இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்7. வாலி வதைப் படலம்-1

Go down

 கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்7. வாலி வதைப் படலம்-1 Empty கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்7. வாலி வதைப் படலம்-1

Post by ஆனந்தபைரவர் Tue Aug 24, 2010 4:11 pm

இலக்குவன் உரைகேட்ட வாலியின் மன மாற்றம்

கவி குலத்து அரசு, அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்;
அவியுறு மனத்தன் ஆகி, 'அறத் திறன் அழியச் செய்யான்
புவியிடை அண்ணல்' என்பது எண்ணினில் பொருந்த, முன்னே
செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சி, சொன்னான்: 126

'தாய் என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி! நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் - சிறியன சிந்தியாதான். 127

இரந்தனன் பின்னும், 'எந்தை! யாவதும் எண்ணல் தேற்றாக்
குரங்கு எனக் கருதி, நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல்;
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா!
வரம் தரும் வள்ளால்! ஒன்று கேள்!' என மறித்தும் சொல்வான்: 128

இராமனைத் துதித்து, வாலி ஓர் வரம் வேண்டுதல்

'ஏவு கூர் வாளியால் எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! 129

'புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் பொரு இலா
வரம் எலாம் உருவி, என் வசை இலா வலிமை சால்
உரம் எலாம் உருவி, என் உயிர் எலாம் நுகரும் நின்
சரம் அலால், பிறிது வேறு உளது அரோ, தருமமே? 130

'"யாவரும் எவையும் ஆய், இருதுவும் பயனும் ஆய்,
பூவும் நல் வெறியும் ஒத்து; ஒருவ அரும் பொதுமையாய்
ஆவ நீ ஆவது" என்று அறிவினார் அருளினார்;
தா அரும் பதம் எனக்கு அருமையோ? தனிமையோய்! 131

'உண்டு எனும் தருமமே உருவமா உடைய நிற்
கண்டு கொண்டேன்; இனிக் காண என் கடவெனோ?
பண்டொடு இன்று அளவுமே என் பெரும் பழவினைத்
தண்டமே; அடியனேற்கு உறு பதம் தருவதே. 132

'மற்று இனி உதவி உண்டோ ? - வானினும் உயர்ந்த மானக்
கொற்றவ! - நின்னை, என்னைக் கொல்லிய கொணர்ந்து, தொல்லைச்
சிற்றினக் குரங்கினோடும் தெரிவு உறச் செய்த செய்கை,
வெற்று அரசு எய்தி, எம்பி, வீட்டு அரசு எனக்கு விட்டான். 133

'ஓவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்;
பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்ற போழ்தில்,
தீவினை இயற்றமேனும், எம்பிமேல் சீறி, என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல்' என்றான். 134

'இன்னம் ஒன்று இரப்பது உண்டால்; எம்பியை, உம்பிமார்கள்
"தன் முனைக் கொல்வித்தான்" என்று இகழ்வரேல், தடுத்தி, தக்கோய்!
முன்முனே மொழிந்தாய் அன்றே, இவன் குறை முடிப்பது? ஐயா!
பின் இவன் வினையின் செய்கை அதனையும் பிழைக்கல் ஆமோ? 135

அனுமனின் ஆற்றலைக் குறித்து வாலி இராமனுக்குக் கூறுதல்

'மற்று இலேன் எனினும், மாய அரக்கனை வாலின் பற்றி,
கொற்றவ! நின்கண் தந்து, குரக்கு இயல் தொழிலும் காட்டப்
பெற்றிலென்; கடந்த சொல்லின், பயன் இலை; பிறிது ஒன்றேனும்,
"உற்றது செய்க!" என்றாலும், உரியன் இவ் அனுமன் என்றான். 136

'அனுமன் என்பவனை - ஆழி ஐய! - நின் செய்ய செங் கைத்
தனு என நினைதி; மற்று, என் தம்பி நின் தம்பி ஆக
நினைதி; ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை; நீ, ஈண்டு, அவ்
வனிதையை நாடிக் கோடி - வானினும் உயர்ந்த தோளாய்!' 137

சுக்கிரீவனுக்கு வாலி உரைத்த உறுதி மொழிகள்

என்று, அவற்கு இயம்பி, பின்னர், இருந்தனன் இளவல்தன்னை
வன் துணைத் தடக் கை நீட்டி வாங்கினன் தழுவி, 'மைந்த!
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால்; உறுதி அஃது உணர்ந்து கோடி;
குன்றினும் உயர்ந்த தோளாய்! வருந்தலை!' என்று கூறும்: 138

'மறைகளும், முனிவர் யாரும், மலர்மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும், சொல்லும் துணி பொருள், திணி வில் தூக்கி,
அறை கழல் இராமன் ஆகி, அற நெறி நிறுத்த வந்தது;
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய்! 139

'நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற பொருள்கள் எல்லாம்
கற்கின்றது, இவன் தன் நாமம்; கருதுவது இவனைக் கண்டாய்;
பொன் குன்றம் அனைய தோளாய்! பொது நின்ற தலைமை நோக்கின்,
எற் கொன்ற வலியே சாலும்; இதற்கு ஒன்றும் ஏது வேண்டா. 140

'கைதவம் இயற்றி, யாண்டும் கழிப்ப அருங் கணக்கு இல் தீமை
வைகலும் புரிந்துளாரும், வான் உயர் நிலையை, வள்ளல்
எய்தவர் பெறுவர் என்றால், இணை அடி இறைஞ்சி, ஏவல்
செய்தவர் பெறுவது, ஐயா! செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ? 141

'அருமை என், விதியினாரே உதவுவான் அமைந்தகாலை?
இருமையும் எய்தினாய்; மற்று இனிச் செயற்பாலது எண்ணின்,
திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி, சிந்தை
ஒருமையின் நிறுவி, மும்மை உலகினும் உயர்தி அன்றே. 142

'மத இயல் குரக்குச் செய்கை மயர்வொடு மாற்றி, வள்ளல்
உதவியை உன்னி, ஆவி உற்றிடத்து உதவுகிற்றி;
பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும்
சிதைவு இல செய்து, நொய்தின் தீர்வு அரும் பிறவி தீர்தி. 143

'அரசியல் - பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது, ஐயன்
மரை மலர்ப் பாதம் நீங்கா வாழுதி; மன்னர் என்பார்
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி; எண்ணம் யாவும்
புரிதி; "சிற்றடிமை குற்றம் பொறுப்பர்" என்று எண்ணவேண்டா 144

சுக்கிரீவனை இராமனிடம் அடைக்கலமாக்கி, வாலி வணங்குதல்

என்ன, இத் தகைய ஆய உறுதிகள் யாவும், ஏங்கும்
பின்னவற்கு இயம்பி, நின்ற பேர் எழிலானை நோக்கி,
'மன்னவர்க்கு அரசன் மைந்த! மற்று இவன் சுற்றத்தோடும்
உன் அடைக்கலம்' என்று உய்த்தே, உயர் கரம் உச்சி வைத்தான் 145

அங்கதன் வருகை

வைத்தபின், உரிமைத் தம்பி மா முகம் நோக்கி, 'வல்லை
உய்த்தனை கொணர்தி, உன் தன் ஓங்கு அரு மகனை' என்ன,
அத் தலை அவனை ஏவி அழைத்தலின், அணைந்தான் என்ப,
கைத்தலத்து உவரி நீரைக் கலக்கினான் பயந்த காளை. 146

அங்கதன் தந்தையைக் கண்டு புலம்புதல்

சுடருடை மதியம் என்னத் தோன்றினன்; தோன்றி, யாண்டும்
இடருடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலா தான்,
மடலுடை நறு மென் சேக்கை மலை அன்றி, உதிர வாரிக்
கடலிடைக் கிடந்த காதல் தாதையை, கண்ணின் கண்டான். 147

கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால, மாலை,
குண்டலம் அலம்புகின்ற குவவுத் தோள் குரிசில், திங்கள்
மண்டலம் உலகில் வந்து கிடந்தது; அம் மதியின் மீதா
விண் தலம் தன்னின் நின்று ஓர் மீன் விழுந்தென்ன, வீழ்ந்தான். 148

'எந்தையே! எந்தையே! இவ் எழு திரை வளாகத்து, யார்க்கும்,
சிந்தையால், செய்கையால், ஓர் தீவினை செய்திலாதாய்!
நொந்தனை! அதுதான் நிற்க, நின் முகம் நோக்கிக் கூற்றம்
வந்ததே அன்றோ, அஞ்சாது? ஆர் அதன் வலியைத் தீர்ப்பார்? 149

'தறை அடித்ததுபோல் தீராத் தகைய, இத் திசைகள் தாங்கும்
கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம், உந்தன்
நிறை அடிக் கோல வாலின் நிலைமையை நினையும் தோறும்,
பறை அடிக்கின்ற அந்தப் பயம் அறப் பறந்தது அன்றே? 150

'குல வரை, நேமிக் குன்றம், என்று வான் உயர்ந்த கோட்டின்
தலைகளும், நின் பொன் - தாளின் தழும்பு, இனி, தவிர்ந்த அன்றே?
மலை கொளும் அரவும், மற்றும், மதியமும், பலவும் தாங்கி,
அலை கடல் கடைய வேண்டின், ஆர் இனிக் கடைவர்? - ஐயா! 151

'பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது, யாதும்
அஞ்சலித்து அறியாச் செங் கை ஆணையாய்! அமரர் யாரும்
எஞ்சலர் இருந்தார் உன்னால்; இன் அமுது ஈந்த நீயோ,
துஞ்சினை; வள்ளியோர்கள், நின்னின் யார் சொல்லற்பாலார்?' 152

அங்கதனைத் தழுவி, வாலி தேற்றுதல்

ஆயன பலவும் பன்னி, அழுங்கினன் புழுங்கி, நோக்கி,
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செங் கண் வாலி,
'நீ இனி அயர்வாய் அல்லை' என்று தன் நெஞ்சில் புல்லி,
'நாயகன், இராமன், செய்த நல்வினைப் பயன் இது' என்றான். 153

'தோன்றலும், இறத்தல்தானும், துகள் அறத் துணிந்து நோக்கின்,
மூன்று உலகத்தினோர்க்கும், மூலத்தே முடிந்த அன்றே?
யான் தவம் உடைமையால், இவ் இறுதி வந்து இசைந்தது; யார்க்கும்
சான்று என நின்ற வீரன் தான் வந்து, வீடு தந்தான். 154

'பாலமை தவிர் நீ; என் சொல் பற்றுதிஆயின், தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா மெய்ப்பொருள், வில்லும் தாங்கி,
கால் தரை தோய நின்று, கட்புலக்கு உற்றது அம்மா!
"மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து" என, வணங்கு, மைந்த! 155

'என் உயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது,
உன் உயிர்க்கு உறுதி செய்தி; இவற்கு அமர் உற்றது உண்டேல்,
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய்! பொது நின்று, தருமம் நோக்கி,
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி.' 156

வாலி அங்கதனை இராமனிடம் ஒப்புவித்தல்

என்றனன், இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி,
தன் துணைத் தடக் கை ஆரத் தனையனைத் தழுவி, சாலக்
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்குஇனத்து அரசன், கொற்றப்
பொன் திணி வயிரப் பைம் பூண் புரவலன் தன்னை நோக்கி, 157

'நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும்
துய் அடை கனலி அன்ன தோளினன், தொழிலும் தூயன்;
பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ! மற்று உன்
கையடை ஆகும்' என்ன, இராமற்குக் காட்டும் காலை, 158

இராமன் அங்கதனுக்கு உடைவாள் அளித்தலும், வாலி விண் ஏகுதலும்

தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங் கணானும்,
பொன் உடைவாளை நீட்டி, 'நீ இது பொறுத்தி' என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான். 159

வாலியின் கை நெகிழ, இராம பாணம் கடலுள் தோய்ந்து, இராமனிடம் மீள்தல்

கை அவண் நெகிழ்தலோடும், கடுங் கணை, கால வாலி
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி, மேக்கு உயர மீப் போய்,
துய்ய நீர்க் கடலுள் தோய்ந்து, தூய் மலர் அமரர் சூட்ட,
ஐயன் வெந் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே 160

மிகைப் பாடல்கள்

பேர்வுற வலிக்கவும் மிடுக்கு இல் பெற்றியார்
நோவுற உலந்தனர்; அதனை நோக்கி, யான்
ஆர்கலிதனைக் கடைந்து, அமுது கொண்டனென்;
போர் வலி அழிந்து போய், புறம் தந்து ஓடலென். 27-1

ஆற்றலன் வாலிக்கு ஆகி, அருங் கதிர்ப் புதல்வன் மீண்டும்
ஏற்றிய சிலை இராமன் இணை அடி இறைஞ்சி வீழ்ந்து,
'தோற்றுமுன், ஆவிகொண்டு, இத் தொல் உறை இருந்தேன்; உன்றன்
மாற்றமேவலி ஆய்ச் சென்றேன்; உடல் வலி மாய்ந்தது' என்றான் 61-1

என்றலும், இராமன், 'நீங்கள் இருவரும் எதிர்ந்த போரில்,
ஒன்றிடும் உடலினாலே உருத் தெரிவு அரியது ஆகி,
கொன்றிடு பாணம் ஏவக் குறித்திலேன்; குறியால் செய்த
மன்றலர் மாலை சூட்டி ஏவுதும், மறித்தும்' என்றான். 61-2

இராமன் அஃது உரைப்பக் கேட்டே, இரவி சேய் ஏழது ஆகும்
தராதலத்து அதிர ஆர்த்து, தம் முனோன் முன்னர்ச் செல்ல,
பராபரம் ஆய மேருப் பருப்பதம் தோற்றிற்று என்ன
கராதலம் மடித்து வாலி கனல்-துகள் சிவந்து காட்ட, 61-3

சிவந்த கண்ணுடை வாலியும், செங் கதிர்ச் சேயும்,
வெவந்த போது, அவர் இருவரும் நோக்கின்ற வேலை,
கவந்த தம்பியைக் கையினால் எடுத்து, அவன் உயிரை
அவந்த மற்றவன் ஆர் உயிர் அந்தகற்கு அளிப்போன். 62-1

வெற்றி வீரனது அடு கணை, அவன் மிடல் உரத்தூடு
உற்றது; அப் புறத்து உறாத முன், உறு வலிக் கரத்தால்
பற்றி, வாலினும் காலினும் பிணித்து, அகப்படுத்தான்;
கொற்ற வெங் கொடு மறலியும், சிரதலம் குலைந்தான். 66-1

ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை;
உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை;
வென்று ஆள்வதே என்னில், வேறு ஒன்றும் இல்லை;
வீணே பிடித்து, என் தன் மேல் அம்பு விட்டாய்;
தன் தாதை மாதா உடன் கூடி உண்ணத்
தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான்,
நின் தாதை; அன்றேயும், நீயும் பிடித்தாய்;
நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே! 89-1

மா வலச் சூலியார் வாழ்த்துநர்க்கு உயர் வரம்
ஓவல் அற்று உதவல், நின் ஒரு தனிப் பெயர் இயம்பு
ஆவலிப்பு உடைமையால் ஆகும்; அப் பொருளை ஆம்
தேவ! நிற் கண்ட எற்கு அரிது எனோ, தேரினே? 128-1

இடைக்கலம் அல்லன்; ஏவியது ஓர் பணி
கிடைத்த போது, அது செய்யும் இக் கேண்மையன்;
படைக்கலக் கைப் பழம் பேர் அருளே! நினது
அடைக்கலம்-அடியேன் பெற்ற ஐயனே. 158-1
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum