இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சித்தர் சிந்தனை

3 posters

Go down

சித்தர் சிந்தனை Empty சித்தர் சிந்தனை

Post by ஆனந்தபைரவர் Sun Aug 22, 2010 12:10 pm

பேராசிரியர் டி.என். கணபதி

புலம்பல் 115:
வவ்வெழுத்தும் அவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும்
யவ் வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம்?

பொழிப்புரை: “சிவாய” என்ற மந்திரத்தின் உள்ளே நான் என்கிற இந்த உயிர் அடங்கி நிற்பது எப்பொழுது?

விளக்கவுரை: சிவ்வெழுத்து என்பது “சி”; வவ்வெழுத்து என்பது “வா”. யவ்வெழுத்து என்பது “ய”ஆகும். அதாவது “சிவாய” என்கிற மந்திரம். இந்த மந்திரம், அவ்வெழுத்தாகிய மந்திரம், பிறப்பை அறுக்கிற ஒரு வாளாகும். இந்த மந்திரம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய மந்திரம்.

ஏறத்தாழ எல்லாத் தமிழ்ச் சித்தர்களும் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஓம் என்கிற மந்திரம் சித்தர் இலக்கியத்தில் பேசா எழுத்து என்று வழங்கப்படுகிறது. திருமூலர் சொல்கிறார்: “ஓம் என்பது ஓரெழுத்து; அது சிவசொரூபம்.” சிவவாக்கியர் அதைச் சுரியதோர் எழுத்து என்கிறார். அதாவது மாபெரும் மந்திரத்தைத் தனக்குள் குறுக்கி வைத்திருக்கிற மந்திரம் என்ற பொருளில் அவர் அவ்வாறு பயன்படுத்துகிறார். ஓம் என்பது அதிசூக்கும பஞ்சாட்சரம் என்று சொல்லப்படுகிறது. அது தனக்குள் ஐந்தெழுத்தை அடக்கி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஐந்தெழுத்துகளாவன; அகாரம், உகாரம், மகாரம், நாதம், பிந்து. இந்தச் செய்தியைச் சிவவாக்கியர் தன் பாடல் ஒன்றில் தெரிவிக்கிறார். மேலும் அவர் சிவாயமே இந்த மந்திரமாக வந்து அமர்ந்தது என்றும் தெரிவிக்கிறார். “அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே” (செ.88). இந்த மந்திரத்தை அறிந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை என்றும் அவர் அறிவிக்கிறார்.

ஐந்தெழுத்து மந்திரம் பிறப்பறுக்க உதவும் என்று திருமூலரும் ஆமோதிக்கிறார். அவரைப் பொறுத்தமட்டில் இந்த அகில உலகமும் ஐந்தெழுத்தால் ஆனதுதான்; அதை உணர்த்தவே “அம்பலமாவது அஞ்செழுத்தாமே” (திருமந்திரம், மந்.2775) என்று பாடுகிறார். சிவாயநம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் முதலெழுத்தான ‘சி’ என்பதற்கு, காண்பனவெல்லாம் சிவமாகக் காணவேண்டும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இந்த ‘சி’ யைத் திருமூலர் நாயோட்டு மந்திரம் என்று பெயரிட்டு அழைக்கிறார். இந்த ஐந்தெழுத்து மந்திரத்தைச் செபிக்கிறவன் முதுமை நீங்கி இளைஞனாகிறான். இந்த மந்திரத்தைச் செபிப்பது தாமிரத்தைப் பொன்னாக்கும்; அதாவது, உடம்பு சாவாவரம் பெறும்.

திருமூலர் ஐம்பத்தோர் அட்சரங்களைப் பற்றிப் பேசுகிறார். ஒருவன் குண்டலினி யோகத்தை மேற்கொள்ளும் போது அதனுடைய பல்வேறு நிலைகளில் அவன் கேட்டு அனுபவிக்கிற ஒலிகள் அவை. இந்த ஐம்பத்தோர் அட்சரங்களும் ஐந்து அட்சரங்களுக்குள் அடங்கும் என்கிறார் அவர். சில சித்தர்கள் எட்டெழுத்து மந்திரம் என்றும் ஐந்தெழுத்து மந்திரம் என்றும் இருமாதிரியாக இதனைக் குறிப்பிடுகிறார்கள். எட்டெழுத்து மந்திரமாவது; அ. உ. ம. ந. ம. சி. வா. ய. ஐந்தெழுத்து மந்திரமாவது சி. வா. ய. ந. ம. இந்த மந்திரம் ஒரு மகாவாக்கியம் ஆகும். இதில் “சிவ” என்பது “அது” என்றும். “நம” என்பது நீயே” என்றும். “அய” என்பது “ஆகிறாய்” என்றும் பொருள் தரும். எனவே சிவாயநம என்பது “அது நீயே ஆகிறாய்” அதாவது “தத் த்வம் அசி” என்று பொருள்படுகிறது. சில சித்தர் பாடல்களில் இந்த ஐந்தெழுத்து மந்திரம் சிவயவசி என்று குறிப்பிடப்படுகிறது. இதை எப்படி வாசித்தாலும் சிவயவசி என்றே பொருள் தரும் (...விகடகவி என்பதைப் போல) ஆகையால் சிவவாக்கியர் இதனை இருதலைத்தீ என்கிறார். இந்த இருதலைத்தீ, பிறப்பு. இறப்பு இரண்டையும் சுடும். மெய்யுணர்வு நிலையைத் திருமூலர் “நமச்சிவாயப்பழம் தின்று கிடக்கும் நிலை” என்று இந்த மந்திரத்தின் பெயராலேயே குறிக்கிறார் என்பது இந்த மந்திரத்தின் மெய்யுணர்த்தும் இயல்பைப் புலப்படுத்தும்.

புலம்பல் 116:

எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தையை வைத்து அன்பு கொள்வது எக்காலம்?

பொழிப்புரை: சொல்லற்று நிற்கின்ற ஏகாந்த நிலையை அடைய சிந்தையை அன்புக்குள் அடக்குவது எக்காலம்?

விளக்கவுரை: எழுத்தெல்லாம் மாண்டு இருக்கிற நிலை எது? ஓட்டோ என்பவருடைய சொற்களில் சொல்வதாக இருந்தால் மெய்யுணர்வு அனுபவம் என்பது புலன் சாராத் தூய அகநிலை அனுபவம் (ஸீuனீவீஸீஷீus). முண்டக உபநிடதம் சொல்கிறது: “அறிவு இருமையற்று, செயலற்று, காரண-காரியமற்று, சொல்லற்று, ஒப்பீடற்று, வரையறையற்று நிற்கிற நிலை எந்த நிலை? அது வார்த்தைக்கு வராத அந்த நிலை.” (க்ஷிமி.7) இந்த வார்த்தைக்கு வராத அந்த நிலையை, சித்தர்கள் குறிக்கிற வெட்டவெளி நிலையைப் பற்றி, வித்யாபதி என்கிற வைணவப் பெரியார் சொல்லும்போது “கேட்காதே, எனக்குத் தெரியும்; கேள், எனக்குத் தெரியாது” என்கிறார். இது கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்ற நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாடு தாவோயிசத்தில் வெளிப்படுத்தப்படும் கருத்தோடு ஒப்பிட்டுக் காணத்தக்கது. அதன்படி தாவோ என்பது பெயரிடப்பட முடியாதது. எதெல்லாம் பெயரிடப்பட்டிருக்கிறதோ அதெல்லாம் தாவோ அன்று; ஏனெனில் பெயரிடப்படுவது எல்லாம் எல்லையற்றது. எந்த ஒற்றைப் பெயரை எந்த மனித முயற்சியும் அறியமுடியாது; ஏனெனில் அது பெயர்களின் மற்றும் அளவையியலின்/தர்க்கத்தின் கொடுங்கோன்மைக்கு அப்பாற்பட்டது. அந்த அடிப்படையில் வெட்டவெளி என்பது ஓர் ஆன்மிகத்தளம். அந்தத் தளத்தில் அறிவு தோற்கடிக்கப்பட்டு வெளியே விரட்டப்படுகிறது; ஆன்மம் தன்னை மலர்வித்துக் கொள்கிறது. ஹைடகர் என்ற தத்துவ அறிஞனின் தத்துவப் பார்வையைப்பற்றிப் பேசும்போது ராபர்ட் ஷார்லமன் என்ற அறிஞன் சொல்கிறான்:

ஒவ்வொரு கவிஞனுக்கும் எழுதுவதற்கு ஒரே ஒரு கவிதைதான் இருக்கிறது. ஆனால் எந்தக் கவிஞனும் அந்தக் கவிதையை எழுதுவதேயில்லை. ஒவ்வொரு கவிஞனும் அந்த எழுதப்படாத ஒரு கவிதையை நோக்கியும் அதற்குப் புறம்பாகவும்தான் எழுதுகிறானே தவிர, அந்தக் கவிதையை அவனால் எழுத முடிவதேயில்லை. அந்த ஒரு கவிதையை அப்படியெல்லாம் எழுதிவிடமுடியாது. எழுதப்பட்ட மற்ற கவிதைகளெல்லாம் எழுதப்படாத அந்தக் கவிதையைச் சுட்டிக்காட்டும் கைகாட்டிகள். ஆனால் அவை அந்த எழுதப்படாத கவிதை அல்ல.

சிவவாக்கியர் கேட்கிறார்:
கொள்ளொணாது மெல்லொணாது கோதறக் குதட்டடா
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்ளொணாத பொருளைநான் விளம்புமாற தெங்ஙனே? (செ.287)

-சொல்லுக்கு அப்பாற்பட்ட, சொல்லமுடியாத பொருளைச் சொல் என்றால் எப்படிச் சொல்வது? அதைச் “சொல்லிறந்த தூவெளி” என்று குறிக்கிறார் சிவவாக்கியர் (செ.248). அது “இலக்கணம் இலாதது.” அது “செந்தமிழ்ப் பதங்கடந்த பண்பு” என்று பலவாறாக அதைக் குறிக்கிறார் சிவவாக்கியர் (செ.90) இந்த மாதிரியான அபூர்வமான சொற்பயன் பாடுகளை சித்தர் பாடல்களில் பல இடங்களில் நாம் காணமுடிகிறது.

தாகூர் சொன்னதுபோல, மெய்யுணர்வு அனுபவம் என்பது வார்த்தைக்கு எட்டாத அற்புதத்தை அனுபவிக்கிற மகிழ்ச்சி; அது ஓர் உள்ளுணர்வு; அதைக் கருத்தாக உள்வாங்க முடியாது. கருத்து என்பது செயற்கையானது; அதில் அனுபவத்தின் முக்கியத்துவம் அடிபட்டுப் போய் விடுகிறது. ஜென் சொல்கிறது: தாவோவை அடைவதற்கான எல்லாப் பாதைகளும் வழிமுறைகளும் (குறிப்பாகப் பகுத்தறிவாலும் கருத்துகளாலும் கொண்டு செலுத்தப்படுபவை) பாம்பின் கால்கள் போன்றவை. பாம்பிற்குக் கால்கள் உண்டு என்று சொல்வது எவ்வளவு பொருத்தமில்லாததோ அவ்வளவு பொருத்தமில்லாதது தாவோவைப் பகுத்தறிவாலும் கருத்துகளாலும் அடையலாம் என்பது. பவுல் பாடல் ஒன்று, “சொற்களின் தடையை உடைத்தவன் எல்லைகளைக் கடந்தவன் ஆகிறான்” என்று சொல்கிறது. சமாதி என்ற சொல்லும் இப்படிப்பட்ட விளக்கக முடியாத அனுபவத்தைத்தான் குறிக்கிறது. ஏதேனும் ஒன்று விளக்க முடியாததாக இருக்கும் நிலையில் ஒருவன் சும்மாதான் இருக்கவேண்டும். ஆகையால் மெய்யுணர்வு அனுபவத்தை விளக்கும் வெட்டவெளி என்ற சொல், மெல்ல மெல்ல, மௌனம் என்றுபொருளைத் தருமாறு வழிநடத்தப்படுகிறது.

“சும்மா” என்கிற நிலை “அன்பே சிவம்” என்கிற நிலை. அதையே அன்பு கொள்வது எக்காலம் என்கிறார் பத்ரகிரியார்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

சித்தர் சிந்தனை Empty Re: சித்தர் சிந்தனை

Post by ராகவா Sun Oct 20, 2013 9:31 pm

அருமை....எவ்வளவு இனியாக உள்ளது...
தொடருங்கள்...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சித்தர் சிந்தனை Empty Re: சித்தர் சிந்தனை

Post by PraanaFoundation Wed Apr 02, 2014 6:07 pm

உலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு மாநாடு.

பிராணா அறக்கட்டளையின்
சித்தர்கள் ஆலயம்
126 சித்தர்களின் ஜீவஜோதி மையம் நடத்தும்

ஜீவசமாதியிலிருந்து உயிர்த்தெழும் சித்தர்களை வரவேற்கும் நிகழ்வும்,
தன்னுள்ளே தன்னை கண்டு உணரும் மெஞ்ஞான பயிற்சி மாநாடும்

ஆம்.. சித்தர்கள் உயிர்த்தெழும் வருடம். கலியுகம் 5116‍‍ - ஸ்ரீஜெய வருடம்

நடைபெறும்  நாள் ‍‍- 13‍‍-04-2014
சூரிய நாள் - ஞாயிற்றுக்கிழமை - கலியுகம் 5115 - ஸ்ரீ விஜய வருடம்
நேரம் - காலை சரியாக 9.50 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம் - பாலமந்திர் ஜெர்மன் ஹால், எண்.17, பிரகாசம் சாலை, தியாகராய நகர், சென்னை-17.
முன்பதிவு செய்ய : சென்னை : 7373735260 பிறமாவட்டம் : 7373735270

https://www.facebook.com/Siddhargalaalayam.org

PraanaFoundation

Posts : 2
Join date : 02/04/2014

Back to top Go down

சித்தர் சிந்தனை Empty Re: சித்தர் சிந்தனை

Post by ராகவா Tue Apr 22, 2014 9:57 am

PraanaFoundation wrote:உலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு மாநாடு.

பிராணா அறக்கட்டளையின்
சித்தர்கள் ஆலயம்
126 சித்தர்களின் ஜீவஜோதி மையம் நடத்தும்

ஜீவசமாதியிலிருந்து உயிர்த்தெழும் சித்தர்களை வரவேற்கும் நிகழ்வும்,
தன்னுள்ளே தன்னை கண்டு உணரும் மெஞ்ஞான பயிற்சி மாநாடும்

ஆம்.. சித்தர்கள் உயிர்த்தெழும் வருடம். கலியுகம் 5116‍‍ - ஸ்ரீஜெய வருடம்

நடைபெறும்  நாள் ‍‍- 13‍‍-04-2014
சூரிய நாள் - ஞாயிற்றுக்கிழமை - கலியுகம் 5115 - ஸ்ரீ விஜய வருடம்
நேரம் - காலை சரியாக 9.50 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம் - பாலமந்திர் ஜெர்மன் ஹால், எண்.17, பிரகாசம் சாலை, தியாகராய நகர், சென்னை-17.
முன்பதிவு செய்ய : சென்னை : 7373735260 பிறமாவட்டம் : 7373735270

https://www.facebook.com/Siddhargalaalayam.org
ஒரே பதிவு இரண்டு இடத்தில் வேண்டாம்..
புரிதலுக்கு நன்றி..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சித்தர் சிந்தனை Empty Re: சித்தர் சிந்தனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum