இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கிரகங்களும் தன்மைகளும்

Go down

கிரகங்களும் தன்மைகளும்  Empty கிரகங்களும் தன்மைகளும்

Post by ஆனந்தபைரவர் Thu Dec 09, 2010 10:56 pm

கிரகங்களும் தன்மைகளும்  Fig-1d-solar-system-kuiper-belt

சூரிய மண்டலத்தில் உள்வட்டக் கோள்களான புதன், வெள்ளி, பூமி (நிலவு), செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் திடப் பிண்டம் (Solid Matter) கொண்டவை. பூமியில் மட்டும் திடப் பிண்டமும் பெருவாரிக் கடல் நீரும் உள்ளன. ஆனால் வெளிவட்டக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் வாயுக்கோள்கள். திடக்கோள்கள் பரிதியின் மூர்க்க ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு நெருக்கமான நீள்வட்ட வீதியில் சுற்றுகின்றன. அதே சமயத்தில் வெளிவட்ட வாயுக்கோள்கள் உள்வட்டக் கோள்களுக்கு அப்பால் வெகு தொலைவில் சுற்றுகின்றன.

பரிதியின் உள்வட்டக் கோள்களில் புதனுக்கும், வெள்ளிக்கும் துணைக்கோள் இல்லை. செவ்வாய்க் கோளுக்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய துணைக்கோள்கள். பூமிக்கு ஒரு துணைக்கோள். வெளிவட்டத்தில் உள்ள வியாழனுக்கு 63 நிலவுகள், சனிக்கு 62 நிலவுகள், யுரேனசுக்கு 27 நிலவுகள், நெப்டியூனுக்கு 13 நிலவுகள் இருப்பது வியப்பாக உள்ளன.

மேலும் வாசிக்க கீழே உள்ள read more என்ற பொத்தான அழுத்தவும்

சந்திரன்:
பூமிக்கு அருகாமையில் இருக்கும் உப கோள் சந்திரன். அது சுமார் 2,40,000 மைல்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆதனுடைய ரேடியஸ் (ஆரை) 1080 மைல்கள். பூமியை முட்டை (Ellipse) வடிவமாக சுற்றுகின்றது. பூமியை ஒருமுறை சுற்ற 27 நாள் 7 மணித்தியாலம் 43 நிமிடங்கள் 11.5 வினாடிகள் எடுக்கின்றது. இது குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் கொண்டு கணக்கிடப்படுகின்றது. அத்துடன் இது 13.2 டிகிரி கோணத்தில் மேற்கில் இருந்து கிழக்காக பூமியை சுற்றி வருகின்றது.

சில சமயம் சூரியனுக்கு நேர்கோட்டில் செல்லும் சமயமும் பின் 180 டிகிரி அளவில் செல்லும் சமயமும் அமாவாசை, பௌர்ணமி என நாம் அழைக்கின்றோம்.

பூமி:
பூமியானது சரியான உருண்டையாக இல்லை. வடக்கு, தெற்கு சற்று தட்டையாக உள்ளது. பூமியின் மத்திய ஆரம் (Radius) 3963.35 மைல்கள். துருவ ஆரை 3950 மைல்கள். பூமியும் ஒரு கோள் என்றே கொள்ளப்படுகின்றது. பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்ற எடுக்கும் கால அளவு சைடிரியல் நாளாகும். பூமி தன்னைத் தானே சுற்றுவதால் பகல் இரவும்; பூமி சூரினை சுற்றுவதால் பருவ காலங்களும் பூமியில் ஏற்படுகின்றன.

பூமத்திய ரேகை என்பது ஒரு கற்பனைக் கோடு. இது பூமியை சரி பாதியாக வெட்டுகின்றது. மகர, கடக ரேகைகள் என இரு கற்பனை ரேகைகள் மத்திய ரேகைக்கு இரு பக்கங்களிலும் உள்ளன. மகர, கடக ரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதி டாரிக் சோன் (Torrid Zone) அழைக்கப்படும். பூமியானது மேற்கிலிருந்து கிழகே சுற்றுகின்றது.

நட்சத்திர ஒளியும் கோள்களின் ஒளியும் ஒரேமாதிரியாகத் தோன்றினாலும் நட்சத்திர ஒளி மினுமினுக் கென்று விட்டு விட்டு ஒளிரும். ஆனால் கோள்களின் ஒளி ஒரே சீராக ஒளிரும். நட்சத்திரங்கள் ஸ்தானத்தை மாற்றுவதில்லை ஆனால் கோள்கள் மறுகின்றன். சிலசமயங்களில் கிழக்கில் இருந்து மேற்காகவும் மற்ற சமயங்களில் மேற்கில் இருந்து கிழக்காகவும் மாறுகின்றன.

புதன்:
சூரியனுக்கு மிக அருகாமையில் காணப்படுவது புதன். இதன் குறைந்த தூரம் 36 மில்லியன் மைல்கள். இது மிக சிறிய கிரகம். இதன் விட்டம் சுமார் 3,000 மைல்கள். சந்திரனைவிட சுமார் 1.5 மடங்கு பெரியது. மிகவும் வேகமாக சுற்றும் ஒரு கிரகமாகும். இது சூரியனுக்குள்ள கோணத்தில் மாறுதல் இல்லாது இருப்பதற்காக 18 முத்ல் 28 டிகிரி வரை உள்ள கோணத்தை அனுசரித்து வருகின்றது.

சுக்கிரன்:
சுக்கிரன் சூரிய அஸ்தமன காலத்தில் வானத்தில் காணக்கூடியதாக இருக்கும். நீளம் (Elongation) 48 டிகிரி. மற்ற கிரகங்களைவிட அதிக பிரகாசமானது. இதன் விட்டம் சுமார் 7580 மைல்கள். பூமியை விட சற்று பெரிது. இதில் பிராண வாயு இல்லை. அடர்த்தியான காற்று மண்டலம் இதன் பரப்பை மறைக்கின்றது. இது பூமியின் சகோதரி எனவும் அழைப்பார்கள்.

செவ்வாய்:
இதன் விட்டம் சுமார் 4,200 மைல்கள். பூமியை விட சிறியது. தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலம் பார்த்தால் இதன் வடக்குப் பாகம் மண் (Brown)நிறமாகவும், தெற்கு பாகம் நீலமும் சாம்பல் நிறமும் கலந்த மாதிரி காணப்படும்.

குரு:
எல்லா கிரகங்களையும் விட மிகப் பெரியது. இதனுடைய மத்திய ஆரம் 44, 360 மைல்கள். பூமியை விட சுமார் 11 மடங்கு பெரியது. இதனுடைய சைடிரியல் கால அளவு 11.36 வருடங்கள்.ஆகையால் சுமார் ஒரு வருட காலம் ஒரு ராசியில் இருக்கின்றது. மேதேன், அமோனியா வாயுக்களால் சூழப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சனி:
குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் இதுவாகும். இதிலும் வாயு மண்டலம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதை சுற்றி மூன்று வளையங்கள் காணப்படுகின்றன. இதன் மொத்த விட்டம் சுமார் 1,71, 00 மைல்கள். இடப, மிதுன ராசிக்கான நட்சத்திரங்களை அநுசரித்துப் பார்த்தால் இதன் வளையங்களின் குறுக்களவில் அதிக மான இடைவெளி தென்படும்.

சூரியன்:
பூமியில் இருந்து மிகவும் குறைத தூரம் சுமார் 9,30,00,000 மைல்கள். இதன் ஆரம் 4,32,000 மைல்கள். சூரியனைச் சுற்றி எல்லாக் கிரகங்களும் முட்டை வடிவத்தில் (Ellipse) சுற்றுகின்றன. வான மண்டலத்தில் சூரியன் மையமாக உள்ளது. சூரியனின் உள்பரப்பில் மட்டும் சுமார் 6,000 (ஆறாயிரம் சென்ரிகிறேட்) உஷ்ணம் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆகையால் அதன் மத்தியிலுள்ள உஷ்ணத்திக் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. (சுமார் நாற்பது மில்லியன் டிகிரி எனக் கணக்கிடப்பட்டுள்ளது)

பூமியானது சூரியன முட்டை வடிவத்தில்(Ellipse) சுற்றுகிறது. இதனால் பகல்பொழுது மாறுதல் அடைகிறது. பருவங்கள் மாறுகின்றன.


ஜோதிடம்

ஜோதிடத்தின் சிறப்பம்சம் - கிரகங்கள்

மொத்த கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகங்கள் ஓன்பது. ஆகையால் தான் நவகிரகங்கள் என்று போற்றபடுகின்றன.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது ஓன்பது கிரகங்கள் ஆகும்.

சுபகிரகங்கள் - குரு,சுக்கிரன், புதன், வளர்பிரை சந்திரன்.

பாபர்கிரகங்கள் - சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது பாப கிரகங்கள்.தேய்பிரை சந்திரனும் பாபர். பாபர்கிரகங்களுடன் புதன் சேர்ந்தால் பாபர் எனப்படும்.

சூரியன்: ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும். சூரியனை வணங்கி ஆதித்திய ஷிருதய மந்திரத்தால் இராமன் இராவனனை வெல்லும் ஆற்றல் பெற்றான். வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ மந்திரத்துக்கு உரியவன் சூரியன். சூரியநமஸ்காரம் என்ற ஓரு விசேஷமான வழிபாடு முறை உண்டு. இதை செய்வதில் ஆன்மீக பலமும், சரிர பலமும் அடையமுடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை. சுயநிலை, சுய-உயர்வு, செல்வாக்கு, கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், சரிர சுகம், நன்நடத்தை நேத்திரம், உஷ்ணம், ஓளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரன் சூரியன்.

சூரியன் அக்கினியை அதிதேவதையாக கொண்டவன். கதிரவன், ரவி, பகலவன் என பல பெயர்கள் உண்டு. தகப்பனை குறிக்கும் கிரகம் சூரியன். உத்திரம், உத்திரட்டாதி, கார்திகை நட்சத்திரக்கு உரியவன். சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம். உச்ச வீடு மேஷம், நீச்ச வீடு சுக்கிரன்.

சந்திரன்: மனதிற்க்கும், உடலுக்கும் காரகன் சந்திரன். உலக வாழ்வுக்கு சரிர பலம் முக்கியம். சரிர பலத்திற்க்கு மனவளம் அடிப்படை. ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் இரண்டையுமே அடைய முடியும். ரோகினி, அஸ்தம், திருவோணம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் சந்திரன். தாய்க்கு காரகன் சந்திரன். கடகம் ஆட்சி எனும் சொந்த வீடு, ரிஷபம் உச்ச வீடு, விருச்சிகம் நீச வீடு. திருமண பொருத்தங்கள் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டே உறுதிபடுத்தபட்டு வருகின்றன. சுபமுகர்தங்கள் நிச்சயிக்கபடுவதும் சந்திரனைக் கொண்டுதான். நாம் பிறக்கும் போது சந்திரன் இருந்த வீட்டை வைத்துதான் கோச்சார பலன்கள் நிர்ணயிக்கபடுகின்றது. சந்திரன் ஜாதகத்தில் அமைந்த வீடு தான் இராசி எனப்படுகிறது.

சூரியனோடு கோச்சார ரீதியாக சேரும் பொழுது அம்மாவாசை ஆகின்றது.

சூரியனும், சந்திரனும் ஓன்றுக்கொன்று பார்வையிடும் பொழுது அதாவது நேர்கோட்டில் 180 பாகையில் சந்திக்கும் பொழுது பௌர்ணமி ஆகின்றது.

செவ்வாய்: அங்காரகன், குஜன்,மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள், நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் இருந்தே தீரும் என்பது உறுதி.

பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம். ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன். மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடுகள். மகரம் உச்ச வீடு, கடகம் நீச வீடு.

அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய நட்சத்திரங்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை. லக்னத்திற்கு 2,4,7,8,12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும். செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம் உண்டாகும். செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும்.

புதன்: சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை பிரதிபல்க்கும். கேட்டை, ஆயில்யம், ரேவதி இந்த மூன்று நட்சத்திரங்களின் நாயகன். முதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிபதி புதனே.

புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்தால் புதஆதித்ய யோகம் உண்டாகும். இதனால் கல்வி மூலம் பெரிய அந்தஸ்த்தை ஏற்படுத்தும். புதன் -வித்யாகாரகன். கல்வி வித்தை, தொழில் இவைகளின் மூலம் சிறப்பை ஏற்படுத்துபவன். நாடகம் மற்றும் நடன அமைப்புகளுக்கு புதனுடைய பலமே காரணம்.

நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, பளிச்சென்ற உச்சரிப்பு, புத்தக வெளியீடு இவைகளுக்கு புதபலமே காரணம். புதன் வாக்குஸ்தானத்தில்- 2 ஆம் இடத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் சிறந்த பேச்சுதன்மை இருக்கும்.

குருகிரகம்: குருவருள் திருவருள் என்பார்கள். குருபகவான் என்று சிறப்பித்து கூறப்படும் குருபார்க்க கோடி நன்மை. குருபார்வை அதாவது வியாழ நோக்கம் வந்தால் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் செய்யலாம் என்ற வழக்கம் உள்ளது. சுபகிரக வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம், தனுசு. உச்ச வீடு கடகம், நீச வீடு மகரம்.

குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இனைந்நு 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம். கோடிஸ்வர யோகம் அமையும். மேதைகளையும், ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும்.

விவேகத்தையும், அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.

குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். அறிவு வாயந்த குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.

சுக்கிரன்: கலைக்கு காரகன் சுக்கிரன். பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன். ரிஷபம், துலாம் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு, கன்னி நீச வீடு.சுக்கிரன் சந்திரனுடன் கூடி பலமுடன் 10ல் இருந்தால் நடிப்புகலையில் தேர்ச்சிபெற்று, குறிப்பிட்ட ஜாதகர் அல்லது ஜாதகி நட்சத்திர ஸ்தானம் பெற்று அவ்வகையில் அதிர்ஷ்டசாலியாக திகழ முடியும்.

லக்னம் எதுவானாலும் சரி சுக்கிரன் 10வது வீட்டில் தனித்திருப்பாரானல் நிச்சயமாக கலைத்துறை ஓன்றில் பாண்டித்யம் பெற்று அதனால் மற்றோரை பரவசபடுத்துகின்ற ஆற்றல் அமைந்து அவ்வகையில் அதிர்ஷ்டம் பெற முடியும்.

பொருட்களை வாங்குவதும், விற்பதும் இன்றைய வாழ்வியலில் முக்கியமான தொழில் ஆகும். இந்த தொழில் வளமையை ஏற்படுத்துவார் சுக்கிரன். சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் காதலில் வெற்றிகிடைக்கும். ஓருவரது ஜாதகத்தில் சுக்கிரன் தசாகாலம் நடக்கும் போது நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேறின்பங்களுக்கு வழிவகுப்பார்.

குறிப்பிட்ட ஓரு நபரை பார்த்து இவர் ஜென்டில்மேன் என்று சொன்னால் அவர் ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக அமைந்துள்ளார் என்று அர்த்தம். லக்னத்திற்க்கு 4ல் ஆட்சி, உச்சம், நட்புப்பெற்று அமர்ந்தால் வண்டி, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை அற்புதமாக அமையும்.

சனி பகவான்: மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சந்திரங்களுக்கு நாயாகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம் நீசம், நீசம் பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார்.

சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும் இடமான 3,6,10,115,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.

நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். வாகனம் காகம். கலி,காரி,முடவன் என்ற பல பெயர்கள் உண்டு.

ஓருவர் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில் இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும் பெறவாய்ப்பு உண்டு.

ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும் வாய்ப்பு உண்டு. வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம், பெரிய இயந்திர தொழிற்சாலை, தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன். சனிபகவான் பலம் பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குவார்.

இராகு: சதயம், சுவாதி, திருவாதிரை இம்மூனறு நட்சத்திரங்களும் இராகு பகவானுக்கு உரியது. இவருக்கு சொந்த வீடுகள் கிடையாது. உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். எந்த நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த பலன்களை வழங்குவார். இராகுவை போல கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பலமொழி.

சனியை போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை, வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார் இராகு. 7-வது, 8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார்.

இராகு சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர் ஜாதகத்தில் இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம் மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர் ஆக்குவார்.

பலமிழந்த இராகு- ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு காரணங்களாக அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு, எதிரிகள் அஞ்சி நடப்பதற்க்கு இராகு பலமே காரணம்.

இராகு லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள் தருவார். 6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.

கேதுபகவான்: இவருக்கு ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும், மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும் காரகத்துவம் உள்ளது கேது.

எளிமை, கடுமை இரண்டுக்கும் உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும் கேதுவே. வியாதியில் இருந்து நிவாரணம் தருவதும், பகைவரை முறியடிக்க செய்வதும் கேது. கோபத்தில் நடைபெறும் தவறுகளுக்கும் கேதுவே காரணம். கேதுவைப்போல கெடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பழமொழி.

விபத்துகளையும். தாகாத சகவாசத்தையும் வழங்குவதும் கேதுவே.ரிஷபத்தில் நீசம், விருச்சிகத்தில் உச்சம். பஞ்ச பூதங்களில் ஜலம். கேது ஞானமாரக்கத்தில் ஆன்மீகத்தை வழங்குபவர்.

ஜாதகம்

ஜாதகம் கணிப்பதன் சிறப்பு:
ஜாதகம் கணிப்பதன் மூலம் ஓருவரது இராசி, நட்சத்திரம், லக்னம் மற்றும் கிரக நிலைகளை கொண்டு அவருக்குரிய நன்மை, தீமைகள் ஆராயபடுகின்றது.

ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நிலையை கொண்டு கணக்கெடுத்து அமைவது தான் லக்ணம். லக்ன அதிபதி, லக்னம் அமைந்த நட்சத்திரம் இவைகளை கொண்டும் லக்னத்திலிருந்து கிரக அமைவுகள் கணக்கிட்டு அல்லது ஆராய்ந்தும் பலன்கள் நிச்சயிக்கபடுகின்றன.

கிரகங்கள் எங்கு அமர்ந்துள்ளன, எந்த நட்சத்திர பாவத்தில் உள்ளது என ஆராய்ந்து இராசி கட்டம், நவாம்சம் இவைகள் கணக்கிடபடுகின்றது.

இராசி கட்டம் என்பது ஸ்துலம் என கொள்வோம். நவாம்சம் என்பது சூட்சமம் ஆகும். இராசி கட்டத்தில் கிரகங்கள் வலுவாக இருந்து நவாம்சத்தில் கிரகங்கள் வலுவாக இல்லாமல் இருந்தால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்க முடியாது.

லக்னத்திற்கு 10-வது இடம் ஜாதகரின் தொழில் ஸ்தானம். மேஷ லக்னமாக இருந்து லக்ணாதிபதி செவ்வாய் 10-ல் அதாவது மகரத்தில் உச்சம் பெற்றிருக்க அதே நேரத்தில் 10-ஆம் வீட்டோன் சனியும் அங்கேயே இருக்கபெற்றால் ஜாதகருக்கு பூமியின் மூலமாக அதிர்ஷ்டம் ஏற்படும்.

செவ்வாய் பொறியியலுக்கு அதிபதி. சனியோ இரும்பினால் செய்யப்படுகின்ற அத்தனை தளவாடங்களுக்கும் நாயகன். ஆகையினால் இயந்திரங்கள் மூலமாக ஓருவர் கூடுதலான லாபம் பெறுவதற்க்கு ஆகிய இருவருடைய சேர்க்கை 10-ஆம் இடத்தில் அமைவது உன்னதமான அமைப்பாகும்.

இதே மேஷ லக்ணத்திற்க்கு 2,7-ஆம் இடங்களுக்கு அதிபதி ஆகிறார் சுக்கிரன். இவர் ஆட்சி பெற்றால் மாட்ச்சி உண்டு. அதாவது அதிர்ஷ்ட வாய்ப்புக்கு இடம் உண்டு. இவ்வாறு ஓவ்வொன்றையும் ஆராய்ந்து அறிய இயலும்.

வித்யாகாரகனாகிய புதன் மிதுன, கன்னி ராசிகளுக்கு அதிபதி. இந்த புதன் கன்னி லக்னத்தில் இராசி கட்டத்தில் இருந்து நவாம்சத்தில் இதே கன்னியில் இருந்தாலோ, முதுனம் அல்லது மகரத்தில் 5-ஆம் இடத்தில் இருந்தால் தொழில்துறையிலும், பேச்சுதுறை கம்ப்யூட்டர், எழுத்துத்துறை மற்றும் வியாபரத்திலும் ஜாதகர் வெற்றிகொடி நாட்டுவார்.

நன்றி பனிப்புலம் இணையம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum