இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சித்தர் சிந்தனை

Go down

சித்தர் சிந்தனை Empty சித்தர் சிந்தனை

Post by ஆனந்தபைரவர் Sun Aug 01, 2010 4:01 pm

சித்தர் சிந்தனை
முனைவர், பேராசிரியர் தண்டாங்கோரை நடேச கணபதி

புலம்பல் 143.
பாற்பசுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்
காற்பசுவை ஓட்டி அதில் கட்டிவைப்பது எக்காலம்?
பொழிப்புரை: பாசத்தைப் பூட்டி, அந்த அன்பை பதியிடம் வைத்துச் சீராட்டி, வாசியாகிய பிராணவாயுவை உள்ளே இருத்திக் கட்டுப் படுத்தி வைப்பது எக்காலம்?

விளக்கவுரை: பசுவாகிய ஆன்மாவானது பாசத்திலிருந்து விடுபட்டு, அதன் அன்பைப் பதியாகிய சிவனிடம் வைத்துச் சீராட்டி, பிராணவாயுவைத் தன் உள்ளே இருத்தி, அதன் மூலம் பாசத்தைக் கட்டறுத்து, ஈசனை அடைவது எக்காலம் என்று புலம்புகிறார் பத்ரகிரியார். பாற்பசு என்பது பாசத்தினால் கட்டுண்ட ஆன்மாவைக் குறிக்கும். காற்பசு என்பது (கால்=பிராணவாயு அதாவது வாசி) பிராணாயாமத்தினால் கட்டுண்ட, நிலைபெற்ற ஆன்மா என்பது.
பசு, பதி, பாசம் என்பது முப்பொருள். இதில் பசுவாகிய ஆன்மாவானது பாசத்தை நீக்கி பதியுடன் ஒன்று சேர்வதே முக்திநிலையாகும். இந்த முக்தி நிலையை அடைய ஒரு வழி உண்டு. அதுவே வாசி யோகம் ஆகும். ஏற்கெனவே வாசி யோகம் பற்றி இதற்கு முந்திய புலம்பல்களின் விளக்கவுரையில் கூறியுள்ளோம். வாசி யோகத்தின் மூலம், பாசத்தை அறுத்து, ஆன்மாவாகிய பசுவை பதியாகிய சிவத்துடன் ஒன்றிணைக்க முடியும் என்று கூறுவர் சித்தர்கள். அந்த நிலை அடைவது எக்காலம் என்று ஏங்குகிறார் பத்ரகிரியார்.

புலம்பல் 144.
பல இடத்தே மனத்தைப் பாயவிட்டுப் பாராமல்
நிலவரையின் ஊடே போய் நேர்படுவது எக்காலம்?

பொழிப்புரை: மனத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிவத்தை அடைவது எக்காலம்?

விளக்கவுரை: மனமானது ஒரு குரங்காகும். ஒரு குரங்கு எவ்வாறு ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவிக்கொண்டே இருக்குமோ அதே போல் இந்த மனமானது புலன்களினால் செயல் படுத்தப்பட்டு ஒருபுலன் ஆசையிலிருந்து மற்றொரு புலன் ஆசைக்குத் தாவிக் கொண்டே இருக்கும். இந்த மனத்தைக் கட்டுப்படுத்துவதுதான் யோகம் எனப்படுவது. இதைப் “படர்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்குவது” என்று திருமூலர் கூறுவர். பதஞ்சலியும் அவ்வாறே கூறுகிறார். பிராணாயாமம்தான் மனத்தைக் கட்டும் ஒரு கயிறு ஆகவே பிராணாயாமப் பயிற்சியின் மூலம் மனத்தைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் குண்டலினியை எழுப்புவதே வாசியோகம்.

“நிலவரை” என்பது சஹஸ்ராரம் ஆகும். இந்த சஹஸ்ரார சக்ரத்தை ஆன்மா அடையும்போது அது சிவத்துடன் ஒன்றுபடுகிறது. அதுவே “நேர் படுவது”. சாதகனின் குண்டலினி சக்தி சகஸ்ராரத்தில் புகும்பொழுது அவன் சிவத்தோடு ஒன்றுபடுகிறான். பேரண்டங்களின் சாட்சியாகிறான்; சித்தனாகிறான்; அதனால் காலவரலாற்று நிலைகளிலிருந்து வெளிவந்து விடுகிறான். அப்பொழுது ஆறு ஆதாரங்களும் அவனது ஆறு ஆன்ம உணர்வு நிலைகளாக, “ஓம் நமசிவாய” என்ற மெய்யுணர்வு வந்து வாய்க்கிறது. உண்மையில் கூறப்போனால் முக்தியான மரத்தின் வேர்கள் சகஸ்ராரத்தில்தான் ஊன்றப்பட்டுள்ளன. அதனால்தான் வேர்களை உணர்ந்தவர்களுக்கு முக்தி வாய்க்கும் என்று பாம்பாட்டிச் சித்தர் கூறுகிறார்.

அந்தரம் சென்றுமே வேர்பிடுங்கி
அருள்என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தனைத் தின்பீ ராகில்
இனிப்பிறப்பு இல்லையென்று ஆடு பாம்பே.
(பா.113)
“நிலவரை” என்பதைத் தவறாக குகையில் சென்று வாசம் செய்தல் என்று தத்துவார்த்த விளக்க உரையிலும், ஞானார்த்த தத்வ தீப உரையிலும் கூறப்பட்டுள்ளது. சிலர் ‘நிலவரை’ என்பதை மனத்தில் ஒரு பொருளை நினைத்து அதைத் தியானிக்கும் நோக்கு என்கிறார்கள். நிலவரை என்பது ஒரு பரிபாஷைச் சொல். நிலவரை என்பது சகஸ்ராரத்தைக் குறிக்கும். சித்தர் குறியீட்டுச் சொல் என்பது எமது துணிபு. இதுபோல் சித்தர்களின் குறியீட்டு மொழி என்கிற புதைகுழியில் ஆழம் தெரியாமல் காலைவிட்டுத் தத்துவ நூலோர்கள் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர்.

புலம்பல் 145.
காமக்கடல் கடந்து கரை ஏறிப்போவதற்கே
ஓமக்கனல் வளர்த்தி உள்ளிருப்பது எக்காலம்?

பொழிப்புரை: குண்டலினியாகிய நெருப்பை நம் உடலில் வளர்ப்பதன் மூலம் காமமாகிய அக்னியைக் கடந்து நாம் உருப்படுவது எக்காலம் என்கிறார் பத்ரகிரியார்.

விளக்கவுரை: ஓமக் கனல் என்றால் குண்டலினி. குண்டலினி யோகத்தின் மூலம் காமத்தை அடக்கிக் கரை ஏறுவதே முக்திக்கு வழி. இந்தப் புலம்பல் ஒரு சிறந்த உட்கருத்தை அடக்கியுள்ளது. ஓமக்கனல் மூலம் காமக்கடல் கடப்பது எப்படி? இதன் விடை பின் வருமாறு:

குண்டலினி யோகம் முழுவதற்குமான ஒரு தனிச் சிறப்பியல்பு என்னவென்றால் எல்லா முயற்சிகளும் உள்முகமாகவும், மேல்நோக்கியும் ஆற்றப்படுவதுதான். ஹடயோகம் வாயுக்களை உடம்பினுள் இருத்துவதற்கான பயிற்சியை அளிக்கிறது. சுக்கிலத்தைக் கட்டுப்படுத்தி மேல் நோக்கிச் செலுத்துகிறது. சுக்கிலத்தை அடக்கி மேல் நோக்கிச் செலுத்துபவர்களுக்குச் சாவு என்பதே இல்லை என்று அகஸ்தியர் ஞானம்-2 உணர்த்துகிறது.

உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி
உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு
திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.
(அகஸ்தியர் ஞானம் 2. பா.2)
கைலாயக் கம்பளிச் சட்டைமுனி,
வெட்டினார் மௌனி அந்த விந்துப் பாம்பை
வேதாந்த மென்றதொரு வாளினாலே
(முன்ஞானம்-100. பா.88)
என்று பாடுகிறார்.

கரு உற்பத்திற்குப் பயன்படும் சக்தியை மேல்நோக்கிச் செலுத்துவதை “ஊர்த்துவரேதஸ்” என்று சம்ஸ்கிருதத்தில் கூறுவர்.

விந்துவை அடக்கி மேலே செலுத்தும் பயிற்சியை “விந்துமறித்தல்” என்று கூறுகிறது திருமந்திரம். (பா-ள். 828, 833, 834, 1960, 1961, 1965)

யோகியை வந்து அழியாத அண்ணல் (பா. 1950) என்கிறார் திருமூலர்.

இவ்வாறு விந்துவை வழிமறித்து மேல் செலுத்தும் சாதனை “உல்டா சாதனை” என்று யோகநெறியில் கூறப்படுகிறது.

“உல்டா சாதனை” என்றால் என்ன? இந்த முறையில் ஒட்டுமொத்த உடம்பின் இயக்கமுறையும் மாற்றியமைக்கப்படுகிறது. மூச்சு, இரத்த ஓட்டம், செரிமான உறுப்புகள் ஆகியவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. உயிர்ச் சக்தியான விந்து, பௌத்தத்தில் போதிசித்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த விந்துவைக் கீழ்நோக்கிச் செலுத்துவதற்குப் பதிலாக மேல்நோக்கிச் செலுத்துவதன் மூலமாக சாவாநிலை அடையலாம். இந்த முறை பரவிருத்தி முறை என்றழைக்கப்படுகிறது. இது யோகத்தால் கைவசமாகும். எனவே உயிருக்கு ஊற்றமான இந்த விந்துவை வீணாக்கக்கூடாது. அவ்வாறு வீணாக்குகிறவன் விலங்கு நிலையினன் (பசு நிலை) அகத்தியர் ஞானமும் திருமந்திரமும் இந்த விந்து மறித்தலைப்பற்றி விரிவாகப் பேசுகின்றன. இந்த முறையைக் கையாள்பவன் சாவாநிலை பெறுவான் என்று அவை உறுதி சொல்கின்றன. இந்த விந்து மறிக்கும் கலையும் இரசவாதத்தோடு தொடர்புடையதே ஆகும்.

மனித உடலிலேயே மிகவும் அலைபாய்கிற இரசம் விந்துதான். இந்த விந்துவை மறித்து மேலேற்றுவதன் மூலம் அது வைரம் போன்ற வலிமையுடையதாகிறது. இந்த நிலையில் அதனுடைய அலைபாயும் தன்மை கெட்டொழிகிறது. இரசவாத வித்தையில் விந்துவின் குறியீடாகப் பாதரசம் அமைகிறது. இரசவாதி அதனுடைய நெகிழ்வுத் தன்மையை மாற்றி அதனை வலிமையான உலோகமாக, தங்கமாக மாற்ற முயல்கிறான். அவ்வாறே உடம்பையும் மாற்ற முயல்கிறான். இந்த இரு முறைகளும் காயசாதனையின் வெளிப்படை முறையாகவும் மறைமுக முறையாகவும் அமைகின்றன. யோகம் மொத்தமுமே இந்த மறித்தேற்றும் முறையின் அடிப்படையிலானதுதான் என்று சொல்கிற அளவுக்குச் சொல்கிறார் மிர்சியா எலியட்:

நடைமுறைப் பழக்கத்தை யோகியானவன் முற்றிலுமாக மறித்து மாற்ற முயல்கிறான். தன் உடம்பை அசையாமல் இருத்திக் கொள்கிறான் (ஆசனம்); மூச்சை மறித்து ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் சுவாசிக்கிறான் (பிராணாயாமம்); மனத்தை அலைபாயவிடாமல் நிலைநிறுத்திக் கொள்கிறான்; (ஏகாக்ரப்); சிந்தனையை நிலைகுத்தச் செய்கிறான். கீழ்நோக்கிப் பாய்கிற விந்துவை மறித்து மேலேற்றுகிறான். மனித அனுபவத்தின் ஒவ்வொரு நிலையிலும் வாழ்வு எதை எதிர்பார்க்கிறதோ அதற்கு எதிர்மாறானதைச் செய்கிறான்.

விந்துவை மறித்த யோகியினுடைய உடலிலிருந்து ஒரு நறுமணம் வீசும் என்று யோக உபநிடதங்கள் சொல்கின்றன. இந்த உல்டா சாதனையை நாத சித்தர்கள் பயில்கிறார்கள். உல்டா சாதனையைப் பற்றிய இரகசியத்தைச் சொல்வதற்குப் பயன்படுத்தப்படுகிற குறியீட்டு மொழி உல்டா மொழி அதாவது தலைகீழ் மொழி என்று வழங்கப்படுகிறது.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum