இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தமிழ்த் தாய் வாழ்த்து

4 posters

Go down

தமிழ்த் தாய் வாழ்த்து Empty தமிழ்த் தாய் வாழ்த்து

Post by சாமி Fri Apr 13, 2012 11:48 am

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே பொன்றுபல ஆயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையா
வுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.


இந்த பாடல் மனோன்மணீயம் என்ற நாடக நூலில் வருகிறது. நாடகத்தில் கடவுள் வணக்கத்திற்கு அடுத்ததாக தமிழ்த் தெய்வ வணக்கத்தில் வருகிறது. இதை எழுதியவர் பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை. தமிழ் மொழியில் சிறந்த நாடக நூலில் இதுவும் ஒன்று. சிவப்பு வண்ணத்தில் உள்ள வரிகளை எடுத்து விட்டு நமது தமிழ் மாநிலத்தின் தமிழ்த் தாய் வாழ்த்தாக அமைத்துக் கொண்டனர்.

விளக்கம்
நீலக் கடலை வண்ண ஆடையாக உடுத்திய நிலமகளுக்குப் பாரத நாடு முகமாக விளங்குகிறது.
அதன் பிறை போன்ற நெற்றியில் தெற்குப் பகுதி ஒளிர்கிறது.
அந்த நெற்றியிலே இட்ட திலகமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அத்திலகத்திலிருந்து பரந்து செல்லும் நறுமணம் தான் தமிழ்த்தாய் (தமிழ் மொழி).
அந்த நறுமணத்தின் மூலம் அனைத்து உலகும் இன்பமுறுகிறது.
அதனால் அகில உலகிலும் புகழ்பெற்றுச் சிறக்க வீற்றிருக்கிறாள்.
பல உலகங்களையும் உயிர்களையும் படைத்துக் காத்து ஒடுக்கும் பரம்பொருள் போல் இன்னும் என்றும் இளமையாகவே இருக்கிறாள் தமிழ்த்தாய்.
தமிழ்த்தாயின் மயக்குறு மக்களே கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் துளுவும்.
தமிழ்மொழி பரம்பொருள் போன்றது. ஆதலால் ஆரிய மொழி போல் உலக வழக்கொழியாதது, இறவாதது. என்றும் இளமைப் பொலிவுடன் வாழ்வது; வான்புகழ் பெறுவது.
உன் கன்னித்தன்மையைப் புகழ்ந்து, எங்கள் செயல்மறந்து, உன் வயப்பட்டு உலகினர் அனைவருமே இறைஞ்சுகின்றோம்.
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்த் தாய் வாழ்த்து Empty Re: தமிழ்த் தாய் வாழ்த்து

Post by svelan74 Fri Apr 13, 2012 5:55 pm

திரு சாமி அவர்களுக்கு,

தமிழும் வடமொழியும் நம் சமுதாயத்துக்கும் கவிஞர்களுக்கும் இரு கண்கள் என்பதற்கு நல்லதொரு சான்றை தந்துள்ளீர்கள். நன்றி. சமுதாயத்திற்கு உண்மையையும், அறத்தையும் கூற வந்த கவிஞர்களும், அறிஞர்களும் இவைகளை பிரிக்க நினைத்தது இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

கீழ்கண்ட தமிழ்தாய் வாழ்த்து பத்தியில் கவிஞரால் எடுத்தாளப்பட்ட (எனக்கு தெரிந்த) வடமொழி சொற்களை சிவப்பு நிறத்தில் மாற்றியுள்ளேன்.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

தமிழ்த் தாய் வாழ்த்து Empty Re: தமிழ்த் தாய் வாழ்த்து

Post by சேயோன் Fri Apr 13, 2012 10:15 pm

இதே பொழப்பா போச்சு!
நண்பரே எங்க பார்க்கணுமோ அதை வீட்டுடரீறே !

கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே பொன்றுபல ஆயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.


தமிழ்த்தாயின் மயக்குறு மக்களே கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் துளுவும்.
தமிழ்மொழி பரம்பொருள் போன்றது. ஆதலால் ஆரிய மொழி போல் உலக வழக்கொழியாதது, இறவாதது. என்றும் இளமைப் பொலிவுடன் வாழ்வது; வான்புகழ் பெறுவது.

இதற்காக என்னைப் பாராட்ட வேண்டாம் நண்பரே !

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

தமிழ்த் தாய் வாழ்த்து Empty Re: தமிழ்த் தாய் வாழ்த்து

Post by svelan74 Sat Apr 14, 2012 11:12 am

திரு சேயோன் அவர்களே,

நான் சொல்ல வந்தது தங்களுக்கு சரியாக புரியவில்லை என்று நினைக்கிறேன்.

1. தமிழ் தாய் வாழ்த்தில் ஏன் இத்தனை வடமொழி/ஆரிய சொற்கள்?
2. மனோன்மணியம் என்பதிலேயே வடமொழி இருக்கிறதே?

வடமொழி பேச்சு மொழியாக இருந்து வழக்கொழிந்து போனதா என்பது ஆராய்ச்சிக்கான விஷயம். ஆனால் தமிழக வரலாற்றில் அரசர்களின் மானிய கல்வெட்டுகளிலும், கவிஞர்களின் பாக்களிலும் தமிழும், வடமொழியும் வழக்கொழியாமல் இரண்டற கலந்திருந்தன என்பது தான் தெளிவு.

மேலும் வைணவத்தில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்யப்ரபந்த பாசுரங்களையும், வடமொழி வேதங்களையும் இருகண்களாக கருதுகிறார்கள். சைவத்திலும் நம் சமயக்குரவர்களான நாயன்மார்களும், மடாதிபதிகளும்.அப்படியே செய்து வந்திருக்கிறார்கள் ஆதாரமில்லாமல் பிரிவினையை தோற்ற வேண்டாம் என்பதே என் கருத்து.

இந்த என்னுடைய பதிவை சரியாக புரிந்து கொண்டுவிட்டால் நீங்கள் நிஜமாகவே பாராட்டப் படவேண்டியவர் தான்.

செந்தில்



svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

தமிழ்த் தாய் வாழ்த்து Empty Re: தமிழ்த் தாய் வாழ்த்து

Post by பத்மநாபன் Sun Apr 15, 2012 9:04 am

சாமி wrote:
விளக்கம்
நீலக் கடலை வண்ண ஆடையாக உடுத்திய நிலமகளுக்குப் பாரத நாடு முகமாக விளங்குகிறது.
அதன் பிறை போன்ற நெற்றியில் தெற்குப் பகுதி ஒளிர்கிறது.
அந்த நெற்றியிலே இட்ட திலகமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அத்திலகத்திலிருந்து பரந்து செல்லும் நறுமணம் தான் தமிழ்த்தாய் (தமிழ் மொழி).
அந்த நறுமணத்தின் மூலம் அனைத்து உலகும் இன்பமுறுகிறது.
அதனால் அகில உலகிலும் புகழ்பெற்றுச் சிறக்க வீற்றிருக்கிறாள்.
பல உலகங்களையும் உயிர்களையும் படைத்துக் காத்து ஒடுக்கும் பரம்பொருள் போல் இன்னும் என்றும் இளமையாகவே இருக்கிறாள் தமிழ்த்தாய்.
தமிழ்த்தாயின் மயக்குறு மக்களே கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் துளுவும்.
தமிழ்மொழி பரம்பொருள் போன்றது. ஆதலால் ஆரிய மொழி போல் உலக வழக்கொழியாதது, இறவாதது. என்றும் இளமைப் பொலிவுடன் வாழ்வது; வான்புகழ் பெறுவது.
உன் கன்னித்தன்மையைப் புகழ்ந்து, எங்கள் செயல்மறந்து, உன் வயப்பட்டு உலகினர் அனைவருமே இறைஞ்சுகின்றோம்.

எனக்கு பாடல் மட்டுமே (அதுவும் முழுமையாக அல்ல) தெரியும். விளக்கத்துடன் அறிந்து கொண்டேன். நன்றி
பத்மநாபன்
பத்மநாபன்

Posts : 28
Join date : 05/04/2012

Back to top Go down

தமிழ்த் தாய் வாழ்த்து Empty Re: தமிழ்த் தாய் வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum