இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நம சிவாய-அற்புத மந்திரம்.

4 posters

Go down

நம சிவாய-அற்புத மந்திரம். Empty நம சிவாய-அற்புத மந்திரம்.

Post by Dheeran Wed May 02, 2012 10:43 pm

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே
. - திருஞானசம்பந்தர்

உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர்
பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக்
கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக
விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின்
திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

"வேதங்களின் நடுநாயகமான யஜுர்வேதத்தின் நடுவில், நாலாம் காண்டத்தில் உள்ள ஸ்ரீருத்ரம் என்கிற துதியில், மையமாக உள்ள ஏழாவது அனுவாகத்தில் “நம: சிவாய ச, சிவதராய ச” என்கிற இந்த மாமந்திரம் வேதரத்தினம் போன்று வைக்கப் பட்டுள்ளது”

இம்மந்திரம் அனைத்து உயிர்களின் துன்பங்களையும் ஓதியமாத்திரத்தில் நீக்கவல்ல அற்புத மந்திரமாகும்.

"நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க"

என்று தொடங்கி,

" சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து
"

என்று நிறைவு செய்கிறார் மாணிக்கவாசகர் பெருமான்.

இம்மந்திரத்தைப் பொருளுணர்ந்து சொல்லுவோர் சிவனடிக்கீழ் ஆனந்தம்பெறுவது உறுதி.

ஆகவே இம்மாமந்திரத்தைப் பொருளுணர்ந்தோ அல்லது உணராமலோ எப்படிச் சொல்லினும் உயர்வு உறுதி. ஆயினும் உணர்ந்து சொல்வது சொல்வோர்க்கு மிகவும் சிறப்பானதாகும்.

அவ்வாறானால் இம்மந்திரத்தின் பொருளறிவது எப்படி? அதன் பொருள் அறிய இலக்கணமோ மொழியியலோ நமக்கு உதவாது. காரணம் அப்பொருளானது ஒரு சத்குருவிடமிருந்து உபதேசம் மூலமாக மட்டுமே பெறக்கூடியதாகும். ஒரு சத்குருவை அடைந்து அவரிடம் தீக்ஷை பெற்று இம்மந்திரத்தை ஓதிவரலாம்.

நிலைமை இவ்வாறிருக்க

சாமி wrote:மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.

நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு

என்று திரு.சாமி அவர்கள் பொருள் கூறுவதும், அதற்குப் பிறகு,

கணேஷ் wrote:
ந-நடனம், சிவன் நடனமாடுவதால் ஆடலரசன் என்று பெயர்பெற்றது இங்கு நினைவுகூறத்தக்கது
ம-மந்திரம், மந்திரமாவது நீறு-திருமூலர்,சுந்தரமாவது நீறு, இங்கு சிவனுக்கு சுந்தரன் எனும் பெயரும் உண்டு நீறு என்பது மந்திரமும் சுந்தரமும் ஆவதால் சுந்தரத்துக்கு மந்திரம் எனும் பெயர் வழங்கலாவது பொருத்தமே

என்று மாற்றுப் பொருள் கூறுவதும் தவறே ஆகும்.

சாமி wrote:பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

नमःशिवाय
இதில் வரும்: என்ற குறியீடு வடமொழி நெடுங்கணக்கில் ஓர் எழுத்து ஆகும்.

என்று வேறுமொழி பேசுபவர்கள் ஓதுவது பஞ்சாட்சரம் அல்ல என்றும் அதில் இறைதத்துவம் ஏதும் இல்லை என்றும் ஒருவர் கூறமுடியாது, ஏனென்றால் அவர் பெற்ற உபதேசம் என்னவென்று நமக்குத் தெரியாது. உபதேசம் பெற்றவர் அதை பலர் அறிய சொல்வது வழக்கத்தில் இல்லாதது.

இரண்டாவதாக எழுத்து எண்ணிக்கைப்படி திரு.சாமி சொல்வது உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் நமது தமிழில் " நமச் சிவாய" என்றே எழுதுகிறோம், அதுவும் ஆரெழுத்துதான், அதனால் அவ்வாறு எழுதப்பட்ட பாடலில் வருவது பஞ்சாட்சரம் அல்ல என்று யாரும் கூறமுடியாது,

ஆன்மீகத்தில் முன்னேற நமக்குத்தேவை உணர்வுப்பூர்வமான பக்தியே. அதைவிடுத்து தானும் குழம்பி பிறரையும் குழப்புவதால் யாருக்கும் பயனில்லை.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

நம சிவாய-அற்புத மந்திரம். Empty Re: நம சிவாய-அற்புத மந்திரம்.

Post by கணேஷ் Sat May 05, 2012 7:42 pm

தீரன் அவர்களுக்கு வணக்கம்,
நான் நம சிவாய மந்திரத்துக்கு விளக்கம் தர ஒரு பதிவிடக் காரணம் திரு சாமி அவர்கள் அம்மந்திரத்துக்கு தனக்கு தோன்றியவாறு பொருள்காட்டியதே ஆகும்.
அவர்க்காட்டியமாதிரி அல்லாமல் நான் கூறியதுபோலவும் பொருள்கொள்ள வாய்ப்பு உண்டல்லவா? அவரவர் தனக்குத் தோன்றியவாரெல்லாம் பொருள்சொல்வது தவறு என்பதை எடுத்துக்காட்டவே இப்பதிவை நான் இடவேண்டியதாயிற்று.
எனக்கு வேறெந்த உள்நோக்கமும் கிடையாது.
நன்றி.

கணேஷ்

Posts : 22
Join date : 13/03/2012
Age : 50
Location : Koimbatore

Back to top Go down

நம சிவாய-அற்புத மந்திரம். Empty Re: நம சிவாய-அற்புத மந்திரம்.

Post by v.sathish Mon Jun 24, 2013 1:04 pm

Dheeran wrote:காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே
. - திருஞானசம்பந்தர்

உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர்
பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக்
கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக
விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின்
திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்..

இன்றைய உலகில் நல்ல வாழ்க்கையைக் கெடுக்க ஏராளமான விஷயங்கள் காத்துக்கொண்டுள்ளன, இவற்றிற்குமத்தியில்  வரு துயர் துடைக்கும் அற்புதமந்திரம் நம சிவாய  இதை எந்தமொழிபேசுவோர் எப்படி எழுதினால் நமக்கென்ன?  அவர்கள் துன்பம்நீங்கி நல்வாழ்வுவாழ அம்மாந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர், யாராயினும் நமசிவாய  என்று பக்தியோடு சொல்பவர்  உயர்ந்தவரே

எனது வாழ்விழும் நான் தொடர்ந்து நமசிவாய  மந்திரம் குறைந்தது 7 முறை சொல்லிவருகிறேன், மலைபோன்று வரும் துன்பமெல்லாம் பணிபோல் அகலுவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்.

ஆகவே வீண் விவாதங்களை விட்டுவிட்டு  வாழ்க்கையை நல்லவண்ணம் வாழ முயற்சி செய்யுங்கள்.

v.sathish

Posts : 4
Join date : 01/07/2012

Back to top Go down

நம சிவாய-அற்புத மந்திரம். Empty Re: நம சிவாய-அற்புத மந்திரம்.

Post by ராகவா Thu Sep 12, 2013 1:36 am

மிக்க நன்றி....
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

நம சிவாய-அற்புத மந்திரம். Empty Re: நம சிவாய-அற்புத மந்திரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum