Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்5. துந்துபிப் படலம்
Page 1 of 1
கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்5. துந்துபிப் படலம்
துந்துபியின் உடலைப் பார்த்து, இராமன் வினாவுதல்
அண்டமும், அகிலமும் அடைய, அன்று அனலிடைப்
பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும், வான்
மண்டலம் தொடுவது, அம் மலையின்மேல் மலை எனக்
கண்டனன், துந்துபி, கடல் அனான், உடல் அரோ! 1
'தென் புலக் கிழவன் ஊர் மயிடமோ? திசையின் வாழ்
வன்பு உலக் கரி மடிந்தது கொலோ? மகரமீன்
என்பு உலப்புற உலர்ந்தது கொலோ? இது எனா,
அன்பு உலப்பு அரிய நீ, உரைசெய்வாய்' என, அவன், 2
துந்துபியின் வரலாற்றைச் சுக்கிரீவன் உரைத்தல்
'துந்துபிப் பெயருடைச் சுடு சினத்து அவுணன், மீது
இந்துவைத் தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான்,
மந்தரக் கிரி எனப் பெரியவன், மகர நீர்
சிந்திட, கரு நிறத்து அரியினைத் தேடுவான். 3
'அங்கு வந்து அரி எதிர்ந்து, "அமைதி என்?" என்றலும்,
"பொங்கு வெஞ் செருவினில் பொருதி" என்று உரைசெய,
"கங்கையின் கணவன், அக் கறை மிடற்று இறைவனே
உங்கள் வெங் கத வலிக்கு ஒருவன்" என்று உரைசெய்தான் 4
'கடிது சென்று, அவனும், அக் கடவுள்தன் கயிலையை,
கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும், குறுகி, "முன்
நொடிதி; நின் குறை என்?" என்றலும், நுவன்றனன் அரோ
"முடிவு இல் வெஞ் செரு, எனக்கு அருள் செய்வான் முயல்க!" எனா, 5
'"மூலமே, வீரமே மூடினாயோடு, போர்
ஏலுமே? தேவர்பால் ஏகு" எனா, ஏவினான் -
"சால நாள் போர் செய்வாய் ஆதியேல், சாரல்; போர்
வாலிபால் ஏகு" எனா - வான் உளோர் வான் உளான். 6
'அன்னவன் விட, உவந்து, அவனும் வந்து, "அரிகள் தம்
மன்னவன்! வருக! போர் செய்க!" எனா, மலையினைச்
சின்னபின்னம் படுத்திடுதலும், சினவி, என்
முன்னவன், முன்னர் வந்து அனையவன் முனைதலும், 7
'இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள்; எவ் உலகினும்,
வெருவரும் தகைவுஇலர், விழுவர், நின்று எழுவரால்;
மருவ அருந் தகையர், தானவர்கள் வானவர்கள்தாம். 8
'தீ எழுந்தது, விசும்புற; நெடுந் திசை எலாம்
போய் எழுந்தது, முழக்கு; உடன் எழுந்தது, புகை;
தோய நன் புணரியும், தொடர் தடங் கிரிகளும்,
சாய் அழிந்தன; - அடித்தலம் எடுத்திடுதலால். 9
'அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில்,
கொற்ற வாலியும், அவன், குலவு தோள் வலியொடும்
பற்றி, ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து,
எற்றினான்; அவனும், வான் இடியின் நின்று உரறினான் 10
'தலையின்மேல் அடி பட, கடிது சாய் நெடிய தாள்
உலைய, வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக, மா
மலையின்மேல் உரும் இடித்தென்ன, வான் மண்ணொடும்
குலைய, மா திசைகளும் செவிடுற, - குத்தினான். 11
'கவரி இங்கு இது என, கரதலம்கொடு திரித்து
இவர்தலும், குருதி பட்டு இசைதொறும் திசைதொறும்,
துவர் அணிந்தன என, பொசி துதைந்தன - துணைப்
பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே. 12
'புயல் கடந்து, இரவிதன் புகல் கடந்து, அயல் உளோர்
இயலும் மண்டிலம் இகந்து, எனையவும் தவிர, மேல்
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய, அன்று
உயிரும் விண் படர, இவ் உடலும் இப் பரிசு அரோ! 13
'முட்டி, வான் முகடு சென்று அளவி, இம் முடை உடற்
கட்டி, மால் வரையை வந்து உறுதலும், கருணையான்
இட்ட சாபமும், எனக்கு உதவும்' என்று இயல்பினின்,
பட்டவா முழுவதும், பரிவினால் உரைசெய்தான். 14
இலக்குவன் துந்துபியின் உடலை உந்துதல்
கேட்டனன், அமலனும், கிளந்தவாறு எலாம்,
வாள் தொழில் இளவலை, 'இதனை, மைந்த! நீ
ஓட்டு' என, அவன் கழல் விரலின் உந்தினான்;
மீட்டு, அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே! 15
மிகைப் பாடல்கள்
'புயலும், வானகமும், அப் புணரியும், புணரிசூழ்
அயலும், வீழ் தூளியால் அறிவு அருந் தகையவாம்
மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார்,
இயலும் மா மதியம் ஈர்-ஆறும் வந்து எய்தவே.' 9-1
அண்டமும், அகிலமும் அடைய, அன்று அனலிடைப்
பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும், வான்
மண்டலம் தொடுவது, அம் மலையின்மேல் மலை எனக்
கண்டனன், துந்துபி, கடல் அனான், உடல் அரோ! 1
'தென் புலக் கிழவன் ஊர் மயிடமோ? திசையின் வாழ்
வன்பு உலக் கரி மடிந்தது கொலோ? மகரமீன்
என்பு உலப்புற உலர்ந்தது கொலோ? இது எனா,
அன்பு உலப்பு அரிய நீ, உரைசெய்வாய்' என, அவன், 2
துந்துபியின் வரலாற்றைச் சுக்கிரீவன் உரைத்தல்
'துந்துபிப் பெயருடைச் சுடு சினத்து அவுணன், மீது
இந்துவைத் தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான்,
மந்தரக் கிரி எனப் பெரியவன், மகர நீர்
சிந்திட, கரு நிறத்து அரியினைத் தேடுவான். 3
'அங்கு வந்து அரி எதிர்ந்து, "அமைதி என்?" என்றலும்,
"பொங்கு வெஞ் செருவினில் பொருதி" என்று உரைசெய,
"கங்கையின் கணவன், அக் கறை மிடற்று இறைவனே
உங்கள் வெங் கத வலிக்கு ஒருவன்" என்று உரைசெய்தான் 4
'கடிது சென்று, அவனும், அக் கடவுள்தன் கயிலையை,
கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும், குறுகி, "முன்
நொடிதி; நின் குறை என்?" என்றலும், நுவன்றனன் அரோ
"முடிவு இல் வெஞ் செரு, எனக்கு அருள் செய்வான் முயல்க!" எனா, 5
'"மூலமே, வீரமே மூடினாயோடு, போர்
ஏலுமே? தேவர்பால் ஏகு" எனா, ஏவினான் -
"சால நாள் போர் செய்வாய் ஆதியேல், சாரல்; போர்
வாலிபால் ஏகு" எனா - வான் உளோர் வான் உளான். 6
'அன்னவன் விட, உவந்து, அவனும் வந்து, "அரிகள் தம்
மன்னவன்! வருக! போர் செய்க!" எனா, மலையினைச்
சின்னபின்னம் படுத்திடுதலும், சினவி, என்
முன்னவன், முன்னர் வந்து அனையவன் முனைதலும், 7
'இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள்; எவ் உலகினும்,
வெருவரும் தகைவுஇலர், விழுவர், நின்று எழுவரால்;
மருவ அருந் தகையர், தானவர்கள் வானவர்கள்தாம். 8
'தீ எழுந்தது, விசும்புற; நெடுந் திசை எலாம்
போய் எழுந்தது, முழக்கு; உடன் எழுந்தது, புகை;
தோய நன் புணரியும், தொடர் தடங் கிரிகளும்,
சாய் அழிந்தன; - அடித்தலம் எடுத்திடுதலால். 9
'அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில்,
கொற்ற வாலியும், அவன், குலவு தோள் வலியொடும்
பற்றி, ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து,
எற்றினான்; அவனும், வான் இடியின் நின்று உரறினான் 10
'தலையின்மேல் அடி பட, கடிது சாய் நெடிய தாள்
உலைய, வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக, மா
மலையின்மேல் உரும் இடித்தென்ன, வான் மண்ணொடும்
குலைய, மா திசைகளும் செவிடுற, - குத்தினான். 11
'கவரி இங்கு இது என, கரதலம்கொடு திரித்து
இவர்தலும், குருதி பட்டு இசைதொறும் திசைதொறும்,
துவர் அணிந்தன என, பொசி துதைந்தன - துணைப்
பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே. 12
'புயல் கடந்து, இரவிதன் புகல் கடந்து, அயல் உளோர்
இயலும் மண்டிலம் இகந்து, எனையவும் தவிர, மேல்
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய, அன்று
உயிரும் விண் படர, இவ் உடலும் இப் பரிசு அரோ! 13
'முட்டி, வான் முகடு சென்று அளவி, இம் முடை உடற்
கட்டி, மால் வரையை வந்து உறுதலும், கருணையான்
இட்ட சாபமும், எனக்கு உதவும்' என்று இயல்பினின்,
பட்டவா முழுவதும், பரிவினால் உரைசெய்தான். 14
இலக்குவன் துந்துபியின் உடலை உந்துதல்
கேட்டனன், அமலனும், கிளந்தவாறு எலாம்,
வாள் தொழில் இளவலை, 'இதனை, மைந்த! நீ
ஓட்டு' என, அவன் கழல் விரலின் உந்தினான்;
மீட்டு, அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே! 15
மிகைப் பாடல்கள்
'புயலும், வானகமும், அப் புணரியும், புணரிசூழ்
அயலும், வீழ் தூளியால் அறிவு அருந் தகையவாம்
மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார்,
இயலும் மா மதியம் ஈர்-ஆறும் வந்து எய்தவே.' 9-1
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு
Similar topics
» கம்ப இராமாயணம் - பால காண்டம்5. திரு அவதாரப் படலம்-1
» கம்ப இராமாயணம் - பால காண்டம்5. திரு அவதாரப் படலம்
» கம்ப இராமாயணம் - அயோத்தியா காண்டம்5. தைலம் ஆட்டுப் படலம்
» கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்10. கார்காலப் படலம்
» கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்9. அரசியற் படலம்
» கம்ப இராமாயணம் - பால காண்டம்5. திரு அவதாரப் படலம்
» கம்ப இராமாயணம் - அயோத்தியா காண்டம்5. தைலம் ஆட்டுப் படலம்
» கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்10. கார்காலப் படலம்
» கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்9. அரசியற் படலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum