இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இறைவனும் பிரசாதமும்

4 posters

Go down

இறைவனும் பிரசாதமும் Empty இறைவனும் பிரசாதமும்

Post by ராகவன் Sun Apr 08, 2012 12:03 am



பால், தேன், பஞ்சாமிர்தம், திருநீறு என பல பொருட்களில் தெய் வங்களுக்கு அபிஷேகம் செய்வர். ஆனால், ஐப்பசி மாத பெளர்ண மியன்று சிவன் கோவில்களில் உள்ள சிவலிங்கங்களுக்கு சாதத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.

மற்ற பொருட்களை விட நம் அன்றாட வாழ்வில் சாதம் முக்கியத் துவம் பெறுகிறது. நாம் சாப்பிடும் போது, ‘சாதம்’ என்று பெயர் பெறும் இப்பொருள், இறைவனுக்கு படைக் கப்பட்டால் பிரசாதம் ஆகிறது. ‘ப்ர’ என்ற சொல்லுக்கு கடவுளுடன் சம்பந்தமுள்ளது என்று பொருள்.

அரண்மனைக்கு வந்தார் ஒரு மகான். அவரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினான் ராஜா. குருவும் சாப் பிட்டார். ஒரு அறையில் ஓய்வெடுக் கச் சென்றார். அங்கே ஒரு முத்து மாலை தொங்கியது. என்ன காரணத் தாலோ அதை எடுத்துக் கொள்ள வேண்டுமென மகானுக்கு தோன்றியது.

சந்நியாசத்துக்கு முற்றிலும் மாறாக அதை ஒளித்து வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். மறுநாள் முத்து மாலை காணாமல் போனது தெரிய வந்தது. மகானை யாருமே திருடன் எனச் சந்தேகப்படக் கூட இல்லை. மற்றவர்களிடம் கடும் விசாரணை நடந்தது. அடித்தும் பார்த்தனர். எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

ஆசிரமத்துக்குப் போன மகானின் மனம் சங்கடப்பட்டது. ‘இப்படி திரு டிவிட்டோமே, அப்பாவிகள் அடிப டுவரே..’ என வருந்தினார். சற்று நேரத்தில், அவருக்கு வயிற்றுப் போக்கு ஆரம்பித்துவிட்டது. ஐந்தாறு முறை போனதில் மிகவும் சோர்ந்து போனார்.

அதன் பின் ராஜாவிடம் வந்து நடந்ததைச் சொல்லி, தண்டனை தரும்படி கேட்டார். ஆனால் ராஜா நம்பவில்லை.

‘யாரோ ஒரு திருடனைக் காப் பாற்ற, நீங்கள் உங்கள் மீது பழி போட்டுக் கொள்கிaர்கள்..’ என்று சொல்லி, அவரைத் தண்டிக்க மறுத்து விட்டான். திரும்பத்திரும்ப தன் நிலையை மகான் சொல்லவே, ஒரு வழியாக நம்பிய ராஜா, ‘எதற்காக இந்த திருட்டு புத்தி இவருக்கு வந் தது?’ என ஆராய்ந்தான்.

அரண் மனையில் விசாரித்த பேது, சில திருடர்கள் கடத்திச் சென்ற அரி சியை அரண்மனைக் களஞ்சியத்தில் வைத்திருந்ததும், அதைக் கொண்டு சமையல் செய்து மகானுக்கு உணவ ளித்ததால், இத்தகைய மனநிலை அவருக்கு ஏற்பட்டது என்பதும் தெரிய வந்தது.

எனவே, உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என் பதை வலியுறுத்தவே, சிவபெருமா னுக்கு மிக முக்கியமான அன்னத் தால் மதிய நேரத்தில் அபிஷேகம் செய்வர். வெள்ளை சாதம் சமைத்து சிவலிங்கத்தை மூடுமளவு செய்து விடுவர். பின்னர் இதனுடன் கறி வகைகள் சேர்த்து பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுப்பர்.

அன்னாபிஷேக நாளில் சமையல் செய்யும் போதும், விவசாயம் செய் யும் போதும் நல்ல நல்ல எண்ணங் களை மனதில் எண்ணியபடியே பணியில் ஈடுபட வேண்டும் என்ப தைக் கடைப்பிடிப்போம். நல்ல சிந்த னையுடன் சமைக்கப்படும் உணவு நம் உடலுக்கு சிறந்த மருந்தாக அமையும்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

இறைவனும் பிரசாதமும் Empty Re: இறைவனும் பிரசாதமும்

Post by Dheeran Sun Apr 08, 2012 12:45 am

நல்லகருத்து. எதை,எங்கு,எப்படி சாப்பிடுகிறோம் என்பது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். இதையே பெரியோர்கள்

அன்னம்போல் எண்ணம்
எண்ணம்போல் வாழ்க்கை

என்று சொல்லிவைத்தனர். நல்லபதிவு பாராட்டுக்கள்

Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

இறைவனும் பிரசாதமும் Empty Re: இறைவனும் பிரசாதமும்

Post by tmm_raj_ramesh Sun Apr 08, 2012 10:40 am

போதும் என்ற வார்த்தைக்கு முழு உதாரணம் இந்த உணவு. மனிதன் தனக்காக எதையும் இன்னும் வேண்டும் என்று கேட்பான் ஆனால் சாப்பாட்டை மட்டும் தான் போதும் என்பான் அந்த உணவை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து மற்றவர்களோடு சேர்ந்து நாமும் சாப்பிட அனைத்து நன்மைகளும் நடக்கும்
 
தேவையான பதிவிற்கு நன்றி.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

இறைவனும் பிரசாதமும் Empty Re: இறைவனும் பிரசாதமும்

Post by ஹரி ஓம் Sun Apr 08, 2012 8:51 pm

நல்ல உதாரணம் பகிர்வுக்கு நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இறைவனும் பிரசாதமும் Empty Re: இறைவனும் பிரசாதமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum