இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனித்தனியான குரு பெயர்ச்சி பலன்களை எப்படி உணருவது – பாகம் 1

Go down

ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனித்தனியான குரு பெயர்ச்சி பலன்களை எப்படி உணருவது – பாகம் 1 Empty ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனித்தனியான குரு பெயர்ச்சி பலன்களை எப்படி உணருவது – பாகம் 1

Post by tmm_raj_ramesh Fri May 18, 2012 5:41 pm

ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனித்தனியான குரு பெயர்ச்சி பலன்களை எப்படி உணருவது – பாகம் 1

பொதுவாக கிரகப் பெயர்ச்சி பலன்கள் சந்திரன் முதல் கணக்கிடப்படுகிறது. அதாவது ஜென்ம ராசியை முதல் ராசியாகக் கொண்டு பெயர்ச்சி பலன்கள் கூறப்படுகின்றன. அது பொதுவான ஒன்று தான். ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரக சூழ்நிலை தான் உண்மையானது. ஜெனன ஜாதகம் மற்றும் திசையிறுப்பு தான் உண்மையான பலன்களைத் தரும். அதில் கோச்சாரத்தின் பங்கும் உண்டு ஆனால் அது ஜெனன ஜாதகத்ததை வைத்தே கூறப்பட வேண்டும். தனியா கோச்சாரத்தையும் ராசியை வைத்தும் கூறப்படும் பலன்கள் முழுமையாக இருக்காது.

17 மே 2012 வியாழன் மாலை 6-15 மணிக்கு ரிசப ராசிக்கு பெயர்ச்சியாகும் குருபகவான் தரும் பலன்களை ஜெனன கால சாதகத்ததை வைத்து எப்படி கணிப்பது.?


குருவின் பலம்.
ஜெனன கால சாதகத்தில் குரு பகவானின் பலம் என்ன என்று தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அஷ்டவர்க்கம் சட்பலம் மூலமாக குருவின் பலம் என்ன என்று அறிந்துகொள்ளலாம்.

அஷ்டவர்கத்தில் குரு பெறும் பலம் அனைத்து கிரகங்களாலும் உருவானது ஆகும். சட்பலத்தில் அது தனித்துவமான பலமாகும்.

அஷ்டவர்க்கத்தில் தனது சுய வர்க்கத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண் இருந்தால் குரு பலமாக இருக்கிறார் என்று பொருள். அதே போல் சர்வ அஷ்டவர்க்கத்தில் குரு இருக்கும் பாவம் 28 மதிப்பெண்கள் மேல் இருந்தால் நல்ல பாவத்தில் அமர்ந்திருக்கிறார் என்று பொருள். அப்படி அமர்ந்த குரு நன்மையை செய்ய கடமைப் பட்டவராகிறார். மற்றும் மற்ற கிரகங்களால் வரும் தீமையையும் குறைக்க வழி செய்வார்.

சட்பலத்தில் முதல் இரண்டு இடங்களில் வரும் குரு பகவான் நல்லதை குறித்த காலத்தில் செய்து விடுவார். அவருடைய தனிப்பட்ட பலம் அவருடைய பார்வைபட்ட இடங்களில் (5, 7, 9 - பாவங்களில்) நல்ல பலனை ஜாதகர் அடைவர்.

நல்ல நிலையில் உள்ள குரு பகவான் எந்த ராசியானாலும் கோச்சாரத்தில் எந்த நிலையில் இருந்தாலும் நன்மையைச் செய்வார் பிறகு எதற்கு கோச்சாரம் பார்க்கப் பட வேண்டும்?

கோச்சாரத்தில் உள்ள குரு ஜென்ம குருவிற்கு கட்டுப்பட்டவர்.

ஜென்ம குரு பலமில்லாத போது, கோச்சார குருவும் பலமிலந்தால் அங்கே நற்பலன்கள் கிடைப்பதில் தாமதமும் தடைகளும் உண்டாகும். தீமைகளைத் தடுக்கக்கூடிய மனோதைரியம், முடிவெடுப்பதில் தாமதம், சரியான முடிவுஎடுக்க முடியாமை ஏற்படும். வாழ்க்கை முழுவதும் நிதானம் பொறுமை வழிபாடு போன்றவற்றை விடாமல் கடைபிடித்தால் தப்பித்துக் கொள்ளலாம்.

ஜென்ம குரு உள்ள பலமில்லாத போது, கோச்சார குரு பலமாக இருந்தால் அங்கே நற்பலன்கள் கிடைக்கிறதோ இல்லையோ தீயபலன்கள் வரும் முன் ஜாதகர் அதை உணர்ந்து தப்பித்துக் கொள்வார். வாழ்க்கை முழுவதும் நிதானம் பொறுமை வழிபாடு போன்றவற்றை விடாமல் கடைப்பிடித்தால் வெற்றிக்கான வழிகளை உணரமுடியும்.

ஜென்ம குரு பலமாக உள்ள போது, கோச்சார குரு பலமிலந்தால் அங்கே நற்பலன்கள் கிடைக்கும் ஆனால் ஜாதகர் அதை மற்ற வழிகளில் இழப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் வெற்றியை ருசிக்கும் அதே நேரம் நன்கு சிந்தித்து புதிய முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஜென்ம குரு பலமாக உள்ள போது, கோச்சார குருவும் பலமாக இருந்தால் அங்கே நற்பலன்கள் நிச்சயமாக கிடைக்கும். இந்த சமயங்களில் தான் தன்னுடைய புண்ணி பலத்தைச் சேர்க்க தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

மேற்கூறிய எல்லாம் திசா புத்தி அந்தரங்களுக்கு கட்டுப்பட்டவையே. நடப்பு திசா புத்தி அந்தரங்களுக்கும் ஜென்ம மற்றும் கோச்சார குருவிற்கும் உள்ள தொரடர்பை தொடர்ந்து பார்க்கலாம்.


tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum