இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஞான விஞ்ஞான யோகம்

Go down

ஞான விஞ்ஞான யோகம் Empty ஞான விஞ்ஞான யோகம்

Post by eegaraiviswa Mon Apr 04, 2011 8:38 pm

ஞான விஞ்ஞான யோகம்

பக்தி யோகத்திற்கு இலக்கான இறைவனுடைய சொரூபம், சுபாவம், மேன்மை முதலியன இந்த அத்தியாயத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன. மனிதன், இவைகளை அறிய வொட்டாமல் பிரகிருதி சம்பந்தம் தடுத்துக் கொண்டிருப்பதால் இதை நீக்க வேண்டியது அவசியம்.

ஆனால், இறைவனைச் சரண் புகுந்தாலன்றி இத்தடையை நீக்க இயலாது. பக்தர்களில், துன்புற்றார், செல்வத்தை விரும்புவோர், ஞான சொரூப நிலையை விரும்புவோர், ஈசுவர தத்துவத்தையுணர்ந்தவர் என நான்கு வகையுண்டு, அவர்களில் நான்காம் வகுப்பினரே மேலானவர்.



அந்த நிலையைப் பெறுவதற்கு வெகு பிறப்புகள் எடுத்தாக வேண்டும். இறைவனைத் தவிர்த்து மற்ற தெய்வங்களைத் தொழுபவர்களும் உண்மையில் இறைவனளிக்கும் பயனையேதான் பெறுகின்றனர். ஆனால், அவ்விதமான பயன்கள் அழிவுற்றிருக்கும். இறைவனையே வணங்குபவர்கள் இறைவனையே யடைந்து அழிவிலா ஆனந்தத்தைப் பெறுகின்றனர்.

श्रीभगवानुवाच
मय्यासक्तमनाः पार्थ योगं युञ्जन्मदाश्रयः।
असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु॥१॥

ஸ்ரீப⁴க³வாநுவாச

மய்யாஸக்தமநா: பார்த² யோக³ம் யுஞ்ஜந்மதா³ஸ்²ரய:|
அஸம்ஸ²யம் ஸமக்³ரம் மாம் யதா² ஜ்ஞாஸ்யஸி தச்ச்²ருணு ||7-1||

ஸ்ரீப⁴க³வாநுவாச, பார்த² = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த்தா
மயி ஆஸக்தமநா: = என்பால் இசைந்த மனத்தினனாய்
மத் ஆஸ்²ரய: = என்னைச் சார்ந்து
யோக³ம் யுஞ்ஜந் = யோகத்திலே அமர்ந்தவனாய்
ஸமக்³ரம் மாம் = எல்லா ஐஸ்வர்யங்களும், விபூதிகள் பொருந்திய என்னை
யதா² அஸம்ஸ²யம் ஜ்ஞாஸ்யஸி தத் ஸ்²ருணு = எந்தவித ஐயமும் இன்றி உணருமாறு (சொல்கிறேன்), அதை கேள்!

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னைச் சார்ந்து, யோகத்திலே அமர்ந்தவனாய் என்னை முழுதும் உணருமாறு சொல்லக் கேளாய்.

ज्ञानं तेऽहं सविज्ञानमिदं वक्ष्याम्यशेषतः।
यज्ज्ञात्वा नेह भूयोऽन्यज्ज्ञातव्यमवशिष्यते॥२॥

ஜ்ஞாநம் தேऽஹம் ஸவிஜ்ஞாநமித³ம் வக்ஷ்யாம்யஸே²ஷத:|
யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூ⁴யோऽந்யஜ்ஜ்ஞாதவ்யமவஸி²ஷ்யதே ||7-2||

யத் ஜ்ஞாத்வா = எதை அறிந்தால்
இஹ பூ⁴ய: ஜ்ஞாதவ்யம் = இவ்வுலகில் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய
அந்யத் ந அவஸி²ஷ்யதே = வேறு ஒன்றும் மீதம் இருக்காதோ
ஸவிஜ்ஞாநம் இத³ம் ஜ்ஞாநம் = விஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை
அஸே²ஷத: அஹம் தே வக்ஷ்யாமி = முழுமையாக நான் உனக்கு சொல்வேன்

ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சம்பூரணமாக உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது மிச்சமொன்றுமில்லை.

मनुष्याणां सहस्रेषु कश्चिद्यतति सिद्धये।
यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः॥३॥

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்²சித்³யததி ஸித்³த⁴யே|
யததாமபி ஸித்³தா⁴நாம் கஸ்²சிந்மாம் வேத்தி தத்த்வத: ||7-3||

ஸஹஸ்ரேஷு மநுஷ்யாணாம் = பல்லாயிர மனிதரில்
கஸ்²சித் ஸித்³த⁴யே யததி = ஒருவன் சித்திபெற முயல்கிறான்
யததாம் ஸித்³தா⁴நாம் அபி = (அவ்விதம்) முயற்சி செய்கிற யோகிகளிலும் கூட
கஸ்²சித் மாம் தத்த்வத: வேத்தி = யாரோ ஒருவன் தான் என்னை உள்ளபடி அறிகிறான்

பல்லாயிர மனிதரில் ஒருவன் சித்திபெற முயல்கிறான். முயற்சியுடைய சித்தர் பலரில் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.

भूमिरापोऽनलो वायुः खं मनो बुद्धिरेव च।
अहङ्कार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा॥४॥

பூ⁴மிராபோऽநலோ வாயு: க²ம் மநோ பு³த்³தி⁴ரேவ ச|
அஹங்கார இதீயம் மே பி⁴ந்நா ப்ரக்ருதிரஷ்டதா⁴ ||7-4||

பூ⁴மி: ஆப: அநல: வாயு: க²ம் = மண், நீர், தீ, காற்று, ஆகாயம்
மந: பு³த்³தி⁴ அஹங்காரம் ச ஏவ = மனம், மதி, அகங்காரமும்
மே இயம் ப்ரக்ருதி = என் இந்த இயற்கை
இதி அஷ்டதா⁴ பி⁴ந்நா = இவ்வாறு எட்டு விதமாக பிரிந்து தோன்றுகிறது

மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது.

अपरेयमितस्त्वन्यां प्रकृतिं विद्धि मे पराम्।
जीवभूतां महाबाहो ययेदं धार्यते जगत्॥५॥

அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்³தி⁴ மே பராம்|
ஜீவபூ⁴தாம் மஹாபா³ஹோ யயேத³ம் தா⁴ர்யதே ஜக³த் ||7-5||

மஹாபா³ஹோ! = பெருந்தோளாய்!
அபரா = இது என் (அபரா என்னும்) கீழியற்கை
இத: அந்யாம் = இதனின்றும் வேறுபட்டதாகிய
யயா இத³ம் ஜக³த் தா⁴ர்யதே = எந்தப் பிரக்ருதியினால் இந்த உலகம் முழுவதும் தாங்கப் படுகிறதோ
மே ஜீவபூ⁴தாம் பராம் ப்ரக்ருதிம் = எனது உயிர் வடிவான (பரா என்னும்) மேலியற்கையை
வித்³தி⁴ = தெரிந்து கொள்

இது என் கீழியற்கை. இதனின்றும் வேறுபட்டதாகிய என் மேலியற்கையை அறி; அதுவே உயிராவது; பெருந்தோளாய், அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது.

एतद्योनीनि भूतानि सर्वाणीत्युपधारय।
अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा॥६॥

ஏதத்³யோநீநி பூ⁴தாநி ஸர்வாணீத்யுபதா⁴ரய|
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக³த: ப்ரப⁴வ: ப்ரலயஸ்ததா² ||7-6||

ஸர்வாணி பூ⁴தாநி = எல்லா உயிர்களும்
ஏதத் யோநீநி = இந்த இரண்டு பிரக்ருதிகளிலிருந்து உண்டானவை (என்றும்)
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக³த: ப்ரப⁴வ: = நானே முழுமையாக உலகிற்கும் உற்பத்தியாகும் இடம்
ததா² ப்ரலய = அவ்வாறே ஒடுங்குகின்ற (அழிவு) இடம்
இதி உபதா⁴ரய = என்று உணர்ந்து கொள்

எல்லா உயிர்களுக்கும் அது காரண மென்றுணர். அதனால், நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன்.

मत्तः परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय।
मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव॥७॥

மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித³ஸ்தி த⁴நஞ்ஜய|
மயி ஸர்வமித³ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக³ணா இவ ||7-7||

த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா
மத்த: அந்யத் கிஞ்சித் = என்னைக் காட்டிலும் வேறு ஒன்றும்
பரதரம் ந அஸ்தி = உயர்ந்த பொருள் இல்லை
இத³ம் ஸர்வம் = இவ்வையகமெல்லாம்
ஸூத்ரே மணிக³ணா இவ = நூலில் மணிகளைப் போல்
மயி ப்ரோதம் = என் மீது கோக்கப்பட்டது

தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது.

रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययोः।
प्रणवः सर्ववेदेषु शब्दः खे पौरुषं नृषु॥८॥

ரஸோऽஹமப்ஸு கௌந்தேய ப்ரபா⁴ஸ்மி ஸ²ஸி²ஸூர்யயோ:|
ப்ரணவ: ஸர்வவேதே³ஷு ஸ²ப்³த³: கே² பௌருஷம் ந்ருஷு ||7-8||

கௌந்தேய = குந்தி மகனே!
அஹம் அப்ஸு ரஸ: = நான் நீரில் சுவையாகவும்
ஸ²ஸி² ஸூர்யயோ: ப்ரபா⁴ = ஞாயிறிலும் திங்களிலும் ஒளியாகவும்
ஸர்வவேதே³ஷு ப்ரணவ: = எல்லா வேதங்களிலும் பிரணவமாகவும்
கே² ஸ²ப்³த³: = வானில் ஒலியாகவும்
ந்ருஷு பௌருஷம் அஸ்மி = ஆண்களிடத்து நான் ஆண்மை

நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் பிரணவம். வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.

पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसौ।
जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु॥९॥

புண்யோ க³ந்த⁴: ப்ருதி²வ்யாம் ச தேஜஸ்²சாஸ்மி விபா⁴வஸௌ|
ஜீவநம் ஸர்வபூ⁴தேஷு தபஸ்²சாஸ்மி தபஸ்விஷு ||7-9||

ப்ருதி²வ்யாம் புண்ய: க³ந்த⁴: ச = மண்ணில் தூய நறுமணமாகவும்
விபா⁴வஸௌ தேஜ: அஸ்மி = நெருப்பில் ஒளியாகவும் இருக்கிறேன்
ச ஸர்வபூ⁴தேஷு ஜீவநம் = அவ்வாறே எல்லா உயிர்களிலும் உயிர்ப்பாகவும்
தபஸ்விஷு தபஸ்² அஸ்மி = தவம செய்வோரின் தவமாகவும் இருக்கிறேன்.

மண்ணில் தூய நாற்றமும், தீயில் சுடரும், யான். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான், தவஞ் செய்வோரின் தவம் யான்.

बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम्।
बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम्॥१०॥

பீ³ஜம் மாம் ஸர்வபூ⁴தாநாம் வித்³தி⁴ பார்த² ஸநாதநம்|
பு³த்³தி⁴ர்பு³த்³தி⁴மதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் ||7-10||

பார்த² ஸர்வபூ⁴தாநாம் = பார்த்தா, எல்லா உயிர்களுக்கும்
ஸநாதநம் பீ³ஜம் = சநாதனமாகிய விதை என்று
மாம் வித்³தி⁴ = என்னை அறிவாய்
அஹம் பு³த்³தி⁴மதாம் பு³த்³தி⁴ = புத்தியுடையோரின் புத்தி நான்
தேஜஸ்விநாம் தேஜ: அஸ்மி = ஒளியுடையோரின் ஒளியாக இருக்கிறேன்

எல்லா உயிர்களுக்கும் நான் சநாதனமாகிய விதையென்றுணர். பார்த்தா, புத்தியுடையோரின் புத்தி நான், ஒளியுடையோரின் ஒளி நான்.

बलं बलवतां चाहं कामरागविवर्जितम्।
धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ॥११॥

ப³லம் ப³லவதாம் சாஹம் காமராக³விவர்ஜிதம்|
த⁴ர்மாவிருத்³தோ⁴ பூ⁴தேஷு காமோऽஸ்மி ப⁴ரதர்ஷப⁴ ||7-11||

ப⁴ரதர்ஷப⁴ = பரதர் ஏறே
ப³லவதாம் = வல்லோரிடத்தே
காமராக³விவர்ஜிதம் ப³லம் அஹம் = விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான்
ச த⁴ர்ம அவிருத்³த⁴: = மேலும் அறத்திற்கு மாறுபடாத
காம: அஸ்மி = விருப்பமாவேன்

வல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான். பரதரேறே, உயிர்களிடத்து நான் கடமை தவறாத விருப்பமாவேன்.

ये चैव सात्त्विका भावा राजसास्तामसाश्च ये।
मत्त एवेति तान्विद्धि न त्वहं तेषु ते मयि॥१२॥

யே சைவ ஸாத்த்விகா பா⁴வா ராஜஸாஸ்தாமஸாஸ்²ச யே|
மத்த ஏவேதி தாந்வித்³தி⁴ ந த்வஹம் தேஷு தே மயி ||7-12||

ச ஏவ = மேலும் கூட
யே பா⁴வா: = எந்த உணர்வுகள்
ஸாத்த்விகா: ராஜஸா: தாமஸா: = சத்வ ரஜஸ் தமோ குணங்களில் தோன்றியவையோ
தாந் மத்த: ஏவ = என்னிடத்தே பிறந்தன
இதி வித்³தி⁴ = என்று அறிந்து கொள்
து தேஷு மயி = ஆனால் அவை என்னுள் இருக்கின்றன
அஹம் ந = நான் அவற்றுள் இல்லை

சத்வ ரஜஸ் தமோ குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம் என்னிடத்தே பிறந்தன. அவை என்னுள் இருக்கின்றன. நான் அவற்றுள் இல்லை.

त्रिभिर्गुणमयैर्भावैरेभिः सर्वमिदं जगत्।
मोहितं नाभिजानाति मामेभ्यः परमव्ययम्॥१३॥

த்ரிபி⁴ர்கு³ணமயைர்பா⁴வைரேபி⁴: ஸர்வமித³ம் ஜக³த்|
மோஹிதம் நாபி⁴ஜாநாதி மாமேப்⁴ய: பரமவ்யயம் ||7-13||

ஏபி⁴: த்ரிபி⁴: கு³ணமயை: பா⁴வை: = இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால்
இத³ம் ஸர்வம் ஜக³த் மோஹிதம் = இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய்
ஏப்⁴ய: பரம் = இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட
மாம் அபி⁴ஜாநாதி = என்னை உணராதிருக்கிறது

இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட என்னை உணராதிருக்கிறது.

दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया।
मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते॥१४॥

தை³வீ ஹ்யேஷா கு³ணமயீ மம மாயா து³ரத்யயா|
மாமேவ யே ப்ரபத்³யந்தே மாயாமேதாம் தரந்தி தே ||7-14||

ஹி ஏஷா கு³ணமயீ மம தை³வீ மாயா = ஏனெனில் இந்த குணமாகிய எனது தேவமாயை
து³ரத்யயா = கடத்தற்கரியது
யே மாம் ஏவ ப்ரபத்³யந்தே = யாவர் என்னையே சரணடைவரோ
தே ஏதாம் மாயாம் தரந்தி = அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்

இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.

न मां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमाः।
माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिताः॥१५॥

ந மாம் து³ஷ்க்ருதிநோ மூடா⁴: ப்ரபத்³யந்தே நராத⁴மா:|
மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பா⁴வமாஸ்²ரிதா: ||7-15||

மாயயா அபஹ்ருத ஜ்ஞாநா = மாயையினால் ஞானம் அழிந்தோர்
ஆஸுரம் பா⁴வம் ஆஸ்²ரிதா: = அசுரத் தன்மையை பற்றி நிற்போர்
நராத⁴மா: து³ஷ்க்ருதிந: மூடா⁴: = மனிதரில் தாழ்ந்தவர்களும் இழிவான செயல்களை புரிகின்றவர்களுமான அறிவிலிகள்
மாம் ந ப்ரபத்³யந்தே = என்னைச் சரண் புகார்

தீமை செய்யும் மூடர், மனிதரில் கடைப்பட்டார், மாயையால் ஞான மழிந்தோர், அசுரத் தன்மையைப் பற்றி நிற்போர், (இனையோர்) என்னைச் சரண் புகார்.

चतुर्विधा भजन्ते मां जनाः सुकृतिनोऽर्जुन।
आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ॥१६॥

சதுர்விதா⁴ ப⁴ஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந|
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தா²ர்தீ² ஜ்ஞாநீ ச ப⁴ரதர்ஷப⁴ ||7-16||

ப⁴ரதர்ஷப⁴ அர்ஜுந: = பரதரேறே அர்ஜுனா!
அர்தா²ர்தீ² = பயனை வேண்டுவோர்,
ஆர்த: = துன்புற்றார்
ஜிஜ்ஞாஸு: = அறிவை விரும்புவோர்
ஜ்ஞாநீ = ஞானிகள் என
சதுர்விதா⁴ ஸுக்ருதிந: ஜநா: = நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்
மாம் ப⁴ஜந்தே = என்னை வழிபடுகின்றனர்

நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே, துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என.

तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते।
प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः॥१७॥

தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப⁴க்திர்விஸி²ஷ்யதே|
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்த²மஹம் ஸ ச மம ப்ரிய: ||7-17||

தேஷாம் நித்யயுக்த = அவர்களில் நித்திய யோகம் பூண்டு
ஏகப⁴க்தி: ஜ்ஞாநீ விஸி²ஷ்யதே = ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன்
ஹி ஜ்ஞாநிந: = ஏனெனில் ஞானிக்கு
அஹம் அத்யர்த²ம் ப்ரிய: = நான் மிகவும் இனியவன்
ஸ ச மம ப்ரிய: = அவன் எனக்கு மிகவும் இனியன்

அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன்.

उदाराः सर्व एवैते ज्ञानी त्वात्मैव मे मतम्।
आस्थितः स हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम्॥१८॥

உதா³ரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்|
ஆஸ்தி²த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க³திம் ||7-18||

ஏதே ஸர்வே உதா³ரா: ஏவ = மேற்சொல்லிய யாவரும் நல்லாரே
து ஜ்ஞாநீ ஆத்மா ஏவ = எனினும், ஞானி என்னுடைய ஸ்வரூபமே
மே மதம் = (என்பது) என்னுடைய கருத்து
ஹி ஸ: யுக்தாத்மா = அவன், யோகத்தில் இசைந்து
அநுத்தமாம் க³திம் = உத்தம கதியாகிய
மாம் ஏவ ஆஸ்தி²த: = என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்

மேற்சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் யானாகவே கொண்டுளேன். அவன், யோகத்தில் இசைந்து, உத்தம கதியாகிய என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்.

बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते।
वासुदेवः सर्वमिति स महात्मा सुदुर्लभः॥१९॥

ப³ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்³யதே|
வாஸுதே³வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது³ர்லப⁴: ||7-19||

ப³ஹூநாம் ஜந்மநாம் அந்தே = பல பிறவிகளின் இறுதியில்
ஜ்ஞாநவாந் = ஞானவான்
ஸர்வம் வாஸுதே³வ: இதி = எல்லாம் வாசுதேவனே என்று
மாம் ப்ரபத்³யதே = என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான்
ஸ: மஹாத்மா ஸுது³ர்லப⁴: = அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்

பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.

कामैस्तैस्तैर्हृतज्ञानाः प्रपद्यन्तेऽन्यदेवताः।
तं तं नियममास्थाय प्रकृत्या नियताः स्वया॥२०॥

காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்³யந்தேऽந்யதே³வதா:|
தம் தம் நியமமாஸ்தா²ய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ||7-20||

தை: தை: காமை: = அந்த அந்த விருப்பங்களால்
ஹ்ருதஜ்ஞாநா: = கவரப்பட்ட அறிவினையுடையோர்
ஸ்வயா ப்ரக்ருத்யா நியதா: = தத்தம் இயற்கையால் கட்டுண்டு
தம் தம் நியமம் ஆஸ்தா²ய = வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய்
அந்ய தே³வதா: ப்ரபத்³யந்தே = அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்

வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்.

यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुमिच्छति।
तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम्॥२१॥

யோ யோ யாம் யாம் தநும் ப⁴க்த: ஸ்²ரத்³த⁴யார்சிதுமிச்ச²தி|
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்²ரத்³தா⁴ம் தாமேவ வித³தா⁴ம்யஹம் ||7-21||

ய: ய: ப⁴க்த: = எந்த எந்த பக்தன்
யாம் யாம் தநும் = எந்த எந்த வடிவத்தை (தெய்வத்தை)
ஸ்²ரத்³த⁴யா அர்சிதும் = நம்பிக்கையுடன் அர்ச்சிக்க விரும்புகிறானோ
தஸ்ய தஸ்ய ஸ்²ரத்³தா⁴ம் = அந்த அந்த பக்தனுக்கு சிரத்தையை
அஹம் தாம் ஏவ = நான் அந்த தேவதையிடமே
அசலாம் வித³தா⁴மி = ஸ்திரமாக செய்கிறேன்

எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.

स तया श्रद्धया युक्तस्तस्याराधनमीहते।
लभते च ततः कामान्मयैवः विहितान्हितान्॥२२॥

ஸ தயா ஸ்²ரத்³த⁴யா யுக்தஸ்தஸ்யாராத⁴நமீஹதே|
லப⁴தே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹிதாந் ||7-22||

ஸ தயா ஸ்²ரத்³த⁴யா யுக்த: = அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து
தஸ்ய ஆராத⁴நம் ஈஹதே = அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான்
ச தத: காமாந் லப⁴தே = மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான்
ஹி தாந் விஹிதாந் மயா ஏவ = எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது

அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே.

अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम्।
देवान्देवयजो यान्ति मद्भक्ता यान्ति मामपि॥२३॥

அந்தவத்து ப²லம் தேஷாம் தத்³ப⁴வத்யல்பமேத⁴ஸாம்|
தே³வாந்தே³வயஜோ யாந்தி மத்³ப⁴க்தா யாந்தி மாமபி ||7-23||

து அல்பமேத⁴ஸாம் தேஷாம் = எனினும், அற்ப மதியுடைய அன்னோர்
தத் ப²லம் அந்தவத் ப⁴வதி = எய்தும் பயன் இறுதியுடையதாக ஆகிறது.
தே³வ யஜ: தே³வாந் யாந்தி= தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர்
மத்³ப⁴க்தா: மாம் அபி யாந்தி = என்னடியார் என்னையே எய்துகிறார்கள்

எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதியுடைத்தாம். தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர். என்னடியார் என்னையே எய்துகிறார்கள்.

अव्यक्तं व्यक्तिमापन्नं मन्यन्ते मामबुद्धयः।
परं भावमजानन्तो ममाव्ययमनुत्तमम्॥२४॥

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபு³த்³த⁴ய:|
பரம் பா⁴வமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம் ||7-24||

அபு³த்³த⁴ய: மம அநுத்தமம் = அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்
அவ்யயம் பரம் பா⁴வம் = அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பரநிலையை
அஜாநந்த: = அறிந்து கொள்ளாமல்
அவ்யக்தம் மாம் = புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை
வ்யக்திம் ஆபந்நம் = கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக)
மந்யந்தே = கருதுகின்றனர்

மறைவும் வெளிப்பாடும் உடையோனாக என்னை மதியற்றார் கருதுகின்றனர். என் அழிவற்ற உத்தம மாகிய பரநிலையை அன்னார் அறிகிலர்.

नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः।
मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम्॥२५॥

நாஹம் ப்ரகாஸ²: ஸர்வஸ்ய யோக³மாயாஸமாவ்ருத:|
மூடோ⁴ऽயம் நாபி⁴ஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் ||7-25||

அஹம் ஸர்வஸ்ய ப்ரகாஸ²: = எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை
யோக³மாயா ந ஸமாவ்ருத: = யோக மாயை சூழ்வதில்லை
அஜம் அவ்யயம் மாம் = பிறப்பும், கேடுமற்ற என்னை
அயம் மூட⁴ லோக: = இந்த மூடவுலகம்
ந அபி⁴ஜாநாதி = அறியவில்லை

எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோக மாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை மூடவுலகம் அறியவில்லை.

वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन।
भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन॥२६॥

வேதா³ஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந|
ப⁴விஷ்யாணி ச பூ⁴தாநி மாம் து வேத³ ந கஸ்²சந ||7-26||

அர்ஜுந! = அர்ஜுனா
ஸமதீதாநி வர்தமாநாநி ப⁴விஷ்யாணி ச = சென்ற, நிகழ்வன, வருவன
பூ⁴தாநி = ஆகிய உயிர்களையெல்லாம்
அஹம் வேத³ = நானறிவேன்
து கஸ்²சந மாம் ந வேத³ = ஆனால் எவரும் என்னை அறிவதில்லை

சென்ற, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர்.

इच्छाद्वेषसमुत्थेन द्वन्द्वमोहेन भारत।
सर्वभूतानि संमोहं सर्गे यान्ति परन्तप॥२७॥

இச்சா²த்³வேஷஸமுத்தே²ந த்³வந்த்³வமோஹேந பா⁴ரத|
ஸர்வபூ⁴தாநி ஸம்மோஹம் ஸர்கே³ யாந்தி பரந்தப ||7-27||

பரந்தப பா⁴ரத = பகைவரைச் சுடுவோய்! பாரதா!
ஸர்கே³ இச்சா² த்³வேஷ ஸமுத்தே²ந = உலகில் விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த
த்³வந்த்³வ மோஹேந = இருமைகளின் மயக்கத்தால்
ஸர்வபூ⁴தாநி ஸம்மோஹம் யாந்தி = எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன

விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த இருமைகளின் மயக்கத்தால், பாரதா, எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன, பகைவரைச் சுடுவோய்.

येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणाम्।
ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः॥२८॥

யேஷாம் த்வந்தக³தம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்|
தே த்³வந்த்³வமோஹநிர்முக்தா ப⁴ஜந்தே மாம் த்³ருட⁴வ்ரதா: ||7-28||

து யேஷாம் ஜநாநாம் = எந்த ஜனங்கள்
பாபம் அந்தக³தம் = பாவந் தீர்ந்து
புண்யகர்மணாம் = புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ
தே த்³வந்த்³வ மோஹ நிர்முக்தா: = அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து
த்³ருட⁴வ்ரதா: மாம் ப⁴ஜந்தே = திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்

எந்த ஜனங்கள் பாவந் தீர்ந்து புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ, அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்.

जरामरणमोक्षाय मामाश्रित्य यतन्ति ये।
ते ब्रह्म तद्विदुः कृत्स्नमध्यात्मं कर्म चाखिलम्॥२९॥

ஜராமரணமோக்ஷாய மாமாஸ்²ரித்ய யதந்தி யே|
தே ப்³ரஹ்ம தத்³விது³: க்ருத்ஸ்நமத்⁴யாத்மம் கர்ம சாகி²லம் ||7-29||

யே மாம் ஆஸ்²ரித்ய = என்னை வழிபட்டு
ஜரா மரண மோக்ஷாய யதந்தி = மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு முயற்சி செய்வோர்
தே தத் ப்³ரஹ்ம = அவர்கள் ‘அது’ என்ற பிரம்மத்தையும்
க்ருத்ஸ்நம் அத்⁴யாத்மம் = ஆத்மஞான முழுதையும்
அகி²லம் கர்ம ச விது³: = செய்கையனைத்தையும் உணர்வார்

மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர் ‘அது’ என்ற பிரம்மத்தை யுணர்வார்; ஆத்மஞான முழுதையும் உணர்வார்; செய்கையனைத்தையு முணர்வார்.

साधिभूताधिदैवं मां साधियज्ञं च ये विदुः।
प्रयाणकालेऽपि च मां ते विदुर्युक्तचेतसः॥३०॥

ஸாதி⁴பூ⁴தாதி⁴தை³வம் மாம் ஸாதி⁴யஜ்ஞம் ச யே விது³:|
ப்ரயாணகாலேऽபி ச மாம் தே விது³ர்யுக்தசேதஸ: ||7-30||

ஸாதி⁴ பூ⁴தாதி⁴தை³வம் ஸாதி⁴யஜ்ஞம் ச = பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் கூடியவனாக
யே மாம் = யாவர் என்னை
ப்ரயாணகாலே அபி விது³: = இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ
யுக்த சேதஸ: = யோகத்திற் பொருந்திய சித்தமுடைய
தே மாம் ச விது³: = அவர்கள் என்னையே அறிகிறார்கள்

பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் என்னை யாவர் இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யோகத்திற் பொருந்திய சித்தமுடைய அன்னாரே அறிஞர்.

eegaraiviswa

Posts : 26
Join date : 04/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum