இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஒப்பிலாமணிக்கு உன்னத கோபுரம்

Go down

 ஒப்பிலாமணிக்கு உன்னத கோபுரம் Empty ஒப்பிலாமணிக்கு உன்னத கோபுரம்

Post by ராகவன் Fri Jul 30, 2010 4:17 pm

 ஒப்பிலாமணிக்கு உன்னத கோபுரம் 25vmani1

சிவபெருமானை அவமதித்து, மகாயாகம் செய்த தட்சனின் யாகத்தை அழித்து, அவனது ஆணவத்தை அடக்கியவர் வீரபத்திரர் ஆவார். சிவபெருமானின் மறுவடிவமாக விளங்குபவர் வீரபத்திரர்.

இச்சிறப்புமிகு வீரபத்திரர், தவமிருந்து வழிபட்ட திருக்கோயிலாகத் திகழ்வது, வீரபாண்டி ஒப்பிலாமணிநாதர் ஆலயம் ஆகும். இதனால், இத்தலம், "வீரபத்திரர் புரம் என்றும் அழைக்கப்பட்டது.

இதேபோல வேதவியாசரால் உபதேசிக்கப்பட்ட, ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் சாம வேதத்தின் உபதேசத்தினைப் பெற்றவர் ஜைமினி முனிவர் ஆவார். இவர் தொகுத்த இசைப்பெட்டகம், "சாம கான வேதம்' என அழைக்கப்படுகிறது. இந்த சாமகானம் இறைவனுக்கும், இறைவிக்கும் விருப்பமானது என்பது குறிப்பிடத் தக்கது. திருக்கயிலையைப் பெயர்க்க முயன்று சிக்கிக் கொண்ட ராவணன், சாம கானம் பாடியே சிவனருள் பெற்றான். இவ்வளவு ஏன்? "சிவபெருமானே சாம வேதம் ஓதுபவர்' என்று பாடியுள்ளார் அப்பர் பெருமான். அவ்வேதத்தை உபதேசமாகப் பெற்ற ஜைமினி முனிவர் வழிபட்ட ஆலயமாகத் திகழ்வது வீரபாண்டி சிவாலயம் ஆகும்.

மன்னர்கள் காலத்தில், வீரபாண்டியன் பெயரால் அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட ஊர் இது என்பதால், இது வீரபாண்டிய நல்லூர் என அழைக்கப்பட்டது. அது மருவி, இன்று "வீரபாண்டி' என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது.

அமைவிடம் :

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டத்தில், வீரபாண்டி அமைந்துள்ளது. திருக்கோயிலூர்-வேட்டவலம் வழித்தடத்தில், திருக்கோயிலூரிலிருந்து வடக்கே 10 கி.மீ. -வேட்டவலத்திலிருந்து தெற்கே 8 கி.மீ. தொலைவில் ஊர் உள்ளது. சென்னையிலிருந்து தென்மேற்கே 190 கி.மீ., புதுச்சேரியிலிருந்து மேற்கே 80 கி.மீ., விழுப்புரத்திலிருந்து மேற்கே 40 கி.மீ., திருவண்ணாமலையிலிருந்து கிழக்கே 30 கி.மீ. தொலைவில் வீரபாண்டி அமைந்துள்ளது. திருக்கோயிலூரிலிருந்தும் வேட்டவலத்திலிருந்தும் டவுன் பஸ் வசதி உள்ளது.


தொன்மைச் சிறப்பு :

வீரபாண்டி, தொன்மையான ஊர் என்பதற்கும், மன்னர்கள் காலத்தில் மிகவும் சிறந்து விளங்கியதற்கும் இவ்வூரில் அமைந்துள்ள சிவாலயம் மற்றும் பெருமாள் ஆலயங்களில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் சான்றாக அமைகின்றன.

"ஜனநாத வளநாட்டிலுள்ள வானகோபாடி நாட்டின் வீரபாண்டிய நல்லூர்' என இவ்வூர் ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பிலாமணி ஈஸ்வரர் ஆலயத்தின் வடக்குச் சுவரில் கண்டறியப்பட்ட கல்வெட்டின் மூலம் இவ்வாலயத்துக்கு விஜயநகர மன்னர் தேவராய மகாராயர் (கி.பி. 1440) கொடையளித்துள்ள செய்தி தெரியவருகிறது. கட்டிகை தேவராசர் மகன் இளக்கரசன் என்பவன், வரி தீர்வை இல்லாத நஞ்சை, புன்செய் நிலங்களை திருமலைச் செல்வி அம்மன் வீதியுலா உற்சவத்திற்குக் கொடையாக வழங்கியதையும் கல்வெட்டு அறிவிக்கின்றது.

இவ்வாலயத்தின் அருகில் அமைந்துள்ள கரிவரதப் பெருமாள் ஆலயத்தில், இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 13ம் நூற்றாண்டு) மற்றும் விஜயநகர மன்னன் அச்சுத தேவமகராயர் மகனான சதாசிவ தேவ மகாராயர் (கி.பி. 1568) ஆட்சிக் காலத்தில் இவ்வாலயத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கொடைகள் பற்றி விரிவாகக் குறிப்பிடுகின்றன. (இப்பழமையான ஆலயம் மிகவும் சிதிலமடைந்து புனரமைப்பு வேண்டிக் காத்து நிற்கின்றது.)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

 ஒப்பிலாமணிக்கு உன்னத கோபுரம் Empty Re: ஒப்பிலாமணிக்கு உன்னத கோபுரம்

Post by ராகவன் Fri Jul 30, 2010 4:18 pm

ஆலய அமைப்பு :

ஒப்பிலா மணி ஈஸ்வரன் ஆலயத்தில் எளிய நுழைவாயில் உள்ளது. பலிபீடத்தை அடுத்து கலை நயத்துடன் கூடிய கல்மண்டபத்தில் நந்திதேவர் காட்சி தருகின்றார். இந்த நத்தியின் அமைப்பில் புதுமையான தோற்றம் காணப்படுகிறது. இவருடைய இடது முன்கால், கையை மடிப்பது போன்று மேல்நோக்கி மடிந்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும். இதன் காரணம் தெரியவில்லை.

நந்தி மண்டபத்தின் வலது புறம் உற்சவ மூர்த்திகளாக விநாயகர், சந்திரசேகரர், பராசக்தியம்மன், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஆறுமுகசுவாமி, நடராஜர், சிவகாமி, பிரதோஷ நாயகர், அஸ்திர தேவர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் அமைந்துள்ளனர்.

இதையடுத்து மேற்கு நோக்கினால், மூலவர் அதுல்ய நாதேசுவரர் எனப்படும் ஒப்பிலா மணீஸ்வரர் காட்சி தருகின்றார்.

கன்னி மூலையில் விநாயகர் சந்நிதியும், அதையடுத்து வள்ளி-தெய்வயானை உடனாய ஆறுமுகப் பெருமான் சந்நிதியும் அமைந்துள்ளன.

அழகு பொன்னம்மை :

வடமேற்கில், "சௌந்தர்ய கனகாம்பிகை' எனப்படும் "அழகு பொன்னம்மை' சந்நிதி அமைந்துள்ளது. அன்னை தன் பெயருக்கேற்றபடி மதுரை மீனாட்சியையும், திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மையையும் நினைவுறுத்தும் வகையில் எழிலோடு காட்சி தருகின்றாள். அன்னையின் தலை, வலது புறம் சாய்ந்து அடியார்களின் குறைகளைக் காது கொடுத்து கேட்கும் வகையில் உள்ளது நெகிழ வைக்கின்றது.

இந்த அன்னையே விஜயநகர மன்னர் காலத்தில் "திருமலைச் செல்வி அம்மன்' என அழைக்கப்பட்டார்.


தல மரம், தீர்த்தம் :

வன்னியும், கொன்றையும் இத்தலத்தின் விருட்சங்களாகத் திகழ்கின்றன. தீர்த்தமாக "தட்சிண பினாகினி' என்றழைக்கப்படும் தென் பெண்ணையாறு விளங்குகின்றது.

விழாக்கள் :

இவ்வாலயத்தில் பிரதோஷம், மகாசிவராத்திரி, கிருத்திகை, பெüர்ணமி சிறப்பு வழிபாடு, நவராத்திரியில் பத்து நாட்களும் அன்னை அழகு பொன்னம்மைக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, சந்தனக் காப்பு அலங்காரம், சுவாமிக்கு ஐப்பசியில் அன்னாபிஷேகம் முதலானவை நடைபெறுகின்றன.

சூர சம்ஹார விழாவும், ஆண்டு தோறும் வைகாசி அஷ்டமி-நவமியில் அஷ்டபுஜ துர்க்கைக்கு எதிரே சண்டி ஹோமமும் நடைபெற்று வருகின்றன. தை ஐந்தாம் நாள் திருக்கோயிலூர் தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இத்தலம் கல்வி, திருமணம், குழந்தைப் பேறு முதலானவற்றிற்குச் சிறந்த வேண்டுதல் தலமாகத் திகழ்கின்றது.

தரிசன நேரம் :

காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

இவ்வூரின் சிவாச்சாரியார், இவ்வாலயப் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார். இவ்வாலய நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



ஐந்து நிலை ராஜகோபுரம் :

இச்சிறப்புமிகு ஆலயத்தின் ராஜகோபுரம் எழுப்பும் பணி மன்னர்கள் காலத்தில் தொடங்கி, அது தரைமட்டத்திற்கு மேல் எழுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இக்குறையைப் போக்கும் வகையில், இறைவனுக்கு ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி, கடந்த 2001ஆம் ஆண்டு, ஊர் மக்கள் ஆதரவுடன் தொடங்கப்பட்டது. இப்பொழுது இப்பணி முக்கால்பங்கு நிறைவேறியுள்ளது. இன்னும் முடிக்க வேண்டிய கால் பங்குப் பணி, பொருளாதாரப் பற்றாக்குறையினால் தடைபட்டுள்ளது.

""புல்லினால் வருடம் கோடி புது மண்ணால் நூறு கோடி
தூய செங்கல்லாலே வருடம் முன்னூறு கோடி
அல்லியங் கோதே கேளாய் அருள்தரும் ஆலயங்கள்
கல்லினால் அமைத்த பேர்கள் கையிலை வைகுந்தம் மீளார்'' என்கின்றனர் பெரியோர்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum