இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


உடல், மனம், ஆன்மாவை லயமாக்கும் பனை மரம்!

Go down

உடல், மனம், ஆன்மாவை லயமாக்கும் பனை மரம்! Empty உடல், மனம், ஆன்மாவை லயமாக்கும் பனை மரம்!

Post by ஆனந்தபைரவர் Thu Dec 16, 2010 10:06 pm

சித்த மருத்துவ நிபுணர் அருண் சின்னையா


ஒருவரின் ஆத்ம மேம்பாடு பனைபோல் உயர்ந்த நிலைக்கு எப்பொழுது செல்கி றதோ அப்பொழுது தான் அவர் சிவ பெரு மானின் முழு அருளை யும் பெறுகிறார். சிவனின் அருட் பார்வைக்கு உட்பட்ட வர் சகல சௌகரியங் களையும் பெறுகிறார். ஒருவரின் நல்ல உடற்பாங்கே அவ ருக்கு நல்ல மனதிடத்தையும் மனவளத்தையும் தருகிறது. நல்ல மனவளம் பெற்றவரால் மட்டுமே ஆன்மா சார்ந்த விஷயங்களை அலசிப் பார்க்கவும் அனு பவிக்கவும் இயலும்.

சிவனின் பேரருள் பெற்று பேரானந்தப் பெருவாழ்வு வாழ்ந்திட, பெருமானின் அருள் பெற்ற பனை மரங்களை வலம் வந்து வணங்கு வோம். விழுப்புரத்திலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பனையபுரம் என்னும் ஊரில் எம்பெருமான் சதுரலிங்கத் தோற்றத்தில் காட்சி தருகிறார். பனைமரங் கள் அடர்ந்த இப்பகுதி யில் தோன்றிய இறைவன் பனங்காட்டீசன் என அழைக்கப்படுகிறார். கோவில் வளாகத்தில் ஆண் பனையும் பெண் பனையும் இணைந்து அழகுறக் காட்சி தரு கிறது. இவ்வாறு பனங் காட்டீசன் பேரருள் பெற்ற பனையினை மருந்தாக்கி உடல் நலம் பெற்று ஆன்ம மேம்பாடு அடைய முயல்வோம்.

ஆண்மைக்கு அருமருந்து

மானுட சுழற்சியில் குழந்தைப்பேறு என்பதே முழுமையான வாழ்க்கையின் முற்றுப் புள்ளியாய் அமைகிறது. உயிரை உண்டுபண்ணக் கூடிய உன்னத சக்தியைத் தன்னகத்தே கொண் டுள்ளதே விந்தெனப்படுவது. நாத விந்தே சிவ சக்தியாய் உலகமெல்லாம் பரிணமித்துள்ளது. நாதவிந்துச் சேர்க்கையே குழந்தை உற்பத்தியாம்.

நாத விந்தினை முறைப்படுத்தும் நற்பாங்கினை எம்பெருமான் உறையும் பனைமரம் கொண்டுள்ளது. இனி நிலப் பனங்கிழங்கினை முறைப்படி மருந்தாக்கும் கலையை அறிவோம்.

மானுட விந்தில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் இருந்தாலும், கரு உருவாக ஒரு அணுவே போதும். கருமுட்டையை நெருங்கித் துளைத்து உட்செல்லும் விந்தணுவே கருவை உண்டாக்கும்.

ஓர் ஆண் மகன் தந்தையாகிட அவனுள் அணுவிருத்தி தாராளமாய் அமைந்திட வேண்டும். விந்தில் உயிரணுக்களை மிகைப்படுத்தும் சக்தி நிலப் பனங்கிழங்கிற்கு உண்டு.

நிலப் பனங்கிழங்கை மேல்தோல் மற்றும் நரம்புகளை நீக்கி உலர்த்தித் தூள் செய்து, அதற்கு சமஅளவு சர்க் கரை கூட்டி பத்திரப்படுத்தவும். இதில் ஒன்பது கிராம் வீதம் காலை- மாலை இருவேளையும் பாலுடன் கலந்து அருந்தி வர, விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, பத்து மாதங்களில் முத்தான குழந்தையைப் பெறலாம்.

வெட்டைச்சூடு தணிய...

உடம்பில் அளவுக்கதிகமான உஷ்ணம் காணப்பட்டால், பித்தம் மிகுந்து கண்ணெரிச்சல், கால், கைகள் மதமதப்பு போன்றவை உண்டாகி, உடம்பில் ரத்தம் சுண்டி பலவீனம் உண்டாகும்.

முன்சொன்னபடி நிலப் பனங் கிழங்கை உலர்த்தித் தூள் செய்து, காலை- மாலை இருவேளையும் ஆட்டுப்பாலுடன் கலந்து 21 நாட்கள் சாப்பிட, வெள்ளைப்படுதல் குண மாகும். மேலும் கன்னம் ஒட்டிக் குழி விழுதல், உடல் எடை குறைவு போன்ற குறைகள் மாயமாய் மறையும்.

வெண்குஷ்டம் விலக...

வெண் குஷ்டத்தை கர்மநோய்களில் ஒன்றாகவே சித்தர்கள் குறிப்பிடுகின்ற னர். நம் கர்மாக்கள் விலகி சுத்த ஆத்ம நிலையை அடைந்திடவே இப்பிறவி யைப் பெற்றுள்ளோம். எனவே வெண் குஷ்டத்திலிருந்து மீண்டிட அந்த சிவலிங்க மூர்த்தியைச் சரணடைந்து வேண்டினால், உங்களுக்கான வழியை அவரே தேடித் தருவார். வெண்குஷ்டத் திற்கு இறையருளிய மருந்தினை இயம்புகிறேன்; குறித்துக்கொள்ளுங்கள்.

நிலப் பனங்கிழங்கு, வெட்பாலை அரிசி, வெந்தயம், கருந்துளசி, மூங்கிலரிசி ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவுப் பொடியினைப் பசும்பாலில் கலந்து அதிகாலையில் சாப்பிட்டு வரவும். பனங் காட்டீசன் பேரருளால் வெண்குஷ்டம் மாறி (கர்மா விலகி) சுத்த தேகம் பெறலாம்.

வெண்குஷ்டம் முற்றிலும் மறைய மேற்சொன்ன மருந்துடன் வள்ளலார் அருளிய சுத்த சமரச சன்மார்க்க நியதிகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து வர வெண்குஷ்டம் முற்றிலும் விலகும்.

காச நோய் விலக...

சுத்தி செய்த நிலப் பனங்கிழங்கு 250 கிராமுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, ஓமம், ஜாதிக்காய், அக்ரகாரம், அதிமதுரம் ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் கலந்து தூள் செய்துகொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை- மாலை இருவேளையும் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, காசநோய் மற்றும் காச நோயினால் உண்டாகும் உடல் இளைப்பு போன்றவை மாயமாய் மறையும்.

சரும நோய்கள் விலக...

நிலப் பனங்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, ஆகாயக்கருடன் கிழங்கு, பால் முதுக்கன் கிழங்கு ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்துத் தூள் செய்து காலை- மாலை இருவேளையும் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வர, சரும நோய்கள் மற்றும் கரும்புள்ளிகள் விலகும்.

போகம் பெருக...

நிலப் பனங்கிழங்கு, சீந்தில் சர்க்கரை, பூனைக்காலி விதை, நெருஞ்சில், ஆலவிதை, அரசவிதை, பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, அக்ரூட், இலவம் பிசின், பாதாம் பிசின், முருங்கைப் பிசின், முருங்கை விதை, ஜாதிக்காய், அக்ரகாரம் ஆகியவற்றை வகைக்கு ஐம்பது கிராம் சேகரித்து, அவற்றை ஒன்றாக்கித் தூள் செய்து சலித்துப் பத்திரப்படுத்தவும். இதில் வேளைக்கு ஐந்து கிராம் வீதம் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டுவர, பிளிறும் யானையின் வலிவும் பந்தயக் குதிரையின் மதிநுட்பமும் ஒருங்கே பெற்று, கன்னியரைக் கவரும் கட்டிளங் காளையாய் பவனி வரலாம். அக்மார்க் ஆணழகனாய் மாறிட இதுவே அற்புத மருந்தாகும்.

புண்ணாற்றும் பதநீர்...

பனையிலிருந்து எடுக்கப்படும் பதநீர் உடல்புண், குடல்புண் அனைத்தையும் ஒருங்கே ஆற்றும் வல்லமை பெற்றது. கோடையில் தென்றலாய் பவனி வரும் பதநீரைப் பருகிடத் தயங்காதீர். சிவனருள் பெற்ற தீர்த்தமாகவே பதநீரைப் பாருங்கள்; பருகுங்கள்.

தூய பதநீரைப் பருகிட, வாய்ப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் போன்ற அனைத்தும் விலகும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், ஆண்களுக்கு உண்டாகும் குறிப்புண் போன்ற வியாதிகள் பத நீரால் தீரும்.

உடல் பருக்க...

பச்சரிசி, பனை வெல்லம், ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து கொழுக்கட்டை மாவு செய்து, பனையோலையில் வைத்துப் பக்குவமாய் வேக வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டுவர, இளைத்த உடல் பருக்கும்.

உடல் வலுவடைய...

பச்சரிசியையும் உளுந்தையும் சேர்த்து மாவாக்கிக் களி செய்து, பனை வெல்லத்தைப் பாகு செய்து களியுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, உடல் வலிமை உண்டாகும்.

நீர்க்கட்டு உடைய...

இளம் பனை நுங்குகளை ஐந்து அல்லது ஆறு எண்ணிக்கையில் சாப்பிட நீர்க்கட்டு, நீர்ச்சுருக்கு மறையும். அதேபோல் ஜவ்வரிசியை வேக வைத்து, அத்துடன் இள நுங்குகளைப் பிசைந்து சிறிது சர்க்கரை சேர்த்துச் சாப்பிட, வெட்டைச்சூடு, நீர் எரிச்சல் ஆகியன தீரும்.

கடுக்காயும் கருப்பட்டியும்...

நம் முன்னோர்களின் கட்டடக் கலையில் கடுக்காய் மற்றும் கருப்பட்டிக்கும் சிறப்புப் பங்கு உண்டு. சுண்ணாம்புடன் பால், இளநீர், கடுக்காய்த் தூள், கருப்பட்டி சேர்த்து நமது முன்னோர்கள் கட்டடம் எழுப்புவர். அது பல ஆண்டுகள் வண்மையுடன் இருக்கும்.

இதேபோல் கடுக்காய், பனை வெல்லம் இரண்டையும் ஆண்டுக்கணக்கில் உண்டு வருவீர்களானால் உங்கள் உடம்பு என்னும் கட்டடமும் ஒரு நூறாண்டாவது வண்மையுடன் இருக்கும்.

இந்துமதம் நமக்கு அறிவிக்கும் இறையுணர்வு என்பது, நமது அன்றாடப் பணிகள் மற்றும் தனி மனித ஒழுங்கின் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகிறது.

ஓரணு ஈரணுவாய்- இரண்டு நான்காய்- நான்கு பதினாறாய்ப் பல்கிப் பெருகி பல கோடி அணுவாகி, புல்லிலிருந்து பூண்டாகி, மரமாகி, மனிதனை அண்டிப்பிழைக்கும் விலங்காகி, கடைசியில் மனிதனாகி வீற்றிருக்கும் மனித இனமே!

நீங்கள் ஆத்ம மேம்பாடடைய எல்லாம் வல்ல பரம் பொருளே இன்றும் புல்லாய், பூண்டாய், மரமாய், விலங்குகளாய் இருந்து உங்களுக்கு இரையாகி, நீங்கள் இறைதேட கருவியாவதை மறந்துவிடாதீர்கள். ஆத்ம முக்திக்கு இதுவே பிறவி. இப்பிறவியை ஊழ்வினைக்கு உட்படுத்தாமல், எம்பெருமான் சிவபிரானைச் சரணடைந்து சிவனுறையும் பனையைத் தேடுங்கள்.

இதனால் உடல், மனம், ஆன்மா லயமாகும். பனங்காட்டீஸ்வரன் பாதம் பணிந்து நோயில்லா வாழ்வை வேண்டிப் பெறுவோம்.

நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum