இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா?

+4
balathandayuthapani
krishnaamma
ஆனந்தபைரவர்
venkatesan1985
8 posters

Go down

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா? Empty மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா?

Post by venkatesan1985 Fri Nov 12, 2010 5:59 pm

நமஸ்காரம்,
இந்த குழுமத்தில் நான் இணைந்ததும் முதல் பதிவாக ஆனைமுகத்தானை வணங்கி கணபதி மூலமந்திரத்தை பதிந்தேன்.உடனே குருமுகமாக உபதேசம் பெற வேண்டிய மந்திரத்தை இவ்வாறு பதியலாமா?என்ற கேள்வி எழுந்தது.முற்றிலும் வரவேற்கத்தக்க விஷயம் இது.எனக்கு கால அவகாசம் இன்மையால் இது பற்றி சற்று மேப்போக்காக இங்கு கூறுகிறேன்.

பொதுவாக மந்திரங்கள் அனைத்துமே குருமுகமாக உபதேசம் பெற்றே பாராயணம்,ஜபம் செய்யவேண்டும்.இதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.சரி அப்படியெனில் பல புஸ்தகங்களிலும் பல ஒலிதட்டுகளிலும் பல மந்திரங்கள் அச்சிடப்பட்டு ,ஒலிக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதே அது தவறா?எனில் இல்லை.

பொதுவாக ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.இன்ன மந்திரத்தை இன்ன பலனுக்காக இவ்வளவு உரு ஜபிக்கப்போகிறேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு ஜபிப்பவர்கள் தான்,தான் ஜபிக்கவேண்டிய மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கவேண்டும்.அதை விடுத்து சாதாரணமாக ஆன்மிக ஈடுபாட்டின்காரணமாக இதை தெரிந்துகொள்வதற்கு புஸ்தகத்தை பார்த்தோ,இதுபோல் இணையத்தை பார்த்தோ தெரிந்துகொள்ளலாம்.

ஏன் குரு உபதேசம்?
எதற்காக மந்திரங்கள் குரு உபதேசம் பெற்றே ஜபிக்கவேண்டும் என்றால்,அக்காலத்தில் வேதங்களெல்லாம் ஓலைச்சுவடிகளில் எழுதி படிக்கவில்லை.வாய் வழியாகவே உபதேசிக்கப்பட்டன.அதனால்தான் அதற்கு எழுதாக்கிளவி என்ற பெயரும் உண்டு.மற்ற மந்திரங்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டாலும் அதை எழுதும்போதோ,படிக்கும்போதோ அக்ஷரத்தை தவறாக புரிந்துகொண்டு தவறாக படித்தால் விபரீத பலன் ஏற்பட்டுவிடும்.இக்காலத்தில் கூட புஸ்தகங்களில் அச்சுப்பிழை ஏற்படுவது இயற்கையே.எனவே இம்மந்திரங்களை ஏற்கனவே நன்கு பழகிய ஒருவரிடமிருந்து நாம் கேட்டு தெரிந்து படித்தால் தவறுகள் இன்றி மந்திரத்தை ஜபித்து நாம் வேண்டிய பலனை அடைய முடியும்.அதாவது தவறு இன்றி உச்சரிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே குருமுக உபதேசம்.

எளிமையாகச் சொன்னால், தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அச்சு/இணைய ஊடகம் மூலமாக மந்திரத்தை தெரிந்துகொள்ளலாம்.ஆனால் அதை பயன்படுத்த{ஜபிக்க}வேண்டுமெனில் குருவின் உபதேசம் அவசியம்.மேலும் விளக்கம் தேவை எனில் அளிக்கத்தயாராக உள்ளேன்.
அன்புடன்
ஆதிசைவர்
http://aadhisaivar.blogspot.com

venkatesan1985

Posts : 33
Join date : 11/11/2010
Location : விருத்தாசலம்

http://archakarkural.forumta.net

Back to top Go down

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா? Empty Re: மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா?

Post by ஆனந்தபைரவர் Fri Nov 12, 2010 9:45 pm

அற்புதம் இன்னும் விளக்கமாக எழுதுங்கள்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா? Empty Re: மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா?

Post by krishnaamma Fri Nov 12, 2010 10:09 pm

நல்ல விளக்கம் சிவம் .:) நன்றி !

krishnaamma

Posts : 43
Join date : 08/11/2010

Back to top Go down

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா? Empty Re: மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா?

Post by balathandayuthapani Wed Aug 24, 2011 10:42 pm

மிகவும் சரி நான் என் குரு மூலம் மற்றும் புஸ்தகம் மூலம் வாராகி மூல மந்திரம் தெரிந்து கொண்டேன் அதை சொல்லி நான் பல பலன்கள் பெற்று கொண்டேன் ஆகையால் யாரும் மந்திரங்களை சொல்லலாம் வெற்றி பெறலாம். ஓம் குருவே துணை

balathandayuthapani

Posts : 2
Join date : 24/08/2011
Location : coimbatore

Back to top Go down

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா? Empty Re: மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா?

Post by எல்.கே. மதி நிறை செல்வன் Mon Nov 07, 2011 1:01 pm

கோவை உறுப்பினர் திரு பாலதண்டாயுதபாணி!
தங்களது 24/08/2011 தேதிய மின்-அஞ்சல் கண்டு நான் இந்த பதிலை எழுதுகிறேன்.
மூல மந்திரத்தை உபதேசம் பெறாமலேயே நாமே சொல்லலாமா? என்று கேட்டிருந்தீர்கள்.
நீங்கள் கணினி வழியே கடிதத்தொடர்பு கொள்ளுபவரா? உங்கள் மின்-அஞ்சலில் முகவ்ரியில் சிறு எழுத்துப்பிழை ஏற்படினும், கடிதம் செல்லாது அல்லவா? அதேபோல, எந்த நூலைப்படித்துப் மந்திரங்களை ஓதினாலும், சிறு ஒலிப் பிழையும் முழு முயற்சியையும் பாழடித்து விடும்!பயன் பெற முடியாது! இன்னுமொரு உதாரணம் சொல்லுகிறேன்.
நீச்சல அடிப்பது எப்படி என்று ஒரு பெரிய கலைக்களஞ்சியமே வாங்கிப் படித்தாலும், பின்பு தண்ணீர் உள்ள குளத்தில் விழுந்தால், நீந்த வருமா? யாரேனும் அருகில் இருந்தால்தானே தங்கள் உயிரைக் காப்பாற்ற முடியும்? அதேபோல மூல மந்திரத்தை உபதேசம் பெற பல வழிமுறைகள் உள்ளன.
சென்னையில் வாழ்பவராக இருந்தால், தி.நகரிலுள்ள (எண் 158-வடக்கு உஸ்மான் சாலை) தருமபுர ஆதீனம்-சமயப் பிரசார நிலையத்தில் நேரில் சென்று விபரம் அறிந்து, சிவ தீட்சை பெற்று மூல மந்திரங்களை புதேசம் பெற்று, தினமும் வழிபாடு மேற்கொள்ளலாம். அல்லது, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, நெய்வேலி போன்ற இடங்களிலும் உள்ள சைவ/சிவ திருமுறை இசைப்பயிற்சி மையங்களில் சென்று விபரம் அறிந்து சிவ பூசை செய்ய முயலுங்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது!
அன்புடன்: எல்.கே.மதி நிறை செல்வன்,
7/11/2011.

எல்.கே. மதி நிறை செல்வன்

Posts : 3
Join date : 07/11/2011

Back to top Go down

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா? Empty Re: மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா?

Post by எல்.கே. மதி நிறை செல்வன் Mon Nov 07, 2011 1:03 pm

கோவை உறுப்பினர் திரு பாலதண்டாயுதபாணி!
தங்களது 24/08/2011 தேதிய மின்-அஞ்சல் கண்டு நான் இந்த பதிலை எழுதுகிறேன்.
மூல மந்திரத்தை உபதேசம் பெறாமலேயே நாமே சொல்லலாமா? என்று கேட்டிருந்தீர்கள்.
நீங்கள் கணினி வழியே கடிதத்தொடர்பு கொள்ளுபவரா? உங்கள் மின்-அஞ்சலில் முகவ்ரியில் சிறு எழுத்துப்பிழை ஏற்படினும், கடிதம் செல்லாது அல்லவா? அதேபோல, எந்த நூலைப்படித்துப் மந்திரங்களை ஓதினாலும், சிறு ஒலிப் பிழையும் முழு முயற்சியையும் பாழடித்து விடும்!பயன் பெற முடியாது! இன்னுமொரு உதாரணம் சொல்லுகிறேன்.
நீச்சல அடிப்பது எப்படி என்று ஒரு பெரிய கலைக்களஞ்சியமே வாங்கிப் படித்தாலும், பின்பு தண்ணீர் உள்ள குளத்தில் விழுந்தால், நீந்த வருமா? யாரேனும் அருகில் இருந்தால்தானே தங்கள் உயிரைக் காப்பாற்ற முடியும்? அதேபோல மூல மந்திரத்தை உபதேசம் பெற பல வழிமுறைகள் உள்ளன.
சென்னையில் வாழ்பவராக இருந்தால், தி.நகரிலுள்ள (எண் 158-வடக்கு உஸ்மான் சாலை) தருமபுர ஆதீனம்-சமயப் பிரசார நிலையத்தில் நேரில் சென்று விபரம் அறிந்து, சிவ தீட்சை பெற்று மூல மந்திரங்களை உபதேசம் பெற்று, தினமும் வழிபாடு மேற்கொள்ளலாம். அல்லது, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, நெய்வேலி போன்ற இடங்களிலும் உள்ள சைவ/சிவ திருமுறை இசைப்பயிற்சி மையங்களில் சென்று விபரம் அறிந்து சிவ பூசை செய்ய முயலுங்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது!
அன்புடன்: எல்.கே.மதி நிறை செல்வன்,
7/11/2011.

எல்.கே. மதி நிறை செல்வன்

Posts : 3
Join date : 07/11/2011

Back to top Go down

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா? Empty Re: மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா?

Post by maniajith007 Mon Nov 07, 2011 4:13 pm

மிக அற்புதமான விளக்கம் நன்றி அய்யா
maniajith007
maniajith007

Posts : 10
Join date : 29/09/2011

Back to top Go down

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா? Empty மூல மந்திரம்

Post by Venkatesh A.S Wed Nov 09, 2011 4:17 pm

அய்யா, புத்தகங்களின் வாயிலாக மந்திரங்களை கற்று கொண்டு சொல்வது என்பது அந்த புத்தகத்தின் தரத்தையும் கற்று கொள்பவரின் ஆர்வத்தையும் / எண்ணத்தையும் பொறுத்தது எனலாம் என நினைக்கிறேன். தற்போதைய முன்னேறிய சூழளில் ஒலி/ஒளி வடிவில் ( mp3/mp4/flv ) பார்க்க / கேட்க / கற்க என நிறைய வசதிகளும் / தமிழ் ஹிந்து போன்ற அருமையான இணய தளங்களும் உள்ளன. ஏனெனில் என்னிடம் இசை தட்டு வடிவில் மந்திர ஒலிகள் உள்ளன. உதாரணதிர்க்கு" ஸ்ரீ ருத்ரம்" போன்ற மந்திரங்கள். இவைகள் எந்த அளவிர்க்கு பலன் தரும்? தயவு செய்து கூற முடியுமா? (என்னுடைய கைபேசியின் Hello Tune மஹாலக்ஷ்மி ஸ்தோதிரமாக வைத்திருந்தேன். நிறைய பேர் மிகவும் அருமையாக உள்ளது என்றும் அதில் ஒரு சிலர் தங்களுடைய அழைபிற்க்கும் அதே ஸ்த்தோதிரதையே அச்சு எடுத்து பதிந்தனர். அதே போன்று மிருத்தஞ்சய ஸ்தோதிரம் Caller Tone வைத்து இருந்தேன். சில பேர் கேட்டு தெரிந்து கொண்டனர். இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது 'மந்திரங்கள் சாதாரண மனிதர்களையே இவ்வளவு கவரும் போது எம்பெருமானை (மந்திரத்திர்க்கே உரிய) எவ்வளவு கவரும் - அருள் பெற.)
quote="எல்.கே. மதி நிறை செல்வன்"]கோவை உறுப்பினர் திரு பாலதண்டாயுதபாணி!
தங்களது 24/08/2011 தேதிய மின்-அஞ்சல் நான் இந்த பதிலை எழுதுகிறேன்.
மூல மந்திரத்தை உபதேசம் பெறாமலேயே நாமே சொல்லலாமா? என்று கேட்டிருந்தீர்கள்.
நீங்கள் கணினி வழியே கடிதத்தொடர்பு கொள்ளுபவரா? உங்கள் மின்-அஞ்சலில் முகவ்ரியில் சிறு எழுத்துப்பிழை ஏற்படினும், கடிதம் செல்லாது அல்லவா? அதேபோல, எந்த நூலைப்படித்துப் மந்திரங்களை ஓதினாலும், சிறு ஒலிப் பிழையும் முழு முயற்சியையும் பாழடித்து விடும்!பயன் பெற முடியாது! இன்னுமொரு உதாரணம் சொல்லுகிறேன்.
நீச்சல அடிப்பது எப்படி என்று ஒரு பெரிய கலைக்களஞ்சியமே வாங்கிப் படித்தாலும், பின்பு தண்ணீர் உள்ள குளத்தில் விழுந்தால், நீந்த வருமா? யாரேனும் அருகில் இருந்தால்தானே தங்கள் உயிரைக் காப்பாற்ற முடியும்? அதேபோல மூல மந்திரத்தை உபதேசம் பெற பல வழிமுறைகள் உள்ளன.
சென்னையில் வாழ்பவராக இருந்தால், தி.நகரிலுள்ள (எண் 158-வடக்கு உஸ்மான் சாலை) தருமபுர ஆதீனம்-சமயப் பிரசார நிலையத்தில் நேரில் சென்று விபரம் அறிந்து, சிவ தீட்சை பெற்று மூல மந்திரங்களை உபதேசம் பெற்று, தினமும் வழிபாடு மேற்கொள்ளலாம். அல்லது, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, நெய்வேலி போன்ற இடங்களிலும் உள்ள சைவ/சிவ திருமுறை இசைப்பயிற்சி மையங்களில் சென்று விபரம் அறிந்து சிவ பூசை செய்ய முயலுங்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது!
அன்புடன்: எல்.கே.மதி நிறை செல்வன்,
7/11/2011.[/quote]
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா? Empty Re: மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா?

Post by Dheeran Sun Nov 13, 2011 11:07 pm

அன்பர்களே வணக்கம்,
ஸ்தோத்திரங்களை mp3,mp4 என கேட்கலாம் ஆனால் மந்திரங்களை குரு உபதேசம் மூலம் பெற்று உரிய முறையில் பயன்படுத்துவதே நல்லது. காயத்ரி மந்திரம் போன்ற மந்திரங்களை உரிய உச்சரிப்பு முறையில் பயன்படுத்துவதே நல்லது,பாடலைப்போல் கேட்பது சிறப்பானது அல்ல.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா? Empty Re: மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum