Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
திருவருள் புரியும் குரு ஸ்தலம் திருக்காயாரோகணம்
Page 1 of 1
திருவருள் புரியும் குரு ஸ்தலம் திருக்காயாரோகணம்
தென்னிந்தியாவிலேயே குருபகவானைத் தனிக் கோவிலாகக் கொண்ட சிறப்புத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ள குருஷேத்திரம்.
மங்கலச் செல்வங்களை மாரியென வாரி வழங்குபவர் குருபகவான். தேவகுரு பதவிபெற்று திகழும் இவர், இத்தலத்தில் இருகரம் கூப்பித் தொழுவது கண்கொள்ளாக்காட்சி.
பிரகஸ்பதியாகிய வியாழ பகவான் இங்கு வந்து திருகாயாரோகணேசுவரரை வழிபட்டு, தேவகுரு என்ற பதவியைப் பெற்றார்.
முன்னொரு காலத்தில் விளரி என்னும் வண்டுகள் முழங்க, கொன்றைப் பூமாலை சூடிய சிவபெருமானை நினைத்து பூஜை செய்கிறார், வியாழ பகவான். பல தருமங்களை எடுத்துச் சொல்லி ஓதும் இவருக்கு நாக்கு தடித்து விடுகிறது. அந்த சூழ்நிலையில், இரு கைகளையும் தூக்கி வணங்கி நிற்கும் காட்சி இந்தக் கோவிலில் அமைந்துள்ளதை இப்போதும் காணலாம்.
அவரது பக்தியைக் கணடு மெச்சிய சிவபெருமான், "என்ன வரம் வேண்டும்? கேள்'' என்றார்.
"இங்குள்ள வேகவதி நதிக்கு தெற்கே உள்ள திருக்காயாரோகண தீர்த்தத்தில் வியாழக்கிழமைதோறும் உமது பாதக்கமலங்களைத் தரிசனம் செய்பவர்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும். அத்துடன், அவர்களுக்கு முக்தியும் நல்கி எந்நாளும் இங்கு இறைவியுடன் வீற்றிருக்க வேண்டும்'' என்று வேண்டுகிறார், வியாழ பகவான். அவர் கேட்ட வரத்தை தந்தருளினார், சிவபெருமான்.
செந்தாமரைப்பூவில் வீற்றிருந்து சிவபெருமானை லட்சுமி வில்வத்தால் அர்ச்சித்த திருத்தலமும் இதுதான். எமதர்மராஜன் வந்து பூஜித்த தலமும் இதுவே. உடனே, அவருக்கு சிவபெருமான் காட்சி தந்து, தென்திசைகோமான் என்ற பதவியை அளித்து அருள்புரிகிறார். எமன் வழிபட்ட எமலிங்கேசுவரர், தாயார் குளக் கரையின் மீது எழுந்தருளியுள்ளார். இந்தக் கோவில், பல்லவர் கால பாணியில் கட்டப்பட்டுள்ளது.
அமைப்பு
தமிழ்நாட்டில் காயாரோகணம் என்று அழைக்கப்படும் வகையில் 3 கோவில்கள் உள்ளன. அவை காஞ்சி, குடந்தை, நாகை.
இவற்றுள் காஞ்சி காயாரோகணம் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. குருபகவானுக்கு என்று இங்கே தனிக்கோவில் அமைந்துள்ளதுதான் அதற்கு காரணம்.
ஆலயத்திலுள்ள முருகப்பெருமான்
பஞ்சகோட்டத்துடன் கூடிய ஏகப்பிர காரத்தில், முருகப்பெருமான் சிலை 5 அடி உயரம் கொண்டு காணப்படுகிறது. அவர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவருடன் சைவ நாயன்மார்கள் நால்வர், ஆறு மகாவிரத லிங்கங்கள், அருகில் நாகபிரதிட்டையுடன் கற்பக விநாயகர், ஆறுமுகப்பெருமான், தாமரை தாங்கிய மகாலட்சுமி, நவக்கிரகம், சண்டிகேசுவரர், வைரவர், சூரியன், வியாழ பகவான் போன்றவர்களும் காட்சி தருகின்றனர்.
இங்கு தனிக்கோவில் கொண்டுள்ள குருபகவான், திருக்காயாரோகணேசுவரரை நோக் கிய வண்ணம் புன்முறுவலுடன் காட்சியளிக் கிறார்.
ஏகப்பிரகாரத்தின் வெறிப்புறச்சுவற்றில் கோராஜகேசரி வன்மன் குலோத்துங்கன் கல்வெட்டும், கர்ப்பக்கிரக வெளிச்சுவற்றின் பின்புறத்தில், விக்கிரம சோழனின் முற்றுப்பெறாத கல்வெட்டும் கோவில் பற்றிய செய்திகளை எடுத்துக்கூறுகின்றன.
இத்தலத்தின் மூலவர் திருக்காயாரோகணேசுவரர். இவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். தயார் கமலாம்பிகை. தலவிருட்சம் வில்வம். இங்குள்ள தீர்த்தம் குருவார தீர்த்தம் என்றும் லட்சுமி குண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
மஞ்சள் கரை துணி உடுத்தி, புஷ்பராகமணி அணிந்து மஞ்சள் நிற துணி தானம், கடலை தானிய தானம், குருவார விரதம் இருந்து இங்குள்ள குரு பகவானை வழிபட்டால் குருதோஷம் நீங்கி நலம் பெருகி நல்வாழ்வு பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்குச் செல்ல, காஞ்சிபுரத்தின் எல்லா பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது.
- சக்தி.யே.சரவணபெருமாள், காஞ்சிபுரம்.
----------------------------------------------------------
ஆலய விமானத்தோற்றம்
`திருக்காயாரோகணம்' - பெயர்க்காரணம்
காலச்சக்கரம் சுழல்கிறது. காலத்தின் முடிவில்... எல்லோரும் இறந்து போகிறார்கள். உலகில் நிலைபெற்றதாக நினைக்கும் பொருள் என்று எதுவுமே இல்லை. எங்கும் ஒரே நீர் பிரளயம்!
பிரம்ம-விஷ்ணுக்கள் லயமாக ஒடுங்கி வரும் காலத்தில் எல்லாம் வல்ல சிவபெருமான் அந்த இருவரையும் உற்பத்தியாக்கியபடியே, ஒடுங்கச் செய்து விடுகிறார். அவர்களை தமது திருமேனியில் ஏற்றிக் கொண்டு இத்தலத்தில் நர்த்தனம் ஆடுகிறார்.
அதனால்தான் இத்தலம் `திருக்காயாரோகணம்' என்று அழைக்கப்படுகிறது.
மங்கலச் செல்வங்களை மாரியென வாரி வழங்குபவர் குருபகவான். தேவகுரு பதவிபெற்று திகழும் இவர், இத்தலத்தில் இருகரம் கூப்பித் தொழுவது கண்கொள்ளாக்காட்சி.
பிரகஸ்பதியாகிய வியாழ பகவான் இங்கு வந்து திருகாயாரோகணேசுவரரை வழிபட்டு, தேவகுரு என்ற பதவியைப் பெற்றார்.
முன்னொரு காலத்தில் விளரி என்னும் வண்டுகள் முழங்க, கொன்றைப் பூமாலை சூடிய சிவபெருமானை நினைத்து பூஜை செய்கிறார், வியாழ பகவான். பல தருமங்களை எடுத்துச் சொல்லி ஓதும் இவருக்கு நாக்கு தடித்து விடுகிறது. அந்த சூழ்நிலையில், இரு கைகளையும் தூக்கி வணங்கி நிற்கும் காட்சி இந்தக் கோவிலில் அமைந்துள்ளதை இப்போதும் காணலாம்.
அவரது பக்தியைக் கணடு மெச்சிய சிவபெருமான், "என்ன வரம் வேண்டும்? கேள்'' என்றார்.
"இங்குள்ள வேகவதி நதிக்கு தெற்கே உள்ள திருக்காயாரோகண தீர்த்தத்தில் வியாழக்கிழமைதோறும் உமது பாதக்கமலங்களைத் தரிசனம் செய்பவர்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும். அத்துடன், அவர்களுக்கு முக்தியும் நல்கி எந்நாளும் இங்கு இறைவியுடன் வீற்றிருக்க வேண்டும்'' என்று வேண்டுகிறார், வியாழ பகவான். அவர் கேட்ட வரத்தை தந்தருளினார், சிவபெருமான்.
செந்தாமரைப்பூவில் வீற்றிருந்து சிவபெருமானை லட்சுமி வில்வத்தால் அர்ச்சித்த திருத்தலமும் இதுதான். எமதர்மராஜன் வந்து பூஜித்த தலமும் இதுவே. உடனே, அவருக்கு சிவபெருமான் காட்சி தந்து, தென்திசைகோமான் என்ற பதவியை அளித்து அருள்புரிகிறார். எமன் வழிபட்ட எமலிங்கேசுவரர், தாயார் குளக் கரையின் மீது எழுந்தருளியுள்ளார். இந்தக் கோவில், பல்லவர் கால பாணியில் கட்டப்பட்டுள்ளது.
அமைப்பு
தமிழ்நாட்டில் காயாரோகணம் என்று அழைக்கப்படும் வகையில் 3 கோவில்கள் உள்ளன. அவை காஞ்சி, குடந்தை, நாகை.
இவற்றுள் காஞ்சி காயாரோகணம் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. குருபகவானுக்கு என்று இங்கே தனிக்கோவில் அமைந்துள்ளதுதான் அதற்கு காரணம்.
ஆலயத்திலுள்ள முருகப்பெருமான்
பஞ்சகோட்டத்துடன் கூடிய ஏகப்பிர காரத்தில், முருகப்பெருமான் சிலை 5 அடி உயரம் கொண்டு காணப்படுகிறது. அவர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவருடன் சைவ நாயன்மார்கள் நால்வர், ஆறு மகாவிரத லிங்கங்கள், அருகில் நாகபிரதிட்டையுடன் கற்பக விநாயகர், ஆறுமுகப்பெருமான், தாமரை தாங்கிய மகாலட்சுமி, நவக்கிரகம், சண்டிகேசுவரர், வைரவர், சூரியன், வியாழ பகவான் போன்றவர்களும் காட்சி தருகின்றனர்.
இங்கு தனிக்கோவில் கொண்டுள்ள குருபகவான், திருக்காயாரோகணேசுவரரை நோக் கிய வண்ணம் புன்முறுவலுடன் காட்சியளிக் கிறார்.
ஏகப்பிரகாரத்தின் வெறிப்புறச்சுவற்றில் கோராஜகேசரி வன்மன் குலோத்துங்கன் கல்வெட்டும், கர்ப்பக்கிரக வெளிச்சுவற்றின் பின்புறத்தில், விக்கிரம சோழனின் முற்றுப்பெறாத கல்வெட்டும் கோவில் பற்றிய செய்திகளை எடுத்துக்கூறுகின்றன.
இத்தலத்தின் மூலவர் திருக்காயாரோகணேசுவரர். இவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். தயார் கமலாம்பிகை. தலவிருட்சம் வில்வம். இங்குள்ள தீர்த்தம் குருவார தீர்த்தம் என்றும் லட்சுமி குண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
மஞ்சள் கரை துணி உடுத்தி, புஷ்பராகமணி அணிந்து மஞ்சள் நிற துணி தானம், கடலை தானிய தானம், குருவார விரதம் இருந்து இங்குள்ள குரு பகவானை வழிபட்டால் குருதோஷம் நீங்கி நலம் பெருகி நல்வாழ்வு பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்குச் செல்ல, காஞ்சிபுரத்தின் எல்லா பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது.
- சக்தி.யே.சரவணபெருமாள், காஞ்சிபுரம்.
----------------------------------------------------------
ஆலய விமானத்தோற்றம்
`திருக்காயாரோகணம்' - பெயர்க்காரணம்
காலச்சக்கரம் சுழல்கிறது. காலத்தின் முடிவில்... எல்லோரும் இறந்து போகிறார்கள். உலகில் நிலைபெற்றதாக நினைக்கும் பொருள் என்று எதுவுமே இல்லை. எங்கும் ஒரே நீர் பிரளயம்!
பிரம்ம-விஷ்ணுக்கள் லயமாக ஒடுங்கி வரும் காலத்தில் எல்லாம் வல்ல சிவபெருமான் அந்த இருவரையும் உற்பத்தியாக்கியபடியே, ஒடுங்கச் செய்து விடுகிறார். அவர்களை தமது திருமேனியில் ஏற்றிக் கொண்டு இத்தலத்தில் நர்த்தனம் ஆடுகிறார்.
அதனால்தான் இத்தலம் `திருக்காயாரோகணம்' என்று அழைக்கப்படுகிறது.
Similar topics
» குரு திருவாதவூரர்
» குரு வந்தனம்
» குரு பாதுகா ஸ்தோத்ரம்.
» யார் நமக்கு குரு ?
» யார் நல்ல குரு...?
» குரு வந்தனம்
» குரு பாதுகா ஸ்தோத்ரம்.
» யார் நமக்கு குரு ?
» யார் நல்ல குரு...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum