இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கடுவெளிச் சித்தர் பாடல்கள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:06 pm

கடுவெளிச் சித்தர் பாடல்கள்


பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய்தேயமன் கொண்டோடிப் போவான்
(பாபஞ்)

சரணம்
சாபங்கொடுத்திட லாமோ? - விதி
தன்னைநம்மாலே தடுத்துடலாமோ?
கோபந் தொடுத்திடலாமோ?-இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ
(பாபஞ்)
பாபஞ்செய்யாதிரு - பாவமான செயல்களை செய்யாதிரு
மனமே - மனமான மாயையே,
நாளைக் - வருங்காலத்தில்
கோபஞ்செய்தே - அப்பாவத்திற்க்கு கோபம் கொண்டு
யமன் - நமனான அந்த யமதருமர்
கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன் வசம் கொண்டு செல்வான்
சாபங்கொடுத்திட லாமோ? - சாபம் கொடுக்காதே
விதி தன்னைநம்மாலே தடுத்துடலாமோ? - அவர் விதியை நம்மால் மாற்ற
முடியாது
கோபந் தொடுத்திடலாமோ? - உயிர்களிடத்தில் கோபம் கொள்ளாதே
இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ - உன் சொற்-செயல்களை
மற்றவரிடத்தில் திணிக்காதே
பாபஞ்செய்யாதிரு - பஞ்சமா பாவமான செயல்களை செய்யாதிரு

மனமே - மக்கள் மனமான மாயையே,

நாளைக் - வருங்காலத்தில்

கோபஞ்செய்தே - அப்பாவத்தால் கோபம் கொண்டு

யமன் - நமனான அந்த யமதருமர்

கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன்
வசம் கொண்டு செல்வான்
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:07 pm

சரணம் # 2

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம்.

பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சொல்லருஞ் சூதுபொய் மோசம் - சூது, பொய், மோச சிந்தனை அனைத்தும்
செய்தால் சுற்றத்தை - செய்தால் உன் உறவினர், நட்பு சுற்றும் அனைத்தையும்
முற்றாய்த் துடைத்திடும் நாசம் - களைந்துவிடும்
நல்லபத் திவிசு வாசம் - சிவ பக்தி, பகவத் பக்தி போன்ற நல்ல பக்தியும் எஜமானரிடத்தில் விசுவாசமும் கொண்டவர்கள்
எந்த நாளும் - ஞாலம் உள்ள மட்டும்
மனிதர்க்கு நம்மையாய் நேசம். - ராமரை போல், பரசு ராமரை போல், கண்ணனை போல், ஈசனை போல், மனிதர்க்கு நல்லுதாரனமாய் தோன்றுவர்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:08 pm

நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
மாயை இப்பாடலில் விளக்குகிறார்
நீர்மேற் குமிழியிக் காயம் - வினாடி நேரத்தில் உருவாகி, க்ஷன நேரத்தில் மறையும் நீர்குமிழி போன்ற வாழ்க்கை.
இது நில்லாது போய்விடும் நீயறிமாயம் - இது அநித்தியமானது, நிலையில்லாத நீயறியாத மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - உலகில் உயர்ந்தது அன்பு
சற்றும் பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். - உன்னை மாற்றாமல் இருக்க பண்ணும் உபாயம்
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:08 pm

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

நந்த வனத்திலோ ராண்டி - அழகிய நந்தவனமான இவ்வுலகில் ஒரு ஆண்டி(மனிதன்)
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் - குயவனான இறைவனிடம் நாலும் ஆறும் - ஆக பத்து மாதமாக வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - ஒரு தோண்டியான குழந்தையை பெற்றான்.
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. - அதை சீராக பயன்படுத்தாமல்(கூத்தாடி), நல்வழியில் செலுத்தாமல் (கூத்தாடி), பாபங்களை செய்து கிடைத்தற்கரிய மாணிட பிறவியை வீணாக்கினான் (போட்டுடைத்தாண்டி).
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:09 pm

தூடண மாகச்சொல் லாதே -
தேடுஞ்சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
தூடண மாகச்சொல் லாதே -
தேடுஞ்சொத்துகளில்
ஒரு தூசும் நில்லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே -
சிவத்திச்சைவைத்தால்
எம லோகம் பொல்லாதே
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:09 pm

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நல்ல வழிதனை நாடு - நல்ல வழிகளான சாதுகளின் நட்ப்பை நாடு
எந்த நாளும் பரமனை நத்தியே தேடு - நாளொரு வண்ணம் பரமனான அந்த ஈசனை தேடு.
வல்லவர் கூட்டத்திற் கூடு - வல்லவர் கூட்டமான சித்தர்கள், யோகபுருஷர்களுடன் கூடு,
அந்த வள்ளலை - அந்த ஈசனை
நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. - எப்போதும் நெஞ்சினில் ஓர் ஆலயம் செய்து அவ் ஆண்டவனை வாழ்த்தி கொண்டாடு.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:09 pm

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நல்லவர் தம்மைத் தள்ளாதே - உதவும் நல்லவர்களின் சொற்களை தட்டலாகாது,
அறம்நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே - 32 அறங்களில் ஒன்றையும் விடாமல் பாதுகாக்க வேண்டும்
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - புரங்கூறுவதையும், பொல்லாங்கும் சொல்வதையும் செய்யகூடாது
கெட்டபொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. - தரம் தாழ்ந்த சொற்களையும் பொய்யையும், கோள்-செல்வதையும் தவிர்க வேண்டும்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:10 pm

வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
எவ்வாறு வாழவேண்டும் என்று செல்கிறார் சித்தர் பிறான்
வேத விதிப்படி நில்லு - வேதங்கள் சொல்லியபடி மனிதர்களாக வாழவேண்டும்
நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு - நால்லோரின் உயரிய வழிதன்னை நாடி செல்ல வேண்டும்
சாத நிலைமையே சொல்லு - சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டும், அதை பிறர்க்கு, போதிக்க வேண்டும்
பொல்லாச் சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. - பொல்லாத சொத்தான, மனிதனை மிருகமாக்கும், சண்டாளமாக்கும் கோபாத்தை கொல்ல வேண்டும்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:10 pm

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

பிச்சையென்றொன்றுங்கேளாதே - பிச்சை எடுத்து வாழக்கூடாது, (ஏற்பது இகழ்ச்சி).

எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே - பெண்ணாசை கொள்ளாதே

இச்சைய துன்னையாளாதே - ஆசை துன்பத்திற்க்கு காரணம், ஆசை வைக்காதே.

சிவன் இச்சை கொண்டதவ் வழியேறி மீளாதே - சிவன் மேல மனம் செலுத்தி, அந்த வழியிலிருந்து அகலாமல் சிவலோகம் அடைவாய், அப்பாதையிலிருந்து மீளாதே அகலாதே.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:10 pm

மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

மெஞ்ஞானப் பாதையி லேறு - மெஞ்ஞானப்பாதையான சிவப்பாதையில் சென்று

சுத்த வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு - பேரானந்த வேதாந்த வெட்ட வெளியில் சேர்ந்து

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - அஞ்ஞான மார்கத்தை அகற்றி

உன்னை அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு - உன்னை அன்டினோர்க்கும் அவ்வானந்த வழியை போதிப்பாய்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:11 pm

மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


மெய்குரு சொற்கடவாதே - உன்மை குருவின் சொல்லை தாட்டாதே
நன்மை மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே - நன்மைகளை மென்மேலும் செய்வாய். வரையறுக்காதே.
பொய்க்கலையால் நடவாதே - பொய்கலைகளை நாடாதே, நடத்தாதே.
நல்ல புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே - நல்ல கொள்கைகளை புத்தியில் ஏற்றுக.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:11 pm

கூடவருவ தொன்றில்லை - புழுக்
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

கூடவருவ தொன்றில்லை - கூடவரப்போவது ஒன்றுமில்லை
புழுக்கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை - உன்கூட்டை கூட புழுக்கள் தின்னும்,
தேடரு மோட்சம தெல்லை - மோட்சத்தின் எல்லையை தேடு.
அதைத்தேடும் வழியைத் தெளிவோரு மில்லை - அதை தேடி சென்றவர் வழியை பற்றி தெளிவோருமில்லை.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:11 pm

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - சவத்தை எடுத்துசெல்லும் நால்வரோடு ஐவர் சூழ்ந்திடும் காடு அந்த சுடுகாடு, இடுகாடு.
இந்த ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு - அந்த ஐவரும் அடைந்திடும் நாடு.
முந்தி வருந்திநீ தேடு - முக்தி பெற வருந்தி, போற்றி தேடு.
அந்த மூலம் அறிந்திட வாமுத்தி வீடு - அந்த மூலத்தை அறிந்திட்டவர்களின் பாதையில் வருவாய், அவர்களின் வீட்டிற்க்கு செல்வாய்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:12 pm

உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

உள்ளாக நால்வகைக் கோட்டை - நான்கு வகை தீய
பகை ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை - அப் பகை குணங்களை ஓட விரட்டினால் நாடென்னும் இவ்வுடலை ஆளலாம்
கள்ளப் புலனென்னுங் காட்டை - தீய சொல்லென்னும் பொய்யை
வெட்டிக் கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. - வெட்டி எரித்தாலோ, எரிந்தாலோ தாம் நம் மெய்வீடான சிவபதத்தை காணலாம், அடையலாம்.
நான்கு வகை தீய பகை குணங்களை ஓட விரட்டினால், நாடென்னும் இவ்வுடலை ஆளலாம். தீய சொல்லென்னும் பொய்யை, வெட்டி எரித்தாலோ, எரிந்தாலோ தாம் நம் மெய்வீடான சிவபதத்தை காணலாம், அடையலாம்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:12 pm

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

இப்பாடலில் கொஞ்சம் நிறையவே கேள்விகளை எழுப்புகிறார்.
காசிக்கோ டில்வினை போமோ - காசிக்கு போனால் வினை (பாவம்) போகுமா?
அந்தக் கங்கையாடில் கதிதானும் உண் டாமோ? - அந்த கங்கையிநீறாடினால் நற்கதி கிடைக்குமா?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - (இப்படியாக நடந்து விட்டால்) பேசும் பேச்சுகளும், செய்யும் செயல்களும் நன்மை, தீமைகளை உண்டாகாதா?
பல பேதம் பிறப்பது போற்றினும் போமோ. - மேலும் பல பிரிவுகள் பிறப்பதும் போற்றுதலோ, அன்றி தூற்றுதலோ?
காசிக்கு போனால் வினை போகுமா? அந்த கங்கையிநீறாடினால் நற்கதி கிடைக்குமா? இப்படியாக நடந்து விட்டால், பேசும் பேச்சுகளும், செய்யும் செயல்களும் நன்மை, தீமைகளை உண்டாகாதா? மேலும் பல பிரிவுகள் பிறப்பதும் போற்றுதலோ, அன்றி தூற்றுதலோ?
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:13 pm

பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

முகஸ்துதி செய்யும் பொய் பாராட்டுக்கள், எல்லாம் போய்விடும் வாய்க்காது, (நிலைக்காது,), உண்மை மட்டுமே நிலைத்து நிற்க்கும் தன்மையுடையது. உலகில் மேவ மேலாக கருதப்படும் இது போன்ற செயல்களை புரிந்திடுவதால் என்ன அனுகூலம்?
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:13 pm

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சந்தேகமில்லாமல் சிறப்பானது தங்கம் நல்லவையே, அதை சார்ந்து கொண்டாலுமே தாழ்வு இல்லாதது, ஆதி அந்தமில்லாத உயறிய அன்பு இருந்தால்ம் எங்கும் ஆனந்தமே பொங்கும்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:13 pm

பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

உலகில் உயர்ந்தது பக்தி (பத்தி), அதை பற்றி விட்டால் பற்றியவற்க்கு உண்டு முக்தி, சீரில், சமச்சீரில், சராசரியில் உயர்ந்தது சித்தி, சிவன் மேல் பத்தி கொண்டவர்கள் யாராயினும் அவர் செயல் சித்திக்கும்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:14 pm

அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
அன்பு என்ற நன்மலரால் அவனை தூவி தொழுது, வாயினால் பாடி, அவனடி சென்று, பேரின்பத்தில் திளைத்து தொழுதால், அவனே ஓடோடி வந்து உன்னை ஈடு இனையற்ற கைலாச பதவியை தந்தருள்வான்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:15 pm

ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


அடியார் செய்யும் தொண்டைபோல், கண்டு, கேட்டு, குறிப்பறிந்து செய்து, மேலும் ஆதி சிவனுக்கு வழிமுறைபடி தொண்டு செய்து வர, குற்றம், சீற்றம், சினம் தவிர்த்து, செய்து வர பிறவிபிணி அறுத்து பெருவீட்டை அடைய செய்வான்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:15 pm

ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


ஆன்மாவால் தான் வாழ்க்கை என்னும் ஆட்டம், தேகமெனும் உடல் இல்லாத போது காணும் ஆட்டம், வானிற்க்கு கீழே (உலகத்திலே) என்றும் நாட்டம், தினம் செய்யும் ஏச்சு பேச்சுகளில் வருமே சிற்றின்பக்கொண்டாட்டம்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:15 pm

எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

எட்டும் இரண்டும் - பத்து அதாவது பத்து திசைகளையும் தன் வசமாக்கி, எல்லா மறைகளும் (வேதங்களும்) பரிபூரணமாய் கற்று தேர்ந்து. இவுடலை விட்டு அண்ட வேளிதனை சார்ந்துவிட்டால், இப்பிறவி வெள்ளத்திலிருந்து மூழ்கி முத்தெடுத்துவிடலாம் எனவே, மனமே பாபம் செய்யாதிரு இல்லையேல் நாளை எமன் கொண்டோடிவிடுவான்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:16 pm

இந்த வுலகமு முள்ளு - சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

இந்த உலகமே பாசம், பந்தம் மற்றும் பல இன்னல்கள் கொண்ட ஒரு முள். சற்றும் இச்சை வைக்காமல் ஒவ்வொரு நாட்களையும் வாழ்வாய். சத்திய வெள்ளமான அந்த பரம்பொருள்ளை மொள்ளு (ஏந்திக்கொள்). உன் சிந்தனை என்றும் திகட்டாமற்கொள்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:16 pm

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


பொய் வேதங்களை பார்க்க கூடாது, அதை பொதிப்பவரை நாடாதே. அந்த போதகர் சொல் போகும்போது உடன் வராது. விழியால் மாய்க்கும் மங்கைகளை சாராதே, துன்பம் தரும் துர்மார்க கூட்டத்தில் சேராதே, அதில் மகிழாதே.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by ராகவன் Fri Aug 13, 2010 11:17 pm

வைதோரைக் கூடவை யாதே: - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

உனக்கு தீங்கு செய்தவரை கூட தீங்கு எண்ணாதே. இந்த வையகம் முழூவதும் பொய்யால் நிரம்பினாலும் உன்னுள் ஒரு பொய்அனுவையும் நுழையவிடாதே. பொல்லாத வினைகளை செய்யாதே, பறக்கும் பறவைகள் மேல் கல் எறிந்து அதை காயப்படுத்தாதே
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

கடுவெளிச் சித்தர் பாடல்கள் Empty Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum