இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தமிழ்ப்பாக்கள் புரிவதில்லை, சரியான பொருள் வேண்டும்?

4 posters

Go down

தமிழ்ப்பாக்கள் புரிவதில்லை,  சரியான பொருள் வேண்டும்? Empty தமிழ்ப்பாக்கள் புரிவதில்லை, சரியான பொருள் வேண்டும்?

Post by Dheeran Tue Mar 20, 2012 12:21 am

கேள்வி 1:

வணக்கம்,
திருநாவுக்கரசர், திரு ஞான சம்பந்தர், அருணகிரிநாதர்...போன்ற மகான்கள்
இறைவன் மேல் பாடிய பாடல்களை கேட்டு பலர் ஆனந்த கண்ணீர் விட்டதாக பல வரலாற்று பதிகங்களில் படித்திருக்கிறேன்...நானும் அந்த இறைப்பாடல்களை படித்தும் பார்த்தேன்...ஆனால் என்னால் முழுமையாக விளங்கி கொள்ள முடியவில்லை...தமிழ் பாடல்கள்தான்...ஆனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை...கண்ணிருந்தும் குருடன் போல....எனக்கு இந்த பாடல்களுக்கு அர்த்தம் (நடைமுறை தமிழில் ) கிடைக்குமா.....

ஆவலுடன்
முனிக்குமார்

கேள்வி 2 :

“ஆயசிறப்பினாற் பெற்ற அன்றே மன்றுள் நடம்புரியும்
நாயனார்க்கு வளர்மதியும் நகுவெண் டலைத்தொடையும்
மேயவேணித் திருமுடிமேல் விரும்பி ஆடிஅருளுதற்குத்
தூயதிருமஞ் சனம்ஐந்தும் அளிக்கும் உரிமைச்சுரபிகள்தாம்”

எனும் பாடலுக்கும் பஞ்சகவ்யம் எனும் மருந்துக்கும் மேலும் தெளிவான விளக்கங்களை யாரேனும் வழங்கினால் நன்றாக இருக்கும்
நன்றி...
கணேஷ்

பதில் :

திரு முனிக்குமார் அவர்களும், திரு கணேஷ் அவர்களும் இரு வேறுவிதமான ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு கேள்விகளைக் கேட்டுள்ளனர் இவ்விரண்டு கேள்விகள் எழுந்த சூழ்நிலையையும் அக்கேள்விகளையும் நாம் அனைவரும் ஆழ்ந்து கவனித்து சிந்தித்து நம்மைநாமே தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

முதலில் இக்கேள்விகள் தோன்றக் காரணமான சூழ்நிலையைப் பார்ப்போம்

1) பழந்தமிழ்ப்பாக்களில் ஆளப்பட்டுள்ள வார்த்தைகளுக்கும் தற்பொழுது வழக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கும் உள்ள வேறுபாடு.

2) ஆன்மிக பாடல்களை இயற்றிய மகான்கள் அவற்றில் பல வார்த்தைகளை மறைபொருட்களாக வைத்துள்ளனர்.அதனால் அவற்றிற்கு நேரடியாகப் பொருள்கொள்ளும்போது ஏற்படும் குழப்பம்

.
3) பாடல்களுக்கு பொருள்கூறுவோர் தமிழைக்கற்றவராக இருந்தால் மட்டும்போதாது, அவர் அப்பாடல் எந்தத் துறையைச் சார்ந்ததாக உள்ளதோ அதில் நிபுணராகவும் இருத்தல் வேண்டும் அப்பொழுதுதன் சரியானபொருளை அவரால் கூறமுடியும். அவ்வாறுகருதாது பொருள்கூற முற்படுவதால் தோன்றும் தவறுகள்

4) மேலும் தமிழ் பக்திப் பாடல்களைப் பொருத்த அளவில், அப்பாடல்கள் அவை இயற்றப்பட்ட காலகட்டத்தில் அவற்றை இயற்றிய பெரியோர்களது ஆன்மிக நிலையைப் பிரதிபலிப்பதாக இருப்பதால் நம்மால் நாமிருக்கும் நிலையில் இருந்துகொண்டு அவற்றிற்குப் பொருள்கண இயலுவதில்லை. நாம் ஆன்மிக சாதகனாகத் தொடர்ந்து இருக்கும்போது மட்டுமே நமக்கும் அவற்றை ஓதி உருகும் பேறு வாய்க்கும் இந்த சூழ்நிலையும் நமக்கு அப்பாடல்களைப் பாடிப் பரவசமடையத் தடையாக உள்ளது

5) ஆன்மிகத்தைப்பொருத்தவரை அதுவும் இந்துமதம் சார்ந்த தமிழ்ப் பாசுரங்களைப் பொருத்த அளவில் ஆன்மிகத் தொடர்பில்லாத தமிழ்ப் பற்றாளர்கள் எனப்படுவோர், தமிழ்ப் பாதுகாவலர்கள் எனும் போர்வையில் உள்ள நாத்திகர்கள், மற்றும் வேறுமதத்தைச் சார்ந்த போலி அறிஞர்கள் ஆகியோர் தமக்குத் தோன்றியவாரெல்லாம் பொருள் எழுதுவதாலும் அதை சில தமிழார்வம்கொண்ட அப்பாவி பக்தர்கள் உண்மை என எண்ணுவதாலும் நேரிடும் குழப்பம்

ஆகவே இவற்றில் எல்லாம் மயங்காமல் அப்பாடல்களின் உண்மையான பொருள் அறியவும், அவற்றை அனுபவித்துப்பாடவும் நமக்குள்ளவழி தொடர்ந்து பக்தியோடும் நம்பிக்கையோடும் திரும்பத்திரும்ப அவற்றைப் படித்துவாருங்கள் அவற்றின் உண்மைப்பொருள் உங்களுக்குத் தானாக விளங்கும்.

ஏனென்றால் அவற்றை இயற்றிய அருளாளர்கள் ஜாதி, மொழி, இனம் ஆகிய குறுகியவட்டத்துக்குள் தங்களை சுருக்கிக்கொள்ளாத உன்னதமான மஹான்கள் ஆவார்கள். சிரஞ்சீவிகளான அவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்வழிகாட்டித் தமிழமுதம் ஊட்டுவார்கள்

நன்றி..

Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

தமிழ்ப்பாக்கள் புரிவதில்லை,  சரியான பொருள் வேண்டும்? Empty Re: தமிழ்ப்பாக்கள் புரிவதில்லை, சரியான பொருள் வேண்டும்?

Post by சேயோன் Wed Mar 21, 2012 7:47 pm

தீரன் ஐயா,
இக்கேள்விகள் தோன்றக் காரணம் அவரவர் மொழியில் வணங்க விடாத பொல்லாத வட மொழியாளர்களின் சூழ்ச்சியே காரணம்.

நிலைமை மாறும்.
பொய் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டு விடும்.

காத்திருப்போம்.

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

தமிழ்ப்பாக்கள் புரிவதில்லை,  சரியான பொருள் வேண்டும்? Empty Re: தமிழ்ப்பாக்கள் புரிவதில்லை, சரியான பொருள் வேண்டும்?

Post by ஹரி ஓம் Thu Mar 22, 2012 3:47 pm

விளக்கத்திர்க்கு நன்றி தீரன்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்ப்பாக்கள் புரிவதில்லை,  சரியான பொருள் வேண்டும்? Empty Re: தமிழ்ப்பாக்கள் புரிவதில்லை, சரியான பொருள் வேண்டும்?

Post by tmm_raj_ramesh Fri Mar 23, 2012 2:25 pm

நன்றி பதிவிற்கும் விளக்கத்திற்கும்

தாய் மொழியை உணர்ந்தவர்களுக்கு பொருள் எளிதில் புரிந்து விடும்,
உணர தான் தான் முற்பட வேண்டும்,

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

தமிழ்ப்பாக்கள் புரிவதில்லை,  சரியான பொருள் வேண்டும்? Empty Re: தமிழ்ப்பாக்கள் புரிவதில்லை, சரியான பொருள் வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum