இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


வேள்வியும் தமிழரும் (பகுதி-1)

3 posters

Go down

வேள்வியும் தமிழரும் (பகுதி-1) Empty வேள்வியும் தமிழரும் (பகுதி-1)

Post by சாமி Wed Apr 04, 2012 1:32 am

வேள்வி என்பது தமிழ்ச் சமுதாயத்திற்குப் புதிதல்ல. சங்க காலத்திலேயே வேள்விகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்தமைக்கு சங்க நூல்களில் பல சான்றுகள் கிடைக்கின்றன.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
ஒரு பாண்டியனுக்கு பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்றே பெயர். ‘பக்ருளியாற்று மணலினும் பல்யாண்டு வாழ்க’ என்று புறநானூற்றில் இவன் வாழ்த்துப் பெறுவதால் குமரிக்கண்டமும், பக்ருளியாறும் கடல் கொள்ளப்படுவதற்கு முன்பே நம் தமிழகத்துப் பாண்டி நாட்டினை ஆண்டவன் என்று அவனது காலத்துப் பழமை புலப்படுகிறது.
நெட்டிமையார் என்ற ஒரு புறநானூற்றுப் புலவர். இப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டிப் பாடுவதாக புறநானூற்றில் 15ஆம் பாட்டாக ஒன்று வருகிறது. அதில் அவர் கூறுகிறார்.
“பாண்டியனே! உன்னைப் பகத்துப் போராடித் தோற்று வசையை ஏற்றுக்கொண்டோர் பலர்; அறம், பொருள், இன்பம், வீடு என்ற நல்ல நால் வேதத்துக் கூறியவாறு வேள்வி பல செய்து முடித்து அவ்வேள்விச் சாலைகளில் நீ நட்ட யூபத்தூண்கள் பல. இதில் நின்னால் மேற்படி பகைப்புல மன்னர் வசையுற்ற தொகையோ அல்லது நீ நட்ட யூபத்தூண்களின் தொகையோ, இவற்றுள் எதன் தொகை அதிகம் என்று கூறுவது என்று தெரியவில்லையே” என்று அவனைப் பாராட்டுகிறார்.
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் பலர்கொல்? புரையில்
நற்பனுவல் நால் வேதத்(து)
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கல் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பல்கொல்?


இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி
இப்பாண்டியன் மட்டுமா? யாகத்துடன் இனைத்துப் பேசப்படும் ஒரு சோழமன்னனும் புறநானூற்றில் காணப்படுகிறான். அவன் பெயர் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி. இவனது காலம் மேற்கூறிய பாண்டியனுக்கு மிகப்பிற்பட்ட காலம் என்பது தெரிகிறது. இவன் சங்ககாலச் சோழ வேந்தருள் காலத்தால் பிற்பட்டவன் என புறநானூற்றுக் குறிப்புரை விளம்புவதே இதற்குச் சான்றாகும்.

(தொடரும்)
(நன்றி: தமிழ் வேள்வி புத்தகம்)


Last edited by சாமி on Mon Apr 09, 2012 12:23 am; edited 1 time in total
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

வேள்வியும் தமிழரும் (பகுதி-1) Empty Re: வேள்வியும் தமிழரும் (பகுதி-1)

Post by பத்மநாபன் Thu Apr 05, 2012 6:55 pm

நன்றி சாமி அவர்களே!
எதையுமே பெரிதாகத்தான் எழுதுவீர்களோ ?

உண்மையை சொல்வதற்கு தைரியம் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது.
பத்மநாபன்
பத்மநாபன்

Posts : 28
Join date : 05/04/2012

Back to top Go down

வேள்வியும் தமிழரும் (பகுதி-1) Empty Re: வேள்வியும் தமிழரும் (பகுதி-1)

Post by svelan74 Thu Apr 05, 2012 7:05 pm

திரு சாமி அவர்களுக்கு,

தாங்கள் சுட்டிக் காட்டியுள்ள புறநானூற்று பாடலில் பல வடமொழி சொற்கள் வருகின்றனவே??
வேத, ஆவுதி, யூபம் முதலிய வடமொழி சொற்களை இந்த பழம்புலவர்கள் எப்படி எடுத்தாண்டனர்? தங்களின் கூற்றுப்படி ஆரியர் வருகைக்கு பின் தானே வடமொழி வந்திருக்க வேண்டும்?

இராசசூயம் என்பதும் வடமொழி சொல் தானே?
தயவு கூர்ந்து விளக்க முடியுமா?

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

வேள்வியும் தமிழரும் (பகுதி-1) Empty Re: வேள்வியும் தமிழரும் (பகுதி-1)

Post by சாமி Tue Apr 10, 2012 5:48 pm

svelan74 wrote:திரு சாமி அவர்களுக்கு,

தாங்கள் சுட்டிக் காட்டியுள்ள புறநானூற்று பாடலில் பல வடமொழி சொற்கள் வருகின்றனவே??
செந்தில்


இந்தச் சொற்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்களே. என்னுடைய 'வேதம் = தூய தமிழ்ச் சொல்' பதிவைப்பார்க்கவும்.
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

வேள்வியும் தமிழரும் (பகுதி-1) Empty Re: வேள்வியும் தமிழரும் (பகுதி-1)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum