Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
காசியின் தண்டல் நாயகன் தண்டபாணி
Page 1 of 1
காசியின் தண்டல் நாயகன் தண்டபாணி
தமிழகத்தில் பழனி மலையில் எழுந்தருளி இருக்கும் தண்டாயுதபாணி சுவாமியை நாமறிவோம். அதுபோலவே வடக்கே உத்திரப் பிரதேச மாநிலம், காசி மாநகரத்தில் எழுந்தருளியிருக்கிறார் தண்டபாணி சுவாமி.
முன்னவர் பெற்றோர்கள் மாம்பழம் தரவில்லை என்ற கோபத்தில் பழனி மலையில் ஆண்டிக் கோலத்தில் அமர்ந்தவர். இவரோ, சிவபெருமானை சிறு வயது முதலே வழிபட்டுச் சிவனருள் பெற்றவர்.
காசியின் காவல் தெய்வமாக கால பைரவர் போற்றப்பட்டாலும், காசியின் தண்டல் நாயகனாக- அங்கு வருபவர்களையும் வசிப்பவர் களையும் கவனிக்கும் பொறுப்பாளராக இருப்பவர் இந்த தண்டபாணி சுவாமி என்று புராணம் சொல்கிறது.
கந்தமான பர்வதம் என்று சொல்லப்படும் மலைப் பிரதேசத்தில் குணபத்திரன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார். அவர் தேவகண வம்சத்தைச் சார்ந்தவர். குணபத்திர னுக்கு மகப்பேறு இல்லை. அதனால் கவலை கொண்டிருந்த குணபத்திரன், ஒரு நாள் முனிவர் ஒருவரைச் சந்தித்தார். அவரிடம் தன் கவலையைச் சொல்லி பரிகாரம் கேட்டார்.
""நீ சிவபெருமானை நோக்கித் தவமிருந்தால் உனக்கு மகன் பிறப்பான். அவன் சிவனருள் பெற்று சரித்திரம் படைப்பான்'' என்று அருள்வாக்கு சொன்னார்.
குணபத்திரனும் முனிவர் சொன்னதுபோல் சிவனை நோக்கித் தவம் இருந்தார். சிவனருளால், குணபத்திரன் தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். குழந்தைக்கு "ஹரிகேசன்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.
சிறுவயதிலிருந்தே ஹரிகேசன் சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டு திகழ்ந்தான். அவனது சிவபக்தி நாளுக்கு நாள் வளர்ந்தது. "சிவபெருமானை நேரில் தரிசிக்க வேண்டும்' என்று மனஉறுதியுடன் வழிபட்டு வந்தான். ஒரு நாள் தந்தை குணபத்திரன் தன் மகனை அழைத்து, ""ஹரிகேசா, நாம் தேவகண வம்சத் தின் வழி வந்தவர்கள். உலகத்தில் உள்ள சொத்து கள் அனைத்தும் நம் இனத்தவர்களால்தான் காப்பாற்றப்பட்டு வருகின்றன. நமக்குத் தலைவனாக இருக்கும் குபேரனை நீ தெரிந்து கொள்ள வேண்டும். நான் உனக்கு குபேரனின் அருள் கிட்டும்படி மந்திர உபதேசம் செய்கிறேன்'' என்றார்.
ஹரிகேசனோ வேறு எந்த நினைவும் இல்லாமல் சிவ நாமத்தை மட்டுமே ஜபித்த வண்ணம் இருந்தான். ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி னான் ஹரிகேசன்.
"ஜெகஜ்ஜோதியாகப் பிரகாசிக்கும் காசிக்குச் செல்ல வேண்டும்; அங்கு எழுந்தருளி யுள்ள சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும்' என்ற ஆர்வத்தில் காசி நோக்கி நடந்தான்.
மிகவும் ரம்மியமான சூழ்நிலை. எங்கு பார்த்தாலும் அழகுமிக்க நந்தவனங்கள், பூத்துக் குலுங்கும் மலர்த் தோட்டங்கள், காசிக்குப் பெருமை சேர்க்கும் புனித கங்கை நதி...
அந்தப் புனித நதிக்கு அருகில் ஒரு வில்வ மரத்தடியில் தியானத்தில் அமர்ந்தான் ஹரிகேசன். அவன் அமர்ந்த இடத்திற்கு அருகில்தான் சிவ- பார்வதியின் அருள் பெற்ற மணிகர்ணிகா படித்துறை இருந்தது.
ஹரிகேசன், வருடக்கணக்கில் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தான்.
ஒரு நாள், அவன் தவத்தைப் போற்றிய சிவபெருமானும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் அவன்முன் தோன்றினார்கள்.
""ஹரிகேசா, உன் பக்தி எங்களை மகிழச் செய்தது. எங்களை நேரில் தரிசிக்கத் தவமிருந்த நீ பாக்கியவான். நீ எங்களுக்கு மிகவும் பிரியமானவனாகத் திகழ்வதால், இனிமேல் நீ எங்கும் செல்ல வேண்டாம். இந்த ஒளி நிறைந்த பிரதேசமான காசிக்கு இனிமேல் நீதான் தண்டல் நாயகன். இங்கு யார் வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள். அவர்களை இயக்குவது உன் பணி. காசிக்குள் நுழையும் ஒவ்வொரு ஜீவனுக்கும் அன்னம் அளிப்பவனும் உயிர் கொடுப்பவனும் ஞானம் அளிப்பவனும் இனி நீதான். உனக்கு தாரக மந்திரத்தை உபதேசித்து முக்தி அளிக்கிறேன். என்னால் நியமிக்கப்படும் அதிகாரியாக நீ திகழப் போவதால், இந்தத் தண்டாயுதத்தை அளிக்கிறேன். இங்கு வரும் மக்கள் இனிமேல் உன்னை "தண்டபாணி' என்று அழைப்பார்கள்.
நான் சொல்வதை கவன மாகக் கேள். இத்தலத்திற்கு வருபவர்கள் தங்கள் பாவங் களை இங்கு கழுவிச் செல்லவே வருகிறார்கள். இங்கு வந்ததும் இங்குள்ள எழிலான சூழ்நிலையில் மனதைப் பறிகொடுத்து பாவச் செயலில் ஈடுபட்டாலும், சிந்தனை செய்தாலும் அவர்கள் மனதிற்குள் நீ புகுந்து இந்த இடத்தை விட்டு ஓடிவிடும் நிலையை ஏற்படுத்து. அவர்கள் ஏதோ ஒரு பயத்தில் இந்த இடத்தை விட்டுச் சென்று விடுவார்கள். "உன்மத்தம்' பிடித்தவன்போல் காட்சி தரும் ஒருசிலர் இங்கிருந்தால், அவர்களை இறுதிக் காலத்தில் இங்கிருந்து வேறு இடத்திற்கு ஓடிவிடும்படி செய்வது உன் கடமை'' என்று அருளினார்.
சிவனருளால் தேவசரீரம் பெற்ற ஹரிகேசன், தண்டல் நாயகனாகி, தண்டபாணி தெய்வமாக எழுந்தருளினார். காசிக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு தரிசிக்க வேண்டிய தெய்வங்களில் மிகவும் முதன்மையான அந்தஸ்தைப் பெறுகிறார் ஸ்ரீ தண்டபாணி.
தண்டபாணி ஆலயம், கால பைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ளது.
"மணிகர்ணிகா காட்' என்னும் படித்துறைக் கட்டத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சிறிய சந்து வழியாகச் சென்றால்
ஸ்ரீ தண்டபாணி ஆலயத்தை அடையலாம்.
ஸ்ரீ தண்டபாணி திருவுருவம் வெள்ளிக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது. இவரைத் தொட்டு வணங்கலாம்; மலர்களைச் சூட்டலாம். மலர்க் குவியலில்தான் என்றும் காட்சி தருகிறார். தண்டபாணி யைத் தரிசித்தபின், காசியில் உள்ள மற்ற தெய்வங்களைத் தரிசிப்பது சிறப்பு என்கிறார்கள். கடைசியாக தரிசிக்க வேண்டியவர் கால பைரவர்.
தண்டபாணியின் அருள் இருந்தால் வாழ்வில் என்றும் மங்கலம் பொங்கும் என்பது திண்ணம்.
நன்றி நக்கீரன்
முன்னவர் பெற்றோர்கள் மாம்பழம் தரவில்லை என்ற கோபத்தில் பழனி மலையில் ஆண்டிக் கோலத்தில் அமர்ந்தவர். இவரோ, சிவபெருமானை சிறு வயது முதலே வழிபட்டுச் சிவனருள் பெற்றவர்.
காசியின் காவல் தெய்வமாக கால பைரவர் போற்றப்பட்டாலும், காசியின் தண்டல் நாயகனாக- அங்கு வருபவர்களையும் வசிப்பவர் களையும் கவனிக்கும் பொறுப்பாளராக இருப்பவர் இந்த தண்டபாணி சுவாமி என்று புராணம் சொல்கிறது.
கந்தமான பர்வதம் என்று சொல்லப்படும் மலைப் பிரதேசத்தில் குணபத்திரன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார். அவர் தேவகண வம்சத்தைச் சார்ந்தவர். குணபத்திர னுக்கு மகப்பேறு இல்லை. அதனால் கவலை கொண்டிருந்த குணபத்திரன், ஒரு நாள் முனிவர் ஒருவரைச் சந்தித்தார். அவரிடம் தன் கவலையைச் சொல்லி பரிகாரம் கேட்டார்.
""நீ சிவபெருமானை நோக்கித் தவமிருந்தால் உனக்கு மகன் பிறப்பான். அவன் சிவனருள் பெற்று சரித்திரம் படைப்பான்'' என்று அருள்வாக்கு சொன்னார்.
குணபத்திரனும் முனிவர் சொன்னதுபோல் சிவனை நோக்கித் தவம் இருந்தார். சிவனருளால், குணபத்திரன் தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். குழந்தைக்கு "ஹரிகேசன்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.
சிறுவயதிலிருந்தே ஹரிகேசன் சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டு திகழ்ந்தான். அவனது சிவபக்தி நாளுக்கு நாள் வளர்ந்தது. "சிவபெருமானை நேரில் தரிசிக்க வேண்டும்' என்று மனஉறுதியுடன் வழிபட்டு வந்தான். ஒரு நாள் தந்தை குணபத்திரன் தன் மகனை அழைத்து, ""ஹரிகேசா, நாம் தேவகண வம்சத் தின் வழி வந்தவர்கள். உலகத்தில் உள்ள சொத்து கள் அனைத்தும் நம் இனத்தவர்களால்தான் காப்பாற்றப்பட்டு வருகின்றன. நமக்குத் தலைவனாக இருக்கும் குபேரனை நீ தெரிந்து கொள்ள வேண்டும். நான் உனக்கு குபேரனின் அருள் கிட்டும்படி மந்திர உபதேசம் செய்கிறேன்'' என்றார்.
ஹரிகேசனோ வேறு எந்த நினைவும் இல்லாமல் சிவ நாமத்தை மட்டுமே ஜபித்த வண்ணம் இருந்தான். ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி னான் ஹரிகேசன்.
"ஜெகஜ்ஜோதியாகப் பிரகாசிக்கும் காசிக்குச் செல்ல வேண்டும்; அங்கு எழுந்தருளி யுள்ள சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும்' என்ற ஆர்வத்தில் காசி நோக்கி நடந்தான்.
மிகவும் ரம்மியமான சூழ்நிலை. எங்கு பார்த்தாலும் அழகுமிக்க நந்தவனங்கள், பூத்துக் குலுங்கும் மலர்த் தோட்டங்கள், காசிக்குப் பெருமை சேர்க்கும் புனித கங்கை நதி...
அந்தப் புனித நதிக்கு அருகில் ஒரு வில்வ மரத்தடியில் தியானத்தில் அமர்ந்தான் ஹரிகேசன். அவன் அமர்ந்த இடத்திற்கு அருகில்தான் சிவ- பார்வதியின் அருள் பெற்ற மணிகர்ணிகா படித்துறை இருந்தது.
ஹரிகேசன், வருடக்கணக்கில் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தான்.
ஒரு நாள், அவன் தவத்தைப் போற்றிய சிவபெருமானும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் அவன்முன் தோன்றினார்கள்.
""ஹரிகேசா, உன் பக்தி எங்களை மகிழச் செய்தது. எங்களை நேரில் தரிசிக்கத் தவமிருந்த நீ பாக்கியவான். நீ எங்களுக்கு மிகவும் பிரியமானவனாகத் திகழ்வதால், இனிமேல் நீ எங்கும் செல்ல வேண்டாம். இந்த ஒளி நிறைந்த பிரதேசமான காசிக்கு இனிமேல் நீதான் தண்டல் நாயகன். இங்கு யார் வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள். அவர்களை இயக்குவது உன் பணி. காசிக்குள் நுழையும் ஒவ்வொரு ஜீவனுக்கும் அன்னம் அளிப்பவனும் உயிர் கொடுப்பவனும் ஞானம் அளிப்பவனும் இனி நீதான். உனக்கு தாரக மந்திரத்தை உபதேசித்து முக்தி அளிக்கிறேன். என்னால் நியமிக்கப்படும் அதிகாரியாக நீ திகழப் போவதால், இந்தத் தண்டாயுதத்தை அளிக்கிறேன். இங்கு வரும் மக்கள் இனிமேல் உன்னை "தண்டபாணி' என்று அழைப்பார்கள்.
நான் சொல்வதை கவன மாகக் கேள். இத்தலத்திற்கு வருபவர்கள் தங்கள் பாவங் களை இங்கு கழுவிச் செல்லவே வருகிறார்கள். இங்கு வந்ததும் இங்குள்ள எழிலான சூழ்நிலையில் மனதைப் பறிகொடுத்து பாவச் செயலில் ஈடுபட்டாலும், சிந்தனை செய்தாலும் அவர்கள் மனதிற்குள் நீ புகுந்து இந்த இடத்தை விட்டு ஓடிவிடும் நிலையை ஏற்படுத்து. அவர்கள் ஏதோ ஒரு பயத்தில் இந்த இடத்தை விட்டுச் சென்று விடுவார்கள். "உன்மத்தம்' பிடித்தவன்போல் காட்சி தரும் ஒருசிலர் இங்கிருந்தால், அவர்களை இறுதிக் காலத்தில் இங்கிருந்து வேறு இடத்திற்கு ஓடிவிடும்படி செய்வது உன் கடமை'' என்று அருளினார்.
சிவனருளால் தேவசரீரம் பெற்ற ஹரிகேசன், தண்டல் நாயகனாகி, தண்டபாணி தெய்வமாக எழுந்தருளினார். காசிக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு தரிசிக்க வேண்டிய தெய்வங்களில் மிகவும் முதன்மையான அந்தஸ்தைப் பெறுகிறார் ஸ்ரீ தண்டபாணி.
தண்டபாணி ஆலயம், கால பைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ளது.
"மணிகர்ணிகா காட்' என்னும் படித்துறைக் கட்டத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சிறிய சந்து வழியாகச் சென்றால்
ஸ்ரீ தண்டபாணி ஆலயத்தை அடையலாம்.
ஸ்ரீ தண்டபாணி திருவுருவம் வெள்ளிக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது. இவரைத் தொட்டு வணங்கலாம்; மலர்களைச் சூட்டலாம். மலர்க் குவியலில்தான் என்றும் காட்சி தருகிறார். தண்டபாணி யைத் தரிசித்தபின், காசியில் உள்ள மற்ற தெய்வங்களைத் தரிசிப்பது சிறப்பு என்கிறார்கள். கடைசியாக தரிசிக்க வேண்டியவர் கால பைரவர்.
தண்டபாணியின் அருள் இருந்தால் வாழ்வில் என்றும் மங்கலம் பொங்கும் என்பது திண்ணம்.
நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum