இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தோஷங்கள், சங்கடங்கள் தீர்க்கும் சங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர்!

Go down

தோஷங்கள், சங்கடங்கள் தீர்க்கும் சங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர்! Empty தோஷங்கள், சங்கடங்கள் தீர்க்கும் சங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர்!

Post by ஆனந்தபைரவர் Mon Nov 29, 2010 4:15 pm

பழங்காமூர் மோ. கணேஷ்


நீர் வளமும் நில வளமும் நிரம்பப் பெற்ற சோழ நாட்டின் முக்திப் பதிகள் பற்பல. அவற்றுள் காவிரித் தென்கரைத் தலங்கள் 128-ல் 17-ஆவது தலமாக விளங்குவது திருச்சக்கரப்பள்ளி ஆகும். இத்தலம் சக்கரமங்கை என்றும் அழைக் கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் சப்த ஸ்நான தலங்களும் சப்த மங்கைத் தலங்களும் பிரசித்தம். சப்த ஸ்நான தலங்களில் ஏழூர் திருவிழா நடப்பதுபோல் இந்த சப்த மங்கைத் தலங்களிலும் நடைபெறு கின்றது.

சப்த மங்கைத் தலங்களுள் இரண்டாவது தலமாகப் போற்றப்படு கிறது சக்கரப்பள்ளி. (மற்றவை- ஹரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழைமங்கை, புள்ள மங்கை ஆகியன வாகும்.)

சப்த மங்கையர்களான பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டி ஆகியோர் வழிபட்ட சிவத் தலங்கள் என்பதனால் இவ்வேழு தலங்களும் சப்த மங்கைத் தலங்கள் எனப்பட்டன.

இவர்களுள் பிராம்மி வழிபட்ட தலமாக இந்த சக்கரப்பள்ளி சிறப்பிக்கப்படுகிறது.

திருமால் இங்கு வழிபட்டுச் சக்கரம் பெற்றார் என்பதனை, "வண் சக்கர மாலுறைப்பா வடி போற்றக் கொடுத்த பள்ளி' என தேவாரம் சிறப்பிக்கின்றது.

சாபத்தின் விளைவாக சக்கரவாகப் பறவையாய் மாறிய பிரம்மா இங்கு வந்து தவமியற்றி, தீர்த்த நீராடி, பரமனை வழிபட்டு சுய உரு பெற்றுள்ளார். திருமால் வழிபட்டு சக்கரம் பெற்றதாலும், சக்கரவாகப் பறவை பூஜித்ததாலும் இத்தலம் சக்கரப்பள்ளி என்றானது.

சக்கரவாகப் பட்சி வழிபட்ட தால் இத்தல நாதர் சக்கரவாகேஸ் வரர் எனப் போற்றப்படுகின்றார்.

இந்திரனின் மகன் சயந்தன், குபேரன் மற்றும் ஏனைய தேவாதி தேவர்களும் இத்தல ஈசனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். அநவித்யநாத சர்மா என்பவர் தனது மனைவி அனவிக்ஞை யுடன் தினமும் இந்த ஏழு மங்கையர்த் தலங் களுக்கும் சென்று வழிபட்டு வீடுபேறு அடைந்த தாகத் தல புராணம் விவரிக்கின்றது.

திருஞான சம்பந்தர் இத்தலத்தின்மீது ஒரு பதிகம் பாடிப் போற்றியுள் ளார். அப்பர் பெருமான் தனது க்ஷேத்திரக் கோவை யில் இத்தலத்தைப் புகழ்ந்துள்ளார். அருண கிரிநாதர் இத்தல முருகன்மீது திருப்புகழ் மாலையொன்றைச் சாற்றியுள்ளார்.

முகம்மதியர்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதியில் இச்சிவாலயம் மட்டும் தனிப் பெரும் பான்மை கொண்டு திகழ்கிறது.

நெடுஞ்சாலையை ஒட்டிய தெருவில் ஆலய நுழைவு வாயில் வளைவுடன் காணப் பெறுகிறது. சற்று நடந்தால் திருக் கோவில். திருக்கோவிலின் முதல் வாயில்மீது ரிஷபாரூடர் தரிசனம் தருகின்றார்.

உள்ளே மரங்கள் சூழ்ந்த விசாலமான இடம். அங்கே தெற்கு பார்த்த அம்பாள் சந்நிதி உள்ளது. முன் மண்டபம், மகா மண்ட பம், அர்த்த மண்டபம், கருவறை அமைப்பி லான இச்சந்நிதியுள் அருள்மழை பொழிகி றாள் அன்னை ஸ்ரீ தேவநாயகி. தேவாதி தேவர்களுக்கும் தலைவி இவள்தானே! அதனால் இப்பெயர். இவ்வம்பிகையின் எழிலில் அகிலமே மயங்கும். அவ்வளவு பொலிவினைத் தன்னுள் கொண்டு தரணியாள்கிறாள் அம்மை. அம்பாள் சந்நிதிக்கு எதிரே குங்கிலியக் குண்டம் உள்ளது. இதில் குங்கிலியப் பொடி போட்டு வழிபடும் மங்கையர் மாங் கல்ய பலம் பெறுவர் என்பது ஐதீகம்.

அன்னையை வலம் வர தாராளமான இட முள்ளது. சுற்றி வந்து, சுவாமி சந்நிதிக்குச் செல்லலாம். சுவாமி சந்நிதி மகா மண்டபம், அந்த்ராளம், மூலஸ்தா னம் அமைப்பில் அமைந் துள்ளது. கருவறையுள் உயர்ந்த பாணம் கொண்டு அற்புதமாக அருள் பொழிகின்றார் ஸ்ரீ சக்கரவாகேஸ்வரர்.

ஆலயத்தை வலம் வருகையில் தேவ கோஷ்டங்களைக் கண்ணுறுகிறோம். கணபதி சந்நிதி தென்மேற்கு மூலையிலும்; முருகன் சந்நிதி வடமேற்கு மூலையிலும் அமைந் துள்ளன.

சண்டேஸ்வரருக்கு எதிரே காட்சி தரும் துர்க்கை சிவ துர்க்கையாக கையில் திரிசூலம் ஏந்தி அஷ்ட புஜங்கள் கொண்டு அதியற்புத மாகக் காட்சியளிக்கின்றாள். யமபயம் நீக்குவதோடு சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் வல்லமை மிக்கவள் இந்த துர்க்கை.

சூரியன், சந்திரன் மற்றும் பைரவரின் சிலாரூபங்களும் காணப்படுகின்றன. மகா மண்டப வெளிச்சுவரில் புடைப் புச் சிற்பங்களாக சக்கரவாகப் பறவையும் பிராம்மியும் இறைவ னைப் பூஜிக்கும் தல புராண நிகழ்ச்சி அழகுற வடிக்கப்பட் டுள்ளது.

ஆலய கட்டமைப்பு சோழர் கலை பாணியைப் பிரதிபலிக் கின்றது. இத்தலத்தின் தீர்த்தமாக பஞ்சாட்சர தீர்த்தமும் விருட்ச மாக சந்தன மரமும் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தின் உபகோவிலா கச் செயல்படுகின்றது.

தினமும் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினசரி காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரையும்; மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும்.

பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா போன்ற விசேடங் களோடு வருடாவருடம் பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற் சவமும்; அதையொட்டி கண்ணா டிப் பல்லக்கில் சக்கரவாகேஸ்வரர் ஏழூர்கள் செல்லும் சப்த ஸ்தானப் பெருவிழாவும் சுவாமிநாத சுவாமி ஆலய நிர்வாகத்தால் சிறப்புற நடத்தப்படுகின்றன.

இத்தல வழிபாடு திருட்டுப் பாவம், பிரம்மஹத்தி போன்ற தோஷத்தை நீக்குவதோடு, நவகிரக தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கையாகும்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் உள்ள இத்தலம், தஞ்சை- கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ள அய்யம்பேட்டை யில் அமைந்துள்ளது.

அனைத்து வசதிகளும் பாபநாசத்தில் உள்ளன.

நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum