இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


வியாச பகவான் அருளும் திருக்கோயில்!

Go down

வியாச பகவான் அருளும் திருக்கோயில்! Empty வியாச பகவான் அருளும் திருக்கோயில்!

Post by ஆனந்தபைரவர் Mon Aug 09, 2010 3:39 pm

வியாச பகவான் அருளும் திருக்கோயில்! Vyasa

மகரிஷி பராசரருக்கும் பக்தை சத்யவதிக்கும் மகவாக அவதரித்தவர் கிருஷ்ணத்வைபாயனர் என்கிற ஸ்ரீவேதவியாசர். தந்தை பராசரரிடமும் மற்றும் பதஞ்சலி மகரிஷியிடமும் வேதங்களைக் கற்று நல்ல பாண்டித்யம் பெற்றார் கிருஷ்ணத்வைபாயனர். பின்னர் நாடு முழுவதும் பயணித்து வேதங்களைச் சேகரித்தார். பின் அவற்றை, நான்கு ஸம்ஹிதைகளாகப் பிரித்தார். அப்படிப் பிரித்த நான்கு ஸம்ஹிதைகளான வேதங்களை தன் நான்கு சிஷ்யர்களுக்கும் கற்றுக் கொடுத்தார்.

ரிக் வேதத்தை பைல முனிவருக்கும், யஜுர் வேதத்தை வைஸம்பாயனருக்கும், ஸாம வேதத்தை ஜைமினிக்கும், அதர்வண வேதத்தை சுமந்து முனிக்கும் கற்றுக் கொடுத்ததனால், கிருஷ்ணத்வைபாயனருக்கு ஸ்ரீவேதவியாசர் என்ற பெயர் உண்டாயிற்று. பதிணென் புராணங்களை ரோமஹர்ஷணர் என்ற சீடருக்குக் கற்றுக் கொடுத்தார்.

ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான ஸ்ரீவேதவியாசர், ‘பத்ரி’ எனும் புனித ஸ்தலத்தில் தம் ஆசிரமத்தை ஏற்படுத்திக் கொண்டார். ‘பிரும்ம சூத்ரம்’ எனும் உயரிய நூலை, பகவான் வேதவியாசர் அருளியுள்ளார். அந்த பிரும்ம சூத்ரத்துக்கு, நம் மதாச்சாரியர்கள் எல்லோருமே வியாக்யானம் தந்துள்ளார்கள்.

நாம் உய்யும் வண்ணம் நமக்கு வேதங்களையும், உபநிஷத்துகளையும், புராணங்களையும் அளித்துள்ள மகரிஷி ஸ்ரீவேதவியாசருக்கு, பாரதத்தில் ஒரு கோயில் இல்லாமல் இருந்தது. யமுனை நதிக்கரையிலுள்ள ‘குல்பீ’ எனுமிடத்தில் ஸ்ரீவியாச பகவானின் ஆளுயரச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதுவும் காலஞ்சென்ற சர்தார் வல்லபபாய் படேலின் பெருமுயற்சியில் எழுந்த ஒன்றாகும். இருப்பினும், ஆகம விதிப்படி நித்திய பூஜை, நைவேத்தியங்கள் இந்தச் சிலைக்குச் செய்யப்படவில்லை.

ஒரு நாள் காசி மட சம்ஸ்தானத்தின் முதல் ஆசார்யரான ஸ்ரீயாதவேந்திர தீர்த்த ஸ்வாமிகள் கங்கையில் நீராடும்போது, ஸ்ரீவேதவியாசரின் விக்கிரகம் ஒன்று 1542-ஆம் ஆண்டில் கிடைத்தது. அதை அவர் தம் மடத்திலேயே வைத்து, பூஜை முதலானவற்றைச் செய்து வரலானார். ஸ்ரீவேதவியாசருக்குத் திருக்கோயில் இல்லாத குறையைத் தீர்க்க, மேற்படி காசி ஸ்ரீமடத்தின் இருபதாவது பட்டத்தில் எழுந்தருளிய ஸ்ரீஸுதீந்திர தீர்த்த மகா ஸ்வாமிகள் பிரயாசையினால், ஸ்ரீவியாச பகவானுக்கு ஒரு திருக்கோயில் உருவாகியுள்ளது.

ரிஷிகேசத்திலிருந்து புனித கங்கை ஏழு கிளைகளாகப் பாய்ந்து ஓடுகிறது. பிரவாகம் எடுத்தோடுகிற இந்தப் புனித கங்கையின் கரையில், ஹரித்வார் எனும் புண்ணிய க்ஷேத்திரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள ‘ஸப்த ஸரோவர்’ எனுமிடத்தில், சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில், ஒன்றரைக் கோடி வெண்பொற்காசு செலவில், ஸ்ரீஸுதீந்திர தீர்த்த மகா ஸ்வாமிகள், ஸ்ரீவேதவியாச பகவானுக்கு ஓர் அழகிய திருக்கோயிலை எழுப்பியுள்ளார்கள்.

கர்ப்பக்கிரகத்தில் ஸ்ரீவேத வியாசர் எழுந்தருளியிருக்க, நான்கு பக்கங்களிலும் நான்கு வேதங்களைப் பிரித்துக் கொடுத்த ஸ்ரீவேத வியாசரின் நான்கு சீடர்களுக்குத் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன. மேலும் ஸப்த ரிஷிகளான ஸ்ரீகாஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், கௌதமர், ஜமதக்னி ஆகியோருக்கு நான்கு பக்கச் சுவர்களிலும் கண்ணைக் கவரும்படியான திருவுருவங்களை வரைந்து வைத்துள்ளனர்.

அஷ்டதிக் பாலகர்களும், துவார பாலகர்களுக்குப் பதிலாக இரண்டு முனி குமாரர்களும் கோயில் முகப்பில் எழுந்தருளியுள்ளார்கள். பிராகாரச் சுவர்களில் ஸ்ரீலலிதா தேவியுடன் கூடிய தசரத ராமன், ஸ்ரீநரஸிம்மன், ஸ்ரீவெங்கடாஜலபதி, கீதாச்சார்யன் ஸ்ரீகண்ணன், கீதோபதேசம் மற்றும் ஸ்ரீவியாச பகவானின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியச் சம்பவங்களையும் சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்தக் கோயில் கோபுரம் 60 அடி உயரமுடையது. யாத்ரீகர்களுக்குத் தங்கும் விடுதிகளும் சமையல் செய்யும் சாப்பாட்டுக் கூடங்களும், பெரிய நூலகமும், வேத பாடசாலைகள், ஆயுர்வேத மருத்துவக் கூடங்களும் உள்ளன. 1984-ல் தொடங்கிய கட்டடப் பணி, 1988 ஜனவரியில் பூர்த்தியாகி சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

காஷ்மீரில் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர் கட்டிய கோயிலின் அருகிலுள்ள சிறிய சரஸ்வதி தேவியின் கோயில், ஸ்ரீவியாச பகவான் கட்டியது. ஸ்ரீவியாச பகவான் தம் ஆசிரமத்துக்கருகில், ஸ்ரீபத்ரியில் ஸ்ரீவிஷ்ணு கோயில் ஒன்றையும் கட்டியிருக்கிறார். மேலும், ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்திலுள்ள பாஸர் என்ற இடத்தில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி கோயிலும் ஸ்ரீவியாச பகவான் கட்டியதே!

- சன்மிஷ்டை
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum