Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கிருஷ்ண ஜெயந்தி.....
2 posters
Page 1 of 1
கிருஷ்ண ஜெயந்தி.....
தேவகி மைந்தனாம் கிருஷ்ணன், ஏழைகளான பக்தர்களையே சர்வசொத்தாக நினைப்பவன் எனப் போற்றுகிறது ஸ்ரீமத் பாகவதம். அவன் அடியவர்களுக்கோ அவன்தான் சொத்து!
அதனால்தான் ஒட்டுமொத்த ஆயர்பாடியும் அவனை அத்தனை சிறப்புகளுடன் சீராட்டி வளர்த்தது. அதற்குப் பரிசாக, பகவான் தனது பால லீலைகள் அத்தனையையும் அவர்களுக்கே சொந்தமாக்கினான்.
மண்ணை உண்ட வாயில் மண்டலத்தைக் காட்டியது, வெண் ணெய் திருடி உண்டது, மருத மரங்களாகி நின்ற தேவர்களுக்கு விமோசனம் தந்தது, பூதகி போன்ற அசுர சக்திகளை வதைத்தது, காளிங்கமர்த்தனம், கோவர்த்தனகிரி அற்புதம்... என கண்ணன் செய்த லீலைகள் ஒவ்வொன்றையும் நேரில் தரிசித்து அனுபவித்த கோகுலவாசிகள் கொடுத்துவைத்தவர்கள்தான்!
அப்படியான பாக்கியம் நமக்கும் வாய்க்குமா?
நிச்சயம் வாய்க்கும்!
அதற்காகத்தானே இந்தப் பூவுலகில் அர்ச்சாவதரமாய் பல்வேறு திருத்தலங்களிலும் திருக்கோயில் கொண்டிருக்கிறான் அவன்!
அப்படி, தான் குடிகொண்ட கோயில்களில் அவன் காட்டும் அழகு திருக்கோலங்களும் அந்தத் தலங்கள் குறித்த தகவல்களும் இங்கே உங்களுக்காக!
அன்னையின் மடியில்...
சென்னை-காஞ்சிபுரம், காவேரிபாக்கத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் (வேலூர் மார்க்கத்தில்) அமைந்துள்ளது பூண்டி. இங்கு ஸ்ரீவேணுகோபாலஸ்வாமி திருக்கோயிலில் எழில்மிகு கிருஷ் ணனைத் தரிசிக்கலாம். ஸ்ரீகிருஷ்ணன் அன்னை யசோதையிடம் பால் குடிக்கும் அமைப்பில் - வெள்ளியினால் ஆன அந்த விக்கிரகமும் தரிசனமும் வேறெங்கும் காண்பதற்கு அரிதானது! இப்படி, பால் குடிக்கும் பாலனை தொழுவோர்க்கு புத்ர பாக்கியம் நிச்சயம். மேலும், பெண்களுக்கு வரக்கூடிய மார்பக நோய்களையும் தீர்த்துவைக்கும் மாயக்கண்ணன், இவன் என்கிறார்கள்.
* நான்கு கரங்களுடன் ஸ்ரீவேணுகோபாலன்!
செங்கல்பட்டில் இருந்து மெய்யூர் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது களியபேட்டை. இங்கே ஸ்ரீலஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயிலில் அருளும் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியின் திருவடிவம் ஒப்பற்றது. ருக்மினி, சத்யபாமா சமேதராக நான்கு திருக்கரங்களுடன் சதுர்புஜனாக இவர் அருள்வது விசேஷம்!
மேலிரு கரங்களில் சங்கு- சக்கரம்; கீழிரு கரங்களில் புல்லாங் குழல் கொண்டு சேவை சாதிக்கிறார் இந்த பெருமாள். இந்தத் திருவடிவம் விஜயநகர ஆட்சிக்காலத்திய வேணுகோபால வடிவங் களில் குறிப்பிடத்தக்கது எனலாம். நின்ற கோலத்தில் அருளும் தெய்வ வடிவங்களில் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வளைவுகளை (த்விபங்கம் அல்லது த்ரிபங்கம்) தரிசிக்கலாம். ஆனால், இந்த மனங்கவரும் கோபாலன் ஐந்து வளைவுகளுடன் (பஞ்சபங்கம்) திகழ்கிறார். புனிதமும் புராதனமும் மிக்க இந்த வேணுகோபாலன் இத்திருக்கோயிலில் பிரார்த்தனா மூர்த்தியாய்- புத்திர பாக்கியம் அளிக்கும் புனிதனாய் அருள்கிறார்.
* பெரியகோயில் ஞானக்குழந்தை!
காஞ்சியம்பதி பெருமாள் கோயில், பெரிய கோயில் என்றெல்லாம் போற்றப்படுவதை அனைவரும் அறிவர். வந்தவாசிக்கு அருகில் 'பெரியகோயில்’ என்றே ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீபெருந்தேவி நாயகனாய் ஸ்ரீகல்யாண வரதராஜர் அருள் பாலிக்கும் சந்நிதானத்தில், ஓர் சந்தான கோபாலனும் அருட் காட்சி தருகிறார். வலது கால் விரலை வாயில் வைக்க முயற்சி செய்யும் இந்த பாலகிருஷ்ணனைத் தரிசித்து வழிபட்டால் மக்கட் செல்வமும் மகிழ்ச்சியான வாழ்வும் அமையும் என்பதில் ஐயமேது?!
* தேரெழுந்தூர் அற்புதம்!
மாயவரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தேரழுந்தூர். கம்பநாட்டாழ்வாரின் அவதாரத் தலம். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஆமருவியப்பன் வரப்ரசாதியானவர். திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற பரந்தாமன். ஆநிரை மேய்க்கும் இந்த ஆயவனை 'கோசகன்’ என்றும் கூறுவர். இங்கு வந்து வழிபட்டால், வாழ்வில் வளங்கள் யாவும் பெருகும்.
* மன்னார்குடி செண்டு அலங்காரர்!
ராஜ மன்னார்குடி ராஜகோபாலனை அறியாத அன்பர்கள் இருக்க மாட்டார்கள். நாரதரின் அருள்வாக்குப்படி கோப்பிரளயர், கோபிலர் என்ற முனிவர்களுக்கு, தமது பால லீலைகளை 30 திருக் கோலங்களாக பகவான் காட்டியருளினார். அதில் 30-வது திருக்கோலத்தில் மயங்கிய முனிபுங்கவர்கள், இதே நிலையில் இந்த தலத்தில் காட்சி தந்து கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதன்படியே இந்தத் தலத்தில் ஆநிரை மேய்ப்பவனாக அருள்கிறார் பகவான்.
ருக்மினி, சத்யபாமாவுடன் - இரண்டு மலர்களுக்கு இடையே ஒரு வண்டு போல் எழுந்தருளியுள்ளார். வலது திருக்கையில் மூன்று வளைவுகளை கொண்ட சாட்டைக் கயிற்றுடன் கூடிய பொற்கோல் ஏந்தியபடி, இடது திருக்கரத்தை சத்யபாமாவின் தோளில் வைத்து நின்றகோலத்தில் அருள்கிறார். சாட்டையை 'செண்டு’ என்றும் கூறுவர். அதனால் இவருக்கு செண்டலங்காரர் என்ற திருநாமமும் உண்டு. ஸ்ரீமணவாள மாமுனிகள் இவரை துவராபதி மன்னன் என்றே போற்றுகிறார். ஸ்ரீராஜகோபாலனுடன் சந்நிதியில் காட்சியளிக்கும் ஸ்ரீசந்தான கிருஷ்ணனை, அடியார்கள் தம் மடியில் எடுத்து வைத்துக்கொண்டு வணங்கி வழிபட்டால், பிள்ளைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.
* பாசுரங்களை காட்டி அருளிய பரந்தாமன்!
நாதமுனிகளின் அவதாரத் தலமான காட்டுமன்னார்குடி, சிதம்பரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தத் தலத்தின் நாயகன் ஸ்ரீகாட்டுமன்னார். பிரபந்தங்களை நாதமுனிகள் மூலம் காட்டிக் கொடுத்ததால் இப்பெயர். அதனால் தலமும் காட்டுமன்னார்குடி ஆயிற்று. இந்த தலத்தில் மூலவர் ஸ்ரீவீரநாராயணபெருமாளாக சதுர்புஜங்களுடன் காட்சியளிக்கிறார். உத்ஸ்வமூர்த்தி ருக்மினி, சத்யபாமாவுடன் ஆநிரை மேய்ப்பவனாக அருள்கிறார். இவர், தோற்றத்தில் ராஜமன்னார்குடி ஸ்ரீராஜகோபாலனைப் போன்றே திகழ்கிறார். பாசுரங்களைக் காட்டி அருளிய இந்த பரந்தாமனைப் பணிய நம் பாவங்கள் யாவும் பொசுங்கும்.
அதனால்தான் ஒட்டுமொத்த ஆயர்பாடியும் அவனை அத்தனை சிறப்புகளுடன் சீராட்டி வளர்த்தது. அதற்குப் பரிசாக, பகவான் தனது பால லீலைகள் அத்தனையையும் அவர்களுக்கே சொந்தமாக்கினான்.
மண்ணை உண்ட வாயில் மண்டலத்தைக் காட்டியது, வெண் ணெய் திருடி உண்டது, மருத மரங்களாகி நின்ற தேவர்களுக்கு விமோசனம் தந்தது, பூதகி போன்ற அசுர சக்திகளை வதைத்தது, காளிங்கமர்த்தனம், கோவர்த்தனகிரி அற்புதம்... என கண்ணன் செய்த லீலைகள் ஒவ்வொன்றையும் நேரில் தரிசித்து அனுபவித்த கோகுலவாசிகள் கொடுத்துவைத்தவர்கள்தான்!
அப்படியான பாக்கியம் நமக்கும் வாய்க்குமா?
நிச்சயம் வாய்க்கும்!
அதற்காகத்தானே இந்தப் பூவுலகில் அர்ச்சாவதரமாய் பல்வேறு திருத்தலங்களிலும் திருக்கோயில் கொண்டிருக்கிறான் அவன்!
அப்படி, தான் குடிகொண்ட கோயில்களில் அவன் காட்டும் அழகு திருக்கோலங்களும் அந்தத் தலங்கள் குறித்த தகவல்களும் இங்கே உங்களுக்காக!
அன்னையின் மடியில்...
சென்னை-காஞ்சிபுரம், காவேரிபாக்கத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் (வேலூர் மார்க்கத்தில்) அமைந்துள்ளது பூண்டி. இங்கு ஸ்ரீவேணுகோபாலஸ்வாமி திருக்கோயிலில் எழில்மிகு கிருஷ் ணனைத் தரிசிக்கலாம். ஸ்ரீகிருஷ்ணன் அன்னை யசோதையிடம் பால் குடிக்கும் அமைப்பில் - வெள்ளியினால் ஆன அந்த விக்கிரகமும் தரிசனமும் வேறெங்கும் காண்பதற்கு அரிதானது! இப்படி, பால் குடிக்கும் பாலனை தொழுவோர்க்கு புத்ர பாக்கியம் நிச்சயம். மேலும், பெண்களுக்கு வரக்கூடிய மார்பக நோய்களையும் தீர்த்துவைக்கும் மாயக்கண்ணன், இவன் என்கிறார்கள்.
* நான்கு கரங்களுடன் ஸ்ரீவேணுகோபாலன்!
செங்கல்பட்டில் இருந்து மெய்யூர் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது களியபேட்டை. இங்கே ஸ்ரீலஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயிலில் அருளும் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியின் திருவடிவம் ஒப்பற்றது. ருக்மினி, சத்யபாமா சமேதராக நான்கு திருக்கரங்களுடன் சதுர்புஜனாக இவர் அருள்வது விசேஷம்!
மேலிரு கரங்களில் சங்கு- சக்கரம்; கீழிரு கரங்களில் புல்லாங் குழல் கொண்டு சேவை சாதிக்கிறார் இந்த பெருமாள். இந்தத் திருவடிவம் விஜயநகர ஆட்சிக்காலத்திய வேணுகோபால வடிவங் களில் குறிப்பிடத்தக்கது எனலாம். நின்ற கோலத்தில் அருளும் தெய்வ வடிவங்களில் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வளைவுகளை (த்விபங்கம் அல்லது த்ரிபங்கம்) தரிசிக்கலாம். ஆனால், இந்த மனங்கவரும் கோபாலன் ஐந்து வளைவுகளுடன் (பஞ்சபங்கம்) திகழ்கிறார். புனிதமும் புராதனமும் மிக்க இந்த வேணுகோபாலன் இத்திருக்கோயிலில் பிரார்த்தனா மூர்த்தியாய்- புத்திர பாக்கியம் அளிக்கும் புனிதனாய் அருள்கிறார்.
* பெரியகோயில் ஞானக்குழந்தை!
காஞ்சியம்பதி பெருமாள் கோயில், பெரிய கோயில் என்றெல்லாம் போற்றப்படுவதை அனைவரும் அறிவர். வந்தவாசிக்கு அருகில் 'பெரியகோயில்’ என்றே ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீபெருந்தேவி நாயகனாய் ஸ்ரீகல்யாண வரதராஜர் அருள் பாலிக்கும் சந்நிதானத்தில், ஓர் சந்தான கோபாலனும் அருட் காட்சி தருகிறார். வலது கால் விரலை வாயில் வைக்க முயற்சி செய்யும் இந்த பாலகிருஷ்ணனைத் தரிசித்து வழிபட்டால் மக்கட் செல்வமும் மகிழ்ச்சியான வாழ்வும் அமையும் என்பதில் ஐயமேது?!
* தேரெழுந்தூர் அற்புதம்!
மாயவரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தேரழுந்தூர். கம்பநாட்டாழ்வாரின் அவதாரத் தலம். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஆமருவியப்பன் வரப்ரசாதியானவர். திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற பரந்தாமன். ஆநிரை மேய்க்கும் இந்த ஆயவனை 'கோசகன்’ என்றும் கூறுவர். இங்கு வந்து வழிபட்டால், வாழ்வில் வளங்கள் யாவும் பெருகும்.
* மன்னார்குடி செண்டு அலங்காரர்!
ராஜ மன்னார்குடி ராஜகோபாலனை அறியாத அன்பர்கள் இருக்க மாட்டார்கள். நாரதரின் அருள்வாக்குப்படி கோப்பிரளயர், கோபிலர் என்ற முனிவர்களுக்கு, தமது பால லீலைகளை 30 திருக் கோலங்களாக பகவான் காட்டியருளினார். அதில் 30-வது திருக்கோலத்தில் மயங்கிய முனிபுங்கவர்கள், இதே நிலையில் இந்த தலத்தில் காட்சி தந்து கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதன்படியே இந்தத் தலத்தில் ஆநிரை மேய்ப்பவனாக அருள்கிறார் பகவான்.
ருக்மினி, சத்யபாமாவுடன் - இரண்டு மலர்களுக்கு இடையே ஒரு வண்டு போல் எழுந்தருளியுள்ளார். வலது திருக்கையில் மூன்று வளைவுகளை கொண்ட சாட்டைக் கயிற்றுடன் கூடிய பொற்கோல் ஏந்தியபடி, இடது திருக்கரத்தை சத்யபாமாவின் தோளில் வைத்து நின்றகோலத்தில் அருள்கிறார். சாட்டையை 'செண்டு’ என்றும் கூறுவர். அதனால் இவருக்கு செண்டலங்காரர் என்ற திருநாமமும் உண்டு. ஸ்ரீமணவாள மாமுனிகள் இவரை துவராபதி மன்னன் என்றே போற்றுகிறார். ஸ்ரீராஜகோபாலனுடன் சந்நிதியில் காட்சியளிக்கும் ஸ்ரீசந்தான கிருஷ்ணனை, அடியார்கள் தம் மடியில் எடுத்து வைத்துக்கொண்டு வணங்கி வழிபட்டால், பிள்ளைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.
* பாசுரங்களை காட்டி அருளிய பரந்தாமன்!
நாதமுனிகளின் அவதாரத் தலமான காட்டுமன்னார்குடி, சிதம்பரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தத் தலத்தின் நாயகன் ஸ்ரீகாட்டுமன்னார். பிரபந்தங்களை நாதமுனிகள் மூலம் காட்டிக் கொடுத்ததால் இப்பெயர். அதனால் தலமும் காட்டுமன்னார்குடி ஆயிற்று. இந்த தலத்தில் மூலவர் ஸ்ரீவீரநாராயணபெருமாளாக சதுர்புஜங்களுடன் காட்சியளிக்கிறார். உத்ஸ்வமூர்த்தி ருக்மினி, சத்யபாமாவுடன் ஆநிரை மேய்ப்பவனாக அருள்கிறார். இவர், தோற்றத்தில் ராஜமன்னார்குடி ஸ்ரீராஜகோபாலனைப் போன்றே திகழ்கிறார். பாசுரங்களைக் காட்டி அருளிய இந்த பரந்தாமனைப் பணிய நம் பாவங்கள் யாவும் பொசுங்கும்.
SEZHIYAN- Posts : 12
Join date : 28/07/2014
Age : 43
Location : Thittagudi
Similar topics
» கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்....
» ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
» தத்தாத்ரேயர் ஜெயந்தி!
» "ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி''
» அனுமன் ஜெயந்தி விரத மகிமை
» ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
» தத்தாத்ரேயர் ஜெயந்தி!
» "ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி''
» அனுமன் ஜெயந்தி விரத மகிமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum