।
வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம த்வயா ததம் விஷ்வமநந்தரூப॥ 11.38 ॥



வாயுர்யமோ அக்நிர்வருண: ஷஷாங்க: ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஷ்ச।
நமோ நமஸ்தே அஸ்து ஸஹஸ்ரக்ருத்வ: புநஷ்ச பூயோ அபி நமோ நமஸ்தே॥ 11.39 ॥



நம: புரஸ்தாதத ப்ருஷ்டதஸ்தே நமோ அஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ।
அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ:॥ 11.40 ॥



ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி।
அஜாநதா மஹிமாநம் தவேதம் மயா ப்ரமாதாத்ப்ரணயேந வா அபி॥ 11.41 ॥



யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோ அஸி விஹாரஷய்யாஸநபோஜநேஷு।
ஏகோ அதவாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம்॥ 11.42 ॥



பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஷ்ச குருர்கரீயாந்।
ந த்வத்ஸமோ அஸ்த்யப்யதிக: குதோ அந்யோ லோகத்ரயே அப்யப்ரதிமப்ரபாவ॥ 11.43 ॥



தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரஸாதயே த்வாமஹமீஷமீட்யம்।
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்॥ 11.44 ॥



அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோ அஸ்மி த்ருஷ்ட்வா பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே।
ததேவ மே தர்ஷய தேவ ரூபம் ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ॥ 11.45 ॥



கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ।
தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பவ விஷ்வமூர்தே॥ 11.46 ॥



ஸ்ரீபகவாநுவாச।
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம் ரூபம் பரம் தர்ஷிதமாத்மயோகாத்।
தேஜோமயம் விஷ்வமநந்தமாத்யம் யந்மே த்வதந்யேந ந த்ருஷ்டபூர்வம்॥ 11.47 ॥



ந வேத யஜ்ஞாத்யயநைர்ந தாநை: ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரை:।
ஏவம்ரூப: ஷக்ய அஹம் ந்ருலோகே த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர॥ 11.48 ॥



மா தே வ்யதா மா ச விமூடபாவோ த்ருஷ்ட்வா ரூபம் கோரமீத்ருங்மமேதம்।
வ்யபேதபீ: ப்ரீதமநா: புநஸ்த்வம் ததேவ மே ரூபமிதம் ப்ரபஷ்ய॥ 11.49 ॥



ஸம்ஜய உவாச।
இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்ததோக்த்வா ஸ்வகம் ரூபம் தர்ஷயாமாஸ பூய:।
ஆஷ்வாஸயாமாஸ ச பீதமேநம் பூத்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா॥ 11.50 ॥



அர்ஜுந உவாச।
த்ருஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தந।
இதாநீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் கத:॥ 11.51 ॥



ஸ்ரீபகவாநுவாச।
ஸுதுர்தர்ஷமிதம் ரூபம் த்ருஷ்ட்வாநஸி யந்மம।
தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஷநகாங்க்ஷிண:॥ 11.52 ॥



நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா।
ஷக்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா॥ 11.53 ॥



பக்த்யா த்வநந்யயா ஷக்ய அஹமேவம்விதோ அர்ஜுந।
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந ப்ரவேஷ்டும் ச பரம்தப॥ 11.54 ॥



மத்கர்மக்ருந்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித:।
நிர்வைர: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ॥ 11.55 ॥



ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
விஷ்வரூபதர்ஷநயோகோ நாமை ஏகாதஷோ அத்யாய:॥ 11 ॥






ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'விஷ்வரூபதர்ஷந யோகம்' எனப் பெயர் படைத்த பதினொன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது.

அர்ஜூனன்: கமலக்கண்ணா, என்மீது தாங்கள் அனுக்கிரகித்து அன்புடன் இயம்பியவற்றால் எனது மயக்கம் தெளிந்தது. உம் மகிமைகளையும், உயிரினங்களின் ஜனன, மரண விவரங்களையும் அறிந்தேன். பரமேஸ்வரா, என்முன் உம்மை நான் உண்மையில் கண்டுகொண்டிருந்தாலும், பிரபஞ்சத்திற்குள் நீர் எவ்வாறு நிறைந்துள்ளீர் என்பதைக் காண ஆவலாய் உள்ளேன். என்னால் அதைக் காணமுடியும் என நீர் நினைத்தால், யோகேஸ்வரா, அன்புடன் அந்த அகில ரூபத்தைக் காட்டி அருள்வீராக.

பகவான்: அர்ஜூனா, எனது வைபவங்களை ஆயிரக்கணக்கான தெய்வீக உரு, வர்ணங்களுடன் காண்பாயாக. ஆதித்யர்கள், ருத்ரர்கள், தேவர்கள் அனைவரையும் பார். இதுவரை யாரும் காணாத வினோதங்களைப் பார். இந்த விஸ்வரூபத்தில் நீ, காண விரும்புவதையும், வருங்காலத்தில் காண விரும்புவதையும் காணலாம். எல்லாம் முழுமையாய் உள்ளன. ஆனால் உன் கண்களால் இதைக் காணமுடியாது என்பதால், உனக்கு தெய்வீகக் கண்களை அளிக்கிறேன்.

சஞ்சயன்: மன்னா, இங்ஙனம் கூறிய பகவான், அர்ஜூனனிடம் தமது விஸ்வரூபத்தைக் காட்டினார்.

அவ்வடிவில் அர்ஜூனன் எண்ணற்ற வினோதமான கண்களையும், வாய்களையும் கண்டான். இறைவன் தெய்வீக ஆடை, ஆபரணங்களுடன், மாலை மற்றும் வாசனைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். பிரம்மாண்டமாக எங்கும் வியாபித்துக் காணப்பட்டார். பல்லாயிரக்கணக்கான சூரியன்கள் உதித்தால் ஒருவேளை அந்த விஸ்வரூப ஜோதிக்கு இணையாகலாம். ஆயிரக்கணக்கில் பிரிந்திருக்கும் அகில விஸ்தாரமெல்லாம் ஒரே இடத்தில் பார்த்தனால் பார்க்கப்பட்டது. மெய்சிலிர்க்க குழப்பத்துடன், கூப்பிய கரங்களால் பிரார்த்தித்தான்.

அர்ஜூனன்: கிருஷ்ணா, எல்லா உயிர்களும், தேவர்களும் உமது உடலில் அணிவகுத்திருப்பதைக் காண்கிறேன். தாமரையில் பிரம்மா, சிவபெருமான், பல முனிவர்கள், தெய்வீக நாகங்களை நான் காண்கிறேன். எல்லையற்ற உருவங்களை - வயிறுகள், வாய்கள், கண்களுடன் காண்கிறேன். அவைகளுக்கு ஆரம்பமோ, முடிவோ, நடுவோ இல்லை. மகுடங்களாலும், கதைகளாலும், சக்கரங்களாலும் உமது உருவம் சூரியனைப் போன்று ஒளிர்கிறது. காண்பதற்கும் கடினமாக உள்ளது.

நீரே அறியப்பட வேண்டியவர், பரம புருஷர், அகில ஆதாரம். எல்லையற்றவர், நித்ய புருஷர், அறநெறி காப்பவர், ஆரம்பமும் நடுவும் முடிவுமில்லாத மூலம் நீர். உம் கண்களில் சூரிய சந்திரர் உள்ளனர். உம் தேஜஸினால் அகிலம் முழுவதையும் தகிக்கிறீர்.

ஒருவரே எனினும் எங்கும் நிறைந்துள்ளீர். உம் பயங்கரத் தோற்றத்தினால் கிரஹ மண்டலங்கள் நடுங்குகின்றன. தேவர்கள் அச்சத்துடன் வேத மந்திரங்களை ஓதிக்கொண்டு உம்மைச் சரணடைகின்றனர். சிவபெருமானின் தோற்றங்களும், ஆதித்யர்களும், வசுக்களும், சாக்கியர்களும், விஸ்வதேவர்களும், அஸ்வினிகளும், மருத்துக்களும், முன்னோர்களும், கந்தர்வர்களும், யட்சர்களும், அசுரர்களும், சித்தர்களும் வியப்புடன் காண்கின்றனர். லோக தலைவர்கள் உமது தோற்றத்திலான முகங்கள், கண்கள், வாய்கள், பற்கள், புஜங்கள், வயிறுகள், கால்கள் இவற்றைக் கண்டு நடுங்குகின்றனர். ஓ விஷ்ணுவே, என் மனதை இனியும் அமைதிப்படுத்த முடியாது. வானளாவிய வர்ணங்கள், கண்கள், வாய்களுடன் நிற்கும் உம்மைக் கண்டு அஞ்சுகிறேன். தேவாதி தேவா, உலகின் புகலிடமே, என்மீது கருணை காட்டுவீராக. மரணம் போல எரியும் உமது முகங்களையும், பற்களையும் எல்லா திக்குகளிலும் கண்டு என் மனம் நடுக்கமுறுகிறது.

சக மன்னர்களுடன் திருதராஷ்டிர புத்திரர்களும், பீஷ்மரும், துரோணரும், கர்ணனும் மற்றும் நமது வீரர்கள் அனைவரும் உமது வாயினுள் புகுவதால், பயங்கரமான பற்களால் அவர்களின் தலைகள் சிதைகின்றன. நதிகள் கடலில் மறைவதுபோல் கொதிக்கும் உமது வாய்களில் விழுநது அவர்கள் அழிகின்றனர். நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகள் போல் மக்கள் உம் வாய்களில் நுழைகின்றனர். அகிலங்களைக் தகிக்கும் தேவாதிதேவா, நீர் யார்? உம் நோக்கமென்ன?

பகவான்: உலகை அழிக்கும் காலம் நான். போரிடுபவரில் உங்களைத் தவிர இருதரப்பினரும் அழிக்கப்படுவர். எழுந்து போரிடு. எதிரிகளை வென்று வளத்துடன் ஆட்சி புரிவாயாக. எனது யுக்தியால் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். இடக்கையால் அம்பெய்பவனே, இப்போரில் நீ ஒரு கருவியாகவே இருப்பாயாக. துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் போன்ற வீரர்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனர். வெறுமனே போரிட்டு, வெல்.

சஞ்சயன்: இறைவனின் வார்த்தைகளைக் கேட்ட அர்ஜூனன், கூப்பிய கரங்களுடன் நடுங்கியபடி கூறினான்.

அர்ஜூனன்: ஹ்ருஷீகேசா, உம் புகழ் கேட்டு உலகம் மகிழ்கிறது. பக்குவமானவர்கள் உம்மை வணங்கும் நேரத்தில் அசுரர்கள் உம்மைக் கண்டு ஓடுகின்றனர். பிரம்மாவிற்கும் மூத்தவரே, எல்லையற்றவரே, தேவாதிதேவா, ஜகந்நிவாசா, ஜடத்தோற்றத்திற்கு உன்னதமான வெல்லமுடியாத காரணம் நீர். நீரே ஆதி புருஷர், பகவான், பிரபஞ்சங்களின் புகலிடம், அறிபவர், அறியப்படவேண்டியவர். இயற்கைக்கு மேம்பட்டவர், பிரபஞ்ச தோற்றம் உம்மால் புகப்படுகின்றது. காற்று, நெருப்பு, நீர், சந்திரன் அனைத்தும் நீரே. முன், பின்னிருந்தும், எல்லாத் திசைகளிலிருந்தும் உமக்கு ஆயிரமாயிரம் வணக்கங்கள். கட்டற்ற வலிமையே, எல்லையற்ற திறனின் இறைவா, அனைத்தும் நீரே.

உமது வைபவங்களை அறியாது, கடந்த காலத்தில் நான் பந்தத்தாலோ, பிரேமையாலோ, கிருஷ்ணா, மாதவா, நண்பா என்றெல்லாம் அழைத்திருந்தேன். விளையாடியபோதும், படுத்திருந்த போதும், உட்காந்திருந்த போதும், உணவருந்தும் போதும், தனிப்பட்டோ அல்லது பிறர் முன்னிலையிலோ பலவாறு உம்மை நான் அவமதித்திருக்கிறேன். அவைகளை மன்னித்தருள்வீராக.

ஜடத்தோற்றத்தின் தந்தையும், மதிப்புக்குரிய தலைவரும், ஆன்மீக ஆசிரியரும் நீர். உமக்கு நிகரும், உயர்ந்ததும் ஏதுமில்லை. மூவுலகிலும் நீர் அளவிட இயலாதவர். பரம புருஷர், ஜீவர்களால் வணங்கப்பட வேண்டியவர். போற்றத்தக்க உம்மிடம் அருளை யாசிக்கிறேன். மைந்தனுக்கு தந்தை போலும், நண்பனுக்கு நண்பன் போலும், காதலிக்கு காதலன் போலும் உமக்கு நான் செய்தவைகளைப் பொறுப்பீராக.

இதுவரையில் நான் காணாததைக் கண்டு மகிழ்வினும், அச்சத்தினால் நடுங்குகிறேன். எனவே கருணையுடன் இவ்வுருவை நீக்கி உமது இறை உருவைக் காண்பித்தருள்க. மகுடம், சங்கு, சக்கர, கதை, தாமரையுடன் நாற்கரங்கள் கொண்ட அத்திருவுருவைக் காண ஆவலுடனுள்ளேன்.

பகவான்: அன்பனே அர்ஜூனா, எனது எல்லையற்ற விஸ்வரூபமானது எனது அந்தரங்க சக்தியால் உனக்கு காண்பிக்கப்பட்டது. இதற்குமுன் இதை யாரும் கண்டதில்லை. வேதப்பயிற்சியாலோ, தான, தவங்களாலோ, பிற செயல்களாலோ இவ்வுருவம் காணப்படக்கூடியதல்ல. நடுக்கத்திலிருந்து விடுபட்டு, அமைதியாக நீ விரும்பிய வடிவில் என்னைக் காண்.

சஞ்சயன்: இங்ஙனம் கூறிய பகவான், நாற்கரங்களுடனான - இறைவடிவான நாராயண தோற்றத்தில் அருளினார். பின் அச்சத்துடனிருந்த அர்ஜூனனை உற்சாகப்படுத்த அனைத்துக்கும் மூலத்தோற்றமான இருகரங்கள் கொண்ட கிருஷ்ண உருவைக் காட்டினார்.

அர்ஜூனன்: கிருஷ்ணா, மனிதர் போன்ற உமது இத்திருவுரு கண்டு என் மனம் அமைதியுற்றது. நான் இப்போது சுய இயல்பிலுள்ளேன்.

பகவான்: அர்ஜூனா, நீ காணும் இவ்வுருவானது காண்பதற்கு கடினமானது. தேவர்களும் இதைக் காண ஏங்குகின்றனர். உன் தெய்வீகக் கண்களால் நீ காணும் இத்தோற்றமானது வேத பாராயணங்களாலோ, கடுந்தவங்களாலோ, தானங்களாலோ, வழிபாட்டினாலோ விளைவதன்று.

எனக்காற்றும் கலப்பற்ற பக்தித் தொண்டினால் மட்டுமே என்னை இவ்வாறு புரிந்து கொள்ள இயலும்; நீ உன்முன் காணும் இது போன்ற தோற்றத்தைக் காண இயலும். என்னைக் குறித்த ரகசியத்திலும் உட்புக முடியும்.

அர்ஜூனா, மனக் கற்பனைகளின் களங்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, எல்லா உயிர்களையும் நேசிப்பவனும், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவனுமான ஒருவன் நிச்சயமாய் என்னை வந்தடைகிறான்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum