Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
மடி தடவாத சோறும், சுறு நாறாத பூவும் - ச. நாகராஜன்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
மடி தடவாத சோறும், சுறு நாறாத பூவும் - ச. நாகராஜன்
இறைவன் எந்த விதமான பிரார்த்தனையை நம்மிடம் எதிர்பார்க்கிறான்? நான் ஒன்று கொடுக்கிறேன், நீ பதிலுக்கு ஒன்று தா என்ற வகையில் பூ மாலை சார்த்தி, ஊதுபத்தி ஏற்றி, சந்தனம் தடவி, தோத்திரம் செய்வதை விட பக்திக்காகவே பக்தி, இறைவன் மீதுள்ள அன்பிற்காகவே பிரார்த்தனை என்பதே உண்மையான பிரார்த்தனை! இதையே இறைவன் விரும்புகிறான்!
இதை மிக அருமையாக ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் மூன்று சொற்றொடர்களால் விளக்குகிறார். "மடி தடவாத சோறு, சுறு நாறாத பூ, சுண்ணாம்பு படாத சாந்து - இவை போல இருக்கும் உண்மை கைங்கா¢யம்" என்று அவர் கூறும் போது இதற்கு விளக்கம் என்ன என்று கேட்கத் தோன்றும்.
மடி தடவாத சோறுக்கு விதுரரையும், சுறு நாறாத பூவுக்கு ஸ்ரீ மாலாகாரரையும், சுண்ணாம்பு படாத சாந்திற்குக் கூனியையும் அவர் உதாரணமாகக் கூறுகிறார்.
மடி தடவாத சோறு
யாருக்கேனும் எதையேனும் கொடுக்கும் போதே பதிலுக்கு என்ன வரும் என்று எதிர்பார்ப்பது தான் மடி தடவுதல்! கிருஷ்ணனின் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர் விதுரர். பொ¢ய மன்னனான து¡¢யோதனனின் அறுசுவை உணவைத் தவிர்த்து விதுரா¢ன் இல்லம் ஏகிய கிருஷ்ணனுக்கு எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் விதுரர் இட்ட அன்பான உணவே மடி தடவாத சோறு! எல்லாம் வல்லவன் கண்ணன் என்று முற்றிலுமாக உணர்ந்தவர் விதுரர் என்றாலும் து¡¢யோதனன் கண்ணனைப் பொய்யான ஆசனத்தில் அமர்த்தி வீழ்த்தாட்டச் செய்த சதியை அவன் முறியடித்ததைப் பார்த்ததிலிருந்தே எந்த வித ஆசனத்தின் மீதும் அவருக்கு ஒரு சந்தேகம். தன் வீட்டில் கண்ணன் ஆசனத்தில் அமருமுன்னர் அதை ஒரு தடவு தடவிப் பார்த்தே அவரை உட்கார அனுமதிக்கிறார். அவ்வளவு அன்பு! விதுரர் இட்ட மடி தடவாத சோறு கண்ணன் உகந்து ஏற்ற ஒன்று.
சுறு நாறாத பூ
அழகிய பூக்களின் மணம் அனைவரையும் மயக்கும். ஆனால் இந்த மலரையே தீயின் அருகில் கொண்டு சென்றால் அது மணத்தை இழந்து நாற்றம் அடிக்க ஆரம்பிக்கும். அதாவது மலா¢ன் சுறு நாறும். பிரதிபலனை எதிர்பார்க்காமல் கொடுப்பது சுறு நாறாத பூ போல! மதுராவை அடைந்த கண்ணனுக்கும், பலராமனுக்கும் சுதாமன் என்ற மாலை கட்டுபவர் (மாலாகாரர்) தன்னுடைய அன்பினாலே அழகிய மாலைகளைச் சமர்ப்பித்தார். அதை இருவரும் மகிழ்ந்து ஏற்றனர். சுறு நாறாத பூ இது தான்!
சுண்ணாம்பு படாத சாந்து
மணமுள்ள சந்தனத்தில் ஒரு துளி சுண்ணாம்பு சேர்ந்தாலும் போதும். அதன் கலவை கெட்டு வாசனை கெட்டுப் பயனற்றதாகி விடும்.
கண்ணன் மதுராவிற்கு விஜயம் செய்த போது கூனி ஒருத்தி சுண்ணாம்பு படாத சாந்தை வைத்திருந்தாள்.
கண்ணன் அவளிடம் சென்று, "கூனியே, எங்கள் மேனிக்கு ஏற்ற சந்தனத்தைக் கொடு" என்று கேட்ட போது எந்த வித பலனையும் கருதாது அவன்பால் உண்டான உண்மையான அன்பால், கூனி சுண்ணாம்பு படாத சாந்தைத் தந்தாள். கண்ணன் அவளது கூனை உடனே நிமிர்த்தி விட்டு அருள் பு¡¢ந்தான்.
கீதையில் கண்ணனின் கூற்று
ஆக இப்படியான ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காது "பக்தி பக்திக்காகவே" என்று அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் ஒருவன் இறைவனைத் தொழ வேண்டும் என்பதை இந்த மூன்று சொற்றொடர்களால் அழகாக ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் எடுத்துக் கூறுகிறார்.
கீதையில் கண்ணன்,
"எவன் ஒருவன் ஓர் இலையோ, ஒரு பூவோ, ஒரு பழமோ, நீரோ இவைகளில் ஏதாவது ஒன்றை எனக்கு பக்தியுடன் தருகிறானோ, அப்படிச் சுத்தமான மனமுள்ளவன் பக்தியோடு கொடுத்தவைகளைத் திருப்தியாக நான் புசிக்கிறேன்" (அத்தியாயம் 9; சுலோகம் 26) என்று அருளுகிறான்.
தான் அருளிச் செய்ததை, மடி தடவாத சோறு, சுறு நாறாத பூ, சுண்ணாம்பு படாத சாந்து ஆகியவற்றை ஏற்றதன் மூலம் தன் வாழ்விலேயே பிரதிபலன் பாராத பக்தியை ஏற்றதை மெய்ப்பிக்கிறான்.
"மன்மனா பவ; என்னவனாக ஆகு" என்று அவன் கீதையிலே கூறும் போது அவனுடையவனாக ஆக எளிய வழி இதுவே!
நன்றி நிலாச்சாரல்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்! - ச.நாகராஜன்
» ராம ரஹஸ்ய உபநிஷத்! - ச.நாகராஜன்
» போரும் யோகாவும்! - ச.நாகராஜன்
» சேதுவின் வரலாறு! - ச.நாகராஜன்
» கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்!- ச.நாகராஜன்
» ராம ரஹஸ்ய உபநிஷத்! - ச.நாகராஜன்
» போரும் யோகாவும்! - ச.நாகராஜன்
» சேதுவின் வரலாறு! - ச.நாகராஜன்
» கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்!- ச.நாகராஜன்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum