இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மழலைகளுக்கு மந்திரம் சில

3 posters

Go down

மழலைகளுக்கு மந்திரம் சில  Empty மழலைகளுக்கு மந்திரம் சில

Post by ஆனந்தபைரவர் Sat Sep 04, 2010 4:46 pm

விநாயகர் துதி

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி

கப்பிய கரிமுகன் அடிபேணி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்

கற்பகம் எனவினை கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்

மற்பொரு திரள்புய மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

மட்டவிழ் மலர்கொடு பணிவேனே!



முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்

முற்பட வெழுதிய முதல்வோனே

முப்புரம் எரிசெய்த வச்சிவன் உரைரதம்

அச்சது பொடிசெய்த அதிதீரா

அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்

அப்புன மதனிடை யிபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை

அக்கண மணமருள் பெருமானே!



பெரிய புராணம்

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.



தேவாரம்

தோடுடைய செவியன் விடையேறியோர்

தூவெண் மதி சூடிக்

காடுடைய சுடலைப் பொடிபூசி என்

உள்ளங் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாட்பணிந்து

ஏத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுர மேவிய

பெம்மானிவன் அன்றே!



அபிராமி அந்தாதி

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார் சடைமேல்

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!



திருமுருகாற்றுப்படை

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்

பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்

கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்

வேலப்பா செந்திவாழ் வே.



அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும்

வெஞ்ச மரில்அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில்

ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்

முருகாவென்(று) ஓதுவார் முன்.



முருகனே செந்தி முதல்வனே மாயோன்

மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்

தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன் நான்.



கந்தர் அனுபூதி

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.



கந்தரலங்காரம்

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு

வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்

தோனை விளங்குவள்ளி

காந்தனைக் கந்தக் கடம்பனைக்

கார்மயில் வாகனனைச்

சாந்துணைப் போது மறவா

தவர்க்கொரு தாழ்வில்லையே!



மாலோன் மருகனை மன்றாடி

மைந்தனை வானவர்க்கு

மேலான தேவனை மெய்ஞ்ஞான

தெய்வத்தை மேதினியில்

சேலார் வயற்பொழில் செங்கோ

டனைச்சென்று கண்டுதொழ

நாலா யிரங்கண் படைத்தில

னேயந்த நான்முகனே!
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

மழலைகளுக்கு மந்திரம் சில  Empty Re: மழலைகளுக்கு மந்திரம் சில

Post by krishnaamma Mon Nov 08, 2010 8:38 pm

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான்
தருவேன் கோலம் செய் துங்கக கரிமுகத்து
தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் முன்றும் தா.

krishnaamma

Posts : 43
Join date : 08/11/2010

Back to top Go down

மழலைகளுக்கு மந்திரம் சில  Empty Re: மழலைகளுக்கு மந்திரம் சில

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 7:17 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மழலைகளுக்கு மந்திரம் சில  Empty Re: மழலைகளுக்கு மந்திரம் சில

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum