இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மனிதனின் அதர்மத்தால் இயற்கையின் சமநிலை கெட்டுவிட்டது - மாதா அ‌மி‌ர்தான‌ந்தம‌யி

Go down

மனிதனின் அதர்மத்தால் இயற்கையின் சமநிலை கெட்டுவிட்டது - மாதா அ‌மி‌ர்தான‌ந்தம‌யி  Empty மனிதனின் அதர்மத்தால் இயற்கையின் சமநிலை கெட்டுவிட்டது - மாதா அ‌மி‌ர்தான‌ந்தம‌யி

Post by ஆனந்தபைரவர் Wed Dec 08, 2010 11:46 pm

மனிதனின் அதர்மத்தால் இயற்கையின் சமநிலை கெட்டுவிட்டது - மாதா அ‌மி‌ர்தான‌ந்தம‌யி  Amma9684_resize
கேள்வி: தனது பிரச்சனைகளுக்குத் தானே பரிகாரம் தேடுவதற்குப் பதிலாக, மனிதன் ஆன்‌மிகத் தலைவர்களை நாடுவது அவர்களுக்குத் தொல்லை தருவதாக இருக்குமா? அம்மா: நாம் வளர்த்த ஒரு செடி கருகிப் போனால் நாம் அழுவோம். ஆனால், அதை நினைத்து அழாமல், மற்றொரு செடியை நட்டு வளர்க்க வேண்டும். சிரத்தையுடன், அதே சமயம் பற்றின்றிக் கர்மம் செய்யுமாறே ஆன்‌‌மிகத் தலைவர்கள் கூறுகின்றனர். நடந்ததை நினைத்து மனிதன் சோர்ந்துவிடக் கூடாது. தன்னைப்போல் பிறரை நேசிக்கவும், தனக்குச் செய்து கொள்வதைப் போல் பிறருக்கும் சேவை செய்யவுமே மகான்கள் கற்பிக்கின்றனர். இதை ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து படிக்க முடியாது. இதற்கு ஆன்மிகத் தலைவர்களையே நாட வேண்டும்.

மகான்களின் மனம், உலகியல் சுகத்தை மட்டுமே தேடுகின்ற நமது மனதைப் போன்றதல்ல. தன்னை வெட்டுபவனுக்கும் நிழல் மற்றும் இனிய பழங்களைக் கொடுக்கும் மரத்தைப் போன்றவர்கள் அவர்கள். மெழுதுவத்தியைப் போல், தான் உருகி, சமுதாயத்திற்கு அன்பு மற்றும் அமைதியின் ஒளியைப் பரப்புவதே அவர்களுக்கு சந்தோஷம் தரும் விஷயமாகும். அகந்தையும், பற்றும் நிறைந்த நம்மைச் சரியான பாதையிலும், தர்ம மார்க்கத்திலும் அழைத்துச் செல்ல அவர்களால்தான் முடியும். அது அவர்களுக்குக் கஷ்டமான காரியமுமல்ல. அவர்கள் ஒரு தனி மனிதனுக்காக வாழ்வதில்லை. மனிதன் நல்லவனாவதால் அவர்களுக்கு ஆனந்தமே.

கேள்வி: சுற்றுப்புறச் சூழ்நிலைப் பிரச்சனை எந்த அளவு முற்றியிருக்கிறது?

அம்மா: இன்று சுற்றுப்புறச் சூழழ்நிலைப் பிரச்சனை முன் எப்போதையும் விட மிக மோசமானதாக இருக்கிறது. மக்கள்தொகை அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் பெருகுகின்றன. ஆனால், இவற்றிற்கு ஏற்ப இயற்கைக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தை மட்டும் நாம் மறக்கிறோம். இன்று நமது முன்னோர்கள் நட்டு வளர்த்த மரங்களை வெட்டி அழிப்பதன்றி, ஒரு செடியை நட்டு வளர்க்க நம்மால் முடியவில்லை. இது இனியும் தொடர்ந்தால் இயற்கை நமக்கு எதிராகத் திரும்பும், அதில் சந்தேகமில்லை. அதன்பிறகு அதற்கு அறிவியல்பூர்வமான காரணங்களைக் கண்டுபிடிப்பதால் பயனென்ன? அனுபவிக்க நேர்ந்த விபத்திற்கும், அழிவுகளுக்கும் அது பரிகாரமாகாது.

பழங்காலத்தில் இந்த மாதத்தில் விவசாயம், இந்த மாதத்தில் அறுவடை என்று ஒரு முறை இருந்தது. அன்று குழாய்க் கிணறுகள் ஒன்றுமில்லை. இயற்கை கனிவுடன் நல்கிய நீரும், வெயிலுமே இருந்தன. அன்றைய மக்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தனர். இயற்கையுடன் பலப்பரிட்சையில் இறங்கவில்லை. எனவே, அன்று இயற்கை மனிதனுக்கு உதவியாக இருந்தது, நண்பனாக இருந்தது. இந்த மாதத்தில் விதை விதைத்தால் இந்தச் சமயத்தில் மழை கிடைக்கும், இந்தச் சமயத்தில் அறுவடை செய்யலாம் என்ற நிலையிருந்தது. இன்று அப்படியல்ல. குழாய்க் கிணறுகளும், பிறவும் இருப்பதால் எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் விவசாயம் செய்யலாம் என்று ஆகிவிட்டது.

ஆனால், அறுவடை வேளையில் மழை வரும். சில சமயம் பூ கதிராகும் நேரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். எல்லாம் நீரில் மூழ்கும். மனிதனின் சுயநலம் ஏற்படுத்திய அழிவு இது. இயற்கையின் இயல்புக்கு எதிராக நாம் என்ன செய்தாலும் இதுபோன்ற எதிர்விளைவுகள் ஏற்படும். அறிவியல் முன்னேற்றம் வேண்டாம் என்பதல்ல இதன் பொருள். அறிவியலுக்கு அதற்கே உரிய எல்லைகளுண்டு. இயற்கைக்கு அதற்கென ஒரு பாதையுண்டு. ஒன்று மற்றொன்றிற்குத் தடையாகாமல் இருந்தால் போதும். அவற்றை ஒன்றிணைக்க மனிதனிடம் ஆன்மிகப் பண்பாடு இருந்தால்தான் முடியும். அறிவியல் கண்டுபிடிப்புகளை இயற்கைக்கு எதிராக உபயோகிக்காதீர்கள். மனிதன் எப்போதும் துரோகமிழைத்த காரணத்தால் இயற்கையன்னையின் பொறுமை போய்விட்டது. இயற்கை தண்டிக்க ஆரம்பித்துள்ளது. தேவையான சமயத்தில் மழை இல்லை. வறட்சி அதிகரித்துள்ளது. இயற்கைச் சீற்றம் அதிகரித்துள்ளது. இயற்கை தனது தாண்டவத்தை ஆரம்பித்துவிட்டது. இயற்கையின் மீது மனிதன் காட்டும் அதர்மத்தால் இயற்கையின் சமநிலை கெட்டுவிட்டது. அதனால் விளைந்த கஷ்டங்களையே மனிதன் இன்று அனுபவித்து வருகிறான்.

பழங்காலத்தில் அம்மை குத்திய இடத்தில் கொப்புளம் வந்தால் அது ஆறுவதற்கு சாணத்தைத் தடவுவார்கள். இன்று சாணத்தை உபயோகித்தால் சீழ்பிடிக்கும், ஆள் இறக்க நேரிடும். உடல் அவ்வளவு பலவீனமாகிவிட்டது. உடலில் எதிர்ப்புச் சத்தியில்லை. இரண்டாவது, பசுவின் சாணத்திலும் விஷ அம்சம் கலந்துவிட்டது. பூச்சிமருந்து தெளித்த வைக்கோலைப் பசு தின்கிறது. சுற்றுப்புறத் தூய்மை விஷயத்தில் மற்ற நாடுகளைவிட இங்கு மோசமான நிலை நிலவுகிறது. காலணியின்றி பாதையில் நடக்க முடியவில்லை. நடைபாதையில் எச்சில் துப்ப யாரும் தயங்குவதில்லை. எச்சில் மீது நடந்தால் எப்படி வியாதிக் கிருமிகள் பாதிக்காமல் இருக்கும்? பாதை ஓரத்தில் மலமும், சிறுநீரும் கழிப்பர், சாக்கடையைச் சுத்தம் செய்வதில்லை. மற்ற நாடுகளில் இதுபோன்ற நிலை இல்லை.

இன்று எங்கு பார்த்தாலும் புதுவித நெல் விதைகளே கிடைக்கின்றன. அவற்றிற்கோ பாரம்பரிய விதைக்கு இயல்பாக இருந்த எதிர்ப்புச் சக்தி சிறிதும் இல்லை, பூச்சி மருந்துகளின் உதவி இருந்தால்தான் அவை வளரும். சாதாரணச் செடிகள், பறவை, மிருகங்களுக்கு இயற்கையுடன் இருந்தவந்த இயல்பான இணக்கம் இவற்றிற்கில்லை. நாளை மனிதனின் நிலையும் இதிலிருந்து மாறுபடப் போவதில்லை. குளிர்சாதன அறையிலிருந்து வெளியில் வந்தால் மயங்கி விழுவான். உடலும், மனமும் அவ்வளவு பலவீனமாகும்.

சுற்றுப்புறம் முழுவதும் தொழற்சாலை மற்றும் வாகனங்களின் புகையால் மாசடைந்துவிட்டது. தொழிற்சாலைகள் தேவைதான். அவை மக்கள் நெருக்கம் அதிமுள்ள இடங்களில் இருக்கக்கூடாது, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்க வழிவகுக்கக்கூடாது. அதுபோல் தொழிற்சாலைகள் லாபத்தில் ஒரு பங்கை இயற்கையின் பாதுகாப்பிற்காகச் செலவிட வேண்டும். பழங்காலத்தில் கிராமங்களும், மலைப் பிரதேசங்களும், புண்ணிய நதிகளும் தொழிற்சாலைகளிடமிருந்தும், மாசடைவதிலிருந்தும் விடுபட்டிருந்தன. ஆனால், இன்றோ! அவையும் மாசடைந்துவிட்டன. இனியாவது நாம் இதை உணர்ந்து அதற்குப் பரிகாரம் செய்ய முன்வரவில்லை என்றால், அது நமக்கு நாமே தீங்கை ஏற்படுத்திக் கொள்வதாக இருக்கும்.

இன்று பெரும்பாலோர் கையில் ஒரு பையுடன் நடக்கின்றனர். அதனுள் சாப்பிட வேண்டிய மாத்திரைகள், ஊசி மருந்துகள் முதலியவை இருக்கின்றன. காரணம், ஆரோக்கியம் அவ்வளவு நலிந்துவிட்டது. பணக்காரர்களும் பலவித நோய்களால் கஷ்டப்படுகின்றனர். எத்தனை அனுபவங்கள் ஏற்பட்ட போதும், அவற்றின் மூலம் நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. தற்காலிக சுகத்தில் நாம் அனைத்தையும் மறக்கிறோம்.

நன்றி வெப்துனியா
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum