இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கயிலைநாதனும் கவி காளமேகமும்

Go down

கயிலைநாதனும் கவி காளமேகமும் Empty கயிலைநாதனும் கவி காளமேகமும்

Post by ஆனந்தபைரவர் Fri Dec 03, 2010 4:29 pm

பண்டித கே.சுப்புலெட்சுமி. எம்.ஏ.

தில்லை ஈசன் பிட்சாடனர் கோலம்:
“நச்சரவம் பூண்ட தில்லைநாதரே, தேவரீர்,
பிச்சை எடுத்துண்ணப் புறப்பட்டும்-உச்சிதமாம்
காளமேன், குஞ்சரமேன், கார்கடல் போல் தான்முழங்கும்
மேளமேன், ராஜாங்க மேன்?”

(காளம்-அடையாளச் சின்னம், குஞ்சரம்-யானை, ராஜாங்கம்-அரசருக்கு உரிய சின்னங்கள், எக்காளம்-ஊதுகுழல்)

சிவபெருமான் பிட்சாடனராக திருவோடு ஏந்தியிருப்பதன் காரணம் என்ன? மக்கள் செய்யும் தீவினைகளை, பாபங்களை அவரது திருவோட்டில் இட வேண்டுமென இரந்து வரும் நிலை என்பது உயர்வான குறிப்பாகும்.

சிதம்பரம் கோவில் முதற் சுற்று வடக்குப் பகுதியில், பள்ளியறைக்கு வடக்குப் பகுதியில் பிட்சாடனர் உருவம் உள்ளது. பாம்பணி நாதரே பிச்சை எடுத்துண்ண வெளியே புறப்படும்போது சூலமாகிய சின்னம், எக்காளம் என்னும் குழல் வாத்தியம், முன்னால் கொண்டு செல்வது ஏன்? யானை முன்செல்ல, மேளம் முதலான வாத்தியங்கள் ஏன்? அரச சின்னங்கள் ஏன்? இந்த ஆடம்பரம் பிச்சை எடுப்பவருக்கு ஏற்புடையது இல்லையே என்பது பாட்டின் பொருள்.

ஆடலன் பிட்சாடனாக நம் பாபங்களை பிட்சையாகக் கேட்பது குறிப்பு. கேட்டும் தராமல் பாபங்களைக் கைக்கொள்வது நம் தவறு என்பதை மறைமுகமாகச் சுட்டுகிறார்.

தில்லை என்ற மரங்களின் கூட்டம் முற்காலத்தில் உண்டு. ஆனால் தற்போது இல்லை என்றாலும், அருகே பிச்சாவரம் என்னும் உப்பங்கழிப் பகுதியில் காண முடிகிறது.
* * * * *

திருவாரூர் தியாகேசர் திருடனம்:
“ஆடாரோ என்னையவ ரன்பரெலாம் பார்த்திருக்க
நீடாரூர் வீதியிலே நின்றுதான்-தோடாரும்
மெய்க்கே பரிமளங்கள் வீசுந் தியாகேசர்
கைக்கே பணமிருந்தக் கால்.”

(ஆடாரோ-நடனமாட மாட்டாரோ, பின்னை-பிறகு, நீடாருர் வீதி-நீண்ட திருவாரூர் வீதி, தோடு ஆரும்-பூவிதழ்களின் ஏட்டில், மெய்-உடல்)

திருவாரூர் தெருக்களில் சிவபெருமான் நடனத்திருக்கோலத்தில் திருவீதி உலா வருகிறார். இதை கவி காளமேகம் குறும்போடு கூறுவது காண்போம்.

“கைக்கே பணமிருந்தக்கால்” கையில் செல்வச் செழிப்பு இருந்தால், தெருவில் வந்து நடமாடுவது போலக் கூறுகிறார். பணம் படைத்தவர் தெருக்கூத்தாடினும் வியப்பு கொள்ளார். “திடீர் தனவந்தர் ஆட்டம் போடுகிறார்கள்” என்று கூறுவது உலக நியதி. மற்றும் உடல் முழுவதும் பரிமள வாசனை என்றால் “உல்லாச வாசி”என்பர்.

இதை வேறு விதமாக ஆன்மிகமாக மாற்றி அமைத்திடல் வேண்டும். பணம் என்பது வடமொழிச் சொல்லாகக் கொண்டால் “பாம்புப்படம் எனப்படும். கைகளில் பாம்பைக் கங்கணமாக அணிந்தவர் என்ற பொருளாகும். அதனிடம் “நாக-ரத்தினம்” என்ற விலை மதிப்பற்ற பொருள் இருப்பதும் பற்றி சிலேடையாகக் கூறுவார். மாலையில் தியாகேசப் பெருமானுக்கு வாசனைப் பெருமானுக்கு வாசனைப் பொருள்களோடு, உதிரி மலர்கள் சாற்றுவதால் அத்திருமேனி மிக்க நறுமணம் கொண்டு பரவச் செய்கிறது.

கோவில் மூலவர் வீதிகளில் எல்லாரும் கண்டுகளித்து, இறையின்பத்தை மக்களும் அனுபவிக்க நடராஜர் கோலத்தில் வருவது ஈசனின் கருணையை வீசுபுகழாக்கி மகிழ்கிறார் காளமேகம்.
* * * * *

திருவொற்றியூர் தியாகராஜர்:
“பாரூ ரறியப் பலிக்குழன்றீர்
பற்றிப் பார்க்குமிடத்
தோரூ ருமில்லை இருக்க
வென்றாலுமுள் ளூரு மொற்றி
பேரூ ரறியத் தியாக ரென்றே
பெரும் பேரும் பெற்றீர்
ஆரூரி லேயிருப் பீரினிப்
போய் விடும் அம்பலத்தே”

(பாரூர் அறிய-உலக ஊர்கள் உணருமாறு, பலிக்குழன்றீர்-பிச்சைக்காக அலைந்தீர், உள்ளூருமொற்றி-இருக்கும் ஊர் ஒற்றியிருப்பது, ஆரூரில்-யாருடைய ஊரில்-திருவாரூரில், அம்பலம்-பொன்னம்பலம்.)

உலக ஊர்கள் அறிய பிட்சாடனர் ஆனீர். சொந்த ஊர் ஏதுமில்லை. இருக்குமிடத்தில் ஒற்றியுள்ளீர். யாரூரிலிருக்கும் பொதுவிடமாம், அம்பலத்தே போய்விடும் என்பது புரிகிறது. ஒற்றியூர் என்பது தள்ளி வைக்கிறது எனக்கொள்ளலாம்.

வேறு:
உலகத்து ஊர்கள் உமதே-தனியாக ஊர் என்று ஏதுமில்லை. பிட்சாடனராக அலைந்ததால் பலருக்கும் பயங்கள் போக்கி நன்மை தரும் செயலால், சொந்தமாக ஊர் என்பது இல்லை. தற்சமயம் இருக்கும் திருஒற்றியூர் தேவே, தியாகேசர் என்ற பெரும் பெயர் பெற்றுள்ளீர். எந்த இடத்திற்கு இனி செல்லப் போகிறீர்கள்? பொது இடத்திற்குப் போய் விடுங்கள். பொன்னம்பலமே உமக்கு உரியதாகும். பொன்னம்பலம், பொது இடம் என்பதும் மாந்தர்தம் இதயம் என்பதும் கொள்ள வாய்ப்பு உண்டு. பக்தியில் நிறைந்தோர் உள்ளமே உமக்கு அம்பலமாகும் என்றும் கூறுவர்.
* * * * *

வைத்தீஸ்வரன் திருக்கோவில் ஈசன்:
“தீத்தானுன் கண்ணிலே, தீத்தானுன் கையிலே
தீத்தானு முன்றன் சிரிப்பிலே-தீத்தானுன்
மெய்யெல்லாம் புள்ளிருக்கு வேளூரா, உன்னை யிந்த
தையலா ளெப்படிச் சேர்ந்தாள்?”

புள்ளிருக்கும் வேளூராம் வைத்தீஸ்வரன் கோவில் சிவனே, நெற்றியில் உள்ள கண் மன்மதனை எரித்தது. இது மன்மதனுக்கு பிரம்மா தந்த சாபம் நிறைவேற நடைபெற்றது.

தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய “தீ” யானது ஈசனின் இடக்கையில் உள்ளது.

திருமால் சினந்தாலும் சிவன் சிரித்தாலும் வெறுமை உண்டாக்கும். நெருப்புக்குச் சமமாகும் என்பர்.

சிவனார் சிரிப்பாலே முப்புரம் எரிந்தது. உடலோ தக தக வென ஜொலிக்கும் சிவந்த திருமேனியாகும்.

இவ்வாறு யாரும் அணுக ஒண்ணாத தோற்றம் கொண்ட ஜோதியனை, சேலையும் தானும் எரியாதவாறு பரமேஸ்வரனை பார்வதி தேவி எப்படித் தழுவினார்? இங்கு தையலான் என்பது அம்மன் திருப்பெயர் “தையல்நாயகி” யைக் குறிப்பதாகும்.

கேள்வியாகப் பாடல் இருப்பதால் தடுக்கும் சக்தி, “தேவி”க்கு உண்டோ? எனக் கேட்பது போல அமைந்திருக்க வேண்டும்.

தடுக்கும் சக்தி என்பது “ஸ்தம்பன வித்தை” என்பர். அக்கினி ஸ்தம்பனம் ஜல ஸ்தம்பனம் என்று நெருப்பில் காத்தல், நீரினில் காத்தல் என்பன அறிந்திருக்க வேண்டும் என்கிறார்.
* * * * *

மதுரை மீனாட்சி:
மாயனார் போற்றும் மதுராபுரிச் சொக்க
நாயனார் பித்தேறினா ரென்றே-நேயமாம்
கன்னன் மொழி அங்கயற்கண் காரிகையாள் ஐயையோ
அன்னமிறங் காமலிருந் தாள்.

மதுரை மாநகர் மீனாட்சியம்மை. அன்ன வாகனம் மீது திருவீதியுலா வருவதைக் கண்டார். வணங்கியவர் நித்தாஸ்துதியாகப் பாடியது.

திருமால் போற்றும்படியான பெருமை மதுரை சொக்கருக்கு உண்டு. கணவராகிய “மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு”ப் பித்துப் பிடித்ததென எண்ணியதால், கருப்பஞ்சாறுபோல் இனிய மொழியும், கயல் போன்ற கண்களுமுடையவள் அன்னம் இறங்கா நிலை கொண்டாளாம். இரு பொருளும் காண்போம்.

தொண்டையில் அன்னம் இறங்கவில்லை.
அன்ன வாகனம் விட்டுக் கீழ் இறங்கவில்லை.

மனிதன் பித்துப் பிடித்தவனாகிவிட்டால் அவன் மனைவிக்கு அன்னம் இறங்காது. திருமாலே போற்றிய பெருமையுடையவர்-இந்த ஈசன். இவர் சுந்தரருக்கு நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து ஆட்கொண்டார். சுந்தரரை “பித்தா” எனப் பாடும்படி கூறினார். சிவனார் முதியவராக வந்துற்றபோது சாட்சியாகக் காட்டிய அடிமை எனக்கூறும் ஓலையில் தன் பெயரை, பித்தர் என்று எழுதியுள்ளது.

இவற்றை எண்ணி கணவனுக்குப் பித்து என்பதால், உணவு இறங்காதது போல, மற்றும் வீதி உலாவில் அன்னத்தின் மீது நெடிய நேரம் இருப்பதையும் ஒப்பிட்டுப் பாடினார்.
* * * * *

விநாயகர், முருகன், சிவன் ஒரே பாடலில்:
“சென்னிமுக மாறுனதால், சேர்கரமுன் வாலுகையால்
இன்னிலத்தில் கோடுஒன் றிருக்கையால்-மன்னுகுளக்
கண்ணுறுத லாலுங் கணபதியும் செவ்வேலும்
எண்ணுரனு நேரா வரே.”

விநாயகர்: வழக்கத்திற்கு மாறான தலை-மனித உடல், துதிக்கை, தந்தம் கொண்டவர். வெல்லத்தால் பிடித்து வைத்தாலும் அங்கும் அருளாட்சி செய்வார்.

முருகன்: ஆறுதலைக் கொண்டு வழக்கிற்கு மாறாக விங்குபவர். ஒளிமிகு பன்னிரண்டு கைகள், மற்றும் குன்றுகளில் வசிப்பவர். சரவணப்பொய்கையில் இவருடைய தோற்றம்-அவதார இடமாகும்.

பரமசிவன்: தலையிலே கங்கையாறு உள்ளது. முன்புறம் ஒளி நிறைந்த நாற்கைகள் உடையவர். கயிலை மலையில் வாழ்பவர். நெற்றிக்கண் அமையப் பெற்றவர். மூன்று அம்சங்களும் ஒன்றே எனப்பாடுவதாகும்.

மாறுளதால் என்பதில் 1.“விநாயகருக்கு” யானைத்தலை மாற்றமாகவுள்ளது. 2.“முருகனுக்கு” ஆறுமுகங்கள் உள்ளன என்பதாகும். 3.“சிவனது” தலையில் கங்கை ஆறு இருப்பதாகும்.

முன்னாலுகையால் என்பதில் 1.விநாயகருக்கு முன்புறம் தொங்கும் துதிக்கை. 2.பன்னிரெண்டு கைகள் முருகனுக்கு உள்ளன (3 ஜ் 4) (முன் நாலு) என்பதும். 3.சிவனுக்கு முற்புறம் நோக்கியபடி நான்கு கரங்கள் என்பதுவாம்.

கோடு எனக்குறிப்பிட்டதும் மூவருக்கும் பொருந்தும். விநாயகரின் ஒற்றைத் தந்தம் ‘கோடு’ எனப்படும். மலை என்ற பொருளில் குன்றுதோறாடும் முருகனுக்கும் பொருந்தும். கயிலை மலை நாதன் என்பதால் சிவனுக்கும் பொருந்தும்.

குளக்கண்ணுறுதலால் என்பதால் விநாயகர் வெல்லப்பிள்ளையாராகவும் அமைவதால், முருகன் சரவணப் பொய்கை என்னும் குளத்தில் தோன்றியதால், நெற்றிக்கண் உள்ளதால் சிவனாகக் கொள்ளலாம்.

இவ்வாறு ஒரே பாடலில் சிவாம்சமாக மூவரையும் பாடியுள்ளார். இவரது தனிப்பாடல்கள் தின்னத்தின்னத் திகட்டாத் தீஞ்சுவை அமுதம் போல அமைந்துள்ளன.

நிறைவாக: வைணவராயிருந்து சைவராகி, அன்னை அகிலாண்ட நாயகியின் அருளால் “கவி காளமேகம்” என்றாகி, இனிய நற்றமிழ்க் கவிகள் தந்துள்ளார். அவற்றுள் சிலவற்றையே சிந்தித்தோம். ஆன்மிகம் ஒளிரும் அருட் பாடல்கள் கற்று, உண்மையுணர்ந்து, உயர்நிலை பெற, அன்னை அருளட்டும். அன்னையவள் அன்பின் அருளால் அகிலம் நன்மைகள் பெறட்டும்.

“சிவாய நம” என்று சிந்தித்து, சிவனின் அடியார்கள் தம் திருவடி போற்றி வணங்குவோம்.


நன்றி அம்மன் தரிசனம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum