இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்

Go down

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் Empty அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்

Post by ஆனந்தபைரவர் Sat Aug 21, 2010 11:19 pm

நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே - அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே!

என்று இவர் அலையும் மனதைப் பெண்பேயாக உருவகப்படுத்தி, முன்நிறுத்தி, அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்துப் பாடுவதால் அகப்பேய்ச் சித்தர் எனப்பட்டார். 'அகப்பேய்' என்பது மருவி, இவரை 'அகப்பைச் சித்தர்' எனக் கூறுவதும் உண்டு.இவரைப் பற்றிய மற்றெந்த குறிப்பும் இல்லை.இவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று வாழவேண்டும், சாதி வேற்றுமை, சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள்பேசப்படுகின்றன.

நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய்
நாயகன் தாள் பெறவேநெஞ்சு மலையாதே .....அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே.
1
பராபர மானதடி .....அகப்பேய்
பரவையாய் வந்தடிதராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய்
தானே படைத்ததடி.
2
நாத வேதமடி .....அகப்பேய்
நன்னடம் கண்டாயோபாதஞ் சத்தியடி .....அகப்பேய்
பரவிந்து நாதமடி.
3
விந்து நாதமடி .....அகப்பேய்
மெய்யாக வந்ததடிஐந்து பெரும்பூதம் .....அகப்பேய்
அதனிடம் ஆனதடி.
4
நாலு பாதமடி .....அகப்பேய்
நன்னெறி கண்டாயே மூல மானதல்லால் .....அகப்பேய்
முத்தி அல்லவடி.
5
வாக்காதி ஐந்தடியோ .....அகப்பேய்
வந்த வகைகேளாய்ஒக்கம் அதானதடி .....அகப்பேய்
உண்மையது அல்லவடி.
6
சத்தாதி ஐந்தடியோ .....அகப்பேய்
சாத்திரம் ஆனதடிமித்தையும் ஆகமடி .....அகப்பேய்
மெய்யது சொன்னேனே.
7
வசனாதி ஐந்தடியோ .....அகப்பேய்
வண்மையாய் வந்ததடிதெசநாடி பத்தேடி .....அகப்பேய்
திடன் இது கண்டாயே.
8
காரணம் ஆனதெல்லாம் .....அகப்பேய்
கண்டது சொன்னேனேமாரணங் கண்டாயே .....அகப்பேய்
வந்த விதங்கள் எல்லாம்.
9
ஆறு தத்துவமும் .....அகப்பேய்
ஆகமஞ் சொன்னதடிமாறாத மண்டலமும் .....அகப்பேய்
வந்தது மூன்றடியே.
10
பிருதிவி பொன்னிறமே .....அகப்பேய்
பேதமை அல்லவடிஉருவது நீரடியோ .....அகப்பேய்
உள்ளது வெள்ளையடி.
11
தேயு செம்மையடி .....அகப்பேய்
திடனது கண்டாயேவாயு நீலமடி .....அகப்பேய்
வான்பொருள் சொல்வேனே.
12
வான மஞ்சடியோ .....அகப்பேய்
வந்தது நீகேளாய்ஊனமது ஆகாதே .....அகப்பேய்
உள்ளது சொன்னேனே.
13
அகாரம் இத்தனையும் .....அகப்பேய்
அங்கென்று எழுந்ததடிஉகாரங் கூடியடி .....அகப்பேய்
உருவாகி வந்ததடி.
14
மகார மாயையடி .....அகப்பேய்
மலமது சொன்னேனேசிகார மூலமடி .....அகப்பேய்
சிந்தித்துக் கொள்வாயே.
15
வன்னம் புவனமடி .....அகப்பேய்
மந்திரம் தந்திரமும்இன்னமும் சொல்வேனே .....அகப்பேய்
இம்மென்று கேட்பாயே.
16
அத்தி வரைவாடி .....அகப்பேய்
ஐம்பத்தோர் அட்சரமும்மித்தையாங் கண்டாயே .....அகப்பேய்
மெய்யென்று நம்பாதே.
17
தத்துவம் ஆனதடி .....அகப்பேய்
சகலமாய் வந்ததடிபுத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய்
பூத வடிவலவோ.
18
இந்த விதங்களெல்லாம் .....அகப்பேய்
எம்இறை அல்லவடிஅந்த விதம்வேறே .....அகப்பேய்
ஆராய்ந்து காணாயோ.
19
பாவந் தீரவென்றால் .....அகப்பேய்
பாவிக்க லாகாதேசாவதும் இல்லையடி .....அகப்பேய்
சற்குரு பாதமடி.
20
எத்தனை சொன்னாலும் .....அகப்பேய்
என் மனந்தேறாதேசித்து மசித்தும்விட்டே .....அகப்பேய்
சேர்த்துநீ காண்பாயே.
21
சமய மாறுமடி .....அகப்பேய்
தம்மாலே வந்தவடிஅமைய நின்றவிடம் .....அகப்பேய்
ஆராய்ந்து சொல்வாயே.
22
ஆறாறும் ஆகுமடி .....அகப்பேய்
ஆகாது சொன்னேனேவேறே உண்டானால் .....அகப்பேய்
மெய்யது சொல்வாயே.
23
உன்னை அறிந்தக்கால் .....அகப்பேய்
ஒன்றையும் சேராயேஉன்னை அறியும்வகை .....அகப்பேய்
உள்ளது சொல்வேனே.
24
சரியை ஆகாதே .....அகப்பேய்
சாலோகங் கண்டாயேகிரியை செய்தாலும் .....அகப்பேய்
கிட்டுவது ஒன்றுமில்லை.
25
யோகம் ஆகாதே .....அகப்பேய்
உள்ளது கண்டக்கால்தேக ஞானமடி .....அகப்பேய்
தேடாது சொன்னேனே.
26
ஐந்துதலை நாகமடி .....அகப்பேய்
ஆதாயங் கொஞ்சமடிஇந்த விடந்தீர்க்கும் .....அகப்பேய்
எம் இறை கண்டாயே.
27
இறைவன் என்றதெல்லாம் .....அகப்பேய்
எந்த விதமாகும்அறைய நீகேளாய் .....அகப்பேய்
ஆனந்த மானதடி.
28
கண்டு கொண்டேனே .....அகப்பேய்
காதல் விண்டேனேஉண்டு கொண்டேனே .....அகப்பேய்
உள்ளது சொன்னாயே.
29
உள்ளது சொன்னாலும் .....அகப்பேய்
உன்னாலே காண்பாயேகள்ளமுந் தீராதே .....அகப்பேய்
கண்டார்க்குக் காமமடி.
30
அறிந்து நின்றாலும் .....அகப்பேய்
அஞ்சார்கள் சொன்னேனே புரிந்த வல்வினையும் .....அகப்பேய்
போகாதே உன்னை விட்டு.
31
ஈசன் பாசமடி .....அகப்பேய்
இவ்வண்ணங் கண்டதெல்லாம்பாசம் பயின்றதடி .....அகப்பேய்
பரமது கண்டாயே.
32
சாத்திரமும் சூத்திரமும் .....அகப்பேய்
சங்கற்பம் ஆனதெல்லாம்பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்
பாழ் பலங்கண்டாயே.
33
ஆறு கண்டாயோ .....அகப்பேய்
அந்த வினை தீரதேறித் தெளிவதற்கே .....அகப்பேய்
தீர்த்தமும் ஆடாயே.
34
எத்தனை காலமுந்தான் .....அகப்பேய்
யோகம் இருந்தாலென் ?முத்தனு மாவாயோ .....அகப்பேய்
மோட்சமும் உண்டாமோ ?
35
நாச மாவதற்கே .....அகப்பேய்
நாடாதே சொன்னேனேபாசம் போனாலும் .....அகப்பேய்
பசுக்களும் போகாவே.
36
நாணம் ஏதுக்கடி .....அகப்பேய்
நல்வினை தீர்ந்தக்கால்காண வேணுமென்றால் .....அகப்பேய்
காணக் கிடையாதே.
37
சும்மா இருந்துவிடாய் .....அகப்பேய்
சூத்திரஞ் சொன்னேனேசும்மா இருந்தவிடம் .....அகப்பேய்
சுட்டது கண்டாயே.
38
உன்றனைக் காணாதே .....அகப்பேய்
ஊனுள் நுழைந்தாயேஎன்றனைக் காணாதே .....அகப்பேய்
இடத்தில் வந்தாயே.
39
வானம் ஓடிவரில் .....அகப்பேய்
வந்தும் பிறப்பாயேதேனை உண்ணாமல் .....அகப்பேய்
தெருவொடு அலைந்தாயே.
40
சைவ மானதடி .....அகப்பேய்
தானாய் நின்றதடிசைவம் இல்லையாகில் .....அகப்பேய்
சலம்வருங் கண்டாயே
41
ஆசை அற்றவிடம் .....அகப்பேய்
ஆசாரங் கண்டாயேஈசன் பாசமடி .....அகப்பேய்
எங்ஙனஞ் சென்றாலும்.
42
ஆணவ மூலமடி .....அகப்பேய்
அகாரமாய் வந்ததடிகோணும் உகாரமடி .....அகப்பேய்
கூடப் பிறந்ததுவே.
43
ஒன்றும் இல்லையடி .....அகப்பேய்
உள்ளபடி யாச்சேநன்றிலை தீதிலையே .....அகப்பேய்
நாணமும் இல்லையடி.
44
சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்
சுட்டது சொன்னேனேஎம்மாயம் ஈதறியேன் .....அகப்பேய்
என்னையுங் காணேனே.
45
கலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்
கண்டார் நகையாரோ?நிலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்
நீயார் சொல்வாயே.
46
இந்து அமிழ்தமடி .....அகப்பேய்
இரவி விடமோடிஇந்து வெள்ளையடி .....அகப்பேய்
இரவி சிவப்பாமே.
47
ஆணல பெண்ணலவே .....அகப்பேய்
அக்கினி கண்டாயேதாணுவும் இப்படியே .....அகப்பேய்
சற்குரு கண்டாயே.
48
என்ன படித்தாலும் .....அகப்பேய்
எம்முரை யாகாதே சொன்னது கேட்டாயே .....அகப்பேய்
சும்மா இருந்துவிடு.
49
காடும் மலையுமடி .....அகப்பேய்
கடுந்தவம் ஆனால்என்வீடும் வெளியாமோ .....அகப்பேய்
மெய்யாக வேண்டாவோ.
50
பரத்தில் சென்றாலும் .....அகப்பேய்
பாரிலே மீளுமடிபரத்துக்கு அடுத்தஇடம் .....அகப்பேய்
பாழது கண்டாயே.
51
பஞ்ச முகமேது .....அகப்பேய்
பஞ்சு படுத்தாலே குஞ்சித பாதமடி .....அகப்பேய்
குருபா தங்கண்டாயே.
52
பங்கம் இல்லையடி .....அகப்பேய்
பாதம் இருந்தவிடம்கங்கையில் வந்ததெல்லாம் .....அகப்பேய்
கண்டு தெளிவாயே.
53
தானற நின்றவிடம் .....அகப்பேய்
சைவங் கண்டாயேஊனற நின்றவர்க்கே .....அகப்பேய்
ஊனமொன்று இல்லையடி.
54
சைவம் ஆருக்கடி .....அகப்பேய்
தன்னை அறிந்தவர்க்கே சைவம் ஆனவிடம் .....அகப்பேய்!
சற்குரு பாதமடி.
55
பிறவி தீரவென்றால் .....அகப்பேய்!
பேதகம் பண்ணாதேதுறவி யானவர்கள் .....அகப்பேய்!
சும்மா இருப்பார்கள்.
56
ஆரலைந் தாலும் .....அகப்பேய்!
நீயலை யாதேடிஊர லைந்தாலும் .....அகப்பேய்!
ஒன்றையும் நாடாதே.
57
தேனாறு பாயுமடி .....அகப்பேய்!
திருவடி கண்டவர்க்கேஊனாறு மில்லையடி .....அகப்பேய்!
ஒன்றையும் நாடாதே.
58
வெள்ளை கறுப்பாமோ .....அகப்பேய்!
வெள்ளியுஞ் செம்பாமோஉள்ளது உண்டோ டி .....அகப்பேய்!
உன் ஆணை கண்டாயே.
59
அறிவுள் மன்னுமடி .....அகப்பேய்!
ஆதாரம் இல்லையடிஅறிவு பாசமடி .....அகப்பேய்!
அருளது கண்டாயே.
60
வாசியிலே றியதடி .....அகப்பேய்!
வான் பொருள் தேடாயோவாசியில் ஏறினாலும் .....அகப்பேய்!
வாராது சொன்னேனே.
61
தூராதி தூரமடி .....அகப்பேய்!
தூரமும் இல்லையடிபாராமற் பாரடியோ .....அகப்பேய்!
பாழ்வினைத் தீரவென்றால்.
62
உண்டாக்கிக் கொண்டதல்ல .....அகப்பேய்!
உள்ளது சொன்னேனேகண்டார்கள் சொல்வாரோ .....அகப்பேய்!
கற்வனை அற்றதடி.
63
நாலு மறைகாணா .....அகப்பேய்!
நாதனை யார் காண்பார்நாலு மறை முடிவில் .....அகப்பேய்!
நற்குரு பாதமடி.
64
மூலம் இல்லையடி .....அகப்பேய்!
முப்பொருள் இல்லையடிமூலம் உண்டானால் .....அகப்பேய்!
முத்தியும் உண்டாமே.
65
இந்திர சாலமடி .....அகப்பேய்!
எண்பத்தொரு பதமும்மந்திரம் அப்படியே .....அகப்பேய்!
வாயைத் திறவாதே.
66
பாழாக வேணுமென்றால் .....அகப்பேய்!
பார்த்ததை நம்பாதேகேளாமற் சொன்னேனே .....அகப்பேய்!
கேள்வியும் இல்லையடி.
67
சாதி பேதமில்லை .....அகப்பேய்!
தானாகி நின்றவர்க்கேஓதி உணர்ந்தாலும் .....அகப்பேய்!
ஒன்றுந்தான் இல்லையடி.
68
சூழ வானமடி .....அகப்பேய்!
சுற்றி மரக்காவில்வேழம் உண்டகனி .....அகப்பேய்!
மெய்யது கண்டாயே.
69
தானும் இல்லையடி .....அகப்பேய்!
நாதனும் இல்லையடிதானும் இல்லையடி .....அகப்பேய்!
சற்குரு இல்லையடி.
70
மந்திரம் இல்லையடி .....அகப்பேய்!
வாதனை இல்லையடிதந்திரம் இல்லையடி .....அகப்பேய்!
சமயம் அழிந்ததடி.
71
பூசை பசாசமடி .....அகப்பேய்!
போதமே கோட்டமடிஈசன் மாயையடி .....அகப்பேய்!
எல்லாமும் இப்படியே.
72
சொல்ல லாகாதே .....அகப்பேய்!
சொன்னாலும் தோடமடிஇல்லை இல்லையடி .....அகப்பேய்!
ஏகாந்தங் கண்டாயே.
73
தத்துவத் தெய்வமடி .....அகப்பேய்!
சதாசிவ மானதடிமற்றுள்ள தெய்வமெல்லாம் .....அகப்பேய்!
மாயை வடிவாமே.
74
வார்த்தை அல்லவடி .....அகப்பேய்!
வாசா மகோசரத்தேஏற்ற தல்லவடி .....அகப்பேய்!
என்னுடன் வந்ததல்ல.
75
சாத்திரம் இல்லையடி .....அகப்பேய்!
சலனங் கடந்ததடிபார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்!
பாவனைக் கெட்டாதே.
76
என்ன படித்தால்என் .....அகப்பேய்!
ஏதுதான் செய்தால்என்சொன்ன விதங்களெல்லாம் .....அகப்பேய்!
சுட்டது கண்டாயே.
77
தன்னை அறியவேணும் .....அகப்பேய்!
சாராமற் சாரவேணும்பின்னை அறிவதெல்லாம் .....அகப்பேய்!
பேயறி வாகுமடி.
78
பிச்சை எடுத்தாலும் .....அகப்பேய்!
பிறவி தொலையாதே இச்சை அற்றவிடம் .....அகப்பேய்!
எம்இறை கண்டாயே.
79
கோலம் ஆகாதே .....அகப்பேய்!
குதர்க்கம் ஆகாதேசாலம் ஆகாதே .....அகப்பேய்!
சஞ்சலம் ஆகாதே.
80
ஒப்பனை அல்லவடி .....அகப்பேய்!
உன்ஆணை சொன்னேனே அப்புடன் உப்பெனவே .....அகப்பேய்!
ஆராய்ந்து இருப்பாயே.
81
மோட்சம் வேண்டார்கள் .....அகப்பேய்!
முத்தியும் வேண்டார்கள்தீட்சை வேண்டார்கள் .....அகப்பேய்!
சின்மய மானவர்கள்.
82
பாலன் பிசாசமடி .....அகப்பேய்!
பார்த்தக்கால் பித்தனடிகால மூன்றுமல்ல .....அகப்பேய்!
காரியம் அல்லவடி.
83
கண்டதும் இல்லையடி .....அகப்பேய்!
கண்டவர் உண்டானால்உண்டது வேண்டடியோ .....அகப்பேய்!
உன்ஆணை சொன்னேனே
84
அஞ்சயும் உண்ணாதே .....அகப்பேய்!
ஆசையும் வேண்டாதேநெஞ்சையும் விட்டுவிடு .....அகப்பேய்!
நிட்டையில் சேராதே.
85
நாதாந்த உண்மையிலே .....அகப்பேய்!
நாடாதே சொன்னேனேமீதான சூதானம் .....அகப்பேய்!
மெய்யென்று நம்பாதே.
86
ஒன்றோடு ஒன்றுகூடில் .....அகப்பேய்!
ஒன்றுங் கெடுங்காணேநின்ற பரசிவமும் .....அகப்பேய்!
நில்லாது கண்டாயே.
87
தோன்றும் வினைகளெல்லாம் .....அகப்பேய்!
சூனியங் கண்டாயேதோன்றாமல் தோன்றிவிடும் .....அகப்பேய்!
சுத்த வெளிதனிலே.
88
பொய்யென்று சொல்லாதே .....அகப்பேய்!
போக்கு வரத்துதானேமெய்யென்று சொன்னக்கால் .....அகப்பேய்!
வீடு பெறலாமே.
89
வேதம் ஓதாதே .....அகப்பேய்!
மெய்கண்டோ ம் என்னாதேபாதம் நம்பாதே .....அகப்பேய்!
பாவித்துப் பாராதே.
90
------------------------------------------------
2. பரவை - கடல் 3. நடம் - கூத்து 4. நாலுபதம் - சரியை, கிரியை, யோகம், ஞானம்6. வாக்காதி ஐவர் - வாக்கு, பாதம், பாணி, பாயுரு,
உபத்தம் ஆகிய கர்மேந்திரியங்கள்7. மித்தை - பொய் 11. பிருதிவி - மண் 12. தேயு - தீ17. அத்தி - யானை, நாடி 25. சரியை - கடவுளை கோவிலில் வைத்து வழிபடுதல்;
கிரியை - கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதல்28. அறைய - கூற 34. ஆறு - வழி52. குஞ்சிதபாதம் - நடனத்தில் வளையத் தூக்கிய பாதம்69. மரக்கா - மரச்சோலை;
வேழம் - விலாம்பழத்தை பற்றும் ஒரு நோய்72. பசாசம் - பிசாசு 74. வாசாம கோசரம் - வாக்குக்கு எட்டாதது80. கோலம் - அலங்காரம்82. சின்மயம் - அறிவு வடிவான கடவுள் நிலை85. நிட்டை - சிவயோகம் 86. சூதானம் - சாக்கிரதை

பதிந்தது Kaviprian-Manick
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum