இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கந்த ஷஷ்டி விரத மகிமை

Go down

கந்த ஷஷ்டி விரத மகிமை Empty கந்த ஷஷ்டி விரத மகிமை

Post by ஆனந்தபைரவர் Fri Oct 01, 2010 4:27 pm

சிவஸ்ரீ. பூரண. தியாகராஜக் குருக்கள்
B.A.Hons (Cey)
விரதமாவது மனத்தை ஐம்புலன்களின் எண்ணப்படி செல்லாது கட்டுப்படுத்தி உணவை விடுத்தேனும் குறைத்தேனும், மட்டுப்படுத்தி மனம், வாக்கு, காயம் எனும் முக்காரணங்களாலும் இறைவனை வழிபடுதலாகும்.

முருகனுக்குரிய விரதங்கள்:

விரதங்களுள் கலியுகவரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும். ஒன்று வாரத்தையும் மற்றது நட்சத்திரத்தையும் மற்றொன்று திதியையும் கொண்டமைந்தவை யாகும்.

அவை முறையே சுக்கிரவார (ஐப்பசி வெள்ளி) விரதம், கார்த்திகை (கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதல் மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரங்களில் அனுட்டிக்கும்) விரதம், கந்தஷஷ்டி விரதம் ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிறந்த விரதம் கந்த ஷஷ்டி விரதமேயாகும்.

இவ்விரதம் இந்தியாவில் மிகச் சிறந்த பழைமையும் பெருமையும் மிக்க திருச் சொந்தூர், திருப்பரங்குன்றம் முதலிய அறுபடை வீடுகளிலும், மிகச் சிறப்பாக பக்தி பூர்வமாக மக்களால் விரும்பி மன ஒருமைப்பாட்டுடன் அனுட்டிக்கப்படுகின்றது.

வருடந்தோறும் ஐப்பசி மாத தீபாவளியினையடுத்து வரும் பிரதமை முதல் ஷஷ்டியீறாகவுள்ள ஆறு நாட்களிலும் பக்தி சிரத்தையுடன் கைக்கொள்ளப்படும் விரதம் இதுவாகும்.

அடியார் விரும்பும் பேறுகளையும் சகல செளபாக்கியங்களையும் சிறப்பாக புத்திர பாக்கியத்தையும் தரவல்லது இவ்விரதம். இதனை “சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” எனும் பழமொழி உணர்த்துகின்றது.

இதன் வெளிப்படையான பொருள் சாதாரணமானதே. எனினும் உட்பொருள் அர்த்தம் அதிகம் பொதிந்தது. அதாவது. சட்டியில் கந்த ஷஷ்டியில், இருந்தால்= விரதமிருந்தால், அகப்பையில்= கருப்பையில், வரும்= குழந்தைச் செல்வம்= கரு உண்டாகும் என்ற அருமையான கருத்தும் தொனிக்கின்றதல்லவா! பிரதமைத் திதியில் தொடங்கி பகல் 12 நாழிகைக்குக் குறைவின்றிப் பஞ்சமித் திதியும் பின் சட்டித் திதியும் உள்ள தினமே சூரன்போர் நாளாகும்.

இதனை வேடிக்கையாக “சங்கரப் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார்” என்று ஒரு பழமொழி கூறுவர் ஆன்றோர். இதன் உட்பொருள்: சங்கரப்பிளை= சங்கரனின்=பரமசிவனாரின் பிள்ளை= குமரனான கந்தசுவாமியார், சட்டியிலே= கந்தஷஷ்டித் திதியன்று மா= மாமரமாக நின்ற சூரனை, அறுத்தார் = தனது வேற்படையினாலே இரு கூறாகப் பிளந்தார்.

பல திருத்தலங்களிலே இவ்வாறு நாட்களும் தீவிர முருகனடியார்கள் முழு உபவாசமாக அன்ன ஆகாரமின்றி பகல் முழுதும் தூயராகக் கோவில் களிலேயே தங்கிக் காப்புக்கட்டி முருக நாம பஜனை, பூசை புராண படனம் கேட்டல், ஆகிய இறை சிந்தனையுடன் நீரும் குடிக்காமலிருந்து மாலை பூசை தரிசனம் முடிந்ததும் பானக்கம்= பானகம் எனும் நீராகாரத்தை மட்டும் அருந்தி கடுந்தவமிருப்பது

முதல்நாளான அமாவாசையன்றே ஒருநேர உணவுடன் மறுநாளான பிரதமையன்று அதிகாலை ஸ்நானம் செய்து தூய ஆடையணிந்து கோயிலுக்குச் சென்று திரிகரண சுத்தியுடன் விரதமனுட்டிக்கத் தொடங்க வேண்டும். ஆலயங்களில் ஆரம்ப நாளிலேயே சங்கல்ப்பம் செய்து காப்புக் கட்டி ஆறுநாட்களும் நோன்பினைக் கடைப்பிடித்து ஏழாம் நாளான பாரணையன்று அதிகாலை நீராடி அனுட்டானம் செய்து பாரணைப் பூசையை மனதாரத் தரிசித்து வேண்டி காப்பினை அவிழ்த்துத் தர்ப்பையு டன் குருதட்சனை கொடுத்து அடியார்களுக்கு உணவும் கொடுத்துப் பாரணை செய்தலே யாவரும் கைக்கொண்டு வரும் நடைமுறையாகும்.

இது மிக்க மன ஒருமைப்பாட்டுடன் இன்றும் திருச்செந்தூர் முதலாமறு படை வீடுகளிலேயும், இலங்கையில் யாழ் நகரிலுள்ள முருகன் ஆலயங்களிலும், திருகோணமலையிலே வில்லூன்றிக் கந்தசுவாமி கோவில் முதலிய ஆலயங்களிலும் இன்றும் நடைமுறையிலுள்ளதைக் காணலாம்.

இவ்வாறு அனுட்டிக்க இயலாதோர் முதல் ஐந்து நாட்களிலும் பகல் ஒருவேளை உணவுட் கொண்டு சூரன் போர்த்தினமான ஷஷ்டியன்று உபவாசம் = அன்னாகாரம், நீரருந்துதல் எதுவுமின்றி உபவாசமிருந்து சூரன் போர் முடிய நீராடிக் கடவுள் தரிசனம் செய்து பானகம் மட்டுமருந்தி விரதமிருக்கலாம். சூரன் போரன்று நித்திரையினைத் தவிர்த்தல் வழமை. ஆனால் இது அனைவராலும் கைக்கொள்ள இயலாத ஒன்றே. இயன்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதே!

விரத உத்தியாபனம்: (விரதத்தினை நிறுத்துதல்)

ஆறு, அல்லது பன்னிரண்டு வருடங்கள் உபவாசமாயினும் சரி ஒருபோதுணவாயினும் இடையில் மாற்றமின்றி அனுட்டித்துக் குறித்த வருடம் பூர்த்தியானதும் விரத உத்தியாபனம் செய்து உரியபடி விரதத்தினை நிறுத்துவதே முறையும் வழமையுமாகும்.

விரதம் தோன்றிப் பரவியமை:

முருகப் பெருமான் தாரகாசுரன் சிங்க முகாசுரன் சூரபத்மன் ஆகியோருடன் ஐப்பசிமாத வளர்பிறை முதலாறு நாட்களில் போரிட்டு வென்றார். கந்தன் கருணையினையும் அவரது பேரருட் செயலையுங் கண்டு களிப் பேருவகை கொண்ட தேவர்களும் முனிவர்களும் இவ்வாறு நாட்களையும் புனித நாட்களாகக் கொண்டு நோன்பு அனுட்டித்தனர்.

இதனையே பூலோகமக்களும் கடைப்பிடித்து அறுமுகப் பெருமானின் திருவருள் பெற்றுய்ய இவ்விரதத்தினை அனுட்டிக்கத் தொடங்கினர்.

விதிவிலக்கு:

இவ்விரத நாட்கள் பெரும்பாலும் ஆறுநாட்கள் வரும். ஆனால் ஒருசில வருடங்களில் பஞ்சாங்க நேரக் கணிப்புக்கு அமைய திதிகளின் நேரம் கால அளவு குறைவு ஏற்படுமிடத்து ஐந்து நாட்களும் வரலாம்.

கண்கண்ட தெய்வமாகக் காட்சி தருகின்ற ஷண்முகப் பெருமானைத் தாலாட்டி வளர்த்த கார்த்திகைப் பெண்டிர் ஆறுபேர், படைவீடுகளும் ஆறு, அவருக்குரிய சக்தி வாய்ந்த மந்திர அட்சரங்கள்-அதாவது எழுத்துக்களும் ஆறு யந்திரத்தில் கீறப்படுகின்ற கோணங்களும் ஆறு, ஷட்கோணம் அறுகோணம் என்பர். கைமேல் பலன் அளிக்கின்ற விரதநாட்களும் ஆறு.

விரதகாரர் பெறும் பேறு:

கந்தனுக்கு கந்த விரதமாகிய கந்தஷஷ்டி விரதமனுஷ்டிப்போர்; பெறும் பேற்றை “ஏழையர், வதுவை வேண்டினேற்ற கன்னி யரைச் சேர்வர் வாழு” நன் மகவு வேண்டின் மக்களைப் பெறுவரெ ன்றும், பாழிவாய் மணிச்செஞ் சூட்டுப் பஃறலை யனந்தன் றாங்கு மாழிசூழுலக மெல்லாம் வேண்டினு மடைவர் மாதோ”

இதன் பொருள் ஏழைகள், விவாகஞ் செய்ய விரும்பினால் இயைந்த கன்னியர்களை மணஞ்செய்வர், நீடுழி வாழ்கின்ற நல்லபுதல்வரை விரும்பினால் எந்நாளும் அவரைப் பெறுவர். பருத்தவாயையும் இரத்தினம் பொருந்திய சிவந்த சுடிகையையுமுடைய பலதலைகள் பொருந்திய ஆதிசேடன் சுமக்கின்ற கடல்சூழ்ந்த உலகத்தையெல்லாம் பெறுவர்.

பலன் விழையாது நோக்கிற் பாவம் தொழிந்து சிந்தை நலமுற முமுட்சு வாகிக் குருவினால் ஞானம் பெற்றுப் புலன்வழிச் செலவு நீக்கிப் போதபூ ரணவானந்த வலைகடல் வடிவாங் கந்த னடியிணை நீழல் சேர்வார் (இதன்பொருள்:- யாதொரு பலனையும் விரும்பாது விரதம் அனுட்டிப் போர் பாவம் நீங்கி சித்தசுத்தியுடையவர்களாய் இயல்பாய் முத்தி விருப்பம் எழப்பெற்று, பின் ஞான சற்குருவையடைந்து, ஐம்புலப்பகைவராதியோரை வென்று, பூரண ஞானானந்த சொருபராகும் முருகப் பெருமானின் திருவடி நிழலில் பிறப்பிறப்பு நீங்கிப் பேரானந்தப் பெருவாழ்வு பெறுவர் என்பதாம்). எனவே நாமும் இவ்விரதத்தினை நோற்றுக் கலியுகவரதனும், கண்கண்ட தெய்வமுமாகிய கந்தசுவாமியாரின் திருவருளினால் பூரணமான ஆனந்த வாழ்வு பெற முயலுவோமாக.


நன்றி தினகரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum