இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1(1)

Go down

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1(1) Empty ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1(1)

Post by ஆனந்தபைரவர் Tue Aug 31, 2010 3:52 pm

1. வேத-ஆரிய-வாழ்க்கை-வழி என்றால் என்ன?

இதையே ஆன்மீகத்தில் மேம்பாடடைந்தவரின் வழிகளை அறிந்துகொள்ளுதல் என பொதுவாகப் பொருள் கொள்ளலாம் அல்லது ஒருவருடைய ஆன்மீக அடையாளத்தைக் கண்டுணர்தல் எனவும் சொல்லலாம். ஆணுக்கோ, அல்லது பெண்ணுக்கோ, கிடைத்த இவ்வுடல் தற்காலிகமானது தான், உண்மையில் அதை ஆட்டிவைத்து உள் உறைவது ஒரு அற்புத தெய்வீகப் பொறி; அல்லது ஆன்மாதான்; அதாவது, முன் மரித்த பின், இப்போது நமக்கு புதிதாகக் கிடைத்த இவ்வுடல், ஒவ்வொருவருவருடைய வினை / கர்மா என, அல்லது முன் பிறப்பின்போது, எண்ணத்தாலும், சொற்களாலும், செயல்களாலும் செய்த வினைப்பயனால் (நல்லவைகளோ, தீயவைகளோ – जीवनं कर्मानुसारिणी ’ஜீவனம் கர்மானுசாரிணி’ என்பதற்கேற்ப) இப்பிறவியில் பலாபலன் கிடைத்துள்ளது என புலப்பட்டுவிடும். இதில் நல்வினைப்பயனால் நல்லருளோ அல்லது தீவினைக்கொப்ப தண்டனைகளோ ஒவ்வொருவரும் அறுவடை செய்ய நேரும். ”வினை விதைத்தால் தினை” கிடைக்குமா? என ஆன்றோர் சொல்வதுண்டு. இவ்வாறான ஆன்மீக அறிவிலில் திடமான உணருந்திறன் ஒவ்வொருவருக்கும் உண்டாகிப்போனால், இத்திறனைக் கொண்டோர், ஓரினத்தைச் சேர்ந்தவரென்றோ, ஆண் பெண் என்ற பாகுபாடோ, சமுதாயப் படிநிலையோ, அல்லது ஓரினத்தின் உட்பிரிவோ என இன்றி, எல்லோரிடத்தும் மன அமைதியுடன், நன்கு பழகுவர். இதனால் மற்றோர், தாமாகவே இப்பேற்பட்ட பெருந்தகைமை உடையோரை, உயர்வாகப்போற்றி உகப்பர். இந்நிலை ஒவ்வொருக்கும் உண்டானால், அவரையே ஒரு முன்மாதிரியாகக் கொண்டு, ஒவ்வொருவரையும் ஒவ்வொருவரிடத்திலும், நன்நெறியோடு, அமைதி நிறைந்த சமூக நடத்தையில் எல்லோரையும் ஈடுபட வைத்துவிடும். ஒவ்வொருவரிடத்திலும் உள்ள ஆன்மீக தனித்தன்மையை அடையாளங்கண்டு கொண்டால் அது நமக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கி விடுகிறது. இந்நிலையில், ’பூமி எனும் இக்கிரகத்தில்’ (planet) சிறிது நாட்களுக்கு நாம் விருந்தாளிகளாக அவ்வபொழுது வருகிறோம் என்பதையும் அறியமுடியும். வேறுவிதமாகச் சொன்னால், இப்படியாக, உங்கள் ஆன்மீக நலனுக்கு என்னால் ஆற்றப்படும் பங்களிப்பு, தன்னியக்கமாகவே, எனது சொந்த நல்வாழ்வுக்கு நானே எனக்குப் பங்களிப்புக் கொடுததாகவே ஆகிவிடுமல்லவா!. இம்மாதிரியே ஒருவருக்கொருவர் நம் பங்களிப்புகளை பரஸ்பரமாக அளித்துக் கொள்வதால், நம் சமூகமே ஒட்டுமொத்தமாக எவ்வித இடையூறின்றி தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு வழி ஏற்படுத்திவிடுமல்லவா!. ஆக, நாம் எல்லோரும் ஒன்றுகூடி, நம் ஒவ்வொருக்கொருவர் தூய்மையாகப் புரிந்துகொள்ளும் திறனையும், அப்பழுக்கில்லாத உள்ளத்தையும் அடைய உளமாற உழைப்பதாகவும் ஆகிவிடும். இது தான் வேத-ஆரிய-வாழ்க்கை-வழியின் குறிக்கோள்; இவ்வழியையே, மனப்பூர்வமாக பின்பற்றுவோர் எப்போதுமே இவ்வழியில் ஈடுபாடு கொண்டுள்ளனர்.

இருப்பினும், ஒவ்வொருவரும் இவ்வழியை அடைந்து விடவோ, அல்லது குறைந்த பட்சம் பின்பற்றுவதையோ விரும்புவதில்லை. அதனால்தான் வேத ஒழுங்கு முறைகளில், பேறுகாலத்திலிருந்து இறுதி நிலையான இறப்புவரை நல்லொழுக்க நடத்தைகளையும், அநேக வரையறை செய்யப்பெற்ற விதிகளையும் (அதாவது, அநேக கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு), சமய சடங்குகளையும் ஒவ்வொருவருக்கும் நிறுவியுள்ளனர். ஆம்! மற்ற சமயங்களிலும் நல்லொழுக்க நடத்தைகளைப் பற்றி, இம்மாதிரியான ஒழுங்கு முறைகள் இருக்கலாம். (ஆனால், அவைகளைப் பற்றி நன்கு யோசித்து, விமர்சனம் செய்து, பிறகு தீர்மானித்து, பின்னர் உபயோகிக்கும் சுதந்திரம் இருக்குமா?) ஆனாலும், எவரொருவர், இம்மாதிரி நல்லொழுங்கு விதிகளை அனுசரிக்க விரும்பவில்லையோ, அவர்களையும் ’’ஆரியரல்லாதோர்’’ என பெயர் சூட்டப்பட்டாலோ, அதாவது இந்த நல்லொழுக்கங்களைப் பின்பற்ற விரும்பாதோரை ’நாகரிகமற்றவர்கள்’ என சுருக்கமாகத் சொன்னால் என்ன தவறாகிவிடும்? இவ்வாறான ஆசாமிகள், இவ்வித நியமங்களையோ, தத்துவங்களையோ, அல்லது ஆசாரங்களைப் பின்பற்றாமல் இருந்தால், அவர்களை ஆன்மீகவழியில் இல்லாதோரென கூறலாம். ஆகவே,

• எவருக்கு மேற்கூறிய ஆன்மீகவழிகளில் செல்தடமில்லையோ, ஆனால்,

• உலகாயத உடலுக்கு வேண்டிய வேட்கையில் மட்டுமே நாட்டமும், கும்பி நிரப்பும் பிழைப்புக்கும், மேனியை ஒரு மேடையாக உபயோகித்து, மனம்போனபோக்கில் காரியங்களையும் செய்து, மேலாக

• அதே மேனியை ’’வெண்ணிறம், கருநிறம்’’ என பாகுபடுத்தி,

• உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனவும்,

• மக்களுக்குள் ’’என் நாடு, என் இனம், உன் நாடு உன் இனம்’’ என வித்தியாசம் பாராட்டி,

• எவரிடமும் குற்றங்குறைகளைக் கண்டுபிடித்து, அல்லது புதிதாகத் தோற்றுவித்து,

• மற்றொரை அடிமைப்படுத்தி, இதற்கும் அவர்களுடைய புனித சமய நுல் களிலிருந்து மேற்கோள்காட்டி சுய ஆதாயம் கருதி வாழ எண்ணம் கொண்டு,

• வாழ வேண்டியவர், வெட்டப்பட வேண்டியவர் எனும் பாகுபடுபடுத்தி, கட்டாயப் போர் என இவைகளுக்கும் அவர்களுடைய புனித சமய நுல்களிலிருந்து மேற்கோள்காட்டி,---

ஆகிய இவைகள் போன்ற கருத்துக்களைக் கொண்டுள்ளனரோ, அவர்களையும் ’ஆரியரில்லாதோர்’ எனக் கூறலாம்.

சிலபிறவிகள், ஹிந்துக்களின் பெற்றோருக்கு பிறந்துவிட்டதால், தாங்களும் ஹிந்துக்கள் என பெயரளவில் இருந்தாலும், வேறெவராக இருப்பினும் சரி, ’’ஹிந்து-வேத நன்நெறி’’ எனும் அளவுகோலுக்கு புறம்பாக இயங்கினால், அவர்களையும் ’ஆரியரில்லாதோர்’ எனக் கட்டாயமாக் கூறிவிடத்தான் வேண்டும். அதனால்தான், வேத நன்நெறி எனும் அளவுகோலில், நம்பத்தகுந்த ஆன்மீக அறிவொழுக்கப் பயிற்சிகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டிய அவசியத்தை, இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம்; உணர்கிறோம்.

எனவே, ’ஆரியர்’ எனும் சொல்லுக்கு, வாழும் வகையை அறிந்தோர் என மற்றொரு சுருக்கமான, பொருள் கூறலாம். அதாவது, ஹிந்து சமய ஆன்மீகம், எனும் மிக வலிமை மிக்க, விசாலமான, எந்த தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் திறனுடைய, உறுதி குலையாத அஸ்திவாரத்தின் மீது, எழுப்பப்பட்ட நன்நெறியில், சமூகத்திலுள்ள ஒவ்வொருவரின் மன உணர்வு நிலையை முன்னர் இருந்த நிலையிலிருந்து மேலும் ஏற்றமடைய வைப்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு வாழும் வழி எனவும் கூறலாம். அதாவது,

• ஆன்மீகத் துறையில் நம் ஒவ்வொருவரையும் மெய்யறிவின் மூலத்தைத் தத்ரூபமாக அறிந்தவராக ஆக்கிவிடவும், நம் வாழ்வின் உள்நோக்கத்தை உணர்ந்து, நம் வாழ்க்கையையும், தற்கட்டுப்பாடுடன் வைத்துக் கொண்டு, இறையை உணர்ந்த நிலையில் வாழ்நாள் முழுதும் வாழ்வற்கு துணைபுரிவது என சற்று விவரமாகப் பொருள் கூறலாம். மேலாக

• இம்மெய்யறிவு நம் ஒவ்வொருவருக்குள் உறைந்திருக்கும் இறையைக் கண்டுணர்வது எனவும் ஆகிவிடுகிறது. மேலும்,

• வீரியம் வாய்ந்த தெய்வத்தன்மையே, படைக்கப்பட்ட ஒவ்வொன்றிலும் ஊடுறுவிப் பரவி இருத்தலையும், நாமெல்லோரும் ஆன்மீக ஆற்றலையே தெளிவாக வெளிப்படுத்திக் காட்டுகிற, [நம் எல்லோருக்கும் தகப்பனான] இறைவனுடைய பிரதிபிம்பம் (உருவச் சாயல்) எனவும் தெளிவாகக் உணர்த்துகிறது. மேலும்,

• இவ்வாறாக, ஒவ்வொருவரும் தனித்தனியாக உணர்ந்துகொண்டு, அடுத்தவர்களையும் மேற்கூறிய உண்மைகளை அறியச் செய்வதுமாகும். இவ்வாறு மற்றொருக்கு உதவி செய்தல் என்பதே, தனக்குத்தானே உதவி செய்து கொள்வதற்கு சமமாகும் என்பதை நம் எல்லோருக்குமே உணரவும் வைத்துவிடும்.

• இவ்வாறாக, இறைவனை ‘பரமாத்மா’ எனவும், அல்லது மிக ”உயர்ந்த / உயர்வான ஆன்மா” என்றும், அவ்விறையே, நம் ஒவ்வொருவருள் உறைந்திருக்கிறார், என புலனுணர்வு வாயிலாக உணர்தலை நாம் ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே உண்டாகிவிடுகிறது.

மேற்கூறியவை யாவும், எங்கும் நிறைந்த இறைவனின் மீது நம் ஒவ்வொருவருக்கும் இயற்கையாகவே நம்பிக்கையை உண்டாக்கி, மேலும் ஊக்குவைத்து, இன்னும் அதிகரித்து விடுகிறது. இந்நம்பிக்கையும், மிகத்தெளிவுற்ற இவ்வுணர்வும் நம் ஒவ்வொருவரித்திலும், அப்பரம்பொருளே முக்கிய மையம் கொண்டுள்ளார் என உணர்த்தி, நாமெலோரும் மரித்த பின், நமது நிரந்தர இடமான, முடிவில்லாது எங்கும் எதிலும் நிறைந்த, எல்லையற்ற, ஆதியந்தமில்லாத, இறைவனிடமே திரும்பி, ஒன்றாகிவிடுவதையும் நமக்கு உணர்த்துகிறது. இதுதான் வேதவழி வாழ்க்கைப் பாணியின் (goal of the Vedic lifestyle) மிக முக்கிய நோக்கமாகும். உலகாயத ’பூத உடல்’ எனும் வாழ்வின் மனக்கருத்திலிருந்து அல்லது நம் பிறவிப்பணியிலிருந்து நம்முடைய உடலை விடுவித்துக் கொண்டபின், ’நான்’, ’நீ’ என்றோ உண்மையில் யார், எனும் கேள்விக்கே இடமில்லை. இவ்வாறான, உணர்வு நிலையை உண்டாக்க மனித சமூகத்திற்கு நல்ல வாய்ப்பை மனதார அளிப்பது தான் வேத நன்நெறியின் மிக முக்கிய உள்நோக்கமாக இருக்கிறது. இது தான் ஹிந்து நன்நெறியின் சாராம்சமாகும்.

(தொடரும்)




நன்றி :thinnai.com 
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2
»  ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2 (2)
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி - 3
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum