இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4 (1)

Go down

 ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4 (1) Empty ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4 (1)

Post by ஆனந்தபைரவர் Tue Aug 31, 2010 4:05 pm

ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் நாம் நான்கு செயற்களங்களாக்கி: (ஆச்ரமங்களாக்கி)

1. பிரும்மசர்ய ஆச்ரமம்: கல்வி பயிலும், பள்ளிப் பருவம்

2. கிருஹஸ்த ஆச்ரமம்: மணமாகி, குடும்ப பாரத்தை ஏற்று தம் மக்களுக்கு நல் வாழ்வு அமைத்துக் கொள்ள வழிகாட்டுதல்

3. வானப்ரஸ்த ஆச்ரமம்: வாழ்க்கைப்பணியிலிருந்து, அதாவது மண வாழ்க்கைப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்று, சம்சார பந்தத்தை அவிழ்த்துக்கொண்டு,

4. சன்யாச ஆச்ரமம்: இச்சமயத்தில் மிக வயதாகிவிட்டதால், உலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டு, இனி வானேறும் வாழ்விற்கு வேண்டிய ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டு, இறைவனையே நாட அதற்கு வேண்டிவன தயார் செய்துகொள்ளும் பகுதி

இவ்வாறாக, அறிவியல் பாணியில் நம் பணிகளை எவ்வாறு நன்கு வகுத்துக் கொள்கிறோமோ, அவ்வாறே, மானிடப்பிறவியை வீணாக்கி விடாமல், உயிர் வாழ்வதற்கும் உட்கருத்து உண்டென இன்நான்கு ஆச்ரம ஒழுங்கு முறைகளால், ”பொருளிலாற்கு இவ்வுலகம் இல்லை, அருளிலற்கு அவ்வுலகம் இல்லை” என்பதற்கிணங்க, சம நிலையில் உலகாயதத்தில் பொருளீட்டவும், பிறகு ஆன்மீகத்திலும் வாழ்க்கைப் பாணிகளை சரியானவாறு அமைத்துக்கொள்ளவும் வேத நெறிகள் வாயிலாக நமக்கு வழி கிடைக்கிறது.

13, உலகிலுள்ள யாவரும், எவ்வித வேறுபாடின்றி, ஹிந்துவாகலாம், வேத வழிகளைப் பின்பற்றலாம், அவ்வழி போதனைகளால் விளையும் நன்மைகளை தங்கு தடையின்றி அனுபவிக்கலாம்.

வாழ்க்கையில், ஒருவர் ஏழையாகவோ, செல்வந்தராகவோ, படித்தவரானாலும் அல்லது படிப்பறிவில்லாதவரானாலும், ஆணானாலும் பெண்ணானாலும், ஆக யாவரும் வேத பேதனைகளில் முழுமையாகவோ அல்லது சிற்றளவிலாவது தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இதனால், பலவித ஆதாயங்களைப் பெறலாம். யாருக்காவது ஆரோக்கியமாக, மன நிறைவுடன், அமைதியான நிலையில், ஆன்மீகத்தில் முன்பு இருந்தது போலல்லாமல் – அறியாமையை அகற்றி, தவறான நம்பிக்கை களிலிருந்து விடுபட்டு களிப்புடன் வாழவேண்டுமானால், மேற்கூறியவைகள் அனைத்துமே நீக்கமற வேதவழியே அளிக்க வல்லது.

வேத வழியைப் பின்பற்றுபவர் இந்தியராகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர் மேலை நாட்டைச் சேர்ந்தவராகக் கூட இருக்கலாம். எப்பிரிவிலோ, எச்சமயத்திலுள்ளோராக எங்கும் இருப்பினும், வேத போதனைகளைத் தன் வாழ்க்கையில் மேற்கொண்டு, தன்னுடன் வேத வழியை இணைத்துக் கொண்டு விட்டால், வேத வழியால் கிடைக்கும் அநேக நன்மைகளால் தாராளமாகப் பயனடையலாம். இவ்வாறு வேத வழியில் தன்னை இணைத்துக் கொண்டவுடன் மேலை நாட்டவர் என இனத்தாலும் நிறத்தாலும், மொழியாலும், அநேக வேற்றுமைகள் கொண்டிருந்தபோதிலும், இவைகளால் சற்றும் பேதமில்லாது, ஒவ்வொருவரும் இறைவனால் படைக்கப்பட்ட மற்றொரு ஆத்மா என கருதப்பட்டு, இவ்வழி போதனைகளில் உள்ளவைகள் அனைத்தையும், பெற்றுக் கொள்ள எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. ஒன்றே ஒன்று தேவை அதாவது எண்ணம், சொல் செயல் ஆகியவைகளில், நேர்மை (அந்தரங்க சுத்தி) வேண்டும். அவ்வளவே தான். வேறொன்றும் தேவை இல்லை. அந்தரங்க சுத்தி தான் தூய்மையின் சாரம். இவைகள் ஒருவருக்கு இருந்துவிட்டால், அவருக்கு வேதவழியில் உறுதிப்பாட்டுடன் மென்மேலும் முன்னேற்றம் அடைய, தடையேதுமில்லை, மேலும் அவர் நோக்கமும் கண்டிப்பாக ஈடேரும்.

சனாதன தர்மம் என்பதே ஆத்மாவின் ஆதியந்தமில்லாத, (நிரந்தரமான, அழிவில்லாத) இயல்பாகும். உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவராசியும் இறையின் துடிப்பால் (துகள்) இயங்கும் ஆத்மா தான். அதாவது, ஆண்டவனின் சிற்றுருவாக்கப்பட்ட அவருடைய மறு வ / ப டிவமே. ஆம்! இதில் எல்லாமே அடக்கம். ஆகவே, ஒருவருடைய தற்போதைய (உயிருடன் இருக்கும்) இடம் / காலம் தற்காலிகமானாலும், ஆன்மீகத்தில் மெய்யாகவே முன்னேற்றம் காண முடியும்.

14. உலகிலுள்ள எல்லா சமயங்களூம் உண்மையே, அல்லது உண்மையின் பாகங்களே,’ மேலும், இச் சமயங்கள்,’பேறின்பப் பேறு’ பெற செல்வழி காட்ட வல்லது என வேதவழி கருதுகிறது.

மற்ற சமயங்களை வேறுபடுத்தி, வேண்டுமென்றே வாதத்திற்கே இடமற்றவாறு, காரண காரியங்களில்லாமல் பழி சுமர்த்தி, அவைகளை அடியோடு வெறுத்து, ஒதுக்கி, ஒழித்துவிட, வேத வழி, கனவிலும் கூட நினைக்காது. நம்பத்தகுந்த எல்லா சமயங்களும், கடவுளைப்பற்றி தங்கள் உள் உணர்வு நிலையை நன்குணர்த்திக் கொள்ள, தம் சீடர்களுக்கும், ஏனைய மானிட சமூகங்களுக்கும், நன்கு போதிக்கும் ஆற்றல் கொண்டவை என்றே வேதவழி கருதுவதால், இறையைப் பற்றி அறிந்து கொள்ள, ’வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பது’ எனும் மிகச் சிறப்பான வழியை, மனித சமூகத்திற்கு ஹிந்து சமயம் தெரிவிக்கிறது. இதனால் தான், ஹிந்துக்கள் எவருடனும் ஒருங்கிணைவார்கள். அவர்களும் மற்ற சமூகங்களுடன் சமாதானமாக சக-வாழ்வு (co-exist) வாழ்கிறார்கள், என்றும் வாழ்வார்கள். உதாரணம்: இன்று கூட ஹிந்துக்களுடன், பௌத்த, ஜைன, சீக்கிய, மதத்தவர் எல்லாரும் கூடி அமைதியுடன் வாழ்வதைக் கண்கூடாகக் காண்கிறோமல்லவா!!. ஆனால், அதிகாரத் தோரணை மிக்க, கொள்கைகளில் பிடிவாதமாக ஒருதலையாய் வற்புறுத்திக் கூறும் ஏனைய மதத்தவருடன் கலந்து வாழும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டால், அங்குதான் குழப்பம், கிளர்ச்சி, தொல்லை, என அமைதியைக் குலைக்கும் எல்லா மன வேதனைகளும் கணக்கற்று தனக்குத் தானே உடனுக்குடன் உண்டாகிவிடுகின்றன. உண்டாக்கப்படுகின்றன என்றே தோன்றுகிறது. அப்படி உண்டாக்கப்படு கின்றன என்றால் யாரால்? காரணத்தைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். பிடிவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ள மதங்களுக்கு, ’’வேற்றுமையில் உண்மை’’யைக் காண்பது எனும் எண்ணத்திற்கே, இடமில்லை. இவர்களுக்கு, கீழ்க்காணும் இவ்விரண்டில் ஒன்றை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியாக வேண்டும்.

1. (முதல்), ஹிந்துக்களும், இவர்கள் போன்ற மதத்தவர்களும், கொள்கைகளில் பிடிவாதமாக உள்ள சமயத்தில் சேர்ந்தாக வேண்டும்.

2. (இரண்டாவதாக), முதலில் கூறுவதை ஏற்க மறுத்து விட்டால், அவர்களை உயிருடன் வாழ அனுமதிக்க முடியாது. இச்சமய நூல்கள் வாயிலாகப் பிரத்யேகமாகச் சொன்னவாறு தங்கள் சமயத்தில் சேர மறுப்போரை அழித்தாக வேண்டும். அவ்வளவே தான்.

இதனால், கொலைகளில் குறியாக இருக்கும் குறுகிய மனத்தால், உலகில் மற்றவர்களையும் தங்கள் சமயத்தவராக ஆக்கிவிட முழு மூச்சுடன் ஈடுபடுகிறார்கள். இன்னும் மிகத் தெளிவாகச் சொன்னால், மற்றோரையும் தங்களைப் போல இவர்களைச் சேர்ந்த சமயக் கொள்கைகளில் பிடிவாதமாக ஈடுபட, வலுக் கட்டாயமாக மத மாற்றம் செய்கிறார்கள். இதன்படி, மற்ற சமயங்களைச் சேர்ந்தவர்களுடைய உணர்வுகளைப் நேரிடையாகப் புண்படுத்துவதாக அமைந்தாலும் இச்சமயத்தோருக்கு எவ்வித மன உறுத்தல் என்பதே கொஞ்சமும் கிடையாது. ஏனெனில் இவர்கள் சமய போதனை அப்படி இருக்கிறது.

கடுமை மிக்க, தீவிரவாத எண்ணங்கொண்ட இயக்கங்களாலும், சில மதங்களாலும், பிறர் மீது ஆதிக்கம் செலுத்தவும், அவர்களைக் கட்டாய மத மாற்றம் செய்யும் கெடுபிடி நடவடிக்கைகள் நடக்காமல் இருந்தால், உலகமே, சாந்தி நிலவி என்றும் எங்கும் உண்மையான, பேரின்ப மயமான, கலப்பற்ற உவகையுடன், சொர்க்க பூமியாக ஆக்க முடியும். உலகில் அமைதியைக் கெடுப்பது, அமைதியை விரும்பாத, இந்த கூறுகெட்ட மதங்களே, இயக்கங்களே தான், இப்படிக் கூறுவதில் எனக்கு எவ்வித சங்கோசமும் சந்தேகம் இல்லை.

இக்காரணங்களுக்காகக் தான், அதாவது மற்ற சமயத்தைச் சேர்ந்தவர்களைக், கட்டாயப்படுத்தி, மதமாற்றம் செய்யும், மிக முக்கியமாக, கிருஸ்தவ, இஸ்லாமிய, இரு சமயத்தைச் சேர்ந்தவர்களால் தான், உலகெங்கும் கடந்த பல நூற்றாண்டுகளாக, படுகொலைகள், குருதி சிந்துதல், சித்திரவதை முதலியன, நாள்தோறும் அடிக்கடி நடக்கின்றன. உலகில் எங்காவது குழப்பம், வன்முறைகள், தீவிரவாதம் என்றால், இவைகளுக்கு ஆரம்பிக்குமிடம் ஆதிக்க வெறிக் கொள்கைகளைக் கொண்ட மதங்களே, அல்லது இயக்கங்களே. இவ்வியக்கங்களில் கடவுள் நம்பிக்கை இல்லாத சர்வாதிகார எண்ணம் கொண்ட எந்த இயக்கங்களையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம். கணிக்கப்பட்ட இவ்வறிவிப்பு மிக சரியானதே. சற்று சிந்தியுங்கள் புரியும்.

தங்கள் சமயங்களைப் பற்றி எவ்வளவு தான் வீம்புரை செய்து கொண்டாலும், கீழ்க்கண்டவற்றை தங்கள் சமயத்தோருக்கு உணர்த்தத் தவறியதே இவ்வளவு சீரழிவுக்கும் முழு காரணங்கள்:

1. தங்கள் சீடர்களுக்கு கடவுளின் உண்மையான இயல்புகளையும்,

2. அக்கடவுளின் சிறு சுடரொளி, (spark) நம் ஒவ்வொருவரிடம் கூட உள்ளது,

என உணர்த்தத் தவறியதே. ஆக, கடவுளின் பணித்திட்டங்களுக்கு நேர் மாறாக இவர்கள் காரியங்களைச் செய்த வண்ணம் இருப்பதால், இவர்களை மற்றவர்களுடன் ஒருங்கிணைக்கவே முடியாது, இவர்களுக்கும், உண்மைக் கடவுளுக்கும் எவ்வித சம்பந்தமில்லையென தங்கள் நடத்தையால், தனியாகவும் கூட்டாகவும் அடையாளங்காட்டிக் கொண்டு, வெளியிலும் அப்பட்டமாகக் காட்டியும் விடுகிறார்கள். இதைத் தவிர மற்ற மதங்களிலுள்ளவர்கள் மீது, மேலெழுந்தவாறாக உள்ள மிக அற்ப வித்தியாசங்களைக் கூட மிகைப்படுத்திச் செல்லிச் சொல்லி, பிடிவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ள இவர்கள் மத சீடர்களுக்கும், அஹிம்சை தத்துவங்களில் நம்பிக்கை கொண்ட ஏனைய மதத்தோரைச் சார்ந்தவர்களுக்கும் ஒன்றுக்கொன்றுடன் என்றுமே ஒவ்வாமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் தான், சனாதன தர்மம் என்பது ஒரு மதமல்ல, கட்டுக்கோப்புள்ள ஒழுக்க நெறிகளைச் சாந்த ஒரு வாழும் வழி, என ஆன்றோர் கூறுவர். இதனால் தான் மற்ற மதங்களை விடுத்து, இந்த சனாதன தர்மம் ஒன்றுதான் உலகில் எல்லாருக்கும், நல்வாழ்வு வாழ வழி கண்பித்துக்கொண்டு, ஈடு இணையற்று, விளங்குகிறது. ’வேத வழிகளே, எல்லோருக்கும், ஆன்மீகத்தில் மிக உன்னத அறிவை அளிக்கவல்லது’ எனும் நல்ல கொள்கைகளுக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டுச் சின்னமாகத் திகழ்கிறது.

அடிப்படையில், லோகாயதம் என்பதையே தன் மூலாதாரக் கொள்கை என கொள்ளும் அல்லது உள் உணர்வுகளில் ஆழமற்ற சமயங்களைக் காட்டிலும், (பொருள், அதிகாரம் முதலியவைகளில் மட்டுமே நாட்டம் கொண்ட சமயங்களைக் காட்டிலும்) சனாதன தர்மம் ஒன்றில் தான் நம் ஒவ்வொருவருக்கும், நாம் உண்மையில் யார் என்பதை உணர்த்துகிறது. ஆகையால், உலகில் எந்த மதத்தைச் சார்ந்த யாவரும், வேத வழியை ஒரு நல் வழியென பயன்படுத்தி, தன் நிலையை உணர்ந்து கொண்டால், பிரபஞ்சம், கடவுளின் இயல்பான ஆன்மீக அன்பு, மனித நேயம், ஆகியவற்றில், முன்பிருந்த அறிவைக் காட்டிலும், இன்னும் அதிகரித்துக் கொள்ள இயலும்.

15. வேத வழியில், மனிதர்களுக்குப் பொதுவான ஒரே கடவுளை, மத ரீதியில் வேறுபடுத்தித் தனித் தனியாக காட்டுவதில்லை.

இயல்பாக, வேத கலாச்சாரமே மனித இனம் முழுமைக்கும் உரியதாக இருப்பதால், கடவுளை ஒரு சமூகத்திற்கே உரியது அல்லது அக்கடவுள் தேர்ந்தெடுத்த ஒரு சமூகத்திற்குத் தான் அக்கடவுள் உரியவர் என்று சொந்தங் கொண்டாடும் கருத்தை முன்வைப்பதில்லை. வேத வழியில், கடவுள் தான் படைத்த எல்லா உயிரினத்தையும், எவ்வித பாகுபாடின்றி, அன்புடன் ஒரே நோக்குடன் நேசிக்கிறார் எனும் கருத்தைப் பறை சாற்றுகிறது.

இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, எல்லோருக்கும் பொதுவான கடவுள் தன் அன்பைப் பாகுபாடின்றி உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியாகப் பொழிவதால், பிறகு நாம் எல்லோருமே (அவர் நம் மீது செலுத்தும் அதே அன்பைப்போலவே), நம்மைப்போன்ற பிறர் மீதும் நம் அன்பை ஏன் செலுத்தக் கூடாது? ஒருமுகப்பான்மையுடன், தன்னிடம் அன்பு செலுத்தும் பக்தனை, அவன் எந்த இனத்தைச் சேர்ந்தவரானாலும், எந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவரானாலும், அப்பிறவி மனிடப் பிறவியாக இல்லாதிருந்தாலும் சரி, (ஆடு, மாடு, புழு பூச்சி உள்பட) எல்லார் மீதும் தன் அன்பைப் பொழிந்து அருள்கிறார். தான் படைத்தவைகளுள் எதையும் எவரையும் அவர் வெறுப்பதில்லை. வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. பிரிப்பதில்லை. பிரத்யேகமாகச் சிலருக்கு மட்டுமே சலுகை காட்டுவதும் இல்லை. அவருக்கு எல்லோரிடமும் தன் அன்பை ஒருமுகமாகக் காட்டத்தான் தெரியும். இம்மாதிரிதான் எல்லா மதத்திற்கும் பொதுவான ஒரே கடவுள் தன்னைக் காட்டிக்கொள்கிறார்.

அப்படிக்காட்டாத அல்லது காட்டிக்கொள்ள விரும்பாத எந்த மதமும் மதமே அல்ல. அது உலகத்தில் இன்றுள்ள அரசியல் ஆதாயத்திற்கு நிறுவப்படும் இயக்கம் போன்றவைகளே!!

இதனால் தான் கடவுளைப்பற்றி இவ்வாறு கூறுவதுண்டு:

• எல்லையற்ற சக்தி படைத்தவர் - Omnipotent

• எல்லாம் அறிந்தவர் - Omnicient

• எங்கும் நிறைந்தவர் - Omnipresent

இவ்வாறு எல்லாரும் கடவுளைப்பற்றிய, விழிப்புள்ள நிலையை, அதாவது முன்னுணர்வை அடைந்துவிட்டால், அப்படிப்பட்ட பக்குவப்பட்ட மனிதர், கடவுளை எங்கும் எதிலும் எவரிடத்தும், எல்லா சமயங்களிலும் காண்பார்கள். இவ்வாறு பதம்பட்ட முன்னுணர்வுடன் நம்மை கடவுளிடம் ஆழ்த்திவிடும். இது தான் வேத வழி, என வேத நூல்கள் ஒருமுகமாகக் கூறுகின்றன.

16. மேற்கூறிய காரணங்களுக்காகத் தான், வேத வழியை பின்பற்றும், ஹிந்துக்கள், எல்லா சமயங்களுக்கும் ஈடு கொடுத்து, மற்ற எல்லா மதங்களின் நடுவிலும் அமைதியுடன் வாழ முடியும்.

பொதுவாக ஹிந்துக்கள, அல்லது ஆன்மீகத்தில் பக்குவப்பட்ட மற்ற மதத்தவர் யாவரும், கடவுளுடைய அநேக தோற்ற, பண்பு வேறுபாடுகளைப் பற்றி நன்கு உணர்ந்தவர்களாதலால், தாங்கள் சாராத மற்ற சமயங்களிலும், அம்மாதிரியே, கடவுளை யதார்த்தமாகக் காண்கிறார்கள். இப்பேற்பட்டவர்களுக்கு மற்ற எம்மதத்தை சேர்ந்தவர்களுடன் எவ்வித கொள்கைப் பிணக்கு/ சச்சரவுகளுக்கு வாய்ப்பு இருப்பதில்லை. கிருஸ்தவமத போதகர், தன் மதபோதனைகளை ஆரம்பிக்கும் போதே, மனிதர்களைப் பார்த்து, ’பாவிகளே’ என்றுதான் ஆரம்பிக்கிறார். பாவிகளாக இருப்பதால், நரகத்தில் உழலப் போவதாகவும் இவரே கடவுள் போல தீர்ப்பும் அளித்து விடுகிறார். ஆனால், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தாங்கள் சொல்லும் மதத்திற்கு உடனுக்குடன் மதமாற்றம செய்து கொள்ள வேண்டுமென நிர்பந்திக்கிறார். (மனித அறுவடை செய்கிறார்). அங்கு தான் சச்சரவு ஆரம்பிக்கிறது. எதுவரை இக்கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்களும், ஆக இருவரும் ஹிந்துக்களையோ, அல்லது இச்சமயம்போன்ற மற்ற மதங்களையும் மதமாற்றம் செய்ய யத்தனிக்காது இருக்கிறார்களோ, அதுவரை எங்கும் அமைதி நிலவுகிறது.

ஹிந்துக்கள் தங்கள் கடவுளை வெவ்வேறு உருவங்களில் ஏற்றுக்கொண்டு தொழுகிறார்கள். வெறுப்பைக் கக்காத அல்லது காண்பிக்காத கடவுளை உண்மையென ஒப்புக்கொள்வார்கள். இதில், ஹிந்துக்களுக்கு என்ன இடர்பாடு இருக்க முடியும்? அப்படியே, சொல்லிலும் செயலிலும் நேர்மையாக, உண்மையான கடவுளின் மெய்யான தன்மையை உணர்ந்த எந்த முதிர்ந்த கிருஸ்தவரும், ஹிந்துவுடன் கூடி நல்ல தன்மையுடன் வாழ முடியும். அஃதே போல, ஒரு மனப்பக்குவமடைந்த முஸ்லிம், சீக்கியரிடமோ அல்லது பௌத்த மதத்தவருடன், எச்சமயத்தைச் சார்ந்தவர்களுடனும் (வெறுப்பைக் கக்காது அல்லது காண்பிக்காது இருந்தால்) கூடி வாழ முடியும்.

இதுதான் சமய தத்துவங்களை வாழ்க்கையில் கடைபிடிக்கும் நல்லோருடைய மனப்பாங்கின் சாரம். இதில்தான் நம்முடைய முழு கவனமும் செலுத்த வேண்டும்

மத அடிப்படையின் (கடவுளை அறிதல்) எனும் கொள்கைய நன்கு உணராத ’‘மனித உருவத்தில் மிருகங்களால் தான், சிறு மன வேற்றுமை ஏற்பட்டு விட்டாலும், திமு திமு என மற்ற சமயத்தாருடன் காரணமின்றி வெறிமாடுபோல முட்ட வருவார்கள். ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைந்தவர்களாலும், எந்த நெருக்கடி நிலையிலும் மனம் மாறாத உளப்பாங்கு கொண்டவர்களுக்குள் எவ்வித சங்கடங்கள் நிகழ வாய்ப்பில்லை. எவருக்கு ஆன்மீகத்திலும், கடவுளைப்பற்றிய முன்னுணர்வு இல்லையோ, அவர்கள் தான் தங்கள் குற்றம் சாட்டும் விரல்களை எக்காலும் பிறர் மீது நீட்டி முழக்கிய வண்ணமே, கிடப்பார்கள.

[[[என்றோ நான் படித்த ஒரு சுலோகம் நினைவுக்கு வருகிறது. இதை எழுதிய ஆன்றோர் பெயர் எனக்கு நினைவில்லை. ஆனால், இதில், அர்த்தம் மிகுந்து உள்ளது.

अलं भारतीया: मतानां विभेदै: अलं देश भेदेन वैरेण चालं (च अलं) ।

इयं शाश्वतो धर्म एको धरायां न संभाव्यते धर्म तत्वेषु भेद: ॥

அலம், பாரதீயா: மதானாம் விபேதை: அலம் தேச பேதேன வைரேண ச அலம் |

இயம் சாச்வதோ தர்ம ஏகோ தராயாம், ந சம்பாவ்யதே தர்ம தத்வேஷு பேத: ||

பாரத நாட்டு மக்களே! சமய வேறுபாடுகளாலும், பிராந்திய வேற்றுமைகளாலும், கோபதாபங் களாலும் விளையும் விபரீதங்கள் யாவுமே போதும் போதும்!. தர்ம-தத்துவத்தை (இறையை) அடிப்படை யாகக் கொண்ட (மத) சமயக்கோட்பாடுகள் யாவுமே, ஒரே ஒன்றைப் (இறையைப்) பற்றித்தான் நிரந்தரமாகக் கூறுகின்றன, அதாவது நல்ல சமயங்களுக்குள் வேறுபாடுகள் எழ, எந்த வாய்ப்பும் கிடையவே கிடையாது; இக்கருத்து மிகவும் பொருள் பொதிந்தது. சிந்திக்கத் தக்கது.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி - 3
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி - 3(3)
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 5
»  ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 5 (1)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum