இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பாடகலிங்க சுவாமி -பரமசிவன்

2 posters

Go down

பாடகலிங்க சுவாமி -பரமசிவன்  Empty பாடகலிங்க சுவாமி -பரமசிவன்

Post by ஆனந்தபைரவர் Tue Apr 19, 2011 3:55 pm

தென்பொதிகை மலையின் கீழ்த் திசையில், வெள்ளி மலையின் அடிவாரத்தில், இயற்கை எழில் பொங்கும் பசுஞ்சோலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது பாடகலிங்க சாமி ஆலயம். அடர்ந்த வனப்பகுதிக்குள் இவ்வாலயம் அமைந்திருந்தாலும், இங்கே வழிபடச் செல்லும் பக்தர்கள் எவ்வித இடருமின்றி மன நிறைவோடு சென்று வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி ரயில் பாதையைக் கடந்து பொட்டல் என்னும் கிராமத்திற்குச் சென்று, அங்கிருந்து கரம்பை கிராமத்தின் வழியாக ஆறு கிலோமீட்டர் சென்றால் மலையாங்குளம் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்தத் திருக்கோவிலை அடையலாம்.


முன்மண்டபத்தில் மகா கணபதியும், உள்பிராகாரத்தில் கன்னி மூல விநாயகர், மேல்வாசல்காரர், சுப்பிரமணியர், வனப்பேச்சி, சித்திரபுத்திர சாஸ்தா ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். ஈசான மூலையில் எவ்வளவு கோடைக்கும் வற்றாத கிணறு உள்ளது.

ஆலயத்திற்கு வெளியே பல்வேறு காவல் தெய்வங்கள் உள்ளன. இடப்புறத்தில் உயர்ந்த உருவத்தில் ஆலி பூதம் என்னும் காவல் தெய்வம் உள்ளது. அருகே ஆலயத்தின் தீர்த்தக் குளம் அமைந்துள்ளது.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியை ஆண்டு வந்த தக்க மகாராஜா என்னும் மன்னர் இவ்வாலயத்தை அமைத்தார் என்கிறது தல வரலாறு. அவருக்கும் இங்கே தனிச் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. பாடகலிங்க சாமியை வணங்க வரும் பக்தர்கள் தக்க மகாராஜாவையும் வணங்கிச் செல்கின்றனர்.

இந்த ஆலயத்தின் அருகேயுள்ள சேரன்மாதேவி- களக்காடு நெடுஞ்சாலையிலுள்ள புலவன் குடியிருப்புக்குத் தெற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் குளம் ஒன்றும் கல்மண்டபமும் உள்ளது. இந்த கல்மண்டபத்தில் இருந்து மேற்கு நோக்கி ஒரு சாலை செல்கிறது. கொப்பரைத் தோப்புப் பாதை என்றழைக்கப்படும் இந்தச் சாலை, வெள்ளி மலைக்கும் மண்பொத்தைக்கும் இடையே சென்று பல குக்கிராமங்களை இணைக்கிறது. தெற்கே மணிமுத்தாற்றைக் கடந்து மலைமீது செல்லும் இந்தச் சாலை சொரிமுத்தய்யனார் கோவிலை அடைகிறது.

ரயில் பாதை ஏற்படுவதற்கு முன்னரே அமைந்தது பொட்டல் கிராமத்திலிருந்து கரம்பை வழியாக கல்லிடைக்குறிச்சி செல்லும் இணைப்புப் பாதை. நான்குனேரி வட்டத்தைச் சார்ந்தவர்களும், கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பக்தர்களும் வந்து செல்ல முக்கியமான சாலையாக இது அமைந்துள்ளது.

பாடகலிங்க சாமி கோவிலும், தெற்கு பாப்பாங்குளத்திற்கு மேற்புறம் உள்ள சடையுடையார் சாஸ்தா கோவிலும், மலைமேலுள்ள சொரிமுத்தய் யனார் கோவிலும் இந்த சாலையின் அருகே அமைந் திருப்பது சிறப்பான அம்சம். புகழ் பெற்ற இம்மூன்று கோவில்களுக்கும் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது, கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வருகிறார்கள்.

இந்தச் சாலையின் வழியே வரும் மக்கள், பாடகலிங்க சாமி கோவிலுக்குப் பக்கத்திலுள்ள மரநிழலில் இளைப்பாறி, கட்டுச் சோறை சாப்பிட்டுவிட்டு குளத்தில் நீரருந்திச் செல்வார்கள். இந்த ஆலயம் அமைவதற்கு முன்னர் இவ்வழியாக வந்த ஒரு குடும்பத்தினர் இங்கே உணவருந்திவிட்டு மரநிழலில் இளைப்பாறினர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி நெடுநாட்களாகியும் பிள்ளைப் பேறு வாய்க்காமலிருந்ததால், தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று எப்போதும் ஈசனை வேண்டியபடி இருந்தாள்.

அந்தப் பெண் குளத்தில் நீரருந்தச் சென்றாள். அப்போது தன் கால்களில் அணிந்திருந்த பாடகம் என்னும் அணிகலனைக் கழற்றி கரையில் வைத்துவிட்டு குளத்தில் இறங்கி நீர் பருகினாள். (பாடகம் என்பது அக் காலத்தில் பெண்கள் அணியும் நுட்பமான வேலைப்பாடு கொண்ட அணிகலன்.)

நீர் குடித்துவிட்டு கரையேறி வந்த அப்பெண் தரையிலிருந்த பாடகத்தை எடுக்க, அது தரையோடு ஒட்டிக் கொண்டது. எவ்வளவு முயன்றும் அவளால் அதை எடுக்க முடியவில்லை. ஒரு கல்லை எடுத்துத் தட்டி அதை எடுக்க முயல, அந்தப் பாடகத்திலிருந்து ரத்தம் கசிந்தது. இதைக் கண்ட அப்பெண் பயந்துபோய் உறவினர்களை அழைக்க, அவர்களும் வந்து பார்த்து திகைத்து நின்றனர். இது தெய்வக் குற்றமோ என்றெண்ணி அனைவரும் இறைவனை மனமுருகிப் பிரார்த்தித்தனர்.




அப்போது இடியோசைபோல ஒரு அசரீரி வாக்கு, "யாம் இங்கேயே கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க விரும்புகிறோம். பாடகத்தையே லிங்கமாகக் கொண்டு ஆலயம் அமைத்து வழிபடுங்கள்' என்று ஒலித்தது.

இது அந்த நாட்டு மன்னனுக்குத் தெரிவிக்கப்பட, அந்த மன்னனால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது.

அந்தப் பெண்ணுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டியது என்று கர்ண பரம்பரைக் கதை கூறுகிறது.

சுயம்புவாய் எழுந்தருளிய இந்த பாடகலிங்க சாமியை நெல்லை மாவட்ட மக்கள் தங்கள் குலதெய்வமாகவே வணங்கி வருகிறார்கள். பங்குனி உத்திரம், ஆவணி ஓணம் போன்ற நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

""காட்டுப் பகுதியில் இந்த ஆலயம் அமைந்தி ருந்தாலும் வன விலங்குகள் எதுவும் இந்தப் பகுதிக்கு வரவே வராது. இங்கு வரும் பக்தர்களுக்கு இதுவரை வனவிலங்கு களால் எந்தத் தீங்கும் ஏற்பட்டதில்லை. பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வமாக விளங்குகிறார் இந்த பாடகலிங்க சாமி. எங்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி மன நிம்மதியைத் தருகிறார்.

எங்கள் குடும்பங்களில் பிறக்கும் பிள்ளைகளுக்கு இங்கு வந்து முடி காணிக்கை செலுத்தி காது குத்து வோம். அவர் எப்போதும் துணை இருந்து எல்லாரையும் வாழ வைக்கிறார்'' என்கிறார்கள் தன் மகனின் முடி காணிக்கை செலுத்திவிட்டு பொங்கல் வைத்துக் கொண்டிருந்த கணேசன் மற்றும் அவர் குடும்பத்தினர்.

பாடகலிங்க சாமியின் எல்லைக்கு வந்தாலே எல்லா பிரச்சினைகளுக்கும் விமோசனம் கிடைக்கிறது என்பதே இங்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!

நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

பாடகலிங்க சுவாமி -பரமசிவன்  Empty Re: பாடகலிங்க சுவாமி -பரமசிவன்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 1:32 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum