Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
உதங்க முனிவர்-நிகழ்வும், செய்தியும்
2 posters
Page 1 of 1
உதங்க முனிவர்-நிகழ்வும், செய்தியும்
உதங்கர் மஹாபாரத காலத்தில் வாழ்ந்துவந்த ஒரு முனிவர். கல்வி கேள்வியில் சிறப்புற்றிருந்த அவர் சிறந்த கிருஷ்ண பக்தரும் கூட. எப்பொழுதும் தேசம் முழுவதும் சுற்றிக்கொண்டிருப்பவராதலால் அவர் கண்ணனிடம் தனக்கு தாகம் எடுக்கும்போதெல்லம் அருந்த நீர் கிடைக்கவேண்டும் எனும் வரத்தைப் பெற்றிருந்தார்.
ஒருமுறை உதங்க முனிவர் பாலைவனம் ஒன்றின் வழியே சென்று கொண்டு இருந்தார். வழியில் அவர் கொண்டு சென்று இருந்த அனைத்து தண்ணீரும் செலவழிந்து விட்டது. தாகம் எடுத்தது. கிருஷ்ணரை நினைத்தார். கிருஷ்ணன் அவரது பக்தியையும் மக்கள் சேவையயும் மெச்சி அவருக்கு இம்முறை தேவாமிர்தத்தை வழங்க விரும்பினார். உடனே இந்திரனிடம் அவருக்கு தேவாமிர்தம் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இந்திரன் தேவர்களைத்தவிர பிறருக்கு அவர்கள் முனிவர்களே ஆனாலும் அமிர்தத்தை தர வழி இல்லையே என பகவானிடம் வினவினான், அனால் பஹவானோ தனது பக்தருக்கு அமிர்தம் வழங்க தான் முடிவு செய்து விட்டதாகவும் உடனே தனது உத்தரவை நிறைவேற்றவேண்டுமென்று இந்திரனிடம் சொல்லிவிட்டர். கண்ணனின் விருப்பத்தைத் தட்டமுடியாத இந்திரன் தான் விரும்பும் வடிவில் சென்று முனிவருக்கு அமிர்தம் தரவும் ஒருவேளை அவர் அமிர்தத்தை அருந்த மறுத்துவிட்டால் மீண்டும் அவருக்கு அமிர்தம் தராமலிருப்பதற்கும்கண்ணனிடம் அனுமதி வேண்டினான். கண்ணன் ஒப்புக்கொண்டார்
இந்திரனும் தன்னை ஒரு சண்டாளன் உருவில் மாற்றிக் கொண்டு அந்த பாலைவனத்தில் சென்று உதங்க முனிவர் அருகில் சென்றான். முனிவர் தாகத்தால் சோர்ந்திருப்பதைக்கண்டு மனம் பதைத்தவனைப்போல் தனது தோலாலான தண்ணீர்ப்பையில் இருந்த அமிர்தத்தை முனிவரின் வாயில் ஊற்றப்போனான், ஒரு சண்டாளனின் தோல்பையிலிருந்தா தண்ணீர் குடிப்பது என்று எண்ணிய முனிவர் வெறுப்போடு அதைத் தட்டிவிட்டு விட்டார். கண்ணன் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டானே என்று நொந்தபடி
அங்கிருந்து நகர்ந்தார். சற்று தூரம் சென்றதும் மயக்கம் அடைந்து விழுந்தார்.
சிறிது நேரம் கழிந்தது. தனது முகத்தில் யாரோ ஒருவர் தண்ணீர் அடிப்பதைக் கண்டு மயக்கம் தெளிந்து எழுந்தவர் முன்னால் கிருஷ்ணர் நின்று கொண்டு இருந்தார். அவரைக் கண்டதும் எழுந்து நின்று அவரை வணங்கிய உதங்க முனிவர் தனக்கு நேர்ந்த கதியைக் கூறினார். அதைக் கேட்டு சிரித்த கிருஷ்ணரும் அவருடைய அறியாமையை எடுத்துக் காட்டினார். அறியாமையினால் உனக்கு நான் இந்திரன் மூலம் அனுப்பிய அமிர்தத்தையும் உன்னால் அடைய முடியவில்லை. சரி, நடந்தது நடந்து விட்டது. இனி இந்த உண்மையை உணர்ந்து நடப்பாய் '' என்று அவரை ஆசிர்வதித்தார்.
ஆக ஜாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வு பார்த்தால் முனிவராக இருந்தாலும் இறை அருளும் கிட்டாமல் போகும் என்று பஹவான் இன்னிகழ்வின் மூலம் உணர்த்தியுள்ளார்.
சமுதாயத்தில் ஜாதி, வசதி, பதவி, உருவம் என பலவகையில் பாகுபடுத்திப்பார்த்து பிரிவேற்படுத்துவதும், ஏற்றத்தாழ்வு பார்ப்பதும் தொன்றுதொட்டு மனிதனின் சுபாவமாக இருந்துவந்துள்ளது. ஆனால் நமது இந்து தர்மமும் அதன் முன்னோடிகளும் தொடர்ந்து இந்த தீமையை அகற்றவே பாடுபட்டனர் என்பது இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
எனவே சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கு இந்துதர்மத்தை காரணமாக்குவதும் ஆரிய திராவிட பாகுபாடு பேசுவதும் சுத்தமான சுயநலவாதம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

» ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு
» ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு
» யோக சூத்திரம் அருளிய ஸ்ரீ பதஞ்சலி முனிவர்
» ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு
» யோக சூத்திரம் அருளிய ஸ்ரீ பதஞ்சலி முனிவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum