இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீமத் பகவத்கீதை-தைவாஸுரஸம்பத்விபாக யோகம்

Go down

ஸ்ரீமத் பகவத்கீதை-தைவாஸுரஸம்பத்விபாக யோகம் Empty ஸ்ரீமத் பகவத்கீதை-தைவாஸுரஸம்பத்விபாக யோகம்

Post by ஆனந்தபைரவர் Thu Aug 05, 2010 10:59 pm

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத ஷோடஷோ அத்யாய:।

தைவாஸுரஸம்பத்விபாக யோகம்



ஸ்ரீபகவாநுவாச।
அபயம் ஸத்த்வஸம்ஷுத்திர்ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி:।
தாநம் தமஷ்ச யஜ்ஞஷ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம்॥ 16.1 ॥



அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: ஷாந்திரபைஷுநம்।
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம்॥ 16.2 ॥



தேஜ: க்ஷமா த்ருதி: ஷௌசமத்ரோஹோ நாதிமாநிதா।
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத॥ 16.3 ॥



தம்போ தர்போ அபிமாநஷ்ச க்ரோத: பாருஷ்யமேவ ச।
அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம்॥ 16.4 ॥



தைவீ ஸம்பத்விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா।
மா ஷுச: ஸம்பதம் தைவீமபிஜாதோ அஸி பாண்டவ॥ 16.5 ॥



த்வௌ பூதஸர்கௌ லோகே அஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச।
தைவோ விஸ்தரஷ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஷ்ருணு॥ 16.6 ॥



ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விதுராஸுரா:।
ந ஷௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே॥ 16.7 ॥



அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீஷ்வரம்।
அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம்॥ 16.8 ॥



ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோ அல்பபுத்தய:।
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோ அஹிதா:॥ 16.9 ॥



காமமாஷ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா:।
மோஹாத்க்ருஹீத்வாஸத்க்ராஹாந்ப்ரவர்தந்தே அஷுசிவ்ரதா:॥ 16.10 ॥



சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஷ்ரிதா:।
காமோபபோகபரமா ஏதாவதிதி நிஷ்சிதா:॥ 16.11 ॥



ஆஷாபாஷஷதைர்பத்தா: காமக்ரோதபராயணா:।
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸம்சயாந்॥ 16.12 ॥



இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம்।
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம்॥ 16.13 ॥



அஸௌ மயா ஹத: ஷத்ருர்ஹநிஷ்யே சாபராநபி।
ஈஷ்வரோ அஹமஹம் போகீ ஸித்தோ அஹம் பலவாந்ஸுகீ॥ 16.14 ॥



ஆட்யோ அபிஜநவாநஸ்மி கோ அந்யோஸ்தி ஸத்ருஷோ மயா।
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா:॥ 16.15 ॥



அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா:।
ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகே அஷுசௌ॥ 16.16 ॥



ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தநமாநமதாந்விதா:।
யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம்॥ 16.17 ॥



அஹம்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஷ்ரிதா:।
மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோ அப்யஸூயகா:॥ 16.18 ॥



தாநஹம் த்விஷத: க்ருராந்ஸம்ஸாரேஷு நராதமாந்।
க்ஷிபாம்யஜஸ்ரமஷுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு॥ 16.19 ॥



ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநிஜந்மநி।
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம்॥ 16.20 ॥



த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஷநமாத்மந:।
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத்॥ 16.21 ॥



ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர:।
ஆசரத்யாத்மந: ஷ்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம்॥ 16.22 ॥



ய: ஷாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:।
ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்॥ 16.23 ॥



தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்திதௌ।
ஜ்ஞாத்வா ஷாஸ்த்ரவிதாநோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி॥ 16.24 ॥



ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
தைவாஸுரஸம்பத்விபாகயோகோ நாம ஷோடஷோ அத்யாய:॥ 16 ॥



ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'தைவாஸுரஸம்பத்விபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினாறாவது அத்தியாயம் நிறைவுற்றது.

பகவான் : பரதனின் மைந்தனே, அஞ்சாமை, தன் இருப்பில் தூய்மையாய் இருத்தல், இணக்கம், ஈகை, தன்னடக்கம், ஞானவிருத்தி, யாகம், வேதம் படித்தல், தபஸ், எளிமை, அகிம்சை, வாய்மை, சினமின்மை, துறவு, அமைதி, புறங்கூறாமை, இரக்கம், பேராசையின்மை, இனிமை, நிதானம், சலிப்புறாமை, தைரியம், பொறை, வலிமை, தூய்மை, சூதின்மை, செருக்கின்மை இவைகள் தெய்வீகக் குணங்களாகும்.

பகட்டு, அகந்தை, வீண் அபிமானம், கோபம், கொடூரம், அஞ்ஞானம் முதலானவை அசுரக் குணங்களாகும்.

தெய்வீகக் குணங்கள் ஒருவனை விடுபடுத்துகின்றன. அசுரக்குணங்கள் சிறைப்படுத்துகின்றன. பாண்டுபுத்திரா, வருந்தாதே. நீ தெய்வீகக் குணங்களுடன் பிறந்துள்ளாய்.

மனிதர்களிலும் தெய்வீகம், அசுரத்தனம் என இருவிதம் உண்டு. அசுரத்தன்மையை விளக்குகிறேன்.

அசுரர்கள் நன்மை, தீமைகளை அறியார். தூய்மை, வாய்மை, ஒழுக்கம் அவர்களிடத்தில் காணப்படாது.

இவ்வுலகம் பொய் என்றும், ஆதாரமற்றது என்றும், உலகை இயக்கும் கடவுளை இல்லை என்றும், காமத்தால் உலகு படைக்கப்பட்டது, அதைத்தவிர வேறேதும் இல்லை என்றும் அசுரர் கூறுகின்றனர். இதனால் அவர்கள் அறிவிழந்தவர்களாய் தன்னையும் கொன்று, உலகையும் அழிப்பதற்கான லாபமற்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் நிறைவேறாத காமம், ஆடம்பரம், பெருமை, பொய்க்கவுரவ‌ம் இவற்றால் மயங்கி, நிரந்தரமற்றவைகளில் மனம் மயங்கி தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சாகும் வரை இவர்கள் காமத்தாலும், கவலையாலும், கோபத்தாலும் புலனுகர்வுக்காக தவறான முறையில் செல்வத்தைச் சேர்க்கின்றனர். அறியாமையால் "இது என்னால் அடையப்பட்டது. திட்டமிட்டபடி மேலும் செல்வம் சேர்ப்பேன், இது என்னுடையது, எதிர்காலத்தில் இது இன்னும் பெருகும், அவன் எனக்கு எதிரி, அதனால் கொன்று விடுவேன், நானே தலைவன், நானே சுகம் காண்பவன், பலசாலி, பக்குவமானவன், செல்வாக்குடையவன், தான யாகம் செய்வேன், இவ்வாறு இன்பமாயிருப்பேன்" இவை போன்றவை அசுரர்களின் எண்ணங்கள் ஆகும்.

எண்ணக் குழப்பங்களாலும், மோகத்தாலும் காம போகத்தில் பற்றுள்ள இவர்கள் நரகில் வீழ்கின்றனர்.

திமிராலும், வளத்தாலும், பொய் கவுரவத்தாலும் மயங்கிக் கிடக்கும் இந்த அசுரத் தன்மையினர், நெறிமுறை இன்றி யாகமுஞ் செய்வர். பொய்யான தன்னுணர்வு, பலம், பெருமை, காமம், கோபம் இவற்றில் மயங்கிப் போன இவ்வசுரர்கள் தமக்குள்ளும் பிற உயிர்களுக்குள்ளும் வாழும் பரமாத்மாவின் மீது பொறாமையுற்று உண்மைக்கு எதிரான நிந்தனைகள் புரிகின்றனர்.

மிகவும் தரந்தாழ்ந்த, பொறாமை, குறும்புகள் நிறைந்த இவர்கள் கடல் போன்ற ஜட இருப்பின் பலவிதமான அசுர யோனிகளுள் என்னால் தள்ளப்படுகின்றனர். மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து, என்னை அடையமுடியாத கீழ் நிலையை அடைகின்றனர்.

ஆன்மாவை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் மூன்று நரக வாசல்கள் காமம், கோபம், லோபம் ஆகியவை. அறிவாளிகள் இவற்றைத் துறக்க வேண்டும். இதிலிருந்து தப்பிய ஒருவன், தன்னை அறிவதற்கு சாதகமான செயல்களைச் செய்து, படிப்படியாக உயர்ந்து பரம இலக்கை அடைகிறான்.

காமத்தால் சாஸ்திர நெறிகளைப் பொருட்படுத்தாது, மனம் போனபடி வாழ்பவன் ஆன்ம பக்குவத்தையோ, சுகத்தையோ, பரம இலக்கையோ அடைவதில்லை. ஆகையால் நல்வினை, தீவினைகளை அறிய சாஸ்திர விதிமுறைகளைக் கடைப்பிடித்து உயர முயல வேண்டும்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum