இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மறுபிறவி, சொர்க்கம், நரகம் பற்றி ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகளின் விளக்கங்கள்...

2 posters

Go down

மறுபிறவி, சொர்க்கம், நரகம் பற்றி ஸ்ரீபாரதி  தீர்த்த சுவாமிகளின் விளக்கங்கள்... Empty மறுபிறவி, சொர்க்கம், நரகம் பற்றி ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகளின் விளக்கங்கள்...

Post by ஆனந்தபைரவர் Tue Aug 03, 2010 4:19 pm

-கமலநாதன்

பூஜ்யஸ்ரீ பரமானந்த பாரதி சுவாமிகள், இந்தியாவின் பல இடங்களிலும் வெளிநாடு களிலும் வேதாந்தங்களின், சாஸ்திரங்களின் அருமை பெருமைகளைப் பற்றி சொற்பொழி வாற்றி வருபவர். இவர் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஒரு கால கட்டத்தில் எல்லாவற்றையும் துறந்து சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த மகாகுரு ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகளிடம் தீட்சை வாங்கி முறைப் படி சந்நியாசம் பெற்றார்.

ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர், மறைந்து வரும் சனாதன தர்மத்தை மக்களிடையே பரப்புவதில் தன்னை அர்ப்பணித்து வருபவர். புதுடெல்லியில் உள்ள சங்கர வித்யா கேந்திரா என்னும் ஸ்தாபனத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையவர். அந்த ஸ்தாபனம், இன்றைய நிர்வாகிகளிடமும் தொழிற்கல்வி விற்பன்னர் களிடமும் இன்றைய வாழ்க்கைக்குத் தேவை யான விஷயங்களை எடுத்துக் கூறி, இன்று நாம் காணும் பல விஞ்ஞான உண்மைகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எல்லாம் ஏற்கெனவே நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக்கூறி, நமது நாட்டின் பெருமையை- நமது சாஸ்திரங்களின் பெருமையை அவர்கள் மூலமாக மக்களிடையே பரப்பும் அரிய பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (ஒ.ஒ.ங.) கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மிகவும் பிரபலமான சில கல்வி யாளர்களும் பல தொழில் வல்லு நர்களும் இந்த ஸ்தாபனத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீ பரமானந்த பாரதி சுவாமிகள், தன்னுடைய இயற்பியல் அறிவையும், தான் கற்றுணர்ந்த வேதாந்தம், சாஸ்திரங்களில் இருக்கும் வியப்பான உண்மைகளையும் இணைத்து, ஐன்ஸ்டீனின் புகழ் பெற்ற தத்துவமான "தி தியரி ஆஃப் ரிலேடிவிடி'யையும் சம்பந்தப்படுத்தி நூல் ஒன்று எழுதி வருகிறார்.

1990-ஆம் வருடத்தில் மாஸ்கோவில் கிரம்ளின் மாளிகையில் நடந்த "உலக புனித மேம்பாடு' கூட்டத்தில் பங்கெடுத்து, அங்கு குழுமியிருந்த உலகப் பிரதிநிதிகள் இரண்டாயிரம் பேரை "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தைச் சொல்ல வைத்தவர். இந்தக் கூட்டத்தினரிடையில் ரஷ்யாவின் அன்றைய அதிபராக இருந்த கொர்பச்சேவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த மடத்தையும் சாராமல்- தனக்காக ஒரு மடமோ சிஷ்ய பரம்பரையையோ வைத்துக் கொள்ளாமல் தனியே இயங்கி வருகிறார் பரமானந்த பாரதி சுவாமிகள்.

சிறப்பான ஆன்மிகப் பணியை மேற்கொண்டு வரும் இவர், அண்மையில் சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம மண்டலி என்னும் அமைப்பின் அழைப்பின் பேரில் சில இடங்களில் பிரசங்கங்கள் நடத்தினார். அதிலிருந்து...

""முக்தி அடைந்தவர்களுக்கு மட்டுமே மறுபிறப்பு இல்லை. மற்ற எல்லாருக்கும் மறுபிறப்பு உண்டு. மறுபிறப்பில் ஆணாக இருந்தவர்கள் பெண்ணாகப் பிறக்கலாம்; பெண்ணாக இருந்தவர்கள் ஆணாகப் பிறக்கலாம். அவரவர் செய்த பாவங்க ளின் அளவைப் பொறுத்து, புழு பூச்சியாக, விலங்குகளாகவும் பிறக்கலாம். மறுபிறவி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்குமே உண்டு. இந்தப் பிறவியில் செய்த பாவ- புண்ணிய அளவுகளைப் பொறுத்தே இறந்த பிறகு நரகத்திற்கோ சொர்க் கத்திற்கோ செல்கிறார்கள். அங்கேயும் குறிப்பிட்ட காலத்திற்குப்பின் (அவர் களின் பாவ- புண்ணிய அளவுகளைப் பொறுத்து) மீண்டும் மறுபிறவி எடுக்கி றார்கள்.

குழந்தை தாயின் கருவில் இருக் கும்போதே தாயின் செயல்களை- தாய் இருக்கும் சூழ்நிலைகளை உணர்ந்து வளர்ந்து வருகிறது. தாயின் நல்ல தன்மைகள்- அது நல்லதோ கெட்டதோ- குழந்தையையும் பாதிக்கிறது.

கருவில் இருக்கும் குழந்தையின் முக அசைவுகள், தாயின் செயல்களைப் பொறுத்து நடக்கிறது.

பிறந்த குழந்தைக்கு எவ்வாறு அழத் தெரிகிறது? எப்படி பால் குடிக்கத் தெரிகிறது? பூர்வ ஜென்மத்தில் செய்த செயல்கள் மறுபடியும் நினைவுக்கு வருகி றது. அதனால்தான் அந்தக் குழந்தையால் அவ்வாறு செய்ய முடிகிறது.v முட்டையில் இருந்து வெளிவரும் பல்லிக் குஞ்சு, அடுத்த விநாடியே தன் முன் காணும் ஈயைப் பிடித்து தின்னத் தொடங்குகிறது. அப்போதுதான் பிறந்த பல்லிக் குஞ்சுக்கு இரையைப் பிடிக்க யார் கற்றுக் கொடுத்தார்கள்? எல்லாம் முற்பிறவிகளின் நினைவே. அது இன்னும் மறக்கவில்லை. உறங்கும்போது மனிதன் ஏறக்குறைய மரண நிலையை அடைகி றான். சுவாசம் உள்ளேயும் வெளியேயும் போவது உண்மை. ஆனால் அவன் காணும் கனவு அவனை எவ்வளவோ தூரத்திற்கு அழைத்துச் செல்கிறது.

நீங்கள் யார்? கனவில் இருக்கும் இடத்தில் காணப்படும் நீங்களா? படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் நீங்களா?

இந்த இரண்டு நிலைகளிலும் ஒரே சமயத்தில் காணப்படும் உங்களின் உண்மையான நீங்கள் யார்?

உடல் வேறு; ஆன்மா வேறு. உடல் ஸ்தூலமானது. ஆன்மா சூட்சுமமானது. உடல் அழியக்கூடியது; ஆன்மா அழியாதது. ஆன்மாவானது இன்னொரு உடலில்- மிருகத்தின்- பறவையின் உடலில்கூட புகுந்துகொள்ளும்.

மறுபிறவி எடுப்பதற்கு உதவுவது ஆன்மா. ஆன்மா, ஒளியின் வடிவத்தில் விண்ணுலகு செல்கிறது. இறந்தவர்களின் சிரார்த்தத்தின்போது சூடாகப் பிண்டம் வைப்பது ஏன்? சாதத்தில் உள்ள சூடுதான் அந்தப் பிண்டத்தை நமது முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு எடுத்துச் செல்கிறது.

நரக லோகம், சொர்க்க லோகம் சென்ற ஆன்மாக் கள் அங்கிருக்க வேண்டிய காலகட்டம் முடிந்ததும் மழை வடிவில் மீண்டும் பூமிக்கு இறங்கி வருகின்றன. அந்த மழையினால் ஆறுகளில் நீர் பெருகுகிறது. அந்த நீரைப் பலர் குடிக்கிறார்கள். அந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி நெல், கோதுமை மற்றும் இதர பயிர் வகைகள், காய்கறிகள் முதலியவற்றை விளை விக்கிறார்கள். இந்த விளைபொருட்களை மனிதர்கள் உட்கொள்ளுகிறார்கள். விலங்குகளும் பறவைகளும் இன்ன பிற உயிரினங்களும் உட்கொள்கின்றன. அவற்றில் உள்ள சக்தி ஆணிடத்தில் விந்தணுக்களாக மாறுகிறது. பெண்ணுடன் உறவு கொள்ளும்போது கரு ஏற்பட தகுந்த சூழ்நிலை இருந்தால் கரு உருவாகி றது. குழந்தை பிறக்கிறது. இந்த நிகழ்ச்சி எல்லா உயிர்களிடமும் நடைபெறுகிறது.''

சுவாமிகளிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

ஒரு ஆன்மாவுக்கு ஒரு உடம்புதான் என்றால், உலகில் மக்கள் தொகை ஒரே மாதிரியாக இல்லாமல் ஒவ்வொரு வருடமும் பெருகி வருவதன் காரணம் என்ன?

""எல்லா ஆன்மாக்களும் மனிதப் பிறவி களாகவே பிறப்பதில்லை. ஈ, பல்லி, நாய், பூனை போன்றும் பிறக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் வாழும் காலம் வித்தியாசமானது. மீண்டும் மரணம்; மீண்டும் ஜனனம். அதனால்தான் ஜனத் தொகை பெருகிப் பெருகி வருகிறது.''

பிராயசித்தம் அல்லது பரிகாரத்தினால் ஒருவரது ஆயுளை அதிகரிக்கச் செய்ய முடியுமா?

""முடியும். பதினாறு வயதில் இறக்க வேண்டிய மார்க்கண்டேயன், தான் செய்த தவத்தின் வலிமையால் சிரஞ்சீவி வரம் பெற்றான்.

விதவையாக இருக்க வேண்டிய சாவித்திரி தனது தவத்தால் சத்தியவானைக் காப்பாற்றி னாள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்பது தெரியாது. என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தருபவர்களும் மிகவும் குறைவு.

பரிகாரம் செய்யும்போது, அதைச் செய்பவ ரும் முழு நம்பிக்கையோடு, பக்திச் சிரத்தையோடு செய்ய வேண்டும். அதைச் செய்து வைக்கும் வைதீகரும் மிகுந்த பக்தியோடு- சிரத்தையோடு மந்திரங்களை உச்சரிக்க வேண்டிய முறையில் மட்டும் உச்சரித்து ஹோமம், பூஜைகளைச் செய்ய வேண்டும். அந்த சமயத்தில் தெய்வ சிந்தனை மட்டும்தான் இருக்க வேண்டும்.

இப்படி மிகுந்த ஈடுபாட்டுடன் செய்பவரும், செய்து கொடுப்பவரும் மிகவும் அரிதாகி வருவ தால், பரிகாரங்களின் முழுப் பலனையும் பலரால் உணர முடியவில்லை.

பல பாவங்களுக்கும் சிறந்த பரிகாரம் அன்னதானம். முதியோர்களை மகிழ்ச்சியடையச் செய்வதும், அவர்களது ஆசியும் மன மகிழ்ச்சி யுடன் நீண்டு வாழ வழி செய்யும்.

நல்லதே நினைத்து, நல்லதே செய்து வாழ்ந்து வந்தால் இவ்வுல வாழ்க்கை இனிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதை ஒரு கடமையாக மேற்கொள்ளுங்கள்.''

பெண்கள் காயத்ரி மந்திரம் கூறலாமா? விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாமா?

""விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஆனால் காயத்ரி மந்திரம் கூறக் கூடாது என்பது காலங்காலமாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் நியதி.''

இன்றைய சமுதாயத்தில் ஆன்மிகச் சிந்தனை வளர்ந்து வருகிறதா? குறைந்து வருகிறதா?

""ஆன்மிகச் சிந்தனை இதற்குமுன் இருந்த காலகட்டங்களைவிட அதிக அளவில் வளர்ந்து தான் வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டி களாக இருந்தால், அந்தக் குடும்பம் செழிக்கும். பல குடும்பங்கள் சேர்ந்ததுதான் ஊர். ஊர் செழித்தால் நாடு செழிக்கும். ஆகவே நாடு செழிக்க, ஒவ்வொரு வீட்டிலும் ஆன்மிகச் சிந்தனை என்னும் விதையை விதைத்து, நீர் ஊற்றி வளர்த்து வர வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டில் செய்யத் தொடங்குங்கள்!''
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

மறுபிறவி, சொர்க்கம், நரகம் பற்றி ஸ்ரீபாரதி  தீர்த்த சுவாமிகளின் விளக்கங்கள்... Empty Re: மறுபிறவி, சொர்க்கம், நரகம் பற்றி ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகளின் விளக்கங்கள்...

Post by ஹரி ஓம் Mon Aug 16, 2010 2:09 pm

அருமை.... நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum