இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மகத்தான மந்திரங்கள்

4 posters

Go down

மகத்தான மந்திரங்கள்  Empty மகத்தான மந்திரங்கள்

Post by maniajith007 Fri Sep 30, 2011 4:25 pm

மகத்தான மந்திரங்கள்  GaneshPainting4மந்திரங்கள் சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்ட சொல்லாகவே மந்திரங்கள் இருந்து வருகிறது, அது மட்டுமின்றி பகுத்தறிவு என்ற பெயரில் நமது அரசியல்வாதிகள் நமது இந்து மதத்தில் இருக்கும் அறிவியல் ரீதியான அற்புதங்களை அழிக்கும் பணியை மிக அழகாக செய்து கொண்டே இருக்கின்றனர், எல்லோர் மனதிலும் எழும் கேள்வி மந்திரங்கள் உண்மையா, மந்திரங்களினால் பலன் உண்டா என்றே காரணம் மந்திரங்கள் என்ற உடன் நினைவுக்கு வரும் ஒரு கேள்வி, மந்திரத்தால் மாங்காய் விழுமா என்ற கேள்விதான், அதற்க்கு முன் இந்த மந்திரம் ஒலி குறித்து சில விஷயங்களை காண்போம் மந்திரம் என்பது குறிப்பிட்ட ஒன்றின் மீது மனதை நிலைபடுத்துவது மந்திரம்,மந்திரங்கள் பொதுவாகவே ஒலி வடிவம் உடையவை ஒலி எங்கும் செல்ல கூடியது எங்கும் பரவி நிர்க்க கூடியது. நாம் காதலால் கேட்க்க முடியாத ஒலிகள் அதிர்வுகளாக எங்கும் பரவி இருக்கிறது, கோவில்களில் இருக்கும் ஒரு வித அமைதியும் சுகமான நிலையுமே இதற்க்கு சான்று கூட்டமில்லாத சாதாரண நாட்க்களில் தரிசனம் செய்து விட்டு கோவிலில் அமர்ந்து அந்த அதிர்வுகளை அனுபவிக்கலாம்.அப்படிப்பட்ட சக்தியை உடைய ஒலியை குறிப்பிட்ட அளவில் நமக்கு எது தேவையோ அதை இந்த மந்திரங்கள் ஈர்க்க முடியும் இது நிஜம், முன்பே சொன்னது போல இந்த உலகம் முழுக்க எண்ண அதிர் வுகள் நிரம்பி இருக்கின்றது, ஒரு சூதாடி இன்னொருவனை நோக்கி ஈர்க்கப்படுவதை போல ஒரு இசைக்கலைஞன் இன்னொருவனை நோக்கி ஈர்க்க படுவதை போல ஏனென்றால் அவர்கள் இருவரது எண்ண அலையும் ஒரே அலைவரிசையில் இருக்கிறது. அவ்வளவே இது ஒரு சிறிய உதாரணம் அதை போல இந்த மந்திரங்கள் உங்களுக்கு தேவையான மாற்றங்களை கொண்டு வரும்,சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியில் ஓம் என்ற மந்திரத்தை கேட்க்க வைப்பதன் மூலம் மன நோயாளிகள் நல்ல முன்னேற்றம் கண்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அதிர்வுகளை பற்றி அலைவரிசை பற்றி கண்டோம் இப்பொழுது சொற்களை பற்றி காண்போம் தமிழகத்தின் தென் பகுதியில் ஒரு முது மொழி உண்டு ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும் நாம் எப்படி சொர்க்களை பயன்படுத்துகின்றோம் என்பதை பொறுத்து இருக்கிறது, வெறும் சொற்கள் தானே என நினைப்பவர்களுக்கு அவை முதலில் சாதாரணமாக தொடங்கி பின் பெரும் வலிமையான ஒன்றாக தங்கள் வாழ்வில் மாறிவிடும், உதாரணமாக கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவனிடம் தொடர்ந்து நீ ஏன் இப்பொழுது தவறாக கணிதம் போடுகிறார் என பல முறை கூறுவீர்களெனில் அவனது ஆழ் மனம் அதை முழுமையாக ஏற்று கொண்டு அவன் தவறாக கணிதம் போடுவதில் வல்லவனாக இருப்பான், இதனலயே இந்து மதத்தில் அஸ்வினி தேவதைகள் நம்மை சுற்றி இருப்பதாகவும் நாம் கூறும் வார்த்தைகளை அவை ஆசீர்வதிப்பதாகவும் நாம் நன்மையை நினைத்தாலும் தீமையை நினைத்தாலும் அவை ஆசீர்வாதித்து விடும் என்று கூறுகிறார்கள்(இது என் கருத்து தவறெனில் மன்னிக்கவும்) ஆக சொற்க்கலும் நமது நமது வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன இனி மந்திரங்களை காண்போம்.அப்படி சிறப்பு மிக்க மந்திரங்களின் மூலம் நாம் எவ்வாறு நமக்கு உரிய பலனை அடைய முடியும், என்ன செய்ய வேண்டும். தமிழ்ஹிண்டுவின் மதிப்பிற்கூறிய உறுப்பினர் வெங்கடேஷ் தனி மடலில் சில அற்புதமான மந்திரங்களை அனுப்பி வைத்து கூறினார் இதனை கேட்க்க பிராப்தி வேண்டும் நண்பரே, என உண்மை தான் இதனை பலரும் பலமுறை அனுபவத்தால் உணர்ந்து இருப்பார்கள்,மகத்தான மந்திரங்கள்  Mahaprabhu_lotus_by_vishnu108-d4aklj0 சில திருதலங்களுக்கு செல்ல வேண்டும் என நாம் என்ன முயன்றாலும், இயலாது ஆனால் திடீரென ஒரு நண்பர் வருவார் வாருங்கள் சென்று வரலாம் என்று கூறி மிக எளிதாக அந்த தளத்திர்க்கு செல்லும் விருப்பும் நிறைவேறும் இது தான் பிராப்தி,சில மந்திரங்களை காதார கேட்டு மகிழவும் இந்த பிராப்தி தேவை வரும் வாரங்களில் அந்த மந்திரங்கள் பற்றி காண்போம் அதற்க்கு முன் மந்திரத்தால் மாங்காய் விழுமா என்ற வினவிர்க்கு நான் இன்னும் விடை கூறவில்லை என தோன்றுகிறது அது பற்றி பின்னால் காண்போம்
maniajith007
maniajith007

Posts : 10
Join date : 29/09/2011

Back to top Go down

மகத்தான மந்திரங்கள்  Empty Re: மகத்தான மந்திரங்கள்

Post by Venkatesh A.S Fri Sep 30, 2011 7:47 pm

சகோதரருக்கு மிக்க நன்றி. என்னை பொறுத்தவரை கொடுத்து வைப்பது (பிராப்தி) என்பது ஒருவருக்கு பெரும் பேறாகும். இதை ஜோதிடத்தில் பாக்கிய ஸ்தானம் (9 ஆம் வீடு) என்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பாக்கியம் இருக்கும். சில பேருக்கு சொந்த வீடு பாக்கியம் இருக்கும். சில பேருக்கு சுவையான உணவு பாக்கியம் இருக்கும். சில பேருக்கு சொகுசு வாகன பாக்கியம் இருக்கும். சில பேருக்கு அழகழகான ஆடைகளில் பாக்கியம் இருக்கும். மிக சிலருக்கு லட்சணமான உருவ/ குணநலன் கொண்ட வாழ்க்கைதுணை பாக்கியம் இருக்கும். இவை எல்லாவற்றையும் (அல்லது இதற்கும் மேலே) ஒரு சேர பெற்ற பாக்கியம் மிக மிக சிலருக்கே இருக்கும். அவர்கள் பூரண பாக்கியம் செய்தவர்களாவர். ஆனால் எதையுமே பெற்றால் மட்டும் போறாது. அதை அனுபவிக்கும் பாக்கியமும் (பாக்கியத்துள் பாக்கியம்) வேண்டும். என்னுடைய நண்பர் ஒருவர் அல்லும் பகலும் உழைப்பார். கை நிறைய வருமானத்தில் நிறைய பொருட்களை வாங்குவார். ஆனால் எதுவுமே நிலைத்து வராது. (வாங்கிய சில மாதத்தில் பொருள் சேதமாகும்) ஆனால் அவர் வாங்கிய பொருளை வேறு ஒருவர் வைத்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவர் நேர்மையாக தான் உழைக்கிறார். காரணம் அவருக்கு சம்பாதிக்கும் பாக்கியமும் , பொருட்கள் வாங்கும் பாக்கியமும் தான் உண்டு. அனுபவிக்கும் பாக்கியம் இல்லை. அது போல சக்தி வாய்ந்த மந்திரங்களை பார்க்கும்/ கேட்கும் பாக்கியம் இருந்தால் மட்டும் போறாது. உணரும் பாக்கியம் வேண்டும். அதற்க்கு மனதை இறை உணர்வோடு ஒரு முக படுத்துதல் அவசியம். அது படிப்படியாக முயற்சி செய்தால் கண்டிப்பாக வரும். அப்போழுது தான் எதையும் நாம் பூரணமாக அடைய முடியும். நம்முடைய தமிழ் ஹிந்து வாசக உறுப்பினர்கள் யாவரும் அத்தகைய பரிபூரண நிலையை அடைய எம்பெருமானை வேண்டுகிறேன். நன்றி.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

மகத்தான மந்திரங்கள்  Empty மகத்தான மந்திரங்கள் -1

Post by maniajith007 Thu Nov 10, 2011 4:03 pm

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இதை தொடர்கிறேன் மந்திரங்கள் என்றாலே ஏதோ மாய வித்தை என்ற நிலைக்கு நாம் மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.முன்பு அநேகமாக இன்றும் சில பகுதிகளில் மந்திரவாதிகள் யென சிலரை காணமுடியும் பில்லி சூனியம் செய்வினை வைப்பது எடுப்பது போன்றவைகளை செய்பவர்கள் மந்திரங்களை ஒரு சூனிய நிலைக்கு கொண்டு சென்று விட்டனர். வேத மந்திரங்களோ சரியான அணுகுமுறை மற்றும் ஆர்வமின்மையின்மையால் பொதுஜன பார்வைக்கு அப்பால் சென்று விட்டது.மாற்று மத அன்பர்கள் ஒரு குறிப்பிட்ட மந்திர மொழி பெயர்ப்பை படித்து அதனை மேற்கோள் காட்டும் போது அது சரியா தவறா என நாம் உணர முடியா நிலைக்கு நாம் தள்ளபட்டுள்ளோம். அதற்க்கு நமது வேதங்களையும் பதிகங்களையும் படிப்பதும் அவற்றை தொடர்ந்து நமது வாழ்வில் பயன்படுத்துவதன் மூலமும் எண்ணற்ற பயன்களையும் நமது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை விடாது காக்கும் பணியினையும் நாம் செய்யமுடியும். விக்னேஷ்வரை வணங்கி தொடங்குவோம் ,விக்னங்களை கலையும் விக்னேஸ்வரன் இந்த பணியை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்
மகத்தான மந்திரங்கள்  Beautiful+Lord+Ganesh+Picture
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

எந்த காரியத்தை தொடங்கும் பொழுதும் இந்த மந்திரத்தை தியானித்து விநாயகரை வணங்கி தொடங்கி வேண்டும். ஜெபிக்க துவங்கியவுடன் பெரும்பாலும் நம்மவர்கள் எதிர்பார்ப்பது அதன் பலனை மட்டுமே ஆனால் அந்த மந்திரத்தின் அர்த்தம் பொருள் பற்றி எதும் அறிவதில்லை மேற்குறிப்பிட்ட மந்திரத்தின் பொருள்
விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து

பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

இந்த கணபதி தியானம் என்ற மிக சக்திவாய்ந்த மந்திரத்தை எந்த செயலை தொடங்கும் போதும் கூறி வழிபடுவதன் மூலம் விநாயகர் தடைகளை தகர்த்து வெற்றி பெற அருள்வார். பொருளை உணர்வதன் மூலம் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும் சற்று காண்போம் உபநிஷத்தில் வரும் ஒரு மந்திரத்தை பார்ப்போம்

ஓம் அசதாமோ சத்கமய
தமசாமோ ஜ்யோதிர்காமய
ம்ரித்யோர் மாம்ரிதம் கமய
இந்த சாந்தி மந்திரத்தினை ஒரு இயந்திரம் போல ஜெபிப்பதற்க்கும் உணர்ந்து மகிழ்ந்து ஜெபிப்பதற்க்கும் வேறுபாடுகள் அதிகம். மந்திரங்கள் அதிர்வுகளை ஏற்ப்படுத்துகின்றன என்பது உண்மையே ஆனாலும் அதன் அழகியலை அதில் கூறபட்டிருக்கும் இறைவனின் புகழை அதன் அர்த்தம் தருகிற மனநிம்மதியை நாம் புறந்தள்ளுவது போலாகும் சரி இந்த சாந்தி மந்திரத்தின் பொருள் காண்போம்

அறியாமையில் இருந்து உண்மைக்கு வழி நடத்தி செல்
இருளில் இருந்து ஒளிக்கு வழி நடத்தி செல்
அழிவிலிருந்து அழிவற்ற தன்மைக்கு வழி நடத்தி செல்


Last edited by maniajith007 on Thu Nov 10, 2011 4:09 pm; edited 1 time in total
maniajith007
maniajith007

Posts : 10
Join date : 29/09/2011

Back to top Go down

மகத்தான மந்திரங்கள்  Empty Re: மகத்தான மந்திரங்கள்

Post by Arun Iyer Thu Nov 10, 2011 4:07 pm

Very Nice
Arun Iyer
Arun Iyer

Posts : 24
Join date : 10/11/2011
Age : 39
Location : Chennai

Back to top Go down

மகத்தான மந்திரங்கள்  Empty Re: மகத்தான மந்திரங்கள்

Post by Venkatesh A.S Fri Nov 11, 2011 2:17 am

மிக்க நன்றி. மேலும் தொடர்ந்திட வேண்டுகிறேன்.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

மகத்தான மந்திரங்கள்  Empty Re: மகத்தான மந்திரங்கள்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 6:22 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மகத்தான மந்திரங்கள்  Empty Re: மகத்தான மந்திரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum