இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இரும்பை மாகாளேஸ்வரர் கோவில்-எஸ்.பி. சேகர்

2 posters

Go down

இரும்பை மாகாளேஸ்வரர் கோவில்-எஸ்.பி. சேகர் Empty இரும்பை மாகாளேஸ்வரர் கோவில்-எஸ்.பி. சேகர்

Post by ஆனந்தபைரவர் Mon Jan 10, 2011 3:42 pm

மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலம். அவனது ஆளுகைக்கு உட்பட்டகோட்டக்கரை பகுதியை (தற்போதைய புதுச் சேரியின் கோட்டகுப்பம்- ஆரோவில்பகுதி) குணசீலன் என்னும் குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவனதுஎல்லையில்தான் இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் இருந்தது. அதை சிறந்த முறையில்பராமரித்து வழிபட்டு வந்தான்.

இந்நிலையில் குணசீலனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடும் வறட்சிஏற்பட்டது. மழை யின்றி பயிர்களெல்லாம் கருகின; குடிமக்களெல் லாம்தவித்தனர். இதைக் கண்டு கவலையுற்ற குணசீலன் மாகாளேஸ்வரர் ஆலயத்திற்குச்சென்று, "இவ்வளவு கொடிய பஞ்சத்திற்குக் காரணம் என்ன?' என்று மனமுருகிவேண்டி நின்றான்.

ஒரு நாள் அவன் கனவில் தோன்றிய மாகா ளேஸ்வரர், "மன்னா! நம் ஆலயத் தின்எதிரே குளக்கரையிலுள்ள அரச மரத்தின் கீழ், கடுவெளிச்சித்தர் எனதுபஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்த வண்ணம் தவம் செய்துகொண்டிருக்கிறார். அவரைச்சுற்றி புற்று வளர்ந்து அவர் உடலின் பெரும்பகுதியை மூடிவிட்டது. அந்தநிலையிலும் உக்கிரமான தவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த தவாக்னியின்வெப்பத்தால்தான் இத்தகைய வறட்சி ஏற்பட்டுள்ளது. அவரது தவம் கலைந் தால்தான்மழை பொழியும். அதே சமயம் அவரது தவத்தை பலாத்காரமாகக் கலைத்தால் சித்தரின்கோபத்துக்காளாகி அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும். எனவே ஏதேனும்உபாயத்தைக் கையாண்டே தவத்தைக் கலைக்க வேண்டும்' என்று கூறி மறைந்துவிட்டார். தூக்கம் கலைந்து எழுந்த மன்னன் நீண்ட நேரம் யோசித்து, சித்தரின்தவத்தை உபாயத் தால் கலைக்க பெண்களால்தான் முடியும் என்று முடிவு செய்தான்.

பொழுது புலர்ந்ததும், கோவிலில் நடனமாடும் சுந்தரவல்லியை அழைத்து மன்னன்தன் எண்ணத்தைக் கூறினான். அதைக் கேட்டு சுந்தரவல்லி மிரண்டு போனாள்.எனினும் மன்னன் கட்டளையை மீற முடியாதென்பதால், கடுவெளிச் சித்தர் தவம்செய்யும் இடத்திற்குச் சென்று வணங்கி நின்றாள். சித்தர் கண் விழிப்பதற்கானசாத்தியக் கூறு ஏதும் இல்லாதிருப்பதை உணர்ந்த சுந்தர வல்லி, அவரைத் தொட்டுதவத்தைக் கலைக்க லாமா என்று யோசித்தாள். அவ்வாறு செய்தால் சித்தரின் கோபம்தன்னை எரித்துவிடும். செய்யாமல் போனா லும் மன்னரின் கோபத்துக்கு ஆளாகநேரிடும். என்ன செய்யலாம் என்று புரியாமல் தவித்த சுந்தரவல்லி, மன்னரின்கோபத்துக்கு ஆளாவதை விட சித்தரால் எரிக்கப்பட்டால் மோட்சமே கிட்டும்என்றெண்ணி அவரது தவத்தைக் கலைக்க முடிவு செய்தாள்.

அவரையே நெடுநேரம் கவனித்தபடி அவள் நின்றிருந்தபோது, அரச மரத்தி லிருந்துஒரு இலை சித்தரின் கையில் விழ, அவர் அதைத் தன் வாயிலிட்டு மென்றுதின்றார். இதைப் பார்த்த சுந்தரவல்லி, சித்தர் அரச இலையையும் காற்றையும்உட்கொண்டே தவத்தைத் தொடர்ந்து வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டாள்.வீட்டுக்குத் திரும்பிச் சென்ற அவள், மறுநாள் உப்பும் காரமும் சேர்த்தஅப்பளத்தை அரச இலை அளவுக்குச் செய்து எடுத்து வந்து சித்தரின் கையில்வைத்தாள். அதை அவர் வாயிலிட, வழக்கத்திற்கு மாறான சுவையிருப் பதை உணர்ந்துமெல்ல கண் திறந்தார்.

அப்போது அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய சுந்தரவல்லி, ""சுவாமி, அரசர்உத்தர வுப்படி நான் இவ்வாறு நடந்து கொண்டேன். என்னை மன்னித்தருளி, என்பாதபூஜையை ஏற்க என் இல்லத்திற்கு எழுந்தருள வேண்டும்'' என்று வேண்டினாள்.

அவ்வாறே அவளை மன்னித்த கடுவெளிச் சித்தர், அவள் இல்லத்திற்குச் சென்றுசுந்தர வல்லியின் பாத பூஜையை ஏற்றார். சித்தரின் தவம் பலாத்காரமின்றிஉபாயத்தால் கலைந்த தால், வானம் இருண்டது. தொடர்ந்து ஒரு வாரம் அடைமழைபெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. ஆறுகள் பெருக்கெடுத்தன. மக்கள்மகிழ்ச்சியோடு விவசாயப் பணிகளைத் துவக்கினர். பஞ்சமும் நீங்கியது.

சில மாதங்களுக்குப்பின் மாகாளேஸ்வரருக்கு மிகச் சிறப்பாக உற்சவம்நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஐந்தாம் நாள் உற்சவத்தில் மன்னன்குணசீலன் கலந்துகொண்டு சிறப் பிப்பது வழக்கம். அன்று நடன அரங்கில் சுந்தரவல்லியின் நடனம் நடைபெற்றுக் கொண்டி ருந்தது. மன்னனுடன் திரளான மக்களும்கண்டு களித்துக் கொண்டிருந்த அந்த நடனத்தைக் காண கடுவெளிச் சித்தரும்வந்திருந்தார். ஒரு கட்டத்தில் நடனமாடிக் கொண்டிருந்த சுந்தரவல்லியின்காற்சலங்கை கழன்று விழுந்தது. அதைக் கண்ட கடுவெளிச் சித்தர் நொடிப்போதில்அங்கு சென்று கழன்று விழுந்த சலங்கையை எடுத்து சுந்தரவல்லியின் காலில்கட்டினார்.

இதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு நடன மங்கையின் காலை சித்தர்தொடலாமா என்று கடுவெளிச் சித்தரைப் பழித்தனர். அதைக் கண்டு கோபமுற்றசித்தர், "மனித வாழ்க்கை நிலையற்றது' என்ற கருத்தில் ஒரு பாடலைப் பாடி,மாகாளேஸ்வரர் சந்நிதி முன் சென்று, "இதற்கெல்லாம் காரணம் இவர்தான்' என்றுமாகாளேஸ்வரரை கோபத்து டன் நோக்கினார். சித்தரின் கடும் கோபத்தினால்சிவலிங்கம் மூன்றாகப் பிளந்தது. அதிலிருந்து பார்வதி தேவியுடன் தோன்றியசிவபெருமான் அனைவருக்கும் காட்சி நல்கி மறைந்தார்.

இதைக் கண்ட மன்னனும் மக்களும் கடுவெளிச் சித்தரின் மகிமையை உணர்ந்து,தங்கள் பிழையைப் பொறுத்தருளுமாறு அவரிடம் மன்னிப்பு வேண்டினர். மேலும்பிளந்த லிங்கத்தை ஒன்றாகச் சேர்க்கும்படியும் கேட்டுக்கொண்டனர். அவர்களின்வேண்டு கோளை ஏற்றுக்கொண்ட சித்தர் ஒரு பாடலைப் பாட, பிளவுபட்ட மூன்றுபகுதிகளும் ஒன்றி ணைந்தன. பின்னர் செப்புத் தகடால் அந்த லிங்கத்தை பந்தனம்செய்தார் சித்தர். அந்த லிங்கத்தைதான் இன்றளவும் இரும்பை மாகாளேஸ்வரர்கோவிலில் மூலவராக வழிபட்டு வருகின்றனர்.

மேற்படி நிகழ்ச்சி நடந்த சில காலத்திற்குப் பின் அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், பிளவுபட்ட லிங்கத்திற்கு மாற்றாக வேறொரு லிங்கத்தைப்பிரதிஷ்டை செய்ய எண்ணி காசியிலிருந்து ஒரு லிங்கத்தைக் கொண்டு வந்தான்.அதைப் பிரதிஷ்டை செய்ய முயன்றபோது, "என்னை அப்புறப்படுத்த வேண்டாம்' என்றுஇறைவன் அசரீரி மூலம் ஆணையிட, மன்னன் தன் முயற்சியைக் கைவிட்டு,காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வேறொரு பகுதியில் பிரதிஷ்டைசெய்தான். அதை அம்பாள் சந்நிதியின் கிழக்குப் பகுதியில் காணலாம். பொதுவாகஉடைந்த லிங்கத்திற்கு பூஜை செய்யக் கூடாது என்பது ஆகம விதியாகும். ஆனால்அதற்கு விலக்காக இரும்பை மாகாளேஸ்வரருக்கு மட்டும் இன்றளவும் பூஜைசெய்யப்பட்டு வருகிறது.

""வட இந்தியாவில் மாகாளர்கள் என்னும் வீர சைவ மரபினர் வாழ்ந்து வந்தனர்.இறைவன் தொண்டிற்காகவே தங்களை அர்ப் பணித்துக் கொண்ட மாகாளர்களின் வழித்தோன்றல்களில் மாகாளர் என்னும் மகரிஷி ஒருவர் இருந்தார். அவர் வடஇந்தியாவில் ஒன்றும், தென்னிந்தியாவில் இரண்டும் என மூன்றுசிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவ்வாறு வட இந்தியாவில்அமைந்த ஆலயம் பிரசித்தி பெற்ற உஜ்ஜயினி மாகாளம் ஆகும். அடுத்துதென்னகத்தில் அமைந்தது மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள அம்பர் மாகாளம்.மூன்றாவது தலம் இந்த இரும்பை மாகாளம்.

சித்தர்கள் முக்காலத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவர்கள். ஆன்மிகம்செழிக்கவும், ஆரோக்கியம் பெருகவும், மூடநம்பிக்கை அகலவும்,உயிரிருக்கும்போதே நற்கருமங்கள் செய்து மேன்மை பெறவும் மக்களுக்குப்போதித்தவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்களில் ஒருவரான கடுவெளிச்சித்தரால் பிரபலமடைந்தது இரும்பை மாகாளம் என்னும் இத்தலம். அவரின் ஞானவழியையும் யோக வழியையும் பின்பற்றி இங்கே வழிபாடு செய்பவர்களுக்கு எல்லாநன்மைகளும் கிட்டும்'' என்கிறார்கள் நல்லாசிரியர் நடராஜன் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் இளமங்கலம் ராமசாமி ஆகியோர்.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயத் தில் மூலவர் மாகாளேஸ்வரர் கிழக்குநோக்கி யும், அன்னை மதுசுந்தரநாயகி தெற்கு நோக்கி யும் அருள்புரிகின்றனர்.ஈசனுக்கு மாகாளமுடை யார், மாதுர்புரீஸ்வரர் ஆகிய திருப்பெயர்களும் உண்டு.அதுபோல அன்னைக்கும் குயில்மொழி யம்மை, மதுராம்பிகா, மதுரபாசாம்பிகா ஆகியதிருப்பெயர்களும் வழங்குகின்றன.

விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், சூரியன், சந்திரன்மற்றும் நவகிரகங்கள் ஆகியோருக்குத் தனிச்சந்நிதிகள் உள்ளன. தல விருட்சமாகபுன்னை மரம் உள்ளது. மாகாள தீர்த்தம் என்னும் குளம் தல தீர்த்தமாகவிளங்குகிறது.

சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.

கல்வி ஞானம், செல்வ வளம், திருமணத் தடை நீக்கம், பிள்ளைப்பேறு, தொழில்லாபம் போன்றவற்றைப் பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

இரும்பை மாகாளேஸ்வரர் கோவில்-எஸ்.பி. சேகர் Empty Re: இரும்பை மாகாளேஸ்வரர் கோவில்-எஸ்.பி. சேகர்

Post by ராகவா Sun Aug 17, 2014 6:13 pm

விரிவான பதிவு...
மிகவும் நன்றிகள் ...உங்கள் பகிர்விற்கு பாராட்டுக்கள்..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum