இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஆன்மா அழிவற்றதா ?

Go down

ஆன்மா அழிவற்றதா   ? Empty ஆன்மா அழிவற்றதா ?

Post by ஆனந்தபைரவர் Fri Aug 27, 2010 4:50 pm

ஆன்மா அழிவற்றதா என்ற கேவிகு சுவாமி ஜி அளித்த பதில் இந்த கட்டுரை தி நியூ யார்க் அட்வேர்டைசெர் என்ற பத்திரிக்கையில் 1895 ஆம் ஆண்டு மே மதம் வெளிவந்தது

ஆன்மா அழிவற்றதா   ? Swami%20Vivekananda2094


'மாறுதல் இல்லாத ஒன்றை அழிக்கும் சக்தி யாருக்கும் இல்லை '
-பகவத் கீதை

மகா பாரதம் எனும் சம்ஸ்க்ருத பெரும் காவியம் இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்று .
அதில் வரும் வீரரான யுதிஷ்டிரரிடம் தர்மதேவன் கேட்டான் :
'உலகில் மிகவும் வியப்பானது எது ?'

'ஏறக்குறைய ஒவ்வொரு கணமும் தம்மை சுற்றி மரணத்தையே கண்டு கொண்டிருந்தாலும் மக்கள் தங்களுக்கு
அழிவே இல்லை என்று உறுதியாக நம்பி அதை விடாமல் பற்றி கொண்டிருப்பது மிகவும் வியப்பை தருவது '
என்று அதற்க்கு விடை கூறினார் யுதிஷ்டிரர் .
உண்மையிலேயே மனித வாழ்வில் அதிர வைக்கின்ற வியப்பு இதுதான்.பல் வேறு பிரிவினரும் பல் வேறு காலங்களில்
இதற்க்கு எதிராக எவ்வளவோ பிரச்சாரம் செய்திருந்த போதிலும்,புலனுலகம் மற்றும் புலனை கடந்த உலகம் இவற்றிற்கு இடையே உள்ள மாய திரையை கிழித்து பகுத்தறிவால் முடியாத போதும் ,தனக்கு மரணமே இல்லை என்ற உறுதி மட்டும் மனிதனை விட்டு நீங்க வில்லை .

நாம் வாழ்க்கை முழுவதும் ஆராயலாம் ஆனால் வாழ்வு சாவு என்ற பிரச்சினைகள் உண்டு அல்லது இல்லை என்பதை
நம்மால் அறிவு பூர்வமாக விளக்க முடியாது .மனித வாழ்வு நிலையானது என்றோ நிலையற்றது என்றோ நாம் ஆசை தீர பேசலாம் எழுதலாம் பிரச்சாரம் செய்யலாம் கற்பிக்கலாம் இந்த இரண்டு கருத்துக்களுள் ஒன்றின் தீவிர வாதிகளாக மாறலாம் புரியாத புதிர்களான பெயர்களை நூற்று கணக்ககாக அதற்க்கு சூட்டி விட்டு 'நம் இந்த பிரச்சினைக்கு அறுதி முடிவு கண்டு விட்டோம் என்று தவறான கருத்துடன் நம்மை நாமே ஏமாற்றி கொண்டு ,
காணநேரம் மன அமைதி பெற்றாதாக எண்ணி மயங்கலாம் :மத சம்பந்தமான மூட நம்பிக்கைகளையோ
நம் ஆற்றல் முழுவதையும் திரட்டி கெட்டியாக பற்றி கொள்ளலாம் அனால் முடிவில் தர்க்க அறிவான சதுரங்க விளையாட்டில் மீண்டும் மீண்டும் அடித்து தள்ள படுவதையே காண்கிறோம்

இந்த மனபோரட்டத்திர்க்கும் சித்ரவதைக்கும் பின்னல் இவை உருவாக்குகின்ற அபாயகரமான முடிவுகளுக்கும் பின்னால் இதுவரையிலும் யாராலும் வெல்ல படாத இனியும் வெல்ல முடியாத உண்மை ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது நாமும் அழிய போகிறோம் என்பதை உணரும் சக்தி நமது மனதிற்கு இல்லை என்பதே அந்த உண்மை .அதனையே மகாபாரதம் சுட்டி கட்டுகிறது எனவே அழிவை நான் கற்பனை செய்து கொள்ள வேண்டுமானால் நான் ஒரு சாட்சியாக விலகி நின்றாக வேண்டும்

வினோதமான இந்த விஷயம் என்ன என்பதை அறிந்து கொள்ள முயலும் முன் பிரபஞ்சமே இந்த ஓர் உண்மையை ஆதராமகக்கொண்டே நிற்கிறது என்பதை நாம் நெஞ்சில் இறுதி கொள்ள வேண்டும் .புற வுலகத்தின் அழிவின்மை எனபது அக உலகத்தின் அழிவின்மையுடன் பிரிக்க முடியாதபடி இணைந்தது இந்த இரண்டில் ஒன்று அழியாதது மற்றொன்று அழிவது என்று கூறும் பிரபஞ்ச கொள்கை சரியானது போல் தோன்றலாம் ஆனால் அகவுளாகும் சரி புற உலகும் சரி இரண்டுமே அழியாதவை நிலயனை என்பதை ஒரு தூண்டு சக்தியாக ஒரு காரணமாக கொள்ளமால் உணர்வு செயல் எதுவும் நடைபெற முடியாது இந்த கொள்கை வாதியே ஒப்புகொள்ள நேரும்

மனித மனம் தனது எல்லைகளைக் கடந்து செல்லும்போது இருமை கருத்துகள் கரைந்து பகுபடாத ஒருமை கருத்தாக மாறுவதை காண்கிறது எனபது முற்றிலும் உண்மை இந்த பக்கத்தில் எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சத்தையே நம் காண்கிறோம் இது ஒன்றையே இந்த நிலையில் நாம் காண முடியும் இது ஆண்மவிர்க்க்காகவே இருக்கும் ஒன்று எனவே ஆன்மாவின் அழிவை பற்றி எண்ணுமுன் அதற்க்கு விஷயமான பிரபஞ்சத்தின் அழிவை பற்றி நாம் எண்ணியே தீர வேண்டும் இதுவரையில் தெளிவாக இருக்கிறது இனிமேல்தான் சிக்கல் அரம்பிக்கிரத்து சாதாரணமாக நான் என்னை பற்றி நினைக்கும்போது உடலாகத்தான்நினைக்கிறேன் .நான் அழிவற்றவன் என்ற எண்ணத்துடன் நான் உடல் என்ற எண்ணமும் கலந்தே இருக்கிறது .ஆனால் உடல் நிலையற்றது என்பது வெளிப்படை .பிரபஞ்சமே நிலையற்றதுதான்
அழிந்து கொண்டிருப்பதுதான் .

அப்படியானால் அழியாமை எங்கே இருக்கிறது ?

நமது வாழ்வுடன் தொடர்புடைய மற்றோர் அறிய விஷயமும் இருக்கிறது .அதுதான் முக்தி அல்லது சுதந்திரம் .அது இல்லாவிடில் யாரால் வாழ முடியும் ?யாரால் வாழ்வின் இன்பத்தை ஒரு காண நேரம் அனுபவிக்க முடியும் முக்தி என்ற இந்த எண்ணம்தான் நமது ஒவ்வோர் அடியிலும் நமக்கு வழிகாட்டியாக நிற்கிறது நமது இயக்கம் நடைபெற காரணாமாக நிற்கிறது நாம் ஒவ்வொருவரிடையே நிகழும் உறவுக்கு காரணமாக இருக்கிரது ஏன் ? மனித வழு என்ற துணியின் ஊடும்பாவுமாக இருப்பது இது தான் .கல்வி அறிவு இந்தச் சுதந்திர எண்ணத்தைசிறிது சிறிதாக அதன் இடத்தை விட்டு துரத்த முயல்கிறது அதன் ஆட்சிக்கு உட்பட்ட இடத்திலிருந்து ஒவ்வோர் இடமாக பறித்து கொள்கிறது இந்த ஒவ்வொரு வெற்றியையும் காரண காரியம் என்ற இரும்பு தண்டவாளத்தால் இறுக பிணைத்து நிலை நாட்டுகிறது .ஆனால் சுதந்திர எண்ணமோ தன்னை நசுக்குவதற்காக செய்ய படுகின்ற இந்த அறிவின் முயற்சிகளை கண்டு சிரிக்கின்றது தன்னை அழிக்க முயல்கின்ற காரண காரிய வாதங்களுக்கெல்லாம் சிக்காமல் அப்பால் தன்னை வைத்து கொள்கிறது அது .வேறு வகையாக எப்படி இருக்க முடியும் ?

எல்லைக்கு உட்பட்ட பொருள் தன்னை விளக்கி கொள்ள வேண்டுமானால் ,எல்லையற்ற ஒன்றை பற்றிய உயர்ந்த பொது விதி ஒன்று எப்பொழுதும் தேவைப்படுகிறது சுதந்திரமான ஒன்றை காட்டி தான் கட்டு பட்ட ஒன்றை விளக்க முடியும் காரணத்திற்கு கட்டுபடாத ஒன்றை காட்டிதான் காரணத்திற்கு கட்டு பட்ட ஒன்றை விளக்க முடியும் ஆனால் இங்கும் அதே அதே பிரச்சினை உள்ளது எது சுதந்திரமானது உடலா மனமா ?இந்த இரண்டும் பிரபஞ்சத்தின் மற்ற பொருட்களை போலவே சட்ட திட்டங்களுக்கு கட்டு பட்டவை என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும்

இந்த பிரச்சினை இப்போது ஓர் இடர்பாடாக மாறிவிடுகிறது இந்த பிரபஞ்சம் ஓயாத மாறுதலுக்கு உள்ளாகி கொண்டிருக்கிற ஒன்று அதற்க்கு மேல் எதுவும் அல்ல விலக முடியாத படி காரண கரிய விதிகளால் கட்டு பட்டது
இதன் ஓர் அணு கூட தன்னளவில் ஒருமையானது அல்ல ஆனாலும் அழிய தன்மை சுதந்திரம் என்ற மாறாத மன மயக்கத்தை உண்டாக்கி கொண்டே இருக்கிறது -இந்த கருது உண்மையாக இருக்க வேண்டும்
அல்லது நம்முள்ளும் இந்த பிரபஞ்சத்திலும் நிலையான சுதந்திரமான ஏதோ ஒன்று இருக்கிறது மனித மனதில் ஏற்படும் அறியாமை ,சுதந்திரம் என்ற எண்ணம் தவறல்ல மயக்கம் அல்ல என்பதற்கு இதுவே ஆதாரமாக உள்ளது
என்பது உண்மையாக இருக்க வேண்டும் .பலவற்றில் பரவலாக உள்ள பொதுமையை எடுத்தி காட்டி உண்மைகளை விளக்குவது விஞ்ஞானத்தின் கடமை விளக்குவதற்காக எடுத்து கொண்ட பொருளின் ஒரு பகுதியையே அழித்து அதை ஆதாரமாக கொண்டு மிகுதி உள்ள பகுதியையே விளக்க முன்வரும் விளக்கம் எதுவும் விஞ்ஞான ரீதியாக இருக்க முடியாது வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் .

எனவே நம் மனத்தில் நின்று வர்புரிதிய வண்ணம் இருக்கின்ற இருக்கின்ற மிக அவசியமான சுதந்திரம் என்ற எண்ணத்தை அலட்சியம் செய்யும் எந்த விளக்கமும் மேற்சொன்ன தவறுக்கு உட்பட்டதே அதாவது ஒன்றை விளக்குவதற்காக விளக்க வேண்டிய பொருளின் ஒரு பகுதியை மறுப்பதாகும் எனவே அந்த விளக்கம் தவறனாதாகும்
வேறு வழி என்ன நமக்கு இயல்புக்கு ஏற்றபடி நமக்குள் சுதந்திரமான நிலையான ஒன்று இருக்கிறது என்பதை ஒப்பு கொள்வதே .

ஆனால் அந்த ஒன்று உடல் அல்ல மனமும் அல்ல உடல்ஒவ்வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கிறது மனமோ மாறியபடியே இருக்கிறது உடல் பலவற்றின் சேர்க்கை மனமும் அத்தகையதேஎனவே இவை எல்ல மாறுதல்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைய முடியாது அனால் தூல பொருளான இந்த மெல்லிய உறையையும் இதற்க்கு அப்பால் உள்ள மனம் என்ற மெல்லிய உறையையும் தாண்டி இருக்கிறது ஆன்மா .
இதுவே மனிதனது உண்மை தத்துவம் இது நிலையானது என்றுமே பந்தப்படாதது இதன் அழியாமை சுதந்திரம் ஆகிய தன்மைகளே எண்ணம் சடப்பொருள் போன்ற போர்வைகளை ஊடுருவி பெயர் உருவம் என்ற நிலைகளை கடந்து சுதந்திரம் அழியாமை என்ற தன்மைகளை வற்புறுத்தி நிற்கிறது மிகவும் தடித்த அஞ்ஞானம் என்ற போர்வைகளையும் ஊடுருவி இந்த ஆன்மாவின் அழிவின்மையும் ஆனந்தமும் அமைதியும் தெய்வீகமும் பிரகாசித்து நாம் இவற்றை உணரும்படி செய்கின்றன ஆன்மாதான் உண்மை மனிதன் அவன் பயமும் அழிவும் பந்தமும் அற்றவன் வெளி சக்தி எதுவும் பதிக்க முடியாத பொது எந்த மறுதலையும் உண்டாக்க இயலாதபோது தான் சுதந்திரம் என்பது இருக்க முடியும் எல்லா நியதிகளுக்கும் எல்லா எல்லைகளுக்கும் எல்லா விதிகளுக்கும் காரண காரியம் எல்லாவற்றிர்க்கும் அப்பால் தான் சுதந்திரம் என்பது இருக்க முடியம் எனவே எந்த வகை மாறுதலுக்கும் உட்படாதது தான் சுதந்திரமாகவும் அழிவற்றதாகவும் இருக்க முடியும் இருக்கின்ற இதுதான் அதாவது மனிதன் உண்மை தத்துவம் தான் ஆன்மா இது மாறுதல் இல்லாதது கட்டு பாடுகளுக்கு உட்படாதது எனவே இதற்க்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை

இந்த மனித ஆன்மாதான் பிறப்பு இறப்பு இல்லாமல் அழிவற்றதாக என்றும் உள்ளதாக திகழ்கிறது


ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum