இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சித்தர் சிந்தனை

3 posters

Go down

சித்தர் சிந்தனை Empty சித்தர் சிந்தனை

Post by ஆனந்தபைரவர் Sun Aug 22, 2010 12:12 pm

முனைவர், பேராசிரியர் தண்டாங்கோரை நடேச கணபதி

புலம்பல் 141.
பன்னிரண்டு கால்புரவி பாய்ந்து சில்லம் தப்பாமல்
பின்னிரண்டு சங்கிலிக்குள் பிணைப்பது இனிஎக்காலம்?
பொழிப்புரை: பிராணாயாமத்தின் மூலம் சுவாசத்தைத் தடுமாறி நின்று போகாமல் அதை வசப்படுத்துவது எக்காலம்?

விளக்கவுரை: இது ஒரு குறியீட்டு மொழிச் செய்யுள். கால் என்றால் பிராணன் என்று பொருள். புரவி என்றால் குதிரை. அதாவது குதிரையைப் போல் வேகத்துடன் உள்ளேயும் வெளியேயும் சென்றுவரும் மூச்சு. பின்னிரண்டு சங்கிலி என்பது இடகலை, பிங்கலை நாடி மூலம் செல்லும் பிராணனைக் குறிக்கும். சில்லம் என்றால் சிறுதுண்டு என்று பொருள். இங்கு அது சிதறுண்டு போவது என்கிற பொருளில் வருகிறது. இந்தப் புலம்பலின் பொருள் வருமாறு: உள்ளே போகும் சுவாசத்தின் அளவு எட்டு அங்குலம், வெளியே போகும் சுவாசத்தின் அளவு பன்னிரண்டு அங்குலம். இதனால் ஏற்படும் இழப்பு நான்கு அங்குலம். இந்த இழப்பைத் தடுக்க பிராணனை பிராணாயாமத்தின் மூலம் இடகலை, பிங்கலை நாடிக்குள் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்துவதால் பிராணனின் இழப்பு தடுத்து நிறுத்தப்படுகிறது. பிராணாயாமத்தின் மூலம் மூச்சுக் காற்றின் இழப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார் பத்ரகிரியார்.

புலம்பல் 142.
காட்டுக்கால் இரண்டும் விட்டு நடுவுக்கால் ஊடேபோய்
ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்?

பொழிப்புரை: பிராணாயாமத்தின் மூலம் இரேசகம், பூரகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி கும்பகத்தில் பிராணனை நிலைக்கச் செய்து, சுழுமுனை வழியே குண்டலினி சக்தியை ஏற்றுவது எக்காலம்?
விளக்கவுரை: இதுவும் ஒரு குறியீட்டு மொழிச் செய்யுள். “நாட்டுக்கால்” என்பது இரேசகப் பூரகத்தைக் குறிக்கிறது. “இரண்டும் விட்டு” என்றால் இவ்விரண்டையும் கட்டுப்படுத்தி கும்பகத்தில் பிராணனை நிலைக்கச் செய்தல் என்று பொருள். “நடுவுக்கால் ஊடே போய்” என்றால் அப்படிக் கட்டுப்படுத்திய பிராணனை சுழுமுனை ஆகிய நடுவு நாடி மூலம் செலுத்தினால் குண்டலினி சக்தி எழுப்பப்பட்டு அது திருநடனம் செய்கிற (ஆட்டுக்கால்) திருவடிக்கு (இரண்டடிக்கு) இட்டுச் செல்லும். இப்படி நடப்பது எக்காலம் என்று ஏங்குகிறார் பத்ரகிரியார். இதனை மேலும் விளக்குவோம்.

பிராணாயாமம் என்பது மூச்சினை முறையாக இழுத்து விடுவதற்கான ஒரு சிறந்த பயிற்சியாகும். இது வெறும் உடற்பயிற்சி நுட்பம் மட்டும் அல்ல. யோகத்தில் இது ஓர் இன்றியமையாத செயல்முறை. இது பிராணனைக் கட்டுப்படுத்த உதவும் பயிற்சி. பிராணன் என்பது விழிப்புணர்வுடைய ஓர் ஆன்மிகத் தத்துவமாகும். இது ஆகாசத்துடன் இணைந்து பொருந்தி வாழ்கிறது. “மனத்தைக் கட்டும் கயிறு” என்றே இதனை ஓர் உபநிடதம் குறிப்பிடுகிறது.

சித்தர் இலக்கியத்தில் பிராணாயாமத்தை வாசி என்றும் கூறுவார்கள். பிராணாயாமம் குண்டலினி யோகத்தில் ஒரு முக்கியமான கூறுபாடாக இருப்பதால் அந்த யோகத்தைத் தமிழில் வாசியோகம் என்றும் கூறுவதுண்டு. சித்தர்கள் கருத்துப்படி பிராணாயாமம் உடல் நலத்திற்கும் தன்னடக்கத்திற்கும் காரணமாக விளங்குகிறது.

பிராணாயாமம் பயில்வோர்க்குச் சாவேயில்லை என்று அடித்துக் கூறுகிறார் திருமூலர்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே. (பா 571)

நாடிகளில் செல்லும் மூச்சின் சமநிலைப்பாடே ஒருவரின் உடல் நலத்திற்கும் மன அமைதிக்கும் அடிப்படைக் காரணமாகும். அமைதியற்ற மனம் ஒடுங்கி ஒருமுகப்படுவதற்கு பிராணாயாமம் உதவுகிறது. அதனால் பிராணாயாமத்தை “அக அக்னிஹோத்ரம்” என்றும் “மன வேள்வி” என்றும் “அகவயச் சடங்கு” என்றும் “தினசரி மூச்சு வேள்வி” என்றும் கூறுவர்.

பிராணாயாமம் மூன்று செயல்களை உள்ளடக்கியது. மூச்சை உள்ளிழுத்தல் (பூரகம், அபானன், ஆகாரம்); மூச்சை வெளித்தள்ளல் (ரேசகம், பிராணன், அபசரம்) மூச்சை நிறுத்தல் (கும்பகம், வியானன், ருசிரம், தாரணை). இந்த மூன்று செயல்களில் மூச்சிழுத்தல் ‘அ’ என்பதையும், நிறுத்தல் ‘உ’ என்பதையும் வெளியிடல் ‘அம்’ என்பதையும் குறிப்பதாகத் தமிழ்ச் சித்தர்கள் கொள்வார்கள். அதாவது பிராணாயாமம், என்பது பிரணவமே ஆகும். பூரகம், ரேசகம், கும்பகம் என்னும் இந்தச் சொற்களைத் தாந்திரிகர்களும் சித்தர்களும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பதஞ்சலி தம் யோக சூத்திரத்தில் அவ்வாறு பயன்படுத்துவதில்லை. ஆனால் அவர் இந்த மூன்று செயல்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

பிராணாயாமத்தின் உண்மையான குறிக்கோள் ஒரு சாதகனை ஏகாக்ருதனாக, ஒரே குறியில் ஊன்றிய சித்தமுள்ளவனாக, ஆக்குவதுதான். தாந்திரிக நூல்களின்படி குண்டலினி சக்தியை எழுப்புவதுதான் பிராணாயாமத்தின் நோக்கம். ஹடயோகப் பயிற்சியில் குண்டலினியாகிய சர்ப்பத்தை உசுப்பிவிடுவதுதான் பிராணாயாமத்தின் அடிப்படையான செயல்பாடு.

பிராணாயாமம் என்பது மனத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு செயல்முறை ஆகும். அது மனத்தின் தீய எண்ணங்களைப் போக்குகிற மாமருந்து என்பது மனு என்பவரின் கூற்று. அது தாந்திரிகச் சொல்லாட்சியில் பிரத்தியாகாரமாகவும் விளங்குகிறது. மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் காலத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். காலத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நாடிகளில் இயங்கும் பிராணனை யோகப் பயிற்சியினால் கட்டுப்படுத்த வேண்டும். காலம் கட்டுண்டால் நாடிகளில் பிராணன் யோகப்பயிற்சியினால் கட்டுப்பாட்டில் இருக்கும். ஏனெனில் காலம் என்பது பிராணனின் செயல்பாடுகளைப் பொறுத்தது. ஒருமுறை மூச்சை இழுத்து வெளிவிடும் உயிர்ப்பு நிலைக்கு வேண்டிய காலப்பரிமாணம் மாத்திரை என்ற அலகினால் அளவிடப்படுகிறது.

குண்டலினி யோகத்தில் மூச்சு நிலை நிறுத்தப்படும் பொழுது மனம் மூலாதாரத்தில் லயித்துப் பின் படிப்படியாக மற்ற சக்கரங்களிலும் லயித்து இருக்கும். அதாவது பிராணாயாமத்தினால் சக்கரங்கள் மலர்ச்சியுறுகின்றன. அப்பொழுது கிளர்ந்து எழும் குண்டலினி அச்சக்கரங்களை ஊடுருவிச் செல்லும். பிராணசக்தி குண்டலினியைச் சுருள்பிரிந்து அவிழச் செய்கிறது. பிராணாயாமத்தினால் சுழிமுனையின் வழி திறக்கப்படுகிறது. அப்பொழுது பிராணன் குண்டலினியுடன் சுழிமுனையில் இணைகிறது.

இடகலை, பிங்கலை நாடிகளிலிருந்து விலகி பிராணன் சுழிமுனையில் நுழைந்து அதன் வழியாகச் சகஸ்ராரத்தைச் சென்றடைகிறது. பிராண ஓட்டம் முழுதும் சுழிமுனையில் அழுந்தும் பொழுது ஒருவகையான வெப்பம் உண்டாகிறது. அந்த வெப்பத்தின் தூண்டுதலால் குண்டலினி கிளர்ச்சியுற்றுச் சீறிக் கிளம்பி சக்கரங்கள் அனைத்தையும் துளைத்துச் செல்கிறது.

சுருள்பிரிந்து கிளர்ந்து எழும் குண்டலினி ஒவ்வொரு சக்கரத்தையும் துளைத்து அது அவ்வவற்றுக்குரிய பூததத்துவங்களைத் தன்னுள் கிரகித்துக் கொள்கிறது. குண்டலினி மேல் எழும்புகையில் அப்பூத தத்துவங்களும் லயநிலையை அடைகின்றன. குண்டலினி சக்தி அவ்வாறு இருபத்து நான்கு தத்துவங்களையும் கிரகித்துக் கொண்டு எழுந்து முடிவில் சகஸ்ராரத்தை அடைகிறது. அங்குதான் அது பரமசிவத்தோடு இணைகிறது. தாந்திரிக மொழியில் இதனை “உன்மணி அவஸ்தை” என்பார்கள். இங்கு உன்மணி என்பது சிவசக்தி ஐக்கியத்தைக் குறிக்கிறது. இதனை சாமரஸ்யம் என்றும் சொல்வதுண்டு.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

சித்தர் சிந்தனை Empty http://www.tamilhindu.net/

Post by saravanandhsr Wed Jan 11, 2012 12:32 pm

Admin wrote:முனைவர், பேராசிரியர் தண்டாங்கோரை நடேச கணபதி

புலம்பல் 141.
பன்னிரண்டு கால்புரவி பாய்ந்து சில்லம் தப்பாமல்
பின்னிரண்டு சங்கிலிக்குள் பிணைப்பது இனிஎக்காலம்?
பொழிப்புரை: பிராணாயாமத்தின் மூலம் சுவாசத்தைத் தடுமாறி நின்று போகாமல் அதை வசப்படுத்துவது எக்காலம்?

விளக்கவுரை: இது ஒரு குறியீட்டு மொழிச் செய்யுள். கால் என்றால் பிராணன் என்று பொருள். புரவி என்றால் குதிரை. அதாவது குதிரையைப் போல் வேகத்துடன் உள்ளேயும் வெளியேயும் சென்றுவரும் மூச்சு. பின்னிரண்டு சங்கிலி என்பது இடகலை, பிங்கலை நாடி மூலம் செல்லும் பிராணனைக் குறிக்கும். சில்லம் என்றால் சிறுதுண்டு என்று பொருள். இங்கு அது சிதறுண்டு போவது என்கிற பொருளில் வருகிறது. இந்தப் புலம்பலின் பொருள் வருமாறு: உள்ளே போகும் சுவாசத்தின் அளவு எட்டு அங்குலம், வெளியே போகும் சுவாசத்தின் அளவு பன்னிரண்டு அங்குலம். இதனால் ஏற்படும் இழப்பு நான்கு அங்குலம். இந்த இழப்பைத் தடுக்க பிராணனை பிராணாயாமத்தின் மூலம் இடகலை, பிங்கலை நாடிக்குள் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்துவதால் பிராணனின் இழப்பு தடுத்து நிறுத்தப்படுகிறது. பிராணாயாமத்தின் மூலம் மூச்சுக் காற்றின் இழப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார் பத்ரகிரியார்.

புலம்பல் 142.
காட்டுக்கால் இரண்டும் விட்டு நடுவுக்கால் ஊடேபோய்
ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்?

பொழிப்புரை: பிராணாயாமத்தின் மூலம் இரேசகம், பூரகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி கும்பகத்தில் பிராணனை நிலைக்கச் செய்து, சுழுமுனை வழியே குண்டலினி சக்தியை ஏற்றுவது எக்காலம்?
விளக்கவுரை: இதுவும் ஒரு குறியீட்டு மொழிச் செய்யுள். “நாட்டுக்கால்” என்பது இரேசகப் பூரகத்தைக் குறிக்கிறது. “இரண்டும் விட்டு” என்றால் இவ்விரண்டையும் கட்டுப்படுத்தி கும்பகத்தில் பிராணனை நிலைக்கச் செய்தல் என்று பொருள். “நடுவுக்கால் ஊடே போய்” என்றால் அப்படிக் கட்டுப்படுத்திய பிராணனை சுழுமுனை ஆகிய நடுவு நாடி மூலம் செலுத்தினால் குண்டலினி சக்தி எழுப்பப்பட்டு அது திருநடனம் செய்கிற (ஆட்டுக்கால்) திருவடிக்கு (இரண்டடிக்கு) இட்டுச் செல்லும். இப்படி நடப்பது எக்காலம் என்று ஏங்குகிறார் பத்ரகிரியார். இதனை மேலும் விளக்குவோம்.

பிராணாயாமம் என்பது மூச்சினை முறையாக இழுத்து விடுவதற்கான ஒரு சிறந்த பயிற்சியாகும். இது வெறும் உடற்பயிற்சி நுட்பம் மட்டும் அல்ல. யோகத்தில் இது ஓர் இன்றியமையாத செயல்முறை. இது பிராணனைக் கட்டுப்படுத்த உதவும் பயிற்சி. பிராணன் என்பது விழிப்புணர்வுடைய ஓர் ஆன்மிகத் தத்துவமாகும். இது ஆகாசத்துடன் இணைந்து பொருந்தி வாழ்கிறது. “மனத்தைக் கட்டும் கயிறு” என்றே இதனை ஓர் உபநிடதம் குறிப்பிடுகிறது.

சித்தர் இலக்கியத்தில் பிராணாயாமத்தை வாசி என்றும் கூறுவார்கள். பிராணாயாமம் குண்டலினி யோகத்தில் ஒரு முக்கியமான கூறுபாடாக இருப்பதால் அந்த யோகத்தைத் தமிழில் வாசியோகம் என்றும் கூறுவதுண்டு. சித்தர்கள் கருத்துப்படி பிராணாயாமம் உடல் நலத்திற்கும் தன்னடக்கத்திற்கும் காரணமாக விளங்குகிறது.

பிராணாயாமம் பயில்வோர்க்குச் சாவேயில்லை என்று அடித்துக் கூறுகிறார் திருமூலர்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே. (பா 571)

நாடிகளில் செல்லும் மூச்சின் சமநிலைப்பாடே ஒருவரின் உடல் நலத்திற்கும் மன அமைதிக்கும் அடிப்படைக் காரணமாகும். அமைதியற்ற மனம் ஒடுங்கி ஒருமுகப்படுவதற்கு பிராணாயாமம் உதவுகிறது. அதனால் பிராணாயாமத்தை “அக அக்னிஹோத்ரம்” என்றும் “மன வேள்வி” என்றும் “அகவயச் சடங்கு” என்றும் “தினசரி மூச்சு வேள்வி” என்றும் கூறுவர்.

பிராணாயாமம் மூன்று செயல்களை உள்ளடக்கியது. மூச்சை உள்ளிழுத்தல் (பூரகம், அபானன், ஆகாரம்); மூச்சை வெளித்தள்ளல் (ரேசகம், பிராணன், அபசரம்) மூச்சை நிறுத்தல் (கும்பகம், வியானன், ருசிரம், தாரணை). இந்த மூன்று செயல்களில் மூச்சிழுத்தல் ‘அ’ என்பதையும், நிறுத்தல் ‘உ’ என்பதையும் வெளியிடல் ‘அம்’ என்பதையும் குறிப்பதாகத் தமிழ்ச் சித்தர்கள் கொள்வார்கள். அதாவது பிராணாயாமம், என்பது பிரணவமே ஆகும். பூரகம், ரேசகம், கும்பகம் என்னும் இந்தச் சொற்களைத் தாந்திரிகர்களும் சித்தர்களும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பதஞ்சலி தம் யோக சூத்திரத்தில் அவ்வாறு பயன்படுத்துவதில்லை. ஆனால் அவர் இந்த மூன்று செயல்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

பிராணாயாமத்தின் உண்மையான குறிக்கோள் ஒரு சாதகனை ஏகாக்ருதனாக, ஒரே குறியில் ஊன்றிய சித்தமுள்ளவனாக, ஆக்குவதுதான். தாந்திரிக நூல்களின்படி குண்டலினி சக்தியை எழுப்புவதுதான் பிராணாயாமத்தின் நோக்கம். ஹடயோகப் பயிற்சியில் குண்டலினியாகிய சர்ப்பத்தை உசுப்பிவிடுவதுதான் பிராணாயாமத்தின் அடிப்படையான செயல்பாடு.

பிராணாயாமம் என்பது மனத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு செயல்முறை ஆகும். அது மனத்தின் தீய எண்ணங்களைப் போக்குகிற மாமருந்து என்பது மனு என்பவரின் கூற்று. அது தாந்திரிகச் சொல்லாட்சியில் பிரத்தியாகாரமாகவும் விளங்குகிறது. மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் காலத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். காலத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நாடிகளில் இயங்கும் பிராணனை யோகப் பயிற்சியினால் கட்டுப்படுத்த வேண்டும். காலம் கட்டுண்டால் நாடிகளில் பிராணன் யோகப்பயிற்சியினால் கட்டுப்பாட்டில் இருக்கும். ஏனெனில் காலம் என்பது பிராணனின் செயல்பாடுகளைப் பொறுத்தது. ஒருமுறை மூச்சை இழுத்து வெளிவிடும் உயிர்ப்பு நிலைக்கு வேண்டிய காலப்பரிமாணம் மாத்திரை என்ற அலகினால் அளவிடப்படுகிறது.

குண்டலினி யோகத்தில் மூச்சு நிலை நிறுத்தப்படும் பொழுது மனம் மூலாதாரத்தில் லயித்துப் பின் படிப்படியாக மற்ற சக்கரங்களிலும் லயித்து இருக்கும். அதாவது பிராணாயாமத்தினால் சக்கரங்கள் மலர்ச்சியுறுகின்றன. அப்பொழுது கிளர்ந்து எழும் குண்டலினி அச்சக்கரங்களை ஊடுருவிச் செல்லும். பிராணசக்தி குண்டலினியைச் சுருள்பிரிந்து அவிழச் செய்கிறது. பிராணாயாமத்தினால் சுழிமுனையின் வழி திறக்கப்படுகிறது. அப்பொழுது பிராணன் குண்டலினியுடன் சுழிமுனையில் இணைகிறது.

இடகலை, பிங்கலை நாடிகளிலிருந்து விலகி பிராணன் சுழிமுனையில் நுழைந்து அதன் வழியாகச் சகஸ்ராரத்தைச் சென்றடைகிறது. பிராண ஓட்டம் முழுதும் சுழிமுனையில் அழுந்தும் பொழுது ஒருவகையான வெப்பம் உண்டாகிறது. அந்த வெப்பத்தின் தூண்டுதலால் குண்டலினி கிளர்ச்சியுற்றுச் சீறிக் கிளம்பி சக்கரங்கள் அனைத்தையும் துளைத்துச் செல்கிறது.

சுருள்பிரிந்து கிளர்ந்து எழும் குண்டலினி ஒவ்வொரு சக்கரத்தையும் துளைத்து அது அவ்வவற்றுக்குரிய பூததத்துவங்களைத் தன்னுள் கிரகித்துக் கொள்கிறது. குண்டலினி மேல் எழும்புகையில் அப்பூத தத்துவங்களும் லயநிலையை அடைகின்றன. குண்டலினி சக்தி அவ்வாறு இருபத்து நான்கு தத்துவங்களையும் கிரகித்துக் கொண்டு எழுந்து முடிவில் சகஸ்ராரத்தை அடைகிறது. அங்குதான் அது பரமசிவத்தோடு இணைகிறது. தாந்திரிக மொழியில் இதனை “உன்மணி அவஸ்தை” என்பார்கள். இங்கு உன்மணி என்பது சிவசக்தி ஐக்கியத்தைக் குறிக்கிறது. இதனை சாமரஸ்யம் என்றும் சொல்வதுண்டு.

saravanandhsr

Posts : 1
Join date : 07/01/2012

Back to top Go down

சித்தர் சிந்தனை Empty Re: சித்தர் சிந்தனை

Post by ராகவா Thu Sep 12, 2013 5:36 am

சரவணன்...மறுமொழி நீங்க எதாவது கொடுக்கலாமே...
நன்றி...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சித்தர் சிந்தனை Empty Re: சித்தர் சிந்தனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum