Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
ஆண்குறியா சிவலிங்கம்?
3 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
ஆண்குறியா சிவலிங்கம்?
லிங்கம் என்ற சொல் வடமொழி என்பர் சிலர். அவ்வாறு கூறி, லிம் – ஒடுக்கம், கம்-தோற்றம் என்று பொருள் விரிப்பர்.இது பிற்காலத்தில் வடமொழியாளர் கூறிய விளக்கம்.
லிங்கம் என்பதற்கு வடமொழியில் குறி என்பதுதான் உண்மைப் பொருள்.
வடவேதங்களில் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சிவலிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழிவாக வட மொழியான ரிக் வேதம் கூறுகிறது.
உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”
என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவலிங்கத்திற்கு கொடுக்கும் விளக்கம்.
இங்கேயும் குறி என்றே கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறி என்பது அடையாளம் என்ற சொல்லில் வருவதே தவிர வடவேதம் கூறுவது போல் அது ஆண்குறியைக் குறிப்பதல்ல. அதனால்தான் சேக்கிழார் அதனை வடமொழிப்பொருளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ‘நிகழ்குறி’ என்று கூறினார்.
இவ்வாறு குறி என்ற சொல்லைக் கொண்டு இழிவுப்பொருளில் வடமொழியாளர் கூறுவதை அப்பர் இவ்வாறு கண்டிக்கிறார்.
“குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியிலீர் மனம் எங்கொல் புகாததே”
தமிழ் ஆர்வலர்கள் சிலர் இலிங்கம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகின்றனர். இலங்கியது இலிங்கம் என்பது அவர்கள் தரும் விளக்கம்.. அந்த அடையாளத்தில் இறைவன் இலங்கி இருப்பதால் அது இலிங்கம் எனப்பட்டது.என்பது அதன் உள்ளுறை.
தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். சிவஞானசித்தியாரில் “மந்திரத்தால் உருக்கோலி” என்று வருவது இதற்குத் துணை நிற்கிறது.
இதுகாறும் கூறியவற்றால் லிங்கம் என்பது வடமொழிச் சொல். இலிங்கம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதை அறியலாம்.
லிங்கம் என்பதற்கு வடமொழியில் குறி என்பதுதான் உண்மைப் பொருள்.
வடவேதங்களில் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சிவலிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழிவாக வட மொழியான ரிக் வேதம் கூறுகிறது.
உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”
என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவலிங்கத்திற்கு கொடுக்கும் விளக்கம்.
இங்கேயும் குறி என்றே கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறி என்பது அடையாளம் என்ற சொல்லில் வருவதே தவிர வடவேதம் கூறுவது போல் அது ஆண்குறியைக் குறிப்பதல்ல. அதனால்தான் சேக்கிழார் அதனை வடமொழிப்பொருளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ‘நிகழ்குறி’ என்று கூறினார்.
இவ்வாறு குறி என்ற சொல்லைக் கொண்டு இழிவுப்பொருளில் வடமொழியாளர் கூறுவதை அப்பர் இவ்வாறு கண்டிக்கிறார்.
“குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியிலீர் மனம் எங்கொல் புகாததே”
தமிழ் ஆர்வலர்கள் சிலர் இலிங்கம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகின்றனர். இலங்கியது இலிங்கம் என்பது அவர்கள் தரும் விளக்கம்.. அந்த அடையாளத்தில் இறைவன் இலங்கி இருப்பதால் அது இலிங்கம் எனப்பட்டது.என்பது அதன் உள்ளுறை.
தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். சிவஞானசித்தியாரில் “மந்திரத்தால் உருக்கோலி” என்று வருவது இதற்குத் துணை நிற்கிறது.
இதுகாறும் கூறியவற்றால் லிங்கம் என்பது வடமொழிச் சொல். இலிங்கம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதை அறியலாம்.
Re: ஆண்குறியா சிவலிங்கம்?
சாமி wrote:svelan74 wrote:
3. கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள சிவனுக்கு தமிழ் வேதம்
கூறும் பெயர் என்ன?
செந்தில்
நண்பரே
கந்தழி மற்றும் நடுதறி என்ற வார்த்தைகள் உண்டு.
உங்களது மற்ற கேள்விகளுக்கு விடையளிக்காதது நேரமின்மையே காரணம்.
கூடிய சீக்கிரம் அளிக்கிறேன்.
நன்றி
http://www.tamilhindu.net/t1966p10-topic#4138
திரு சாமியவர்கள் மேற்காணும்பதிவில் இந்தபதிலை அளிக்கும்போது அவருக்கு லிங்கம் என்பது தூய தமிழ்ச்சொல் எனத் தெரியாமற்போனது ஏனோ?
தமிழில் வடசொற்களை எழுதும்போது இவ்வாறு எழுதுவதுதான் முறை.
ராமன் - இராமன்
ரங்கநாதன் - அரங்கநாதன்
லங்கை - இலங்கை
ரவி - இரவி
லிங்கம் - இலிங்கம்
இது 6 ஆம்வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்குக்கூட நன்றாகத்தெரியும்.
மற்றபடி இக்கட்டுரை வடமொழி ,தமிழ்மொழி மோதல் எனும் பொய்க்கருத்தை உயிர்ப்பிக்கமுயலும் முயற்சியின் ஒருபகுதியாகத்தான் தெரிகிறது.
இவ்வலைத்தளத்தைப்படிக்கும் அனைவரும் தமிழ் கற்றவர்கள்தான். நண்பர் சாமியவர்கள் இவற்றைத் தீர ஆலோசிப்பது அவசியம்.
Dhantaayuthapaani- Posts : 32
Join date : 05/04/2012
Re: ஆண்குறியா சிவலிங்கம்?
வட வேதங்கள் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) தேவர்களை வணங்குபவை. பண்டமாற்று முறை போல. தேவர்களுக்கு அவி கொடுத்தால் நமக்கு பல செல்வங்க்கள் தருவான் என்ற நம்பிக்கை.
அவர்களுக்கு இறைக் கொள்கை கிடையாது. ஆனால் அதை வைத்துக் கொண்டு இறைக்கொள்கை உடைய தமிழர்களை ஏய்ப்பது மிகப்பெரிய மோசடிதான்.
இதெல்லாம் தமிழனுக்குத்தான் தெரியாது. பரம்பொருளுக்கு தெரியாதா என்ன?
அவர்களுக்கு இறைக் கொள்கை கிடையாது. ஆனால் அதை வைத்துக் கொண்டு இறைக்கொள்கை உடைய தமிழர்களை ஏய்ப்பது மிகப்பெரிய மோசடிதான்.
இதெல்லாம் தமிழனுக்குத்தான் தெரியாது. பரம்பொருளுக்கு தெரியாதா என்ன?
பத்மநாபன்- Posts : 28
Join date : 05/04/2012
Similar topics
» அபயகர சிவலிங்கம்!
» சீவன் சிவலிங்கம்!
» இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்
» சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு..
» சீவன் சிவலிங்கம்!
» இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்
» சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு..
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum