இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


காத்திற்கும் கேசவன்

Go down

 காத்திற்கும் கேசவன் Empty காத்திற்கும் கேசவன்

Post by ராகவன் Fri Jul 30, 2010 4:23 pm

 காத்திற்கும் கேசவன் 25vmani2


ஸ்ரீ எதிராஜவல்லித் தாயார் சமேத ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த மாம்பாக்கம் கிராமத்தில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளியுள்ளவர் ஸ்ரீமன் நாராயணன். இவர் உபநிஷத்துக்கள் கூறுவது போல "பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை' என்கின்ற ஐந்து நிலைகளில் அருள் பாலிக்கின்றார். எனினும், அர்ச்சையில் (விக்கிரஹ வடிவில்) ஆதவனைப்போல பிரகாசிக்கின்ற தன்னுடைய அருட் தன்மையினாலே, தன்னைச் சரணடைந்தவர்களுக்கு அருள்பாலிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

"தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து' என்பர் பெரியோர். முதலாழ்வார்கள் மூவரையும், திருமழிசை ஆழ்வாரையும், குரு பரம்பரையில் நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீ ராமானுஜ மாமுனியையும், தூப்புல் நிகமாந்த மஹா தேசிகனையும், திருக்கச்சி நம்பிகளையும், கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும், எம்பாரையும் -இப்படி இன்னும் பல மகான்களையும் தொண்டை மண்டலம், வைஷ்ணவ சம்பிரதாயம் வளர்வதற்குத் தந்திருக்கிறது. இவ்வளவு சீர்மை பெற்ற தொண்டை மண்டலத்தில், வைணவ சம்பிரதாயம் தழைத்தோங்கி, "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற பழமொழிக்கிணங்க ஆங்காங்கே திருக்கோயில்கள் நிறுவப் பெற்று, அக்ரஹாரங்கள் ஏற்படுத்தப்பட்டு, இறைப் பற்றுடைய பெரியோர்கள் குடியேறினர். அவ்வாறு தொண்டை மண்டலத்தில் நிறுவப்பட்ட பல்வேறு முக்கியத் திருக்கோயில்களில் அர்ச்சாவதார மூர்த்திக்கு "ஆதிகேசவன்' என்றே திருநாமத்தினைச் சூட்டி, கொண்டாடினர்.

குறிப்பாக பேயாழ்வாரின் அவதாரத் தலமாகிய மயிலையில், ஸ்ரீ ராமானுஜர் அவதாரத் தலமாகிய ஸ்ரீபெரும்பூதூரில், காஞ்சியில், பொய்கையாழ்வார் அவதரித்த தலத்தின் பக்கத்தில் உள்ள அஷ்டபுஜத்தில் அர்ச்சாவதார மூர்த்திகள் "ஆதிகேசவன்' என்றே கொண்டாடப்படுகிறார்கள். அந்த வகையில் தொண்டை மண்டலத்தில், திருக்கழுக்குன்றம்-மதுராந்தகம் சாலையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில், இயற்கைச் சூழல், நீர் நிலைகளோடு அமைந்துள்ள மாம்பாக்கம் கிராமத்தில் அமைந்த கோயிலும் உள்ளது.

இங்கு சுமார் 300-350 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியோர்களால் நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயிலில், ஸ்ரீ எதிராஜவல்லித் தாயார் சமேத ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், - ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ கண்ணன், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ மணவாளமாமுனிகள் ஆகியோரின் மூர்த்தங்களும் உடன் உள்ளன.

பல்லாண்டு காலம் பராமரிப்பு இல்லாத நிலையில், 1998 ஆவணித் திங்களில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கூடி, திருக்கோயிலுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகளை மட்டும் செய்தனர்; சம்ப்ரோக்ஷணமும் விமரிசையாகச் செய்யப் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்ப்ரோக்ஷணம் செய்வது நன்மை தரும் என்ற நிலையில், 2010ல் மீண்டும் அது நடைபெறக் காத்திருக்கிறார் ஸ்ரீ ஆதிகேசவன். மிக முக்கியமான ஆலயப் பணிகளை நிறைவேற்றிட, விக்ருதி வருஷம் ஆவணி மாதத்தில் (2010 ஆகஸ்டு) இந்தக் குடமுழுக்கைச் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாலாலயம் 16.05.10 அன்று செய்யப்பட்டு, திருப்பணிகளும் துவங்கியுள்ளன.

குறிப்பிட்ட காலவரையறையில், வீணான செலவுகளை நீக்கி, அவசியமான திருப்பணிகளை மட்டும் நல்ல ஆன்மீகத் தொண்டுள்ளம் கொண்டவர்களைத் துணையாகக் கொண்டு செவ்வனே செய்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள பெருமாள் பக்தர்கள், இக்கோயிலின் குடமுழுக்கு தடையின்றி நடந்திட தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும், குறிப்பாக மாம்பாக்கம் கிராமத்திற்கு விஜயம் செய்து, ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் திருப்பணிகளைக் கண்ணுற்று அளிக்குமாறு அன்போடு வேண்டுகிறோம். மாம்பாக்கம் கிராமத்திற்கு இதுவரை வருகை தராத அன்பர்கள் ஒரு முறை அங்கு வந்து, ஸ்ரீ எதிராஜவல்லித் தாயாரையும், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளையும் சேவித்து அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum