இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நான் பறவைகளில் பட்சி ராஜனாக- கருடனாக இருக்கிறேன்

Go down

நான் பறவைகளில் பட்சி ராஜனாக- கருடனாக இருக்கிறேன் Empty நான் பறவைகளில் பட்சி ராஜனாக- கருடனாக இருக்கிறேன்

Post by ஆனந்தபைரவர் Sun Aug 01, 2010 2:57 pm

"நான் பறவைகளில் பட்சி ராஜனாக- கருடனாக இருக்கிறேன்' என்று கீதையில் கூறியுள்ளான் கண்ணபரமாத்மா. நித்யசூரிக ளில் கருடன் இரண்டாமிடத்தை வகிக்கிறார். அனந்தனாகிய ஆதிசேஷனைப்போலவே கருடனும் திருமாலுக்குப் பலவித சேவைகளைச் செய்கிறார்.

அனந்தன், கருடன், விஸ்வக்சேனர் என்ற வரிசையில் அனந்தனான ஆதிசேஷன் இலக்குவனாகவும் பகவத் ராமானுஜராக வும், பின்பு பெரிய ஜீயர் மணவாள மாமுனி களாகவும் அவதரித்தார். விஸ்வக்சேனரோ நம்மாழ்வாராக அவதரித்தார் என்பதை அறிவோம். கருட பகவானோ வேதசொரூபி. ஆளவந்தார் கருடனை, "வேதாத்மா விஹகேஸ்வர' என்று போற்றுகிறார். இவரை பெரிய திருவடி என்றும் போற்று வர். சுவாமி தேசிகனுக்கு அவருடைய ஆசாரியன் கருட மந்திரத்தைத்தான் உபதேசித்தார். அதை ஜெபித்ததால் அவருக்கு ஹயவதனின் அருள் கிடைத்தது. கருடனை கருத்மான் என்றும் அழைப்பார்கள். தீரன் என்பது அதன் பொருளாகும்; யாருக்கும் அஞ்சாதவர்!

இவர் ஒரு சமயம் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை எடுத்து வந்தாராம். (அது தனிக்கதை). அவரை தேவர்களாலும்- ஏன் தேவேந்திரனாலும் தடுக்க முடியவில்லை. தன் இறகுகளை வீசி இந்திரனையே மயக்க மடையச் செய்தார். தேவர்கள் கருடனை ஸுபர்ணன் என்று புகழ்ந்தார்கள். இவரின் வீரத்தில் மகிழ்ச்சி கொண்ட திருமாலே, "உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டாராம். போதாத காலம்- கருடனுக்கும் கர்வம் வந்துவிட்டது! அவர் பரமனைப் பார்த்து, "நானே உமக்கு வரம் தருகிறேன். என்ன வரம் வேண்டும்?' என்று திருப்பிக் கேட்டாராம். திருமாலும், "நாம் எப்போதும் உன் தோளுக்குமேல் இருக்க வேண்டும்' என்றாராம். பிறகு கருடனை நோக்கி, "நீ வரம் ஏதும் கேட்கவில்லையே?' என்று வினவ, "நான் உமக்குத் தலைக்குமேல் இருக்க வேண்டும்' என்று கேட்டார். அதன் படியே திருமாலும் அருளினார். அதனால் தான் நாரணன் கருடனின் தோள் மீதேறி தம் வாகனமாகக் கொண்டார். கருடனைத் தன் கொடியாக ஏற்று தன் தலைக்கு மேல் இருக்கச் செய்தார். இதுதான் நாம் திருக் கோவில்களில் பார்க்கும் கொடி மரத்தின் தத்துவம். கொடி மரத்தின் கீழ் கருடன் சந்நிதி அமைந்திருக்கும்.

தஷப்ரஜாபதியின் பெண்களான விநதை யையும் கத்ருவையும் மரீசி மகரிஷியின் குமாரரான காசிப முனிவருக்கு மணம் முடித்தனர். விநதை, கத்ருவைவிட அழகானவள் என்பதால் இருவருக்குமிடையே பொறாமை இருந்து வந்தது. கத்ரு கர்ப்பம் தரித்து ஆயிரம் விஷப்பாம்பு முட்டைகளை ஈன்றாள். விநதைக்கு முதலில் ஒரு முட்டை பிறந்தது. பல நாட்களாகியும் முட்டை வெடிக்காததால் அவசரப்பட்டு அதைப் பொரித்தாள். அதனால் அதிலிருந்து தோன்றிய அருணனுக்கு இடுப்பின் கீழ் உறுப்புகள் இல்லாமல் போய்விட்டது! அவனை சூரிய பகவான் தன் தேரோட்டியாக ஏற்றுக் கொண்டான்.

இரண்டாவது முட்டை மூலம் பிறந்தவர் கருடன். அதனால் கருடனுக்கு வைனதேயன் என்ற பெயரும் உண்டு. கருட பகவானின் அவதார தினம் ஆடி சுவாதியாகும். ஏற்கெ னவே விநதைக்கும் கத்ருவிற்கும் பகைமை இருந்ததால், கருடனுக்கும் பாம்புகளுக்கும் பகை தொடர்ந்தது. இதனால் ஒரு சூழ்ச்சி மூலம் விநதையை தன் அடிமையாக்கிக் கொண்டாள் கத்ரு. கருடன் தன் தாயின் அடிமைத்தளை நீங்கத்தான் தேவலோகத்திலிருந்து அமிர்த கலசத்தைக் கொண்டு வந்தார். கருடன் நாகங்களைக் கொன்று வந்தார். இதற்கு ஒரு முடிவு வர பிரம்மா, தேவர்களின் கோரிக்கைக்கு ஏற்றபடி சூரியன் தன் தேரின் லகானாக ஒரு பாம்பை ஏற்க, சிவபிரான் ஒரு பாம்பைத் தன் ஆபரணமாகக் கொள்ள, திருமாலானவர் ஆதிசேஷனைத் தன் அரவணையாக (படுக்கை) ஏற்றுக் கொள்ள, சில நாகங்களை கருடனே தன் ஆபரணங் களாக ஏற்றுக் கொண்டார்.

கருடபகவானுக்கு ருத்ரா, ஸுகீர்த்தி என்று இரண்டு தேவிகள். இவர்களே அரங்கநாயகிக்கு இரு கண்களாகத் திகழ்கிறார்களாம். கருட பகவான் திருமாலின் பல லீலைகளில் எப்படி சம்பந்தப்பட்டுள்ளார் என்றறியலாமா?

கஜேந்திர மோட்ச வைபவத்தில், கஜேந்திரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கவ்வி இழுக்க, கஜேந்திரன் திருமாலை "ஆதிமூலமே' என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன் வாயு வேகத்தில் அவரை கஜேந்திரன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்த்தார். அதனை பெரியாழ்வார் "உதவ புள்ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த' என்று தன் பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.

இராமாயண காலத்தில் போர்க்களத்தில் இராம- லட்சுமணர்களை அசுரர் கள் நாகபாசத்தால் கட்டிப் போட, அவர்கள் மயங்கி விழுந்தபோது கருட பகவான் வந்து தன் சிறகு களால் வீசி அவர்களை மூர்ச்சை யிலிருந்து தெளிய வைத்தார்.

கிருஷ்ணாவதாரத்திலும் சத்ய பாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்ததாக வும் கூறுவர்.
கருட பகவானே ஆழ்வார் களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் பெரியாழ்வாரைப் பெருமைப்படுத்தி ராஜவீதிகளில் யானை மீதேற்றி பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டு மகிழ திருமால் கருடாரூடனாக வானில் காட்சி கொடுத்தான்.

திருமாலின் திவ்ய கருட சேவைக் காட்சியைக் கண்டு பெரியாழ்வார் அவனுக்கு யாரேனும் கண் வைத்து விடுவார்களோ (கண் திருஷ்டி) என்று மனம் பதறி, "பல்லாண்டு பல்லாண்டு' என்று பாடுகிறார். அவனுக்கு மட்டுமா பல்லாண்டு? அவனின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கைக்கும், அவன் திருக்கரங்களிலே ஜொலிக்கும் சங்கு சக்கரங்களுக்கும் பல்லாண்டு பாடுகிறார். அவன் இறைவன்; நாம் சாதாரண மானிடன்; நமக்கு என்ன தகுதியிருக்கிறது என்றெல்லாம் பார்க்கவில்லை. அவன்மீது ஏற்பட்ட பரிவு அவரை பரந்தாமனுக்குப் பல்லாண்டு பாட வைத்தது. அதனால்தானோ பூமிப்பிராட் டியை அவரின் திருமகளாய் அவதரிக்கச் செய்து அவளையும் தன் நாயகியாய் ஏற்றுக் கொண்டு அவருக்கு மாமனார் ஸ்தானத்தையும் கொடுத்தான்- பரவையேறு பரமபுருஷனான பரந்தாமன். அதனால்தான் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி அளிக்கிறான் அக்கருணா காகுத்தன்.

மீண்டும் கருடனிடம் வருவோமா? கருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்பதோஷ நிவர்த்தி ஆகிய அனைத்து நலன்களும் கிட்டும். எதிர்வரும் கருட ஜெயந்தியை முன்னிட்டு அனைவரும் கருடனை வணங்கி நலம் பெறலாம்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum