இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீமத் பகவத்கீதை-புருஷோத்தம யோகம்

Go down

ஸ்ரீமத் பகவத்கீதை-புருஷோத்தம யோகம் Empty ஸ்ரீமத் பகவத்கீதை-புருஷோத்தம யோகம்

Post by ஆனந்தபைரவர் Thu Aug 05, 2010 10:58 pm

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத பம்சதஷோ அத்யாய:।

புருஷோத்தம யோகம்



ஸ்ரீபகவாநுவாச।
ஊர்த்வமூலமத:ஷாகமஷ்வத்தம் ப்ராஹுரவ்யயம்।
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித்॥ 15.1 ॥



அதஷ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஷாகா குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா:।
அதஷ்ச மூலாந்யநுஸம்ததாநி கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே॥ 15.2 ॥



ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே நாந்தோ ந சாதிர்ந ச ஸம்ப்ரதிஷ்டா।
அஷ்வத்தமேநம் ஸுவிரூடமூலம் அஸங்கஷஸ்த்ரேண த்ருடேந சித்த்வா॥ 15.3 ॥



தத: பதம் தத்பரிமார்கிதவ்யம் யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய:।
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே।
யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ॥ 15.4 ॥



நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா அத்யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா:।
த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:கஸம்ஜ்ஞை: கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத்॥ 15.5 ॥



ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக:।
யத்கத்வா ந நிவர்தம்தே தத்தாம பரமம் மம॥ 15.6 ॥



மமைவாம்ஷோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந:।
மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தாநி கர்ஷதி॥ 15.7 ॥



ஷரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஷ்வர:।
க்ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்கம்தாநிவாஷயாத்॥ 15.8 ॥



ஷ்ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஷநம் ச ரஸநம் க்ராணமேவ ச।
அதிஷ்டாய மநஷ்சாயம் விஷயாநுபஸேவதே॥ 15.9 ॥



உத்க்ராமந்தம் ஸ்திதம் வா அபி பும்ஜாநம் வா குணாந்விதம்।
விமூடா நாநுபஷ்யந்தி பஷ்யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ:॥ 15.10 ॥



யதந்தோ யோகிநஷ்சைநம் பஷ்யந்த்யாத்மந்யவஸ்திதம்।
யதந்தோ அப்யக்ருதாத்மாநோ நைநம் பஷ்யம்த்யசேதஸ:॥ 15.11 ॥



யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதே அகிலம்।
யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம்॥ 15.12 ॥



காமாவிஷ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா।
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:॥ 15.13 ॥



அஹம் வைஷ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஷ்ரித:।
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம்॥ 15.14 ॥



ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம்ச।
வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம்॥ 15.15 ॥



த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஷ்சாக்ஷர ஏவ ச।
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே॥ 15.16 ॥



உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:।
யோ லோகத்ரயமாவிஷ்ய பிபர்த்யவ்யய ஈஷ்வர:॥ 15.17 ॥



யஸ்மாத்க்ஷரமதீதோ அஹமக்ஷராதபி சோத்தம:।
அதோ அஸ்மி லோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம:॥ 15.18 ॥



யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதிபுருஷோத்தமம்।
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத॥ 15.19 ॥



இதி குஹ்யதமம் ஷாஸ்த்ரமிதமுக்தம் மயா அநக।
ஏதத்புத்த்வா புத்திமாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஷ்ச பாரத॥ 15.20 ॥



ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுந ஸம்வாதே
புருஷோத்தமயோகோ நாம பம்சதஷோ அத்யாய:॥ 15 ॥



ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'புருஷோத்தம யோகம்' எனப் பெயர் படைத்த பதினைந்தாவது அத்தியாயம் நிறைவுற்றது.


பகவான் : மேலே வேரும், கீழே கிளைகளும் உடைய ஒரு ஆலமரம் உள்ளது. வேதப் பதங்களே அதன் இலைகள். இம்மரத்தை அறிபவன் வேதங்களை அறிபவனாவான். முக்குணங்களால் கிளைகள் வளர்கின்றன. புலன் விஷயங்கள் சிறு கிளைகளாகும். வேர்கள் கீழ் நோக்கிப் பிரிகின்றன. அவை பலனை எதிர்பார்க்கும் செயல்களுடன் கட்டப்பட்டுள்ளன.

இம்மரத்தின் உண்மைத்தோற்றம் இங்கில்லை. இதன் துவக்கமோ முடிவோ, அஸ்திவாரமோ யாராலும் புரிய முடியாதது. எனினும் பற்றின்மை எனும் கோடாரியால் இதனை வீழ்த்த வேண்டும். இதனால் எங்கு சென்றால் மீண்டும் திரும்புவதில்லையோ அங்கு, யாரிடமிருந்து அனைத்தும் துவங்குகின்றதோ, சிந்தனைக்கு எட்டாக் காலம் தொட்டு எல்லாம் தங்கியிருக்கிறதோ, அந்த முழு முதற்கடவுளைச் சரணடைய வேண்டும்.

மயக்கம், பொய், அகங்காரம், பொய் உறவுகள், காமம், இருமைகள் இவற்றிலிருந்து விடுபட்டவனே நித்யத்தை அறிந்தவன். இறைவனைச் சரணடைவதைப் புரிந்தவன் அவனே, அவனே அவரது தேசத்தை அடைகிறான்.

அத்தேசமானது, சூர்ய சந்திரராலும், பிற ஒளியாலும் ஒளியூட்டப்படுவதில்லை. அங்கு சென்றவன் மீண்டும் இங்கு திரும்புவதில்லை.

ஜடவுலகில் வாழும் உயிரினங்கள் அனைவரும் எனது நித்தியமான பின்னப்பகுதிகளாவர். கட்டுண்ட காரணத்தால் மனம் முதலான ஆறு புலன்களால் கஷ்டப்படுகின்றனர்.

காற்றானது வாசனையைச் சுமந்து செல்வது போல், ஓருடலிலிருந்து மற்றொரு உடலுக்கு உணர்வுகளை உயிர்வாழி சுமந்து செல்கிறான். இங்கனம் சென்றதும் அவனது மனதுக்குப் பொருத்தமான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இவற்றைத் தனதாக்கியபடி உரிமையுடன் விஷயங்களை அனுபவிக்கிறான்.

உயிர்வாழி எங்கனம் உடலை விட்டுப் போகிறான் என்பதையும், குண மயக்கத்தால் எத்தகைய சரீரத்தை அடுத்துப் பெறுவான் என்பதையும் மூடர்களால் அறிய இயலாது. அறிவைப் பயின்றவர்களே இதனை அறிய முடியும். ஆன்ம உணர்வில் நிலைத்திருப்பவன் இதனைத் தெளிவாகக் காணலாம். அவ்வுணர்வு இல்லாதவன் முயன்றாலும் நடப்பதைக் காண இயலாது.

ஜடவுலக இருளை நீக்கும் கதிரவனின் ஒளி என்னிடமிருந்தே தோன்றுகிறது. சந்திரன், நெருப்பு ஆகியவற்றின் ஒளியும் என்னிடமிருந்தே வருகிறது.

நான் ஒவ்வொரு கிரகத்தினுள் நுழைவதாலும், எனது சக்தியாலும் கிரகங்கள் தமது சுழற்பாதையில் செல்கின்றன. நானே சந்திரனாகி தாவரங்களுக்கு வாழ்வு ரசத்தை வழங்குகிறேன். (தாவரங்களிலிருந்து நாம் பெறும் சுவையான பொருட்களின் சுவைக்குக் காரணமாக வாழ்வு ரசம் உள்ளது). உயிர்களின் உடலில் உதரக்கனலாய் இருந்து உள், வெளி மூச்சுக் காற்றால் நான்கு விதமான உணவுகளை நானே செரிக்கச் செய்கிறேன். (நான்குவித உணவுகள் - பக்ஷயம் மெல்லுதல், போக்யம் விழுங்குதல், லேஹ்யம் நக்குதல், சோஷ்யம் உறிஞ்சுதல்)

ஒவ்வொருவரின் இதயத்திலும் நான் உள்ளேன். என்னிடமிருந்தே நினைவும், ஞானமும், மறதியும் உண்டாகின்றன. வேதங்களால் நானே அறியப்பட வேண்டியவன். வேதாந்தத்தை இயற்றியவனும், அறிபவனும் கூட நானே.

இழிபவர், இழியாதவர் என இருவகை மனிதர்கள் உள்ளனர். ஜடவுலகில் அனைவருக்கும் இழியும் வாய்ப்பு உண்டு. ஆன்மீக உலகில் இழியும் வாய்ப்பில்லை.

இவ்விருவருக்கும் அப்பாற்பட்டு உலகிற்குள் புகுந்து அவற்றைக் காப்பவரான ஈஸ்வரன் இருக்கிறார். இழிபவர், இழியாதவர் இவ்விருவருக்கும் அப்பாற்பட்டு சிறந்தவனாக நான் விளங்குவதால் உலகாலும், வேதங்களாலும் நான் அந்த ஈஸ்வரனாக, புருஷோத்தமனாக கொண்டாடப்படுகிறேன்.

சந்தேகமின்றி புருஷோத்தமனாக என்னை ஏற்பவன் எல்லாமறிந்தவன். அவன் முழு பக்தித் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.

குற்றமற்றவனே, வேதங்களின் மிகவும் ரகசியமான பகுதி இதுவே. உனக்கு இப்போது அது வெளிப்படுத்தப்பட்டது. இதை அறிபவனே அறிஞன். அவன் தன் முயற்சிகளில் பக்குவம் பெற்றவன்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum