Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய கனிகள்.
2 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய கனிகள்.
தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதம் (ஏப்ரல் 13) முதல் தேதி மிகவும் சிறப்பான நாள். அன்றைய தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர். எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
மலர்கள் மலருமு, சகல நற்காரியங்களையும், செய்வதற்கேற்ற காலம்இது. சித்திரை வருஷப்பிறப்பினை கேரள மக்கள் விஷூக்கனிகாணல் என்று கொண்டாடுவர் முதல் நாள் இரவு பூஜை அறையை சுத்தம் செய்து திருவிளக்கின் முன் கோலமிட்டு பூ, பழம், வெற்றிலை பாக்கு அணிகலன்கள், முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவற்றை வைப்பர். புத்தாண்டு தினத்தன்று அதிகாலை வீட்டில் உள்ள பெரியவர் ஒருவர் எழுந்து குளித்து பூஜை அறைகளில் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்த பின் வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி பூஜை அறைக்கு அழைத்து வருவர். அவர்கள் கண்களை திறக்காமல் மூடிய நிலையிலேயே வந்து பூஜை அறையில் வைத்துள்ள விளக்குகள் அருகில் வந்து கண்களை திறப்பர்.
முதலில் கடவுளின் திருஉருவப்படங்களையும், ஏற்றிய விளக்கினையும், மாங்கல்யப்பொருட்களையும் பார்ப்பதால் அந்த ஆண்டு மகவும் மகிழ்ச்சிதரும் தமிழ் வருடப்பிறப்பினை முன்னிட்டு திருப்பதி, திருப்பதி, திருத்தனி, முதலான கோயில்களுக்கு சென்று தரிசித்து வருகின்றனர். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாளை கேரள மக்கள் கொன்னம்பூ வைத்து பூஜிக்கின்றனர்.
சித்ரா பௌர்ணமி :
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒர நாள் முன் - பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர்.
சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல ""மா''க் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர்.
இரவு நேரத்தில் சித்திரபுத்திர நாயனார் கதையும் சொல்வதுண்டு, திருவண்ணாமலையிலும், காஞ்சிபுரத்திலும், சித்திரகுப்தனுக்கு தனியாக ஒரு கோயில் உள்ளது. சித்ரா பௌர்ணமி தினத்தில் பூஜைகள், புறப்பாடும் உற்சவமும் நடைபெற்று வருகிறது. இதே போல் குற்றாலம் மலைமீதுள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆதி நாளிலிருந்தே தமிழர் கொண்டாடும், திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி நடைபெறும், சித்திரை திருவிழா தனிச்சிறப்புடையது. தென்னாட்டு கோவில்களில் குறிப்பிடத்தக்க மதுரை கோயிலில் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. அதே போல் திரு நங்கைகள் (அரவாணிகள்) கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழாவும், சித்ரா பவுர்ணமி அன்றுதான் நடைபெறுகிறது. சித்திரை திருநாளில் சித்திர குப்தனை வணங்குவோம். சிறப்பு பலபெறுவோம்.
மேலும் இந்த (நந்தன) தமிழ் புத்தாண்டை தமிழர்கள் மட்டுமின்றி வங்காளிகள் நவபர்ஷா என்றும், காஷ்மீர் மக்கள் நவ்ரே புத்தாண்டு என்றும், சிந்து மகாணாத்தில் வசிக்கும் சிந்து இனத்தவர்கள் சேட்டி -சந்த் என்றும், கேரள மக்கள் விஷீகனிபார்த்தல் (விஷூ கனி காணுதல்) என்றும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். கேரளா கோயில்களில் பூஜையின் போது அர்ச்சகர்கள் பூஜையில் வைத்து பக்தர்களுக்கு கொடுக்கும் பணத்தை கைநீட்டம் என கூறுவதுண்டு. நித்திரைக்கு விடை கொடுக்கும் சித்திரையே வருக. எம் தேசத்து மக்களுக்கு சிறப்பான வாழ்வை அருள்க!.
நன்றி:ஈகரை
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஸ்ரீ குபேர பூஜை அஷ்டோத்தர சத நாம பூஜை
» சரஸ்வதி பூஜை... ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...
» உலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு மாநாடு.
» கலச பூஜை
» தர்ப்பண பூஜை
» சரஸ்வதி பூஜை... ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...
» உலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு மாநாடு.
» கலச பூஜை
» தர்ப்பண பூஜை
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum